Posts

Showing posts from January, 2023

பீஷ்மாஷ்டமி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பிறவி பாவங்கள் போகும்

Image
 பீஷ்மாஷ்டமி   முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பிறவி பாவங்கள் போகும்  பீஷ்மாஷ்டமி தினம்   29.01.23  கொண்டாடப்படுகிறது. பீஷ்மாஷ்டமி தினத்தில், பீஷ்மருக்காகவும், நம்முடைய முன்னோர்களுக்காகவும் தர்ப்பணம் செய்தால், நாம் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி, நம்முடைய வாழ்வில் நிச்சயம் சுபிட்சம் ஏற்படும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. பீஷ்மர் உயிர் பிரிந்து மோட்சம் பெற்றாலும், அவர் பிரம்மச்சாரி என்பதால், அவருக்கு தர்ப்பணம் செய்ய வாரிசுகள் இல்லை. ஆனால், பீஷ்மர் ஒழுக்க நெறி தவறாமல் பிரம்மச்சாரிய விரதத்தை கடைபிடித்து வந்ததால், அவருக்கு சிரார்த்தம் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்று வியாசர் கூறினார். வியாசர் அப்படி சொன்னாலும், பீஷ்மரின் ஆத்மாவுக்காக இந்த நாடே தர்ப்பணம் செய்யும். அதனால் புண்ணியமும் கிடைக்கும் என்று ஆசி வழங்கினார் வியாசர்.  மஹாபாரதத்தில் கங்கையின் மைந்தரான பீஷ்மரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் இல்லாமல் மஹாபாரத காவியமே கிடையாது. கிருஷ்ணபரமாத்மா எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவரோ, அதே அளவுக்கு பீஷ்மரும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர். இவ்வுலகில் பிறந்த யாருமே செய்யத்

ரத சப்தமி

Image
 28.01.23 ரத சப்தமி   நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் அன்றோடு தொலைந்து போக எருக்கன் இலை குளியலை எப்படி போடுவது தெரியுமா? மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இந்த உலகில் பாவம் செய்து கொண்டிருக்கிறான். பாவத்தை நம்முடைய கண்கள், காதுகள், கைகள், கால்கள், திமிறிய தோள்கள், வாய், மெய் என்று அனைத்தும் சேர்ந்து தான் இந்த பாவத்தில் பங்காற்றுகிறது. இவைகளால் செய்த பாவங்கள் மொத்தமாக தொலைத்து கட்ட, நமக்கு கிடைத்த அற்புதமான ஒரு நாள் ரத சப்தமி!   அறியாமல் செய்த பாவத்திற்கான தண்டனையை இந்த ஜென்மத்திலேயே பல கஷ்டங்களை அனுபவித்து தீர்த்துக் கொண்டிருப்போம். இப்படிப்பட்ட பாவங்களில் இருந்து எளிதாக விடுபடுவதற்கு சூரிய பகவானை வழிபடுவது முறையாகும்.  ஏழு குதிரைகளைப் பூட்டிய ரதத்தில் சூரிய பகவான் பயணம் செய்கிறார். ரதசப்தமி நாளில் சூரியனுக்கு அதீத சக்தி இருக்கும். குருசேத்திர போரில் பீஷ்மர் உயிர் பிரியும் தருவாயில் அம்பு படுக்கையில் படுத்து கொண்டிருந்தார். அவரை சுற்றி கௌரவர்களும், பாண்டவர்களும், கிருஷ்ணரும் நின்று கொண்டிருந்தார்கள். நினைத்த நேரத்தில் உயிர் பிரியும் வரம் அவரிடம் இருந்தும், உயிர் பிரியாமல் இருந்தது. இதற்கு க

சென்னை வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு ஜியோ ரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் நல சங்கம் சார்பாக 74 வது குடியரசு தின விழா

