உலக அகதி நாள்

 

உலக அகதி நாள்  2020


ஜூன் 20- 2000 ஆம் ஆண்டு  கருப்பொருள்


19-06-2020


 


உறவுகளை இழந்த மனிதன் அனாதை! சொந்த தேசத்தை இழந்தவன் அகதி! எனக் கூறுவார்கள். உலக அகதி நாள் ஆண்டுதோறும் ஜூன் 20-ம் நாளன்று நினைவு  கூரப்பட்டு  வருகின்றது.  2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.


ஆப்பிரிக்க  அகதிகள்  நாள்  ஜூன் 20-ல்  கொண்டாடப்படுவதால் இந்நாள் உலக அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.


பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே  இந்நாளின்  முக்கியமான  நோக்கமாகும்.



     அன்றைய  நாள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு  வந்தன. அகதிகளுக்கான  ஐக்கிய   நாடுகளின்  ஆணையம் (UNHCR) ஒவ்வோர் ஆண்டும் இந்நிகழ்வுகளுக்கான கருப்பொருளைத் தீர்மானித்து வழங்குவது வழக்கம். .


சென்ற ஆண்டு வரை அகதிகள் என்றால ஆப்ரிக்க நாட்டு அகதிகளையும் இலங்கையிலிருந்து மிழகம் வந்த அகதிகளையும் பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த முஸ்லிம் அகதிகளையும் பற்றிதான் கேள்விப்பட்டிருந்தோம். ஆனால் கொரனா என்ற தீ நுண்மி தொற்றால்  கடந்த  சுமார் 4 மாதங்களாக இந்தியாவில் ஒரே மாநிலத்திற்குள்ளேயே வெவ்வேறு மாவட்டத்திற்குள் அம்மாநில மக்களே அகதிகளாக வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  மாநிலத்திற்குள் இப்படியென்றால், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு பிழைப்புக்காகவும் வேலைவாய்ப்புக்காகவும வாழ்வாதாரத்திற்காகவும் புலம் பெயர்ந்தவர்கள் நிலை அகதிகளை விட மோசமாக இருந்ததை தொலைக்காட்சிகள் வாயிலாக நேரில் பார்க்கும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டு இன்னமும் தொடர்வதை யாரும் மறக்க இயலாது. 


 


சட்டமன்றம்  சிறையில் வாடும் சிலரை விடுதலை செய்ய வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றியும் 30 ஆண்டுகளாக சிறையில் வீடும் கணவனும் மனைவியுமே பேசமுடியாத உறவினர்களுடன் பேசமுடியாத அகதிகளாக சிலர் இருப்பதை நாம் அறிவோம்.  


கொரனா தொற்று காரணமாக, இன்று வரை வெவ்வேறு நாடுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி, மாற்றிக்கொள்ள உடையின்றி அகதிகள் போர் வாழும் நிலையை நாம் கேள்விப்பட்டுக் கொண்டுதான் ருக்கிறோம்.  அகதிகள் பற்றி இந்த விளக்கமே போதும் என்பதால் அவர்கள் தங்கள் சொந்த குடும்பத்தாருடன்  சேர்ந்து சுதந்திரமாக வாழ வாழ்த்துவோம்.  









 

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,