பயிர் காப்பீட்டு தொகையை முறையாக வழங்காததை கண்டித்து அனைத்து கூட்டுறவு சங்க அலுவலகங்கள் முன்பும் திமுகவினர் கண்டனஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி அருகே இடும்பாவனத்தில் பயிர் காப்பீட்டு தொகையை முறையாக வழங்காததை கண்டித்து அனைத்து கூட்டுறவு சங்க அலுவலகங்கள் முன்பும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள இடும்பாவனத்தில்பயிர் காப்பீட்டு தொகையை முறையாக வழங்காத மத்திய , மாநில அரசுகளை கண்டித்து இடும்பாவனத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலகம்  முன்பு திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முத்துப்பேட்டை திமுக ஒன்றிய செயலாளர் மனோகரன்  தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பயிர்க்காப்பீடு விடுபட்ட அனைத்து கிராமங்களுக்கும் உடனடியாக பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும், புதிய வேளாண் கடன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதே கோரிக்கைகளை வலியுறுத்தி முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 11 கூட்டுறவு சங்க அலுவலகங்கள் முன்பும்  திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  


செய்தியாளர். மு. அமிர்தலிங்கம்


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி