மூன்று தேவியின் சிறப்புகள்
மூன்று தேவியின் சிறப்புகள்

அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீத்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கிளி சரஸ்வதி. இவர்கள் சரஸ்வதியின் அம்சங்கள்.
உலகம் சக்தி மயமானது என்பதை விளக்குவதே நவராத்திரியின் உன்னத தத்துவம். அனைத்து உருவங்களிலும், எல்லா இடங்களிலும் தேவி வியாபித்து இருக்கிறாள் என்பதை குறிக்கும் விதமாகவே கொலு வைத்து வணங்குகிறோம்.
நவ கன்னிகை
நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் அம்பாளை வழிபடும் முறை பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஒரு சிலர் நவ கன்னிகையாகவும், இன்னும் சிலர் நவ துர்க்கையாகவும் வழிபாடு செய்கிறார்கள். 10 வயது நிரம்பாத கன்னிகையாக நாளும் ஒரு பருவத்தில் அம்பிகையை வழிபடுவது நவ கன்னிகை வழிபாடு ஆகும்.
முதல் நாள் (2 வயதுக் குழந்தை) - குமாரி
இரண்டாம் நாள் (3 வயதுக் குழந்தை) - திரிமூர்த்தி
மூன்றாம் நாள் (4 வயதுக் குழந்தை) - கல்யாணி
நான்காம் நாள் (5 வயதுக் குழந்தை) - ரோகிணி
ஐந்தாம் நாள் (6 வயதுக் குழந்தை) - காளிகா
ஆறாம் நாள் (7 வயதுக் குழந்தை) - சண்டிகா
ஏழாம் நாள் (8 வயதுக் குழந்தை) - சாம்பவி
எட்டாம் நாள் (9 வயதுக் குழந்தை) - துர்க்கா
ஒன்பதாம் நாள் (10 வயதுக் குழந்தை) - சுபத்ரா
நவதானிய நைவேத்தியம்
நவராத்திரியின் ஒன்பது நாளும் துர்க்கையை ஒன்பது வடிவாக வழிபட வேண்டும். ஒன்பது விதமான துர்க்கைகளையும் வழிபடுவதன் பலனாக பலவித சிறப்புகள் நமக்கு வந்து சேரும். நவராத்திரி பூஜை செய்வதால் கடன் நிவாரணம், மன அமைதி பெறலாம். அறிவு பெருகும். இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என மூன்று சக்திகளைப் பெறலாம். நவராத்திரி பண்டிகையின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நவதானியத்தை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். கோதுமை, பச்சரிசி, துவரை, பச்சைப்பயறு, கடலை, மொச்சை, எள்ளு, உளுந்து, கொள்ளு ஆகியவை அந்த நவதானியங்கள் ஆகும்.
Comments