Posts

இந்தியாவில் 8   நாட்களில் ஒரு லட்சத்தில் இருந்து 1.5 லட்சமாக உயர்ந்த கொரோனா எண்ணிக்கை

Image
இந்தியாவில்  8    நாட்களில் ஒரு லட்சத்தில் இருந்து  1.5  லட்சமாக உயர்ந்த கொரோனா எண்ணிக்கை இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கிறது என்றாலும் கடந்த 8 நாட்களில் மட்டும் 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.   கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு இந்தியாவில் கடந்த மார்ச் 25-ந்தேதி பொது ஊரடங்கை அமல்படுத்தியது. முதலில் மார்ச் 25-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 14-ந் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு அமலுக்கு வந்தது. அப்போது இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டது. சரியான நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தியதால் இந்தியா மிகப்பெரிய சேதத்தில் இருந்து தப்பியது என உலக சுகாதார மையம் பாராட்டு தெரிவித்தது.   அதன்பின் ஏப்ரல் 15-ந்தேதியில் இருந்து மே 3-ந்தேதி வரை 2-ம் கட்ட 19 நாள் ஊரடங்கை அமல்படுத்தியது. மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள தயாராக இருந்த நிலையில் மத்திய அரசு கட்டுப்பாடுகளில் பல தளர்வுகளுக்கு அனுமதி அளித்தது.   அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் மார்ச...

ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம்

Image
  ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம்   I nternatio nal Day of United Nations Peacekeepers   எனப்படுவது ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண் ,  பெண் இரு சாராரையும் பெருமைப்படுத்துவதற்கும் ,  சமாதானத்திற்கான இந்நடவடிக்கைகளின்போது உயிர் நீத்தவர்களை நினைவூட்டுவதற்காகவும்  2001 ஆம் ஆண்டில்   ஐக்கிய நாடுகள் பொது சபை   பிரகடனப்படுத்திய தினமாகும்.   முதலாம் உலக மகா யுத்தம்   முடிவுற்ற பின்பு உருவாக்கம் பெற்ற சர்வதேச சங்கத்தால் உலக சமாதானத்தைப் பேண முடியாதுபோனதன் காரணமாகவே இரண்டாம் உலக மகா யுத்தம் ஏற்பட்டது. இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்பு யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும் ,  சொத்திழப்புக்களும் கணிப்பிட முடியாதவை. இந்த அடிப்படையில் மற்றுமொரு உலக மகா யுத்தம் ஏற்படாமல் உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டே   ஐக்கிய நாடுகள் அவை   உருவாக்கம் பெற்றது. ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கம் பெற்றதையடுத்து யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் என்பவற்றின்போது சமாதானத்தை ஏற்படுத்தவும் ,...

வாட்ஸ்அப் பயனர்களை ஏமாற்றும் புதிய ஊழல்

Image
வாட்ஸ்அப் பயனர்களை ஏமாற்றும் புதிய ஊழல் 29-05 2020   15:06 வாட்ஸ்அப் செயலியில் பயனர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி அவர்களிடம் இருந்து வெரிஃபிகேஷன் கோட்களை அபகரிக்கும் மோசடி கண்டறியப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் தொழில்நுட்ப குழு என கூறிக் கொண்டு பயனர்களிடம் இருந்து வெரிஃபிகேஷன் கோட்களை அபகரிக்கும் புதுவித மோசடி கண்டறியப்பட்டுள்ளது. இந்த மோசடியில் வாட்ஸ்அப் சார்பில் ஒரு அக்கவுண்ட்டில் இருந்து குறுந்தகவல் அனுப்பப்பட்டு பயனர்களிடம் இருந்து வெரிஃபிகேஷன் கோட்களை வழங்குமாறு கேட்கிறது. பயனர்களை நம்பவைக்கும் விதமாக இந்த அக்கவுண்ட் ப்ரோபைல் புகைப்படத்தில் வாட்ஸ்அப் லோகோ பயன்படுத்துகிறது. வாட்ஸ்அப் செயலியின் புதிய அம்சங்கள் பற்றிய விவரங்களை வெளியிடும் WABetaInfo, வாட்ஸ்அப் பெயரில் உலா வரும் புதிய மோசடி பற்றிய தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. பயனர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. எனினும், வாட்ஸ்அப் நிறுவனம் செயலியை பயன்படுத்தி பயனர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்யாது. மாறாக சமூக வலைதள அக்கவுண்ட் அல்லது வாட்ஸ்அப் அதிகாரப்பூர...

புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில், பேருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது

Image
புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில், பேருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது - உச்சநீதிமன்றம் உத்தரவு புதுடெல்லி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் துயரங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது, வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் அவலம் குறித்து வருத்தம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் இன்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதனையடுத்து தமிழகத்தில் இருந்து இதுவரை 2,28,000 தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. மேலும் சொந்த இருப்பிடங்களில் தங்கியுள்ள 70 ஆயிரம் பேருக்கு தினமும் உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், 3,17,000 பேருக்கு ரேஷனில் உணவும், தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து புலம் பெயர் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊ...

ஊரடங்கால் 1.2 கோடி இந்தியர்கள் வறுமையின் உச்சத்துக்கே போவார்கள்

Image
ஏப்ரலில் மட்டும் 12.2 கோடி பேர் வேலை இழப்பு: ஊரடங்கால் 1.2 கோடி இந்தியர்கள் வறுமையின் உச்சத்துக்கே போவார்கள் 29-05-2020   02:57:59 கொரோனாவில் தப்பினாலும் பட்டினிச்சாவு நிச்சயம் * ஆய்வில் தகவல் புதுடெல்லி: ஊரடங்கால் 1.2 கோடி இந்தியர்கள் வறுமையின் உச்சத்துக்கே சென்று விடுவார்கள் என, ஆய்வில் தெரியவந்துள்ளது. அதோடு, கடந்த ஏப்ரலில் மட்டும் 12.2 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். ஊரடங்கில் முடங்கிக் கிடந்து வேலையையும் வாழ்தாவாரத்தையும் பறி கொடுத்த பலருக்கு, கொரோனாவால் உயிர் போகும் என்பதை விட, பட்டினியால் செத்துவிடுவோமோ என்ற பயம்தான் வாட்டி எடுக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் ஆய்வில் அதிர்ச்சி புள்ளி விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. கொேரானா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, 4வது முறையாக நீட்டிக்கப்பட்டு வரும் 31ம் தேதி வரை அமலில் உள்ளது. தொழில்துறைகள், நிறுவனங்கள் இயங்காததால், ஏராளமான குடும்பங்கள் வாழ்வாதாரத்தையே தொலைத்து விட்டன. சிஎம்ஐஇ புள்ளி விவரப்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12.2...

35 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

Image
  35 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ‘பிரேக் டவுன்’ ஆனது போக்குவரத்து தொழில் ‘நகர’ வழிசெய்யாவிட்டால் போய்விடும் உயிர்                                                                                                                                             ...

கணவன்-மனைவி உறவு இனிமையானது

Image
உலக தம்பதியர் தினம் இன்று 29.5.2020 கணவன்-மனைவி உறவு எவ்வளவு இனிமையானது தெரியுமாங்க ??? அன்பால் மலரும் உணர்வுகளே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் என்பதை கணவன்- மனைவி உணர வேண்டும். பல நேரங்களில் தவறு செய்யக் கூடும். ஆனால், அத்தகைய தவறுகள் அன்பினால் சீரமைக்கபட வேண்டும். என்னை நல்ல படியாக வைத்துக் கொ ள்ளும் அன்பு உன்னிடம் இருந்து நிச்சயம் கிடைக்கும் என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும். உலக தம்பதியர் தினம்