Posts

Showing posts with the label அறிவியல்/ ஆரோக்கியம்/சமையல்

*ஃபேஷியல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!*

Image
  *ஃபேஷியல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!* ஆர்கானிக் ஃபேஷியல், கோல்டன் ஃபேஷியல், பியேர்ல் ஃபேஷியல், டைமண்ட், ஹைட்ரா ஃபேஷியல், ஒயின் ஃபேஷியல், ஃபுரூட் ஃபேஷியல், சக்லேட் ஃபேஷியல், என எத்தனையோ ஃபேஷியல்கள் உள்ளன. பார்லருக்குச் சென்று ‘என் முகம் கொஞ்சம் பார்க்க நல்லா இருக்கணும்’ என சொல்லிவிட்டால் முடிந்தது ஜோலி. அவர்களிடம் இருக்கும் அத்தனை ஃபேஷியலையும் நம்மிடம் காண்பித்து குழப்ப நிலைக்குக் கொண்டு சென்றுவிடுவார்கள். கடைசியில் ‘ஃபேஷியலே வேண்டாம்ப்பா வெறும் ஐப்ரோவை மட்டும் நறுக்கி விடு’ என்னும் அளவுக்கு சோர்வடைந்துவிடுவதும் நிகழும். சரி ஃபேஷியல் எப்படி தேர்வு செய்ய வேண்டும்?, யாருக்கு என்ன ஃபேஷியல்? எதற்கு முதலில் ஃபேஷியல் விவரமாகச் சொல்கிறார் பியூட்டிஷியன் மற்றும் செலிபிரிட்டி மேக்கப் ஆர்டிஸ்ட் ரம்யா அழகேந்திரன். ஃபேஷியல் பயன்கள் பெரும்பாலும் 45 நாட்களுக்கு ஒரு முறை ஃபேஷியல் செய்வதால் ஏகப்பட்ட நன்மைகள் உண்டு. முகத்தில் சுருக்கம் வராமல் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றி முகத்தை புத்துணர்ச்சியாக வைக்கவே ஃபேஷியல் செய்யப்படுகிறது. அரோமோதெரபி ஃபேஷியல், நறுமண எண்ணெய் கொண்டிருக்கு...

மனம்விட்டு பேசினால் குடும்பம் சிறக்கும்-

Image
மனம்விட்டு பேசினால் குடும்பம் சிறக்கும்-  உஷா விஜயராகவன்* இயல்பாகவே நான் மிகவும் அமைதியான பெண். எந்த விஷயத்தையும் ஆணித்தரமாக பேச மாட்டேன். இதுபோல சில குறைகள் என்னிடம் இருந்தன. அதை மாற்றிக்கொள்வதற்காக வாழ்வியல் மேம்பாட்டு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். 'எந்த விஷயத்தை நாம் ஆழமாக நினைக்கிறோமோ, அதற்கான வாய்ப்பு தானாகவே உருவாகும்' என்று தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக பேச ஆரம்பித்தார் உஷா விஜயராகவன். பணி ஓய்வுக்குப் பிறகு தோழிகளுடன் அரட்டை, டெலிவிஷன் தொடர்கள் என்று பொழுதை போக்கும் சலிப்பான வாழ்க்கை வாழ்வதற்கு விருப்பம் இல்லாத இவர், தனது ஓய்வுக்காலத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு எண்ணினார். சுங்கத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்புதான், முன்பைவிட அதிகமாக இயங்க ஆரம்பித்திருக்கிறார். சென்னையை சேர்ந்த இவர், இப்போது வாழ்வியல் பயிற்சியாளராக ஆலோசனைகளை அளித்து, பலரது வாழ்க்கையை மேம் படுத்தி இருக்கிறார். இதோ அவரே தொடர்கிறார்… எனக்குத் தொழில் செய்வது மிகவும் பிடித்த விஷயம். ஓய்வு பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, ஓய்வுக்குப் பிறகு என்ன செய்யலாம் என்று என்னுடைய தனித் தன்மையைப் ...

