திருத்துறைப்பூண்டியில் நாகை தொகுதி எம்பி செல்வராஜ் பேட்டி.

திருத்துறைப்பூண்டியில் நாகை தொகுதி எம்பி செல்வராஜ் பேட்டி.


 


           தமிழக அரசு 500 ரூபாய்க்கு கொடுக்கக்கூடிய வீட்டு உபயோகப்பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் அனைத்து அட்டைதாரர்களுக்கும் ஐந்தாயிரம் வழங்குவதன் மூலம் கொரோனாவில் பாதிக்கப்படுவதை விட பசியால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க முடியும் மேட்டூர் அணையை திறக்க வேண்டிய நாளை முன் கூட்டியே அறிவிக்கவேண்டும், ஆறுகள் தூர்வாரும் பணிகளை காலத்தே செய்ய வேண்டும் .கடந்த மார்ச் 23 - தேதி முதல் இதுவரை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே வருகிறது இந்த நிலையில் நேற்று அனைத்து மாநகராட்சிகளிலும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக எந்த வேலையும் இல்லாமல் இருக்கும் விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள், அமைப்பு சாரா ஊழியர்கள், சலவை தொழிலாளர்கள், மாற்றுதிறனாளிகள் இவர்களது வாழ்க்கையை பற்றி அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை மத்திய அரசு ஆலோசனை மட்டுமே வழங்கிவருகிறது. பிரதமர் மோடி விளக்கேற்றவும், கை தட்டவும், ஊரடங்கை கடைபிடிக்க சொல்கிறார்ஆனால் போதுமான நிதி வழங்கவில்லை விவசாயிகளுக்கோ, தொழிலாளர்களுக்கோ, அமைப்பு சாராத ஊழியர்களுக்கோ எந்தவித அறிவிப்பும் இல்லை வெறும் ஆலோசனை வழங்குவது மட்டும் பிரதமரின் நடவடிக்கை இல்லை நாடு ஒரு ஆபத்தான நிலைக்கு சென்றுகொண்டு இருக்கிறது இந்த சூழ்நிலையில் மத்திய அரசு போதுமான நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் அது மட்டும் அல்ல ஏழை எளிய மக்களுக்கு அவர்கள் கைகளுக்கு பணம் செல்கிற திட்டத்தை வழங்க வேண்டும் அது தான் தீர்வாக இருக்க முடியும் அதன்மூலம்தான் ஊரடங்கு உத்தரவை சாதாரண ஏழை, எளிய மக்கள் பின்பற்ற முடியும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணரவேண்டும் என்றார்


 


.செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,