மனித உறவுகள் மேம்பட

இன்றையதினம் உலக குடும்பங்கள் தினம்.  ஆகவே,  


 


அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்  என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதைப் படியுங்கள்.


 


மனித உறவுகள் மேம்பட.....!!!



  1. தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
    2.
    அர்த்தமில்லாமிலும்தேவையில்லாமலும்
    பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
    3. 
    எந்த விடயத்தையும் பிரச்சனையும் நாசூக்காகக் கையாளுங்கள்.
    4. 
    விட்டுக் கொடுங்கள்.
    5. 
    சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆகவேண்டும் என்று உணருங்கள்.
    6. 
    நீங்கள் சொன்னதே சரி செய்வதே சரி என்று கடைசிவரை வாதாடதீர்கள்.
    7. 
    குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
    8. 
    உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
    9. 
    மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வபடாதீர்கள்.
    10. 
    அளவுக்கு அதிகமாய்,தேவைக்கு அதிகமாய் ஆசைப் படாதீர்கள்.
    11. 
    எல்லோரிடத்திலும் எல்லா விடயங்களையும்அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக் காதீர்கள்.
    12. 
    கேள்விப்படுகிற எல்லா விடயங்களையும் நம்பிவிடாதீர்கள்.
    13. 
    அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.
    14. 
    உங்கள் கருத்துகளில் உடும்புப்பிடியாய் இல்லாமல்கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.
    15. 
    மற்றவர் கருத்துக்களைசெயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.
    16. 
    மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும்இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
    17. 
    புன்முறுவல் காட்டவும்சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
    18. 
    பேச்சிலும்நடத்தையிலும் திமிர்த்தனத்தையும்தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து
    அடக்கத்தையும்பண்பாட்டையும் காட்டுங்கள்.
    19. 
    பிணக்கு ஏற்படும்போதுஅடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.
    20. 
    தேவையான இடங்களில் நன்றியையும்பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள்.
    பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை..அதுவே உங்களுக்கு வெற்றியாக அமையும்..


அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி


 


தொகுப்பு



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,