இதை செய்தால் வெள்ளை முடி தொல்லை நீங்கும்

Image
  தினமும் அதிகாலை இதை செய்தால் வெள்ளை முடி தொல்லை நீங்கும் சிறு வயதிலேயே முடி நரைக்க டென்ஷன் ஒரு முக்கிய காரணமாகிறது. இதனை சரி செய்ய விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை, மாறாக, சமையலறையில் இருக்கும் பொருட்களின் மூலம் இயற்கையாகவே வெள்ளை முடியை கருப்பாக்க முடியும். இ ன்றைய காலக்கட்டத்தில், சிறு வயதிலேயே வெள்ளை முடி பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். சிறு வயதிலேயே வெள்ளை முடி ஏற்பட்டால் பலர் டென்ஷன், மன அழுத்தம், சங்கடம், தன்னம்பிக்கை குறைதல் போன்றவற்றுக்கு ஆளாகின்றனர். அதன்படி வெள்ளை முடியை மறைக்க கெமிக்கல் நிறைந்த ஹேர் டை பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இது முடியை இன்னுமும் சேதப்படுத்துகிறது. சிறு வயதிலேயே வெள்ளை முடி முடியை கருமையாக்க விலையுயர்ந்த பொருட்கள் தேவையில்லை, இயற்கையான முறையில் வெள்ளை முடியை மீண்டும் கருமையாக்கலாம். பொதுவாக  நரைமுடி  வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வய...

5 நிமிஷம் கூட ஆகாது இப்படி தக்காளி புதினா சட்னி

Image
  5 நிமிஷம் கூட ஆகாது இப்படி தக்காளி புதினா சட்னி செஞ்சி பாருங்க, இந்த வெங்காயம் தக்காளி புதினா சட்னிக்கு இட்லி, தோசை, அடை என்று எதை வைத்து கொடுத்தாலும் அவ்வளவு அருமையாக இருக்கும். காலையில் எழுந்து சுடச்சுட இட்லி,  தோசையுடன்  இந்த சட்னி வைத்து குடுத்துப் பாருங்கள், கூடுதலாக இரண்டு இட்லி சாப்பிடுவாங்க! இனி அடிக்கடி உங்க வீட்டில் இந்த சட்னி தான் கேட்பாங்க, அத்தகைய சுவை மிகுந்த தக்காளி புதினா சட்னி எப்படி எளிமையாக செய்வது? தக்காளி புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்:  கடலை பருப்பு – ஒன்றரை டேபிள்ஸ்பூன், வர மிளகாய் – 3, பச்சை மிளகாய் – 2, பெரிய  வெங்காயம்  – 1, தக்காளி – 1, புதினா – 1 கைப்பிடி, பூண்டு பல் – 3, உப்பு – தேவையான அளவு, துருவிய தேங்காய் – 2 டேபிள்ஸ்பூன், தாளிக்க: கடுகு – கால் ஸ்பூன், உளுந்து – அறை ஸ்பூன், கறிவேப்பிலை – 1 இணுக்கு, பெருங்காய தூள் – 1/4 ஸ்பூன். தக்காளி புதினா சட்னி செய்முறை விளக்கம்: தக்காளி புதினா சட்னி செய்ய முதலில் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் புதினா  இலைகளை  காம்பு இல்...

புஸ்ஸென பொங்கி வரும் சப்பாத்தி

Image
  மாலை வரை அதே சாஃப்ட்; புஸ்ஸென பொங்கி வரும் சப்பாத்தி  கோதுமை மாவில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும், தாதுக்களும் நிரம்பியுள்ளன. சப்பாத்தி செய்ய பயன்படுத்தும் கோதுமை மாவில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும், தாதுக்களும் நிரம்பியுள்ளன. வைட்டமின் பி 1, பி 2, பி 2, பி 6 மற்றும் பி 9 நிறைந்துள்ளததோடு கோதுமையில் சோடியம் மிக அதிகமாக உள்ளது. 120 கிராம் கோதுமையில் 190 மில்லிகிராம் சோடியம் உள்ளது. நீங்கள் செய்யும் மிருதுவான சப்பாத்தியில் வெஜ் அல்லது நான் வெஜ் குருமா சேர்த்து சாப்பிடால் ரொம்பவே டேஸ்டியாக இருக்கும். தவிர, வயது முதிர்ந்தவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் இது மிகவும் ஏற்ற உணவு இப்படியாக பல ஆரோக்கிய நன்மைகளையும், ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியுள்ள சப்பாத்தியை எவ்வளவு நேரமானாலும் சாஃப்டாக இருக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சிம்பிள் ட்ரிக்ஸை இங்கு பார்க்கலாம். சாஃப்ட் சப்பாத்திக்கு தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 1 கப் உப்பு தண்ணீர் – 1/2 கப் எண்ணெய் – 1 டீஸ்பூன் சாஃப்ட் சப்பாத்திக்கு சிம்பிள் டிப...

