Posts

Showing posts from July, 2021

போலீஸ் வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாடு காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை

Image
  இந்திய போலீஸ் வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாடு காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை : டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

#பழங்கதை_பேசுவோம்_ தொடர் /ஜவ்வுமிட்டாய்

Image
  #பழங்கதை_பேசுவோம்_  தொடர்  இதை வழங்குபவர் --சங்கீதா ராமசாமி குதித்து ஆடும் பொம்மை ஒன்றே போதும் முன்செல்லுபவரை பின்தொடர ஜரிகை போட்ட பாவாடை சட்டையோ, லேஸ் வைத்த கவுனோ நம்மை வாவென அழைத்துபடியே செல்லும். ஜவ்வுமிட்டாய் என்பது உங்களைப் பொறுத்தவரையில் எதுவென தெரியாது ஆனால் மேற்சொன்ன அடையாளம் ஒன்றே ஜவ்வுமிட்டாய்க்காரரை அடையாளப்படுத்தும் புன்னகை மாறாமல் நீண்ட கழியின் உச்சியில் ஆடும் பொம்மை இருக்க டிகுடா டிகுடா சத்தமோ, அவரது பீப்பீயோ ஒலியோ போதும் அவரை என் பள்ளியின் தலைமுறையே அறியும். மாணவர்கள் கொடுக்கும் அஞ்சு காசையோ பத்து காசையோ நிமிடங்களில் கை மணிக்கட்டில் உருவங்களாக சுத்தி விட்டு உயிர் கொடுக்கும் அவரே அப்போதைய அனிமேட்டர் எங்களுக்கு அவர்தான் மிகப்பெரிய கிரியேட்டர். கைகளில் வாத்து யானை மயில் மானென வந்தது போக மிச்சத்தில் கன்னத்தில் ஒரு பொட்டோ விரலுக்கேத்த மோதிரமோ அணிவித்து மகிழ்வார். வெயில்பட்டு பாகு கரையும் போது கூட உருவத்தை கொஞ்சங்கொஞ்சமாக இழப்பது வருத்தத்தை தரும் நானெல்லாம் 'போச்சே போச்சே என் வாத்து போச்சே'னு நடுவீதியில் உருண்டு பொரண்டு அழுதிருக்கேன். வெளிர் ரோஜா நிறமும் வெள்ளையும்

டாக்டர் முத்துலட்சுமி

Image
  டாக்டர் முத்துலட்சுமி பிறந்த தினம் இன்று ஜூலை, 30. ‘‘பெண்கள் தங்களுக்கான கொடுமையை முறியடிக்க பெண்கள்தான் முயற்சிக்க வேண்டும். என்னைப் போன்ற ஆண்கள் அதை ஒழிக்க முயல்வதுகூட வீண்தான்’’ என்றார் காந்தி. ‘‘ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது. பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா?’’ என்று கேட்டார் பெரியார். பெண்ணுக்கான விடுதலை என்பது பெண்களின் கையிலேயே இருக்கிறது. அதில்தான் பெண்ணின் பெருமை இருக்கிறது. ஆண் அமைச்சர்களுக்கு இணையாக பெண் அமைச்சர் கமிஷன் வாங்குகிறார். பட்டுச்சேலைகளைப் பணம் கொடுக்காமலேயே அள்ளிக்கொள்கிறார்கள். லத்திகள் உடைய உடைய பெண் போலீஸார் அடித்து நொறுக்குகிறார்கள். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் வேறுபாடு இல்லை என்றும், லாலுவுக்கும் மாயாவதிக்கும் மாறுபாடு இல்லை என்றும் பெயர் எடுப்பதா பெருமை? இல்லை, மிகமிக வலிமையற்ற உடல்நிலையில்... தனது வாதத்திறமையால் அதிகார வர்க்கத்திடம் தான் நினைத்ததை எல்லாம் சாதித்த முத்துலட்சுமி அம்மையார்களால் பெருமை அடைகிறது பெண் இனம். எல்லோருமே தன்னிடம் காலில் விழ வேண்டும் நினைப்பவர்களால் அல்ல! மனிதகுலத்துக்குச் சேவை செய்ய கட்சி நடத்த வேண்டுமா? டா

