திருத்துறைப்பூண்டியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் விழுப்புரத்தில் சிறுமி எரித்து கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி  ஆர்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் விழுப்புரத்தில் சிறுமி எரித்து கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், சிறுமியின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ 25 லட்சம் வழங்க வேண்டும், சம்பந்தபட்ட வர்கள் மீதுஅரசு பாராபட்சம் காட்டாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்பாட்டம் நடை பெற்றது. மாதர் சம்மேளனம் மாவட்ட செயலாளர் தமயந்தி தலைமை வகித்தார், ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுஜாதா, ஒன்றியதலைவர் கவிதா , நகர தலைவர் லெட்சுமி,முன்னாள் செயலாளர்கள் குருமணி , விஜயா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


 


செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,