உளுந்து ஊற வைக்காமல், மாவு அரைக்காமல் சுவையான வடை

Image
  திடீரென சுடச்சுட வடை சாப்பிட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டால் அதனை உடனே செய்து சாப்பிட முடியாது.  ஏனென்றால் எந்த வடையாக இருந்தாலும் அதற்கு கடலைப்பருப்பு  அல்லது  உளுத்தம்பருப்பை இரண்டிலிருந்து, மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு இதனை அரைத்து, அதனுடன் வெங்காயம், மசாலா சேர்த்து தான் வடை செய்ய முடியும். ஆனால் ஆசைபட்டவ உடனேயே இந்த வடையை சாப்பிட இப்படி வீட்டில் இருக்கும் இட்லி மாவை பயன்படுத்திக் கொள்ளலாம். இட்லி மாவு என்ற உடனே அது தோசை ஊற்றுவதற்கு தான் சரியாக இருக்கும், இதில் எப்படி வடை செய்ய முடியும் என்ற சந்தேகம் வரும். இந்த இட்லி மாவுடன் சில பொருட்களை சேர்த்து கலந்து கொண்டால் உடனே வடை மாவு தயாராகிவிடும் தேவையான பொருட்கள்:  இட்லி மாவு – 5 கரண்டி, கடலை மாவு – 3 ஸ்பூன், ரவை – 2 ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1,  பச்சை  மிளகாய் – 2, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, உப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – 200 கிராம் முதலில் 5 ஸ்பூன் இட்லி மாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் 2 ஸ்பூன் ரவை, 3 ஸ்பூன் கடலை மாவு ...

காங்கிரஸார் நடத்திய ஒரு ஊர்வலங்கள்

Image
  ஒருமுறை காங்கிரஸ் ஊர்வலம் திருவல்லிக்கேணித் தேரடியில் துவங்குவதாகவும் ஊர்வலத்தை சிவாஜி கணேசன் துவக்கி வைப்பதாகவும் ஏற்பாடாகி இருந்தது. மதியம் 3 மணிக்குத் துவங்க வேண்டிய ஊர்வலம் சிவாஜி கணேசன் வராததால் 4 மணிவரை துவங்கவில்லை. இதற்கிடையே வேடிக்கை பார்க்க வந்த ஜனங்கள் எங்களிடம் ‘சிவாஜி வந்தால் அவரை சரியாகப் பார்க்க முடியுமா அல்லது அவசரமாய் புறப்பட்டு விடுவாரா?’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். “நேரமானாலும் பரவாயில்லை. நீங்கள் அவரைப் பார்ப்பதற்கு வசதியான சந்நிதித் தெருவில் ஒருமுறை அவரை வரச்சொல்கிறோம்” என்று சொல்லி வைத்திருந்தோம். சிவாஜி கணேசன் வந்தவுடன் அவரை அணுகி மக்களுடைய விருப்பத்தைத் தெரிவித்தோம். அவருடன் வந்த நபரொருவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதற்கிடையே எங்களோடு வந்த சிறுவனொருவன் சிவாஜி கணேசனைத் தொட வேண்டுமென்ற ஆசையில் வேன் மீது ஏறிக் கையை நீட்டினான். இதைக்கண்டு சிவாஜி கணேசன் முகம் சுளித்தார். இதனால் கோபமுற்ற நாங்கள் ஊர்வலத்தை விட்டு வெளியேறினோம். இரவோடிரவாக ரசிகர் மன்றத்தை மாற்றி ‘மகாத்மா காந்தி நற்பணி மன்றம்’ என்று பெயரிட்டோம். சிம்சன் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ...

30 நாட்களில் 3 இன்ச் அளவு முடியை வளர வைக்க, இந்த ஒரு ஹேர் ஆயில் போதுமே

Image
  30 நாட்களில் 3 இன்ச் அளவு முடியை வளர வைக்க, இந்த ஒரு ஹேர் ஆயில் போதுமே முடி உதிர்வதை உடனடியாக நிறுத்த, முடி வளர்ச்சியை உடனடியாக அதிகரிக்க, வழுக்கையான இடத்திலும் உடனடியாக முடி வளர எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஒரு ஹேர் ஆயில் எப்படி  தயார்  செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தேங்காய் எண்ணெயை தடவினால், சளி பிடிக்கும், தலைபாரம் வரும், என்ற கவலை கூட கிடையாது. பின் சொல்லக்கூடிய அளவுகளில் இந்த ஹேர் ஆயிலை உங்கள் வீட்டிலேயே உங்கள் கையாலேயே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு மாதம் வரை இந்த தேங்காய் எண்ணெய் கெட்டுப்போகாது. சரி அந்த அற்புதமான தேங்காய் எண்ணெய்யை எப்படி தயார் செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள் முதலில் இந்த ஹேர் ஆயில் தயாரிக்க தேவையான பொருட்களை பார்த்துவிடலாம். 1 டேபிள்ஸ்பூன் வெந்தயம், 1 கைப்பிடி கறிவேப்பிலை, 5 செம்பருத்தி இலைகள். கறிவேப்பிலையையும், செம்பருத்தி  இலையையும்  முன்பே தண்ணீரில் நன்றாக அலசி தண்ணீரை சுத்தமாக துடைத்து காயவைத்துக் கொள்ள வேண்டும். இலையில் தண்ணீர் இருக்கக்கூடாது. இந்த 3 பொருட்களையும்...

உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டுமா?

Image
  உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டுமா? அப்போ ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் போதும் பொதுவாக தேங்காய் எண்ணெயில் பல பயன்கள் நிறைந்துள்ளது. இதனை நன்கு அறிந்து கொண்ட நமது முன்னோர்கள் சமையல் முதல் தோல் வரை அனைத்திற்கும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வந்தனர். நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள இந்த தேங்காய் எண்ணெய்யை நாம் தினமும் பயன்படுத்தி வருவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க.. காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் குடித்தால் உடல் எடை குறையுமாம். உடலில் தேவையில்லாமல் சேரும் கொழுப்புகளை கரைத்து கல்லீரல் வீக்கம் அடையாமல் தடுக்கின்றது. தினமும் முடிகளில் தேங்காய் எண்ணெய் தேய்த்து வருவதால் வேர்கள் ஊக்கம் பெற்று கூந்தல் அடர்த்தியாக வளர உதவுகின்றது. தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் உடல் சூடாகாமல் எப்பொழுதும் சமமான வெப்ப நிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. உச்சி முதல் பாதம் வரை பல்வேறு நன்மைகளை தருகின்றது. இதனை அழகு சாதன பொருளாகவும் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய்யை தினமும் பற்கள் மற்றும் ஈறுகளில் மசாஜ் செய்தால் பற்கள் பள பளவென்று மின்னும். ...

கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிடும் காமாட்சி சுப்பிரமணியம் அவர்களுக்கு வயது 94.

Image
 சென்னை பெசண்ட் நகர் 174ஆவது வார்டுக்கு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிடும் காமாட்சி சுப்பிரமணியம் அவர்களுக்கு வயது 94.  பெசண்ட் நகர் பகுதியில் பல பொதுப் பிரச்சினைகளுக்கு தனி நபராக போராடி சாதித்துவரும் சமூகப் போராளியான இவரின் பேட்டி மூலம் இவரை முதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நல்லதொரு வழிகாட்டியாக உதாரண மனுஷியாக உணரமுடிகிறது.  "எனக்கு வயது 94 என்று நான் நினைத்துப் பார்ப்பதே இல்லை. நாம் வாழும் தெரு, பகுதி பற்றி நமக்கு ஒரு பொறுப்பும் மதிப்பும் வேண்டும். இது என் பகுதி என்கிற உரிமை மனதில் இருந்தால் அக்கறை தானாக வரும். எனது பகுதியில் எப்போது சாலை போடப்பட்டாலும் தினமும் நான் சென்று அருகில் நிற்பேன். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு போடப்படுகிறதா என்று விடாமல் கண்காணிப்பேன். காண்ட்ராக்டர் தவறு செய்ய வாய்ப்பே இல்லாமல் கேள்விகள் கேட்பேன். இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் என் சமூகப் பணிகள் தொடரும்'' பெசண்ட் நகர் கடற்கரையில் பாழடைந்து கிடந்த கார்ல் ஸ்மித் நினைவுச் சின்னத்தைப் புதுப்பிக்க இடைவிடாத முயற்சிகள் எடுத்து சாதித்தவர் இவரே.  ஓல்காட் நினைவ...

