மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  ஆர்பாட்டம்

திருத்துறைப்பூண்டி அருகே  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  ஆர்பாட்டம் நடைபெற்றது.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கதிரேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 7,500 வழங்க வேண்டும், கிராம அங்காடிகளில் பொருட்கள் தொடர்ந்து இலவசமாக வழங்க வேண்டும், கிராமபுறங்களில் சுகாதாரத்தை துரிதப்படுத்த வேண்டும், காஸ் சிலிண்டர், மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும், 100 நாள் வேலை 250 ஆக உயர்த்தி கூலி ரூ 500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.


இதில் மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் , மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகானந்தம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.


 


 


செய்தியாளர். மு. அமிர்தலிங்கம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,