தருமபுரி தாலுகா அலுவலகம் முன்பு சி.பி.ஐ விசாரணை நடத்த கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தருமபுரி தாலுகா அலுவலகம் முன்பு உதவி திட்டத்தில் மோசடி தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மத்திய அரசின் விவசாயிகளுக்கான உதவித் திட்டத்தில் தகுதியற்ற ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த கோரி தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட நிர்வாகி மகாராஜன் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர் கந்தசாமி விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி மாவட்ட செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள் ஒன்றிய பொறுப்பாளர் கல்யாணசுந்தரம் மற்றும் மாதர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்


 


. செய்தியாளர். கணபதி. தருமபுரி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,