Image
  சென்னை வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு ஜியோ ரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் நல சங்கம் சார்பாக 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது சென்னை ராயபுரம் 74 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு ஜி.ஏ.ரோடு சுற்று வியாபாரிகள் நல சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட வழங்கும் விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர்களாக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி ,வடக்கு மாவட்ட செயலாளர் திமுக இளைய அருணா, ஆகியோர் கலந்து கொண்டு100க்கும் மேற்பட்ட தூய்மை  பணியாளர்களுக்கு வேட்டி சேலை வழங்கினர்  சாந்தி சாரீஸ் உரிமையாளர் லதா சரவணன் தேசிய கொடியை ஏற்றினார்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சென்னை வண்ணாரப்பேட்டை எம். சி.ரோடு ஜி.ஏ. ரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் நல சங்கம் சார்பாக தலைவர் தமிமுன் அன்சாரி செயலாளர் தயாளன் பொருளாளர் சந்திரசேகர், துணைத்தலைவர்கள் நாகேந்திரன்,சுப்பிரமணி அய்யனார், பழனி ராஜசேகர், சந்திவீரன், துணைச் செயலாளர்கள் ரமேஷ், வேலு,சுப்புராஜ், ஆறுமுகம், அப்பாஸ் அலி, முருகன், கௌரவ தலைவர் தனசேகர் மற்றும் செ

*கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு: 20 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து பத்மஸ்ரீ விருது வென்ற டாக்டர் பேட்டி*

Image
 *கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு: 20 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து பத்மஸ்ரீ விருது வென்ற டாக்டர் பேட்டி* மத்திய பிரதேசத்தில் 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க தொடங்கி தற்போது 20 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் டாக்டர் எம்.சி. தவார் பத்மஸ்ரீ விருது பெற்றதற்கு நன்றி தெரிவித்து உள்ளார். ஜபல்பூர், நாட்டின் 74-வது குடியரசு தினத்தினை முன்னிட்டு பத்மஸ்ரீ விருது பெறுபவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் டாக்டர் எம்.சி. தவார் (வயது 77) என்பவரும் இடம் பெற்று உள்ளார். இதுபற்றி அறிந்ததும் அவர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். விருது வென்றது பற்றி டாக்டர் தவார் கூறும்போது, கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு. அதற்கு காலதாமதம் ஏற்படலாம். அதற்கான பலனே இந்த விருது. தவிரவும், மக்களின் ஆசியும் அதில் அடங்கும். குறைந்த கட்டணத்தில் மருத்துவ சேவை பற்றி அவர் கூறும்போது, வீட்டில் நிச்சயம் விவாதம் நடைபெறும். ஏன் இவ்வளவு குறைந்த கட்டணம் பெறுகிறீர்கள் என்று? ஆனால், மக்களுக்கு சேவையாற்றுவதே ஒரே நோக்கம். அதனால், கட்டணம் உயர்த்தப்படவில்லை. வெற்றியின் அட
 https://www.youtube.com/watch?reload=9&v=jf6BgG6aRUU&feature=youtu.be

பிப்ரவரி மாதம் 5ம் இதழில் இருந்து மின்மினி அச்சிதழாக வரவிருக்கிறது.

Image
  பிப்ரவரி மாதம் 5ம் இதழில் இருந்து மின்மினி அச்சிதழாக வரவிருக்கிறது. சந்தா தொகை ரூ.900 (தொள்ளாயிரம் மட்டும்) . ஏற்கனவே மின்னிதழுக்காக 500 ரூபாய் செலுத்தியவர்கள் தற்பொழுது 400 ரூபாய் செலுத்தினால் அடுத்து வருகின்ற 9 இதழ்கள், பிப்ரவரி முதல் அக்டோபர் வரை அச்சிதழ்கள் அவர்களுக்கு அஞ்சல் வழியாக அனுப்பப்படும். அவர்கள் நவம்பர் மாதம் சந்தாவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இதுவரை சந்தா செலுத்தாதவர்கள் முழுமையாக 900 ரூபாய் செலுத்துபவர்கள் 12 மாத இதழ் அவர்களுக்கு கிடைக்கும், அடுத்த வருடம் ஜனவரி வரை என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து சந்தாதாரர்களும் தங்களுக்கு அருகாமையில் இருக்கும் வாசகர்களுக்கு மின்மினி இதழை அறிமுகப்படுத்தி வைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். தாங்கள் இதுவரை அளித்து வரும் பேராதரவிற்கு நன்றி ! மின்மினி 95519 99588 mkinminmini@gmail.com https://minmini.co.in/