பட்டுக்கோட்டை பிரபாகர்

Image
  பட்டுக்கோட்டை பிரபாகர் பிறந்த நாள் இன்று ஜூலை, 30 `வானப்பிரஸ்த நிலை' நோக்கிப் பயணிப்பவன் நான்" - பட்டுக்கோட்டை பிரபாகர்! ``ஆன்மிகத்துல எனக்குப் பெரிய ஈடுபாடு கிடையாது. அதுக்காக நான் நாத்திகவாதியும் கிடையாது. கேள்விகளுடன் இருக்கும் ஒரு மனிதன்... அவ்வளவுதான். என்னிடம் நிறைய கேள்விகள் இருக்கு. ஆன்மிகத்துல நிறைய கலப்படம் வந்துடுச்சுங்கிறது உண்மை. பியூரான ஆன்மிகங்கிறது இப்போ இல்ல. பார்வை இல்லாதவன் யானையைப் பார்த்த மாதிரி, ஆன்மிகத்துல ஆள் ஆளுக்குக் கருத்துகளை அள்ளிப்போட்டு அதை வேறுமாதிரியான புரிதலுக்குக் கொண்டு போய்விட்டுட்டாங்க. இன்றைய ஆன்மிகங்கிறது அவரவர் புரிதல்ங்கிற மாதிரிதான் இருக்கு. பொதுவான புரிதலுக்கு வந்த மாதிரி எந்த ஆன்மிகமும் இல்ல. எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. எல்லா மகான்களும் அன்பைத்தான் போதிக்கிறாங்க. அன்பு மட்டுமே அல்டிமேட்டா இருக்கிறபட்சத்துல, `என் ஆன்மிகம் சிறந்தது, உன் ஆன்மிகம்தான் சிறந்தது'ன்னு சண்டை போட்டுக்கிறதுல எந்தவித அர்த்தமும் இல்ல. போக வேண்டிய இடம் எல்லாருக்கும் ஒண்ணுதான். ஒருத்தன், பஸ்சுல போறான். ஒருத்தன் நடந்து போறான். ஒருத்தன் ஃப்ளைட்
  வெந்தய கீரை கோழி குழம்பு குளிர்ச்சியான வெந்தைய கீரையை இதனுடன் சேர்த்து சமைத்தால் உடலுக்கு சூடு பிடிக்காது. பொதுவாக கிராமங்களில் நாட்டுக்கோழி குழம்புதான் வைப்பார்கள். அத்துடன் சிவப்பு பொன்னாங்கனி கீரையை போட்டு நன்றாக பிரட்டி சமைத்து சாப்பிடுவார்கள். வெந்தய கீரை இலைகளுடன் செய்யப்படும் இந்த கோழிக்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். பொதுவாக கோழிக்கறி உடலுக்கு சூடு என்பார்கள். அதனால் மிகவும் குளிர்ச்சியான வெந்தைய கீரையை இதனுடன் சேர்த்து சமைத்தால் உடலுக்கு சூடு பிடிக்காது. பொதுவாக கிராமங்களில் நாட்டுக்கோழி குழம்புதான் வைப்பார்கள். அத்துடன் சிவப்பு பொன்னாங்கனி கீரையை போட்டு நன்றாக பிரட்டி சமைத்து சாப்பிடுவார்கள். அதேபோலதான் வெந்தைய கீரையையும் செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமும் உணவில் ருசியும் கூடும். இதனை மெத்தி சிக்கன் என்றும் கூறுவார்கள். தேவையான பொருட்கள் கோழி கறி – 1/2 கிலோ வெந்தய கீரை – 1 கட்டு வெங்காயம் – 2 தயிர் – 2 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் – 2 இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி தக்காளி – 2 மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி சீரகம் – 1/2 தேக்கரண்டி சோம்பு – 1/2 தேக்கரண்டி மிளகாய் த

பிஸ்கட் சாப்பிடுவதால் சத்து கிடைப்பது குறைவே!

