Posts

Showing posts with the label மாணவர்கள்

*பன்முக திறமையால் கவனம் ஈர்க்கும் மாணவி..!*

Image
 *பன்முக திறமையால் கவனம் ஈர்க்கும் மாணவி..!* *பிளஸ்-2 மாணவியான சக்தி பூரணி, பல கலைகளைக் கற்று, அசத்தி வருகிறார். அதில் சிலவற்றில் கின்னஸ் சாதனைகளையும் படைத்திருக்கிறார். அவருடன் சிறுநேர்காணல். * உங்களைப் பற்றி சிறு அறிமுகம்? திருவாரூர் எங்களுடைய பூர்வீகம். இப்போது சென்னைக்கு அருகே இருக்கும் பாடியநல்லூரில், பெற்றோருடன் வசித்து வருகிறேன். அம்மா-அப்பா இருவருமே அரசுப்பள்ளி ஆசிரியர்கள். நானும் செங்குன்றம் பகுதியில் இருக்கும் புனித மேரி மேல்நிலைப்பள்ளியில், பிளஸ்-2 படிக்கிறேன். * நிறைய கலைகளை கற்றுக்கொள்ளும் ஆர்வம் பிறந்தது எப்படி? வழக்கமான குழந்தை களைவிட, சிறுவயதில் எனக்கு கூடுதலான மூச்சுப்பயிற்சி தேவைப்பட்டிருக்கிறது. அதற்காக மருத்துவர்கள், வாய்ப்பாட்டு சம்பந்தமான பயிற்சி வகுப்புகளை பரிந்துரைத்துள்ளனர். அப்படிதான், கலைகள் என் வாழ்க்கைக்குள் அறிமுகமாகின. நான் வாய்ப்பாட்டு வகுப்பிற்கு சென்றாலும், அங்கு அரங்கேறும் நடனம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் ஆர்வமாக இருந்தேன். அதன் காரணமாய், வெகுவிரைவிலேயே நடன வகுப்பிலும் கலந்துகொண்டு நடனம் பயின்றேன். * பல கலைகளை கற்றுக்கொள்ள தொடங்கியது எப்போது? 6-...

ஆவடியில் 100 குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.

Image
 திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 100 குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். ஆவடி டிச.26.  திருவள்ளூர் மாவட்டம் ஆவடி இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் நேற்று கிறிஸ்துமஸ் தின விழா மதியம் 2 மணி முதல் 5 மணி வரை கொண்டாடப்பட்டது. இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் குழந்தைகள் ஆடல் பாடல் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர். உலகத்தில் அன்பும் பாசமும் ஒற்றுமையும் நிலைத்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. இந்த விழாவில் நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.  அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டது. மொத்தத்தில் குழந்தைகள் அனைவரும் மிக மகிழ்ச்சியுடன் இந்த தினத்தினிலே இருந்தனர்கள் இந்த விழாவில் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் கோமளா அவர்களும் செயல்பாட்டாளர் ஹரிஷ் குமார், செயல்பாட்டு ஒருங்கிணைப்பாளர் பவித்தா ரஞ்சனி, ஆசிரியர்கள் ஜீவிதா, கீர்த்தனா, சக்தி, மதுமிதா, மற்றும் பவித்ரா ஆகியவர்கள் கலந்து கொண்டனர்.  இந்த விழாவில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் கேக் மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது குழந்தைகள் மி...

சிறப்பு வகுப்பு மாணவர்களுக்கு சுண்டல்

Image
  செங்கல்பட்டு மாவட்டதில் நாகல்கேணி  அரசு (ஆதிந) மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பாக சிறப்பு வகுப்பு மாணவர்களுக்கு சுண்டல் குரோம்பேட்டை – டிச.7  செங்கல்பட்டு மாவட்டம் நாகல்கேணி அரசினர் ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர்(பொறுப்பு) வேண்டுதளுக்கிணங்க, நம் பள்ளி நம் வீடு முன்னாள் மாணவர்கள் சங்கமத்தின் சார்பாக முதல் கட்டமாக 30 கிலோ கொண்டை கடலை(சுண்டல்) வழங்கப்பட்டது. 10,11,மற்றும்12ஆம் வகுப்பில் 200க்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு *தினமும் மாலையில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருவதால்*  மாணவ, மாணவிகள் ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் கல்வி கற்க மாலை சிறப்பு வகுப்புக்கு பின் இந்த சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வில் நம் பள்ளி நம் வீடு முன்னாள் மாணவர்கள் சங்கமத்தின் அங்கத்தினர்கள் அல்லாபகேஷ், விநாயகமூர்த்தி, பிரான்சிஸ் ராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ராஜசேகர்,சீதாலட்சுமி,மணிமேகலை ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

