ஈரோட்டில் உதித்த இன்னொரு சூரியன்

ஈரோட்டில் உதித்த
இன்னொரு சூரியன்
--------------------------------------                        ---பிருந்தா சாரதி


                                                                       ---  ஓவியம்: Trotsky Marudu 



*
சிலைகளாய் நின்ற எம்மை
இயங்கவைத்தவன்


சிலையாய் ஆன பின்பும்
இயங்கி வருபன்.
*
பூதக் கண்ணாடி கொண்டு
செய்திகள் படித்தவன்


பூதங்கள் எங்கெனச் 
சொடக்குப் போட்டவன்.
*
துல்லியமாக உண்மையை    அறிந்தவன்


துடிப்புடன் பொய்களைச்
சாடி அழித்தவன்.
*
நாளைகள் நமக்கு 
வெளிச்சமாகிட


இருட்டை மேனியில்
தூக்கிச் சுமந்தவன்.
*
இருண்ட பாதையில்
ஒளிக்கதிர்  பாய்ச்ச


இன்னுயிர் வாழ்வை
இசைவுடன் கொடுத்தவன்.
*
கைத்தடி ஊன்றி 
நடந்த காலையும்


முடங்கிய இனமது
நிமிர்ந்திட உழைத்தவன்.
*
அழுகிய சிந்தனை
அறுத்த மருத்துவன்


அழியாப் புகழுடன்
நிலைத்த பெருமகன்.
*
ஈராயிரம் ஆண்டு
இருட்டை வெளுத்தவன்


ஈரோட்டில் உதித்த
இன்னொரு சூரியன் .
*


 


----பிருந்தா சாரதி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,