வரிசை கட்டிய எறும்புகள்

இடைவெளியில்லாமல்..... வரிசை கட்டிய எறும்புகள்

கிடைக்கும் என்ற

ஒற்றை நம்பிக்கை சுமந்து

உபரிகள் எங்காவது

சிந்தியிருக்கலாம்

உயிர்த்திருக்கட்டும்

என்றும் போட்டிருக்கலாம்

அடைந்துகிடந்து சாவதை விட

அடையாளங்கள்

செய்துவிட்டாவது போகலாம்

வரிசைக்கிரமமாய் எறும்புகள்

பாதுகாப்பாய் பதுக்கிவைக்கத்

தெரியாத உயிர்கள்

கிடைத்தால் கிடைத்ததை

கூடுவரைக்கும் கொண்டுசேர்ப்பதாய்

பிரகடனம் இன்னும்

பசித்தும் ஓய்ந்தும்

எண்ணற்றது பெருங்கூட்டில்

புற்றுக்கண் நாளையும்

எறும்புகளை அழுது போகும்

பசி பயமறியாது போகும்!

ஏழ்மை அதன் மனதில் இல்லை

வாடிப்போதல் பார்க்கும்

குணமுமில்லை!

 

 

கவிஞர்

#மஞ்சுளாயுகேஷ்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,