தேசிய பெண்கள் குழந்தைகள் தினமின்று

Image
தேசிய பெண்கள் குழந்தைகள் தினமின்று ❣️ சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி முதல் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுது.  பெண் குழந்தைகள்... பூக்குட்டிகள்.. வாழ்வில் நாம் காணும் உயிரோவியங்கள்... வீட்டுக்குள் வளைய வரும் பெண்தெய்வம்... அவள் இருந்தாலே வீடு நிறைவு பெறும்.. இப்படி பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் கொண்டாடப்படும் இந்நாள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டு, இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருது.  பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அவர்களுக்கு நேரும் பிரச்சினைகளைத் தடுப்பது, பெண் குழந்தைகளுக்கான கல்வியை உறுதி செய்வது ஆகியவை இந்நாளின் நோக்கமாகும். தற்போதையச் சூழலில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அவர்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றனவா என்பது சந்தேகமே.  அனைவரும் முதலில் குடும்பத்தில் தங்கள் பெண் குழந்தைகளை மதிப்பான முறையில் நடத்த ஆரம்பிக்க வேண்டும். இதுவே, சமூகத்திலும் மாற்றத்தை உண்டாக்

கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் ஆள்குறைப்பு அமெரிக்காவில் 80 ஆயிரம் இந்தியர் வேலையிழந்து தவிப்பு

Image
 கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் ஆள்குறைப்பு அமெரிக்காவில் 80 ஆயிரம் இந்தியர் வேலையிழந்து தவிப்பு வாஷிங்டன்: அமெரிக்காவில் கூகுள் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் ஆள்குறைப்பு நடவடிக்கையால்  80 ஆயிரம் இந்தியர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். அமெரிக்காவின் பிரபல நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், டிவிட்டர் உள்ளிட்ட  நிறுவனங்கள்  2 லட்சம் ஊழியர்களை வேலை  நீக்கம் செய்துள்ளது. இதில், ஏராளமான இந்தியர்கள் அடங்கும். இதுகுறித்து தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து ஐடி துறையில் 2 லட்சம் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், அமேசான், டிவிட்டர் நிறுவனங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர்  வேலையிழந்துள்ளனர். இந்த ஊழியர்களில் 30 முதல் 40 சதவீதம் இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் வல்லுநர்கள். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் எச்-1பி, எல்1 விசாவில் அமெரிக்கா வந்தவர்கள்.  எச்-1பி விசா வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை அமெரிக்க நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு வேலைக்கு எடுப்பதாகும்.  தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனா, இந்

சென்னைக்கு அருகில் இப்படியொரு அழகான இடமா –

Image
  சென்னைக்கு அருகில் இப்படியொரு அழகான இடமா – பசுமையான நீர், வனப்பகுதி, ட்ரெக்கிங் – ஒரு நாள் சுற்றுலா! சென்னைக்கு அருகில் இப்படியொரு அழகிய இடமா என்று இந்த இடம் நம்மை வியக்க வைக்கிறது.  எங்கு பார்த்தாலும் பசுமை, அடர்ந்த வனாந்திரம், பச்சை நிற அழகிய தெளிவான நீர், கூழாங்கற்கள் பாதை  என இந்த இடம் பார்ப்பதற்க்கு ஏதோ நாம்  அந்தமானில் இருப்பது போன்ற  ஒரு உணர்வை தருகிறது. ஆனால் இந்த இடம்  சென்னையில் இருந்து வெறும் 3 மணி நேர பயண தூரத்தில் சென்னை - கடப்பா தேசிய நெடுஞ்சாலையில்  அமைந்துள்ளது. சென்னையில் இருந்து  ஒரு நாள் ட்ரிப் அல்லது பிக்னிக்  செல்ல இது சரியான சாய்ஸ் ஆகும். இந்த இடத்திற்கு ஒரு முறை சென்று வந்ததும் மீண்டும் மீண்டும் இங்கேயே செல்ல திட்டமிடுவீர்கள். இந்த இடத்தின் சிறப்பம்சங்கள் என்ன? எப்படி செல்வது? இங்கே என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து கீழே பார்க்கலாம்! கடப்பா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மாமண்டூர் காடுகளை இயற்கை அன்னை மிகுதியாக ஆசீர்வதித்து இருக்கிறாள் என்று தான் சொல்ல வேண்டும். கிழக்கு தொடர்ச்சி மலைகளின் அரிய மரங்கள், தாவரங்கள், மூங்கில் காடுகள், பச்சை நிற தெளிந்த நீர், அ

