Posts

Showing posts from October, 2019

பிரதமர் மோடி நவம்பர் மாதம் 2-ம் தேதி தாய்லாந்து பயணம் ‘

Image
  பிரதமர் மோடி சவுதி அரேபிய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நேற்று நாடு திரும்பினார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்தியா - சவுதி அரேபியா இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.      இந்நிலையில் , தாய்லாந்தில் நடைபெற உள்ள 3 முக்கிய மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வருகின்ற நவம்பர் மாதம் 2-ம் தேதி தாய்லாந்து செல்ல உள்ளார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்தது. இதனையடுத்து செயலாளர் (கிழக்கு) விஜய் தாகூர் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சாவிடம் இருந்து பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அங்கு நடைபெற உள்ள, 16-வது தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் (ஆசியான்)- இந்தியா மாநாடு, 14-வது கிழக்கு ஆசியா மாநாடு மற்றும் 3-வது பிராந்திய விரிவான கூட்டுப் பொருளாதார உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நவம்பர் 2-ம் தேதி முதல் 4 ம் தேதி வரை பிரதமர் மோடி தாய்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று கூறினார்.  

அரசு மருத்துவர்கள் நாளை(1/11/2019) காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்

Image
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் நாளை(1/11/2019 காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் . சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் 'வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் இடங்களை காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும்.   புதிய மருத்துவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மருத்துவர்களுடன் துறை செயலரும், நானும் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். போராட்டத்தை கைவிட்டு வந்தால் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது.  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 2,160 அரசு மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். விழுப்புரம், கடலூர், திருப்பூர், நெல்லையில் மருத்துவர்கள் முழுமையாக பணிக்கு திரும்பிவிட்டனர்.   மொத்தம் 16,475 மருத்துவர்களில் 2,523 பேர் மட்டும் தான் இதுவரை கையெழுத்திடவில்லை. போராட்டம் நடத்துவதற்கு அரசு மருத்துவமனை உகந்த இடம் இல்லை. பணிக்கு திரும்பிய மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை ச

2024 ஆம் ஆண்டுக்குள், நிலவில் 4 விஞ்ஞானிகள் ஆய்வு

Image
  2024 ஆம் ஆண்டுக்குள், நிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்.        2024ஆம் ஆண்டில் மீண்டும் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ள நாசா முடிவு செய்து  இதுதொடர்பாக புதன் கிழமை நடந்த ஆண்டுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது நிலவு ஆராய்ச்சி பகுப்பாய்வுக் குழுவை சேர்ந்த  ஜான் கொனொல்லி மற்றும் நிகி வெர்கீசர் ஆகியோர் பேசும்போது,  2024ஆம் ஆண்டு செயல்படுத்தப்படவுள்ள திட்டத்தின் படி 2 வீரர்கள், ஆறரை நாட்கள் நிலவில் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தனர். மேலும் விண்வெளி வீரர்கள் சந்திரனின் மேற்பரப்பில் இருக்கும்போது நிலவில் தண்ணீர் தொடர்பாகவும், இதர அறிவியல் ஆராய்ச்சிகளையும் அந்த வீரர்கள் மேற்கொள்வர் என குழுவினர் கூறியுள்ளனர். 2030ஆம் ஆண்டுக்குள் 4 வீரர்களை நிலவுக்கு அனுப்பி 14 நாட்கள் வரை அவர்களை நிலவில் தங்க வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் அந்தக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்

காஷ்மீர்   வானொலி நிலைய பெயர் மாற்றம்

Image
ரேடியோ காஷ்மீர்  பெயர் மாற்றம்     காஷ்மீர் மாநிலம் இன்று முதல் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிந்ததையடுத்து  வானொலி நிலையங்களுக்கு பெயர் மாற்றம்        இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5 ஆம் தேதி ரத்து செய்து.  அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.  இந்த சட்டம் நிறைவேறி சுமார் 3 மாதங்கள் ஆன நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. கிரிஷ் சந்திரா மர்மு மற்றும் ஆர்.கே.மாத்தூர் இருவரும் முறையே ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களாக இன்று பதவியேற்றனர்.இதனை தொடர்ந்து ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் லே  ஆகிய பகுதிகளில் உள்ள வானொலி நிலையங்களின் பெயர்கள் முறையே 'ஆல் இந்தியா ரேடியோ-ஜம்மு', 'ஆல் இந்தியா ரேடியோ- ஸ்ரீநகர்' மற்றும் 'ஆல் இந்தியா ரேடியோ- லே' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன் இந்த வானொலி நிலையங்கள் 'ரேடியோ காஷ்மீர்' என்ற பெயரில் இயங்கி வந்தது குறிப்பிடத்

லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ண மாத்தூர்

Image
லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் பதவியேற்பு       இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்து.  அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இது தொடர்பான காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம்-2019 நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.        இந்த சட்டம் நிறைவேறி சுமார் 3 மாதங்கள் ஆன நிலையில், காஷ்மீர் தொடர்பான நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்து. அதன்படி காஷ்மீர் இனிமேல் மாநிலம் இல்லை. அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிந்துவிட்டது.         இதில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு துணை நிலை கவர்னராக கிரிஷ் சந்திரா மர்மு மற்றும் லடாக் யூனியன் பிரதேச துணை நிலை கவர்னராக ஆர்.கே.மாத்தூர் ஆகியோரை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.  இவர்களில் லடாக் யூனியன் பிரதச துணை நிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் இன்று பதவியேற்றுக்கொண்டார். காஷ்மீர் ஐகோர்ட்டு தலைமை நீதிப

வடகிழக்கு பருவமழை தீவிரம்

Image
அணைகள், ஏரிகள், குளங்களின் நீரின் அளவை 24 மணி நேரமும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.     தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைகள், ஏரி , குளங்களில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.   சென்னை பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலை பகுதியில் திருமுடிவாக்கம் சாலையில் 2 கோடியே 63 லட்சம் செலவில் அடையார் ஆற்றில்  பாலம்  கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தற்காலிக தரைப்பாலம் ஒன்று போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டது. நேற்று பெய்த மழையில் தரைப்பாலம் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என பலரும் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து மழை பெய்வதால் தரைப்பாலத்தை சீரமைக்க முடியாத நிலை உள்ளதாகவும், மாற்றுப்பாதையை மக்கள் பயன்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள அய்யம்பாளையம் மருதாநதி அணை நிரம்பி வருகிறது. இதனையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்

குரு பெயர்ச்சி

Image
            ஆலங்குடி குரு பகவானுக்கு நடைபெறும் அலங்கார தீபாராதனை தரிசனம்.29-10-19. இன்று அதிகாலை மணி 03:49 க்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசித்து ள்ளார்.குருவருள் அனைவருக்கும் கிடைப்பதாக!    

மின்சார சேவை கட்டணம் உயர்வு

Image
           நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வந்த பல சேவைகளுக்கான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் சேவை இணைப்பு கட்டணம், மீட்டர் வாடகை, மீட்டர் எச்சரிக்கை வைப்புத்தொகை, மறுஇணைப்பு கட்டணம் மற்றும் வளர்ச்சி கட்டணங்களும் அடங்கும். அரசியல் பரிந்துரைகள் காரணமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தால் மின்சார கட்டணத்தை உயர்த்த முடியாது.       இதனால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் வேண்டுகோளை ஏற்று, இந்த அறிவிப்பினை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதே சமயத்தில் பிற ஆதாரங்கள் மூலமாக வருவாயை பெருக்கவேண்டிய நிலைக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் தள்ளப்பட்டுள்ளது.     முன்பு 'சிங்கிள் பேஸ்' (ஒரு முனை கட்டணம்) மீட்டரை சேதப்படுத்தினால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் இலவசமாக மாற்றி கொடுத்து வந்தது. இனிமேல் அதனை மாற்றுவதற்கான கட்டணமாக ரூ.500 மற்றும் மீட்டர் கட்டணத்தையும் சேர்த்து செலுத்தவேண்டும். இதேபோல 'திரீ பேஸ்' (மும்முனை கட்டணம்) மீட

அரசுப் பேருந்தில் பெண்கள் இலவச பயணம்

Image
டெல்லி அரசுப் பேருந்தில் பெண்கள் இலவச பயணம்       டெல்லி அரசு மற்றும் கிளஸ்டர் பேருந்துகளில் பெண்களுக்கு அக்.29 ம் தேதி முதல் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என சுதந்திர தின விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து இருந்தார். இதன்படி,  பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் இன்று முதல் டெல்லியில் அமலுக்கு வந்துள்ளது.    இந்நிலையில் பேருந்துகளில் இந்தத் திட்டம் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. பெண்கள் டிக்கெட் வாங்காமல் இலவசமாக பேருந்துகளில் இன்று தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். டெல்லி அரசின் முடிவுக்கு பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். டெல்லியைச் சேர்ந்த சுவேதா என்ற பெண் பயணி ஒருவர் இது பற்றி கூறுகையில், “ இது சிறப்பான நடவடிக்கை. டிக்கெட் வாங்க முடியாதவர்கள் இனி பேருந்துகளில் இலவச பயணம் செய்ய முடியும்” என்றார். 