Image
 பிஸ்கட் சாப்பிடுவதால் வயிறு நிறையும். ஆனால், சத்து கிடைப்பது குறைவே! ​ பள்ளிக்கூட வாசலில் இலந்தை வடையும், பொரி உருண்டையும் வாங்கித் தின்றது ஒரு காலம். இன்று பள்ளி செல்லும் பிள்ளைகளின் பைகளில் தவறாமல் இடம்பிடிக்கிறது 'ஸ்நாக்ஸ் பாக்ஸ்’. பெரும்பாலும் பிஸ்கட்களாலும் சிப்ஸ்களாலும் நிரம்பியிருக்கும் அந்த ஸ்நாக்ஸ் பாக்ஸில் உண்மையிலேயே என்ன இருக்க வேண்டும்... எது இருந்தால் குழந்தையின் உடல்நலத்துக்கு நல்லது?  குழந்தைகளுக்கு ஜீரண உறுப்புகள் வளரும் நிலையில் இருக்கும். பெரியவர்களுக்கு அவை ஓய்வுபெறும் நிலையில் இருக்கும். எனவேதான் குழந்தைகளும் பெரியவர்களும் அடிக்கடி அஜீரணக் கோளாறால் அவதியுறுகின்றனர். இதைத் தவிர்க்க குழந்தைகளுக்கு உணவைப் பகுதி பகுதியாகப் பிரித்துக் கொடுக்கலாம். நாம் என்ன பிரித்துக் கொடுப்பது? அவர்களே அப்படித்தான் கோழி கொத்துவதைப்போல கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுகின்றனர். அதிலும், இன்று பள்ளிக்கூடங்கள் காலை 8 மணிக்கெல்லாம் தொடங்கிவிடுகின்றன. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து 6 மணிக்கு எழுந்து, தூங்கிக்கொண்டே குளித்து, அழுதுகொண்டே சீருடை அணியும் குழந்தைகள் காலை உணவாகச் சாப்பிடுவது கொஞ்சமே

அரிசி, பருப்பு, நெய் என மளிகை பொருட்களில் வண்டு, புழு வச்சு வீணா போகுதா? இந்த டிப்ஸ்

Image
  அரிசி, பருப்பு, நெய் என மளிகை பொருட்களில் வண்டு, புழு வச்சு வீணா போகுதா? இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க அடிக்கடி கடைக்கு சென்று வர முடியாத காரணத்தால் பலரும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கி வைத்துவிடுகின்றனர். ஆனால் அவை சில நாட்களிலேயே வண்டு பிடிப்பது , புழு பிடிப்பது என பயன்படுத்த முடியாமல் போகிறது. இதனால் பணமும் வீணாகிறது. பொருளும் வீணாகிறது. எனவே இதை சரி செய்ய நீங்கள் சில சின்ன சின்ன விஷயங்களை செய்தாலே போதுமானது. தினமும் சமைக்கும் அரிசி அல்லது பச்சரிசி, இட்லி அரிசி , சிகப்பு அரிசி என எந்த அரியாக இருந்தாலும் அதில் வண்டு, புழு வருகிறது எனில் அதில் நான்கு அந்து பிரிஞ்சு இலைகளை போட்டு வையுங்கள். அவ்வாறு போட்டால் வண்டு பிடிக்காமல் இருக்கும். நெய் கெட்டுப் போகக் கூடாது அதேசமயம் அதன் மணமும் சுவையும் மாறாமல் இருக்க வேண்டும் எனில் அதில் ஒரு துண்டு வெல்லம் சேர்த்து கலந்து வையுங்கள். கோதுமை மாவு, சோள மாவு, அரிசி மாவு, கடலை மாவு என ரெடிமேட் மாவு வகைகளை வாங்கி வைக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். ஆனால் அவை சில நாட்களிலேயே வண்டு வைத்துவிடும் அல்லது புழு வைத்துவிடும். அப்படி இல்லாமல்