ஐ.டி. பணிநீக்கம்: கூகுள் நடவடிக்கையால் கர்ப்பிணி கலக்கம் -

Image
 *ஐ.டி. பணிநீக்கம்: கூகுள் நடவடிக்கையால் கர்ப்பிணி கலக்கம் - டி.சி.எஸ்., விப்ரோ பணி நீக்கம் - BBC News தமிழ்* பெரும் ஐ.டி. நிறுவனங்களில் தொடரும் பணிநீக்கம் உதிரி பாகங்களின் விநியோகச் சங்கிலி உடைந்ததால் தொழில்துறையில் உற்பத்தி முடக்கம், உணவுதானியப் பற்றாக்குறை, பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற எரிபொருள் விலையேற்றம் என ஒவ்வொரு நாடும் வெவ்வேறு வகையில் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. உலக பொருளாதார வளர்ச்சி சரிந்துவிட்டதன் தாக்கத்தை தகவல் தொழில்நுட்பத் துறையில் கண்கூடாக காண முடிகிறது. அமேசான், கூகுள், மெட்டா, ட்விட்டர் போன்ற பெருநிறுவனங்கள் அடுத்தடுத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு தொழிலாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. நிறைமாத கர்ப்பிணி வேலையைப் பறித்த கூகுள் அந்த வரிசையில், கூகுள் நிறுவனம் அண்மையில் 12,000 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த கேதரின் வாங் என்ற பெண்ணும் அவர்களில் ஒருவர். கூகுள் நிறுவனத்தில் ஏவியேஷன் பிரிவில் புரோகிராம் மேலாளராக அவர் பணிபுரிந்து கொண்டிருந்தார். 8 மாத கர்ப்பிணியான கேதரின் வாங் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். ஒரு வாரத

30 நாள் வரவேண்டிய கேஸ், நிச்சயம் 60 நாளைக்கு வரும்.

Image
  30 நாள் வரவேண்டிய கேஸ், நிச்சயம் 60 நாளைக்கு வரும். அதிகமாக விலை கொடுத்து வாங்கும் கேஸ் சிலிண்டர், 30 நாளைக்கு வரக்கூடிய  கேஸ்  சிலிண்டர் 25 நாளைக்குள்ளாகவே தீரும் . இப்படி கேஸ் சிலிர்களின் பயன்பாடு நம் வீட்டில் அதிகமாக ஆவதற்கு நாம் செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகள் கூட காரணமாக இருக்கலாம். அன்றாடம் நாம் சமையலில் செய்யக்கூடிய அந்த சின்ன சின்ன தவறுகள் என்னென்ன, அதையெல்லாம் சுலபமாக எப்படி சரி செய்வது என்பதை பற்றிய பயனுள்ள வீட்டு குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இன்று பாலில் இருந்து காய்கறி, இறைச்சி, வரை ஃப்ரிட்ஜில் வைத்து தான் சமைக்க வேண்டிய சூழ்நிலை. அப்படி இருக்கும் போது ரொம்பவும் குளிர்ச்சியான இந்த பொருட்களை  அப்படியே  எடுத்து போட்டு, அடுப்பில் வைத்து சமைப்பதன் மூலம், இது சூடி ஏறி வெந்து வதங்கி சமைத்து வருவதற்குள் தினம் தினம் கூடுதலாக 1/2 மணி நேரம் கேஸ் நமக்கு தேவைப்படும். (குறிப்பா இப்ப வரக்கூடிய தக்காளி எல்லாம், வதங்கவே மாட்டேங்குது என்பது இல்லத்தரசிகளின் கம்ப்ளைன்ட். தக்காளி நல்லாதான் இருக்குது. பிரிட்ஜில் வைத்து வைத்து மறுத்து போய் இருக்கு. அதனால