ஒட்டேரி மூலிகை பூங்காவில் பிரார்த்தனை

Image
    சென்னை ஒட்டேரி மூலிகை பூங்கா நடைபயிற்சியினர் மற்றும் யோகா குழுவினர் 27.10.2019 அன்று ஒட்டேரி மூலிகை பூங்காவில் திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையான சுஜித் உயிருடன்  மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்  

திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 16 மாவட்டங்களில் கனமழை

Image
சென்னை வானிலை மையம் .   நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 2 தினங்களுக்கு தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.   மணப்பாறை பகுதியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு. மணப்பாறை பகுதியில் நிலவி வரும் வானிலை  குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து, அங்குள்ள மீட்பு படையினருக்கு தெரிவித்து வருகிறோம்.   மன்னார் வளைகுடா, தென் தமிழக கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதி மற்றும் மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் 28,29,30,31 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.   தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது என கூறப்பட்டு உள்ளது     சென்னை வானிலை ஆய்வு மையம் இவ்வாறு தெரிவிக்கிறது:

குழந்தை சுஜித் மீட்பு நடவடிக்கை

Image
குழந்தை சுஜித் மீட்பு நடவடிக்கை  பிரதமர் மோடியிடம்  முதல்வர் தெரிவிப்பு.      திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 72 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது.பள்ளம் தோண்டும் ரிக் இயந்திரத்தில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.   குழந்தை சுஜித்தை மீட்கும் பணி நடைபெற்று வரும் நடுக்காட்டுப்பட்டியில் மழை பெய்து வருகிறது.    2 வயது குழந்தையை மீட்கும் பணி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில் கூறி இருப்பதாவது:-   குழந்தை சுஜித் மீட்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கினேன். தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினருடன் 3 அமைச்சர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.   என்.எல்.சி.- ஓ.என்.ஜி.சி மற்றும் எல்.அண்ட்.டி, என்.ஐ.டி. நிபுணர்கள் நடுக்காட்டுப்பட்டியில் முகாமிட்டு உள்ளனர். அதிநவீன துளையிடும் எந்திரங்கள் மூலம் மீட்புப் பணி தொடர்கிறது. தேவை ஏற்படும்போது மேலும் உதவிகள் செய்யப்படும் என கூறி உள்ளார்.   

முதியோர் இல்லத்தில் தீபாவளி

Image
    தமிழ் நாடு மூத்த குடிமக்கள் சங்கம்  கொண்டாடிய தீபாவளி பண்டிகை            சென்னை ஜெய்நகரிலுள்ள   தமிழ் நாடு மூத்த குடிமக்கள் சங்கம் ஒரு மிக நல்ல தொண்டு சங்கமாக செயல்பட்டு வருகிறது, இச்சங்கத்தில் தற்போது 3000த்துக்கும் மேல் உறுப்பினர்களாக உள்ளனர்.       இந்த சங்கம் மூத்த குடிமகன்களுக்கு  செய்து வரும் சேவை போற்றுவதற்குரியது, அவர்களுடைய தேவைகளை அறிந்து அவ்வப்போது மாநில, மைய்ய அரசுகளுக்கு கோரிக்கைகளை முன் வைத்து உத்தரவுகளை பெற்று  நடைமுறைபடுத்தி அவர்களுக்கு சேவை செய்து வருகிறது.          இ ந்த சங்க உறுப்பினர்கள் சொந்த பந்தங்களின் எந்த உதவியும் வேண்டாமல் தாங்களாகவே மூத்த குடிமகன்களுக்கு பல சேவை உதாரணமாக மருத்துவ முகாம் மற்றும் இதர சேவைகளை செய்து வருகிறார்கள்.       இதற்காக  அவர்கள்  உள் நாடு மற்றும் அயல் நாடுகளுக்கும் சென்று  அங்குள்ள மூத்தகுடிகன்களின் இல்லங்களுக்கு சென்று சேவை செய்து வருகின்றார்கள் .அந்த சங்கம் ELDERS என்ற மாதந்திர பத்திரிகை ஒன்றை  நடத்தி வருகிறது அந்த பத்திரிகை மூலம் உலகுக்கு இந்த சங்கத்தின் சேவையும் மற்றும் முத்த குடிமகன்களின் நிலை பற்றி தெரிவித்து உதவியும்  பொதுமகக்க