பிரியாணி சாம்ராஜ்யத்தின் தலைவன்

Image
  அன்று டீ கிளாஸ் கழுவிய சிறுவன்... இன்று பிரியாணி சாம்ராஜ்யத்தின் தலைவன்!  தமிழ்ச்செல்வன் எனும் பெயர் கொண்ட அந்தச் சிறுவனுக்கு நான்கு வயது இருக்கும்போது அம்மா இறந்துவிடுகிறார். மனைவியின் மறைவு தந்த துக்கத்திற்குள் மூழ்கிய அவன் அப்பா, இறுதியில் மதுவிற்குள் மூழ்கிவிடுகிறார். பின், தன் அம்மாவின் அக்கா கவனிப்பில் வளர்க்கப்படுகிறான் தமிழ்ச்செல்வன். பெரியம்மா குடும்பத்தின் வறுமைச் சூழல் காரணமாக பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்பிற்குமேல் தொடர முடியவில்லை. பின், உள்ளூரில் இருந்த ஒரு டீக்கடைக்கு வேலைக்குச் செல்கிறான். டீ கிளாஸ் கழுவும் வேலை செய்து வந்த அந்தச் சிறுவனுக்கு ஒரு கட்டத்தில் தன்னுடைய உறவினர்கள் முன் அந்த வேலையைச் செய்வதற்குக் கூச்சமாக இருந்தது. டீக்கடை இருந்த தெருவில் உறவினர்கள் யாராவது வருவது தெரிந்தால் உடனே ஓடிச்சென்று கடைக்குள் ஒளிந்துகொள்கிறான் ஒளிந்து ஒளிந்து வேலை பார்த்த அந்தச் சிறுவன், இதற்கு மேலும் இந்த வேலையைச் செய்ய வேண்டாம் என 13 வயதில் தீர்மானமாக முடிவெடுத்து சென்னை நோக்கி கிளம்புகிறான். கூலிக்கு மூட்டை தூக்கி பிழைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் வந்த அந்தச் சிறுவனை 20க்

டீ குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்

Image
  டீ குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா? அறிவியல் ரீதியாக வெளியான உண்மை! பிளாக் டீ, மில்க் டீ மற்றும் கிரீன் டீ ஆகியவற்றில் சராசரியாக 14-61 மில்லிகிராம் கஃபின் அடங்கியுள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒரு ரிஃப்ரெஷிங் பானம் என்றால் அது டீ தான். சிலருக்கு காபி என்றால் மிகவும் பிடிக்கும். இருப்பினும், டீ (தேநீர்) உண்மையில் உலகம் முழுவதும் பரவலாக நுகரப்படும் ஒரு மலிவு விலை பானமாகும். டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளின் விரிவான பட்டியலை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒரு ரிஃப்ரெஷிங் பானம் என்றால் அது டீ தான். சிலருக்கு காபி என்றால் மிகவும் பிடிக்கும். இருப்பினும், டீ (தேநீர்) உண்மையில் உலகம் முழுவதும் பரவலாக நுகரப்படும் ஒரு மலிவு விலை பானமாகும். டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளின் விரிவான பட்டியலை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இதில் வீக்கம் குறைத்தல், இதய நோய் மற்றும் நாட்பட்ட நோய்களை கட்டுப்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவுகளை பராமரிப்பது உட்பட பல நன்மைகள் அடங்கும். டீ மனதை ஆறுதல் படுத்துவதற்கும் மற்றும் குணப