ஸ்டாலின் கொடுத்த "ரியாக்சன்

Image
  ஸ்டாலின் கொடுத்த "ரியாக்சன் சட்டசபையில் ஆளுநர் பேசுவதுதான் உரை என்று சொல்வது தவறு. ஆளுநர் உரை என்பது அரசின் உரை. அரசு எழுதிக்கொடுப்பதைதான் ஆளுநர் படிக்க வேண்டும், என்று மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூபிற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவி - முதல்வர் ஸ்டாலின் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது.ஆளுநர் ஆர். என் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆளும் திமுக சார்பாக முன்பே குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் பேசிய உரைக்கு எதிராகவும் தமிழ்நாடு ஆளும் திமுக சார்பாக எம்பிக்கள் குடியரசுத் தலைவர் முர்முவிடம் புகார் அளிக்கப்பட்டது. அதோடு சட்டசபையிலேயே அவரின் உரைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி, அரசின் உரை அவை குறிப்பில் சேர்க்கப்பட்டது. இன்னொரு பக்கம் ஆளுநரின் செயல்பாடுகள் மீது ஆளும் திமுக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது. ஆளுநர் ஆர். என் ரவி 20 மசோதாக்களை டெல்லிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு உள்ளார். முக்கியமாக பல்கலைக்கழகங்களில் முதல்வ

பூஜை பாத்திரங்களை கஷ்டப்பட்டு தேய்த்து சுத்தம் செய்யாமல் 10 நிமிடத்தில் அத்தனை பொருட்களையும் பளபளன்னு ஜொலிக்க

Image
  பூஜை பாத்திரங்களை கஷ்டப்பட்டு தேய்த்து சுத்தம் செய்யாமல் 10 நிமிடத்தில் அத்தனை பொருட்களையும் பளபளன்னு ஜொலிக்க செய்வது எப்படி? பூஜை பொருட்கள் பளபளன்னு செய்வதற்கு முதலில் ஒரு பெரிய எலுமிச்சை அளவிற்கு புளி தேவை. இதை நீங்கள் ஃபிரஷ் ஆக எடுத்து வீணாக்க வேண்டிய அவசியம்  இல்லை,  ஏற்கனவே பயன்படுத்திய சக்கைகளை எடுத்து வைத்திருந்தாலே போதும் எனவே இனி ரசம், குழம்பு வைக்க பயன்படுத்தும் புளியை வீணாக்காதீர்கள், எடுத்து பிரிட்ஜில் வையுங்கள். ஒரு பெரிய பாத்திரத்தில் எல்லா பூஜை பாத்திரங்களையும் வைத்து தண்ணீர் ஊற்றி நிரப்பும் அளவிற்கு இருக்க வேண்டும். இதில் நீங்கள் சேகரித்து வைத்துள்ள புளி சக்கைகளை போட்டு கரைத்து விட்டுக் கொள்ளுங்கள். பூஜை பாத்திரங்களை அதற்குள் சேர்ப்பதற்கு முன்பு ஒரு ட்ரையான துணியை வைத்து மஞ்சள், குங்குமம், எண்ணெய் போன்றவற்றை சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற  வைத்து  கொதிக்க ஆரம்பித்ததும், அரை மூடி எலுமிச்சை பழத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு கொதித்து தண்ணீரின் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து விடுங்கள். பின்னர் ஆற விட்டு விடுங்கள். நன்கு ஆறியதும் ஒவ்வொரு பூஜை பாத்திரத

முனைவர். லக்ஷ்மிப்ரியா

Image
முனைவர். லக்ஷ்மிப்ரியா    நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்! அதுவு மற்றவர் வாய்ச்சொ லருளீர்!    ஆண்மை யாள ருழைப்பினை நல்கீர்! மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்!    வாணி சைக் குரியன பேசீர்! எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்    இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்! என்று இத்தேசமெங்கும், ஏன் உலகெங்கும்கூட, கல்வியும் கலைகளும் ஓங்க வேண்டும், கலைவாணியின் கோயில்கள் பெருக வேண்டும் என்பது பாரதியின் உள்ளத் தவிப்பு. அந்த உள்ளத் தவிப்பைத் தன் உயிர்த்துடிப்பாகக் கொண்டுவிட்ட ஒருவர், முனைவர் லக்ஷ்மிப்ரியா! வாசிப்பில் ஈடுபாட்டுடைய அனைவருக்கும் வரும் ஆவல், தானும் வாசிப்பிற்குக் கதையோ, கவிதையோ, கட்டுரையோ நல்கவேண்டும் என்பது. "எல்லோருக்குள்ளும் ஒரு கதை உண்டு" என்கிறார் இந்த இளம்பெண். அவர்களில் பலர் அதனை எழுதுவதிலும் வெற்றியடைகிறார்கள். அதுவே தங்களுக்கு ஆனந்தம் அளித்த கலைவாணிக்குத் தாங்கள் செய்யும் பூஜையாகக் கருதுகிறார்கள். முனைவர் லக்ஷ்மிப்ரியாவும் எழுத்தாளர்தாம். அவர் சிறுவயதில் படித்துக் களித்த கதைகள் அவரை எழுதத் தூண்டின. அவர் நூல்கள் ஆக்கம் பெற்று, அச்சும் பெற்றுப் புகழுறும்போது, லக்ஷ்மிப்ரியாவிற்குப் ப