குழந்தை உரிமை பாதுகாப்பு குழுக்களின் கலந்துரையாடல் கூட்டம்

Image
 செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள திருநீர்மலை பகுதியில் குழந்தை உரிமை பாதுகாப்பு குழுக்களின் கலந்துரையாடல் கூட்டம் பல்லாவரம்:06  செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள திருநீர்மலை பகுதியில் உள்ள  சிவராசன் தெருவில் நேற்று (05.12.2022) மாலை 5 .30 மணி முதல் இரவு 7 மணி வரை குழந்தை உரிமை பாதுகாப்பு குழுக்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி கோமளா அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக AHB திரு விஜய் பர்மர், திரு.அலங்காரம், ACDS திரு தேவன்பு ஆகியோர் கலந்துகொண்டனர். குழந்தை உரிமை பாதுகாப்பு குழுக்களின் செயல் திட்டங்களை பற்றி விவாதித்தனர். இந்த நிகழ்வில் திருநீர்மலை பகுதியில் உள்ள குழந்தை உரிமை பாதுகாப்பு குழுக்களை சேர்ந்த நிர்வாகிகள் 20க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களின் செயல் திட்டங்களை பற்றி தெளிவுபடுத்தினர் 5 ஆண்டுகள் கடந்த நிலையில் குழந்தை பாதுகாப்பு குழுக்கள் எவ்வாறெல்லாம் செயல்பட்டனர், எவ்வாறெல்லாம் சவால்களை  சந்தித்தனர்  என்பதை மிகத் தெளிவாக சிறப்பு ...

*உலக HIV AIDS தின* விழிப்புணர்வு

Image
  திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மோரே பஞ்சாயத்தில் உள்ள புதிய கண்ணியம்மன் நகரில்இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக *உலக HIVAIDS தின* விழிப்புணர்வு 01.12 .2022) மாலை 5.30 முதல் 6.30 மணி வரை நடைபெற்றது.  இந்த விழிப்புணர்வு நிகழ்வை இனிஉதயம் தொண்டு நிறுவனத்தின் புதிய கண்ணியம்மன் நகர் மாலநேர திறன்வளர் மையத்தின் ஆசிரியர்கள் ஜீவிதா கீர்த்தனா மற்றும்  புனிதா ஆகியோர் அருமையாக ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்வில் 80 க்கு மேற்பட்ட  குழந்தைகள் கலந்துக் கொண்டனர்.  

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி

Image
  போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி     ANTI-DRUG AWARNESS PROGRAMME   மேற்கு முகப்பேரில் உள்ள அமுதா மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணர்வு ( ANTI-DRUG AWARNESS ) உதவி ஆணையர் திரு மிகு வரதராஜன்   அவர்கள் தலைமையில்26/11/2022அன்று    மாணவ மாணவியர் பேரணி தொடங்கி வைக்கப்பட்டது   இப்பேரணியில்   வி 7 நொளம்பூர் காவல் நிலைய கைச்சார்ந்த இன்ஸ்பெக்டர் திருமிகு   செல்வகுமார் , சப் இன்ஸ்பெக்டர்கள்   திருமதி சத்தியபாமா, திரு மோகன், திரு ரவி, திரு குமார் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் திருமதி வனஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,   இப்பள்ளி மாணவர்களும் மாணவிகளும் பதாகைகளை ஏந்தி சென்றனர் . இப்பேரணி அமுதா   பள்ளி வளாகத்தில் தொடங்கி நொளம்பூர் காவல் நிலையம் தொடங்கி   குட்வில் அடுக்கு மாடி ,பூங்கா வழியாக   மீண்டும் அமுதா பள்ளி அடைந்தது இந்த பேரணியின்   இறுதியில்   ) உதவி ஆணையாளர் திரு மிகு வரதராஜன்     அவர்கள் உரை நிகழ்த்தினார்,மாண...