தீபாவளி மலர் -கட்டுரை

Image
வாசிப்பு       பு த்தகங்களை வாசித்துக்கொண்டே இரு, ஆனால் புத்தகம் என்பது வெறும் பக்கங்கள் மட்டுமே. சிந்தித்தல் எனும் அதன் நீட்சியை நீதான் கற்றுணர வேண்டும்”. மாக்சிம் கார்க்கி வாசிப்பு என்ன செய்யப் போகிறது என்றக்  கேள்விக்கு பதிலளிக்கிறார்கள் பெண்கள்...     பள்ளி பக்கமே எட்டிப்பார்க்காத ஒரு தாயின் பதில் ஆச்சரியமாக இருக்கிறது...நம்முள் பலர் கல்வி மட்டுமே ஒருத்தரை மேன்மை படுத்தும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.. அப்படியெல்லாம் இல்லவே இல்லை என்பதற்கு ஒரு சாட்டையடி தான் இது..     நீ வாசிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எதையோ கற்றுக் கொண்டிருக்கிறாய் என்கிறாள் அந்த தாய் ...நான் முதன்முதலில் அடுப்புங்கரை ஓரமாக அமரந்து சட்னி அரைக்க வாங்கிட்டு வந்த மடித்த பொறி கடலை பொட்டலத்தில் தான் என் வாசிப்பை தொடங்கினேன்...வாசிப்பு என்பது மனித வாழ்வை செம்மைப்படுத்தும் ஒரு பொக்கிஷம் என்றாள் அந்த தாய்...     நானெல்லாம் மழைக்கு கூட பள்ளி பக்கமே ஒதுங்கினது இல்லை என்கிற துப்புரவுப் பணியாளர் ஒருவரின் வாசிப்பின் தொடக்க கால அறிமுகம் வண்ணதாசன் அவர்களின் கவிதைகள் என்கிறார் ...      "நிர்ணயித்தபடி வேலை எல்லாம் முடிகி

தீபாவளி மலர் --ஓவியம்

Image
தீபாவளி மலர் ஓவியங்கள்   1,     ----ஜெயவீரபாண்டியன் 2 . . ---M.R.Rayappan 000000000000000000000000000000000000000000000000000000000000000000 3. .   ----------- Artist ArjunKalai

தீபாவளி மலர் --ஆன்மிகம்

Image
கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை   கந்த சஷ்டி விரதம் 28.10.2019 தொடங்குகிறது (28.10.2019 முதல் 1-11-2019 வரை விரதம் கடைப்பிடித்து, 2-11-2019 பாரணையுடன பூர்த்தி செய்வர்) ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது. இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை ஆண்டுக்கு ஆண்டு கந்தர் சஷ்டி சமயத்தில் 6 நாட்கள் மட்டும் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இந்த கந்த சஷ்டி தொடங்கி மறு கந்த சஷ்டி வரை மாதாமாதம் வரும் சுக்ல சஷ்டியில் ஒரு வருடம் தொடர்ந்து விரதமிருப்பவர்களும் உண்டு. இது போல 6 ஆண்டுகள் 12 ஆண்டுகள் என்று கணக்கு வைத்து தொடர்ந்து விரதம் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இதில் மாதா மாதம் அமாவாசைக்குப் பிறகு வருவது சுக்லசஷ்டி என்று பெயர் பெறும்.        இதனை பூர்வட்ச சஷ்டி என்றும் கூறுவர். பவுர்ணமி கடந்த பின் வரும் சஷ்டி கிருஷ்ண சஷ்டி என்று பெயர் பெறும். இதனை அபரபட்ச சஷ

தீபாவளி வாழ்த்துகள்

Image
  அனைத்து வாசகர்களுக்கும் பீப்பிள் டுடே பத்திரிகை குழுமத்திற்க்கும் எங்களது தீபாவளி நல் வாழ்த்துகள்   அனைத்து வாசகர்களுக்கும் பீப்பிள் டுடே பத்திரிகை குழுமத்திற்க்கும் எங்களது தீபாவளி நல் வாழ்த்துகள்   \

விஜய் ரசிகர்கள் கைது

Image
கிருஷ்ணகிரியில் கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது             நடிகர் விஜய் நடித்த 'பிகில்' படம் நேற்று ரிலீசானது. நேற்று மாலை முதலே பிகில் படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் குவிந்து ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.      கள்ளக்குறிச்சி பகுதியிலும் 3 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது. ஆனால்  காலை சிறப்பு காட்சிகள் நடத்தப்படவில்லை. எனவே விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து. சிறப்பு காட்சிகள் நடத்தக்கோரி போராட்டம் செய்தனர்.அப்போது தியேட்டர் முன்பு கோ‌ஷமிட்டு ரகளை செய்து