*சனிக்கிழமை வரும் தை அமாவாசை: முன்னோர்களின் ஆசி கிடைக்க விரதம் இருந்து செய்ய வேண்டியவை...*

Image
 *சனிக்கிழமை வரும் தை அமாவாசை: முன்னோர்களின் ஆசி கிடைக்க விரதம் இருந்து செய்ய வேண்டியவை... * நாளை தை அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு தரப்படுவதாகும். ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் என வரையறுத்து அறிவுறுத்தியுள்ளது சாஸ்திரம். அமாவாசை, தமிழ் மாதப் பிறப்பு, கிரகணம், புரட்டாசி மகாளய பட்ச புண்ணிய காலமான 15 நாட்கள் என மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும். மாதாமாதம் அமாவாசை வந்தாலும், ஒரு வருடத்தில் மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியமானவை. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்களிலேனும் மறக்காமல், முன்னோர் எனப்படும் பித்ரு ஆராதனை செய்யவேண்டும். இந்தநாளில், தர்ப்பணம் முதலான சடங்குகள் செய்து, நம் முன்னோரை ஆராதித்து வணங்கவேண்டும். எள்ளும்தண்ணீரும் முன்னோருக்கு விட்டு, தர்ப்பண மந்திரங்களைச் செய்யவேண்டும். தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். நமக்கு ஆசீர்வாதம் செய்வதற்காகக் காத்திருப்பார்களாம் பித்ருக்கள். எனவே, இந்தநாளில் மறக்காமல் முன்னோர் வழிபாட்டைச் ச

*வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

Image
 * வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!* வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள். வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்? 1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். 2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கல

*அஷ்டலிங்கம் தரும் அதிர்ஷ்டம்*

Image
  *அஷ்டலிங்கம் தரும் அதிர்ஷ்டம்* திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் எட்டுத் திக்கிலும் உள்ள அஷ்டலிங்கங்கள், இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியவை ஆகும். இந்த மலையின் சுற்றளவு சுமார் பதினான்கு கிலோமீட்டர். இந்த கிரிவலப் பாதையிலுள்ள அஷ்டலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் எண்ணற்றவை என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.  இந்திர லிங்கத்தை வழிபடுவதால் நீண்ட ஆயுளுடன் புகழும் கிடைக்கும்.  அக்னி லிங்கம் நோய்கள் மற்றும் பயம் நீக்கும். யம லிங்கம் நீண்ட ஆயுள் தரும்,  நிருதி லிங்கம் உடல் நலம், செல்வம், மழலைச் செல்வம், புகழ் போன்றவற்றை அருளும்.  வருண லிங்கம் நீர் சம்பந்தப்பட்ட நோயைத் தீர்க்கும்.  வாயு லிங்கம் இதயம், மூச்சு தொடர்பான நோயைப் போக்கும்.  குபேர லிங்கம் செல்வமும் உன்னத வாழ்க்கையும் தரும்.  ஈசான்ய லிங்கம் மன அமைதி தரும்.  *ஏழரைச் சனியும் திருமணமும்.... பரிகாரமும்* ஏழரைச் சனி காலத்தில் நடைபெறும் திருமணம், மண வாழ்க்கை பாதிக்காது. 30 வயதிற்கு மேல் ஆகியும் திருமணத்தை தள்ளி போடுகிறார்கள். ஏழரை சனிக்கு