எண்ணெய் குடிக்காத மொறுமொறு செக்க செவந்த டீக்கடை வெங்காய போண்டா சுட சுட 10 நிமிடத்தில்

Image
  எண்ணெய் குடிக்காத மொறுமொறு செக்க செவந்த டீக்கடை வெங்காய போண்டா சுட சுட 10 நிமிடத்தில் எண்ணெய் கொஞ்சமும் குடிக்காத செக்கசெவந்த மொருமொறு வெங்காய போண்டா டீயுடன் சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். இதற்காக டீக்கடை எல்லாம் தேடிப் போய் சாப்பிட வேண்டிய  அவசியமில்லை வெங்காய போண்டா செய்ய தேவையான பொருட்கள்:  பெரிய வெங்காயம் – நான்கு, கடலை மாவு – அரை கப், அரிசி மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், வெறும்  மிளகாய்த்தூள்  – அரை டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவிற்கு, கறிவேப்பிலை – ஒரு கொத்து. மொறு மொறுவென்று வெங்காய போண்டா செய்ய முதலில் நான்கு பெரிய வெங்காயத்தை தோல் உரித்து மெல்லியதாக நீள நீளமாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதனை நன்கு  கைகளால்  பிசைந்து கொடுத்து உதிர்த்துவிட்டு கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவின் படி கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து விட்டு பின்னர் வெறும் மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். காரத்திற்கு இந்த மிளகாய்த் தூளுடன், 2 பச்சை ...

விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கதை

Image
  today's  |sumischannel பீஷ்மாஷ்டமி பீஷ்மாஷ்டமி அன்று தான் நமக்கு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் எனும் அற்புதமான ஸ்தோத்திரம் நமக்கு கிடைத்தது... எப்படி கிடைத்தது .. இதோ.. video link by\

மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

Image
 *_வீட்டு வைத்தியம் இருக்கிறதே..! மூட்டுவலி முற்றிலும் குணமாகும்..!!_*  மூட்டு வலி எதனால் ஏற்படுகிறது, எளிய வீட்டு வைத்திய முறையில் எப்படி முற்றிலும் குணப்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம். . இன்றைக்கு பலரும் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள்.  சிலர் இளம் வயதிலேயே கூட மூட்டுவலிக்கு உள்ளாகிறார்கள். இதற்கு பல மருத்துவர்கள் மருந்து என பார்த்து மூட்டுவலி குறைந்தபாடில்லை.  நம்மில் நிறைய பேர் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வரும் பொழுது சிறுநீர் கழிக்காமல் அடக்கிக் கொள்கிறார்கள்.  இது மிகவும் ஆபத்தான ஒன்று என்பதை நாம் அறிவதில்லை. இப்படி நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால் சிறுநீர்ப்பை நிரம்பி அது உடலின் பிற பகுதிகளுக்கு சென்று விடுகிறது.  அவ்வாறு செல்லும் பொழுது ரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் மூட்டுகளில் படிந்து விடுகிறது.  இந்த சிறு சிறு கற்கள் சிநோவியல் மெம்பிரன் என்னும் இடத்தில் தங்கி விடுகிறது.  இது பல வருடங்களாக தொடர்ந்து, சிலருக்கு 35 வயதுக்கு மேல் உள்ளவர்கள் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் மூட்டுகளில் அதிக வலி இருக்...

வெறும் 10 நிமிடத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வெந்தயக்கீரை சப்பாத்தி

Image
  வெறும் 10 நிமிடத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வெந்தயக்கீரை சப்பாத்தி உடலுக்கு ஆரோக்கியம் தரும் ரெசிபியை மிக மிக சுலபமான முறையில் செய்து கொடுக்க வேண்டும். அதே சமயம் அந்த ரெசிபி சுவையானதாகவும் இருக்க வேண்டும். குழந்தைகள்  விருப்பமாக  சாப்பிடும் பொருளாகவும் இருக்க வேண்டும். அப்படி ஒரு சூப்பரான ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். இந்த வெந்தயக்கீரை சப்பாத்தியை மேத்தி சப்பாத்தி என்றும் சொல்லுவார்கள். ஆரோக்கியம் தரக்கூடிய வெந்தயக் கீரையை கடைந்து கொடுத்தால், குழம்பு வைத்துக் கொடுத்தால் குழந்தைகள் நிச்சயம் சாப்பிட மாட்டார்கள். இப்படி சப்பாத்தியாக செய்து லஞ்சுக்கு பாக்ஸில் போட்டு கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் வெளியூர் செல்வதாக இருந்தால் இரண்டு நாட்களுக்கு கூட இந்த சப்பாத்தியை எடுத்து வைத்து சாப்பிடலாம். இதற்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய், தயிரில் காராபூந்தி சேர்த்து பச்சடி இருந்தாலும் போதும். ஒரு அகலமான பவுலில் 1 கப் அளவு கோதுமை மாவை எடுத்துக்கொள்ளுங்கள். 200 லிருந்து 250 கிராம் அளவு கோதுமை மாவு. கடலை மாவு அல்லது  பொட்டு  கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூ...