Canvas painting/STUDENTS

Image
Canvas painting painting sect ion painting by N.G.Ananyaa 6th std

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு

Image
  செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு நேற்று (02.08.2022) செங்கல்பட்டு மாவட்டம் நாகல்கேணி அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி மற்றும் அனகாப்புதூர் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 13முதல் 18 வரை உள்ள வளர இளம் பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.  இந்த விழிப்புணர்வு நிகழ்வை தலைமை ஆசிரியர்கள்  ஒப்புதலுடன்,  இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும் குழந்தை நல ஆர்வலரும் ஆகிய திருமதி கோமளா சிவகுமார் அவர்கள் பயிற்சியை மேற்கொண்டார். இந்த பயிற்சியில் பெண் குழந்தைகள் மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய ஐயங்களை கேட்டு தெளிவு பெற்றனர். இந்த நிகழ்வின்போது ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.  பெண் குழந்தைகள் அவருக்குள்ளலான  சந்தேகங்களை தெளிவாக கேட்டு புரிந்து கொண்டனர். இந்த நிகழ்வின் முடிவில் பெண் குழந்தைகளுக்கு துணிகளால்லான நாப்கின்கள் கொடுக்கப்பட்டது. குழந்தைகள் அனைவரும் புதியதாக பல விஷயங்களை கற்றுக் கொண்டோம் என்று விழிப்புணர்வு பயிற்சி அளித்த திருமதி கோமளா சிவகுமார் அவர்க...

குரோம்பேட்டை நாகல்கேணியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்த நாள்விழா

Image
  இன்று குரோம்பேட்டை நாகல்கேணியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் காமராஜரின் வாழ்க்கையை நினைவு கூறும் வகையில் அவரைப் பற்றிய அருமையான தகவல்களை ஆசிரியர்களும் மாணவர்களும் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நம் பள்ளி நம் வீடு முன்னாள் மாணவர்கள் சங்கமம் சார்பில்  குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்களை பள்ளியின்  உடற்க்கல்வி இயக்குனர் மற்றும் குழந்தைகள் பெற்றுக் கொண்டனர். தலைமை ஆசிரியர் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் நம் பள்ளி நம் வீடு முன்னாள் மாணவர்கள் சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினருமான அல்லா பகேஷ் அவர்களும் நம் பள்ளி நம் வீடு முன்னாள் மாணவர்கள் சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவருமான விநாயகம் ஆகியோர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டனர். ---அல்லா பகேஷ்

குழந்தை உரிமை பாதுகாப்பு குழு(CRPF) மற்றும் இனிய உதயம் தொண்டு நிறுவனம்(IUCT) இணைந்து கோடைகால ஒருநாள் பயிற்சி வகுப்பு

Image
 கோடைகால ஒருநாள் பயிற்சி இன்று (28.05.2022) செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை பகுதியில் குழந்தை உரிமை பாதுகாப்பு குழு(CRPF) மற்றும் இனிய உதயம் தொண்டு நிறுவனம்(IUCT) இணைந்து கோடைகால ஒருநாள் பயிற்சி வகுப்பு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்த கோடைக்கால ஒருநாள் பயிற்சி வகுப்பில் திருநீர்மலை குழந்தை உரிமை பாதுகாப்பு குழுவில் உள்ள 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து  கொண்டனர். இந்த கோடைகால ஒருநாள் பயிற்சி முகாமில் முதல் நகர்வை இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் திரு. அல்லா பகேஷ் அவர்கள் குழந்தைகளுக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மற்றும் கல்வியின் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பற்றி பயிற்சி அளித்தார். இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு காகிதம் மூலம் அழகிய பொருட்களை செய்ய பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி அளிப்பதற்காக ஆவடி இனிய உதயம் தொண்டு நிறுவனத்தை சார்ந்த  லோகநாயகி, சுரேந்தர், திலீப் மற்றும் காஜோல் ஆகியவர்கள் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த கோடைகால ஒருநாள் பயிற்சி முகாமில் திருநீர்மலை குழந்தை உரிமை பாதுகாப்பு குழுக்களின்  நிர்வாகிகள் பா...