ஹெபடைடிஸ் உடலோடு சேர்த்து எவ்வாறு பாதிக்கிறது

Image
 world hepatitis day: ஹெபடைடிஸ் உடலோடு சேர்த்து எவ்வாறு பாதிக்கிறது  28.7.2021 ஹெபடைடிஸ் என்பது கல்லீரலில் ஏற்படும் தீவிரமான நோய் அறிகுறியாகும். இதன் காரணமாக கல்லீரல் வீக்கமடைகிறது. கல்லீரல் வீக்கமடைவதால் உடலில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பித்த உற்பத்தி, செரிமான பிரச்சனையில் துவங்கி உடலுக்கு ஆற்றல் கிடைப்பதில் இது தடைகளை உண்டாக்குகிறது. நமது உடலின் அனைத்து உறுப்புகளும் ஆற்றலை கொண்டே இயங்குகிறது. ஆனால் அந்த ஆற்றல் கிடைப்பதில் ஏற்படும் சிக்கலானது பல ஊட்டச்சத்து பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே முழு உடலிலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இப்படியான பெரிய உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடிய ஹெபடைடிஸ் பற்றி நாம் தெரிந்துக்கொள்வது முக்கியமாகும். ​ஹெபடைடிஸ் ஹெபடைடிஸ் என்பது ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது கல்லீரலை அழிக்கும் செயல்முறைகளை செய்கிறது. மேலும் இவற்றில் ஏ, பி, சி, டி மற்றும் ஈ என்று வகைகள் உள்ளன. ஹெபடைடிஸ் ஏ கடுமையானதாக இருக்கிறது. ஆனால் பி, சி, டி, மற்றும் ஈ வகைகள் நாள்பட்ட நோயாக இருக்கின்றன. இப்படி ஹெபடைடிஸ் வகையை பொறுத்து பண்புகள் மாறுகின்றன. ​ஹெபடைடிஸ் ஏ பாதி

ரசம் சாதத்திற்கு ஏற்ற உருளைக்கிழங்கு வறுவல்

Image
  ரசம் சாதத்திற்கு ஏற்ற உருளைக்கிழங்கு வறுவல் சூப்பர் உருளைக்கிழங்கு வறுவல், பேச்சுலர்ஸ் கூட சுலபமா செஞ்சிடலாம், செய்யும்போதே வாசனை பசியைத் தூண்டும் சாதத்திற்கு ஏற்ற சைடிஷ் என்றால் உருளைக்கிழங்கு வறுவலை குறிப்பிடலாம். அதிலும் ரசம் சாதத்திற்கு அருமையாக இருக்கும். இந்த சூப்பர் உருளைக்கிழங்கு வறுவல், பேச்சுலர்ஸ் கூட சுலபமா செஞ்சிடலாம், செய்யும்போதே வாசனை பசியைத் தூண்டும். ரசம் சாதம் தவிர புதினா புலாவ், கொத்தமல்லி புலாவ், தயிர் சாதம், வெஜ் பிரியாணி உள்ளிட்ட எல்லா வகையான கலவை சாதத்திற்கும் பொருத்தமா இருக்கும். இந்த டேஸ்டியான உருளைக்கிழங்கு வறுவல் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம். தேவையான பொருட்கள் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் உருளை கிழங்கு – 4 (பெரியது – 3/4 பதத்தில் வேக வைத்தது) கடுகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீ ஸ்பூன் பச்சை மிளகாய் – 2 (கீறியது) கருவேப்பிலை வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு விழுது – 2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன் மல்லி தூள் – 1/2 டீ ஸ்பூன் காஸ்மீரி மிளகாய் தூள் – 1 1/2 டீ ஸ்பூன் கரம் மசாலா – 1 டீ ஸ்பூன் வெந

அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடர் அன்னதான சேவை

Image
சென்னையிலுள்ள    அறம்   செய்ய   விரும்பு   லயன்ஸ்   கிளப்பின் தொடர் சேவையாக தொடர்ந்து இன்று 28 .07.2021  செவ்வாய்கிழமை காலை 7.30 மணியளவில்  சென்னை கோயம்பேடு காய்கறி அங்காடியில்   சங்கத்தின் மூலமாக கோயம்பேடு மார்க்கெட்டில் சாம்பார் சாதம், வத்தல் போடப்பட்டது. இந்த அன்னதானத்தை  தனது செலவிலேயே செய்து 240+ கூலித் தொழிலாளர்களின் பசியை தீர்த்த தலைவர் MJF Ln. தன பாலகிருஷ்ணன். அவருக்கு சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்ளப்பட்டது இந்த நிகழ்வில்  சங்கத்தின்    கிளப்பின் தலைவர்  MJF Lion A. தனபாலகிருஷ்ணன் சங்க செயலாளர் L ion. S. பாலச்சந்தர் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகளும்  உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

தினமும் சாப்பிட வேண்டிய சாப்பிடக்கூடாத உணவு எது?

Image
 பிரானிக் உணவுகள்: தினமும் சாப்பிட வேண்டிய உணவு எது?... தினமும் சாப்பிடக்கூடாத  உணவு எது? தற்போது பலரும் உணவு குறித்த அறிவை பெற துவங்கிவிட்டனர். அதிமான மக்கள் ஆயுர்வேத வாழ்க்கை முறைக்கு மாறி வருகின்றனர். ஆயுர்வேதம் ஒரு பழங்கால மருத்துவ முறையாகும். இந்தியாவில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு மருத்துவ முறையாக இது பார்க்கப்படுகிறது. ஆயுர்வேத உணவானது ஆரோக்கியமான உணவுகளை உண்பதற்கு நம்மை ஊக்குவிக்கிறது. மேலும் மனதை தெளிவாகவும், உடலை நச்சுத்தன்மையற்றதாகவும் மேலும் நல்ல ஊட்டச்சத்தை பெறவும் உதவும் உணவுகளை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. ஆயுர்வேத சிகிச்சை முறையானது பிரானா என்ற கருத்தை நம்புகிறது. இது நமது உடலில் மாற்றங்களை செய்யக்கூடிய ஆற்றலை குறிக்கிறது. பிரானா அல்லது பிரானிக் உணவுகளை பொறுத்தவரை இரு வகையான உணவுகள் உள்ளன. நேர்மறை மற்றும் எதிர்மறை உணவுகள். நேர்மறை உணவுகள் உடலுக்கு நன்மை பயப்பதாகவும் எதிர்மறை உணவுகள் உடலுக்கு கேடு விளைவிப்பதாகவும் உள்ளது. ​பிரானிக் உணவுகள் ஆயுர்வேத கோட்பாடுகளின்படி நாம் எப்போதும் உடலுக்கு நன்மை பயக்க கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். அவை உங்கள் உணவு ஆசையை நிறைவேற்றுவதாகவும்

அக்னி சிறகுகள் முளைத்து வானத்தை வசப்படுத்தினாய்..

Image
  அக்னி சிறகுகள் முளைத்து வானத்தை வசப்படுத்தினாய்.. அகிலம் திளைத்து இந்தியன் வசமானது மதங்களைக்கடந்து மனிதம் விதைத்தாய் உன் புன்னகையில் புனிதங்கள் விருட்சமானது ஏழையாய் பிறந்தாய் ஏற்றம் கண்டாய் எளியவனாகவே வாழ்ந்த எங்கள் இரண்டாம் மகாத்மாவே மண்ணுக்கும் விண்ணுக்கும் வெகுதூரமில்லை என்பதை உன் அக்னி சிறகுகள்தானே உலகுக்கு உணர்த்தியது. மனிதங்களை வளர்த்து மரங்களை வளர்க்கச்சொன்னாய் கனவு காணுங்கள் என்றாய் இளைஞர்களுக்கு எழுச்சி புகட்டினாய் கலாம் என்ற விதை பேய் கரும்பில் மட்டும் விதைக்கவில்லை இந்திய தேசமெங்கும் விதைக்கப்பட்டிருக்கிறது அவை அக்னிக்குஞ்சுகளாய் இனி (அனல்)பறக்கும்... கவிதாயினி மஞ்சுளா யுகேஷ்.