Smartphone-ஐ சார்ஜ் போடுவதற்கு முன் செய்ய வேண்டியது என்ன?

Image
  Smartphone-ஐ சார்ஜ் போடுவதற்கு முன் செய்ய வேண்டியது என்ன?  ஸ்மார்ட்போனை சார்ஜ் போடும் போது வெடித்துவிட்டதாக பல செய்திகளில் நாம் படித்திருப்போம். அதற்கு முக்கிய காரணம் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் தான். செல்போனை சார்ஜில் போடுவதற்கு முன்னர் சில விடயங்களை சரிபார்க்க வேண்டும். பொதுவாக இன்று நாம் அனைவரும் போன் உடைந்துவிடாமல் இருக்க போனிற்கு கவர் உபயோகிக்கிறோம். தொலைபேசியை சார்ஜில் போடும்போது கவரை கழட்டிவிட்டு போடுவது மிகவும் சிறந்தது. ஏனெனில் சார்ஜ் போடும்போது தொலைபேசி சூடாவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதே போன்று சார்ஜ் போடும்போது மொபைல் டேட்டாவை ஆப் செய்து வையுங்கள். மேலும் ஏதேனும் ஆப் திறந்த நிலையில் இருந்தால் அவற்றை மூடிவிட்டு சார்ஜ் செய்வது மிகவும் நல்லது. இல்லையெனில் உங்கள் சார்ஜ் வீணாக வெளியேறும். தூங்கும் போது இரவு முழுவதும் தொலைபேசியை சார்ஜ் போடுவது. இவ்வாறு செய்யும்போது உங்கள் போன் சூடாகி வெடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதே போல அதிக நேரம் போன் பிளக் பாயிண்டில் இருந்தால் பேட்டரியின் தரம் போய் மொபைலின் ஆயுள் குறைந்துவிடும் 15 சதவீதம் இருக்கும்போது போனை சார்ஜ் போடுவது நல்ல...

நோயின்றி நலமுடன் வாழ்வோம்....

Image
 நோயின்றி நலமுடன்  வாழ்வோம்.... சிறிய - அரிய பயனுள்ள  மருத்துவ குறிப்புகள்  * காலையில் எழுந்தவுடன் உங்களை அறியாமல் நீங்கள் உங்கள் கைளை நீட்டுவீர்கள். முதுகை பின்புறம் வளைப்பீர்கள். கழுத்தினை இருபுறமும் திருப்புவீர்கள். இது நீங்கள் உணராமலேயே நீங்கள் உங்களுக்கு செய்து கொள்ளும் ‘ஸ்டிரெச்’ பயிற்சி யோகா. இதனை சில நிமிடங்கள் முறையான பயிற்சியாக செய்து விடுங்கள் . உங்கள் ரத்த ஓட்டத்தை சீராக்கும். ஜீரண சக்தி கூடும். முதுகு வலியினை நீக்கும். * காலை உணவுதான் பல ஆக்கப் பூர்வ செயல்களை உடலுக்கு கொடுப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. அநேகர்   எடை குறைய வேண்டும் என்ற கருத்தில் காலை உணவை தவிர்த்து விடுவார்கள். நேரமின்மை என்ற காரணத்தினை காட்டி காலை உணவினை தவிர்த்து விடுவார்கள். இவர்களை நீங்கள் பார்த்தால் அநேகர் எடை கூடியவர்களாக இருப்பார்கள். பழம், நார்சத்து நிறைந்த தானியம், கொழுப்பில்லாத பால் அல்லது தயிர் போன்றவைகளை சேர்த்து காலை உணவாக உண்ணும்போது நீங்கள் அறியாமலேயே உங்கள் உடல் ஆரோக்கியம் காக்கப்படுகின்றது. * பல் தேய்ப்பது என்பது இன்னமும் சிறுவர் முதல் பெரியவர் வரை பலருக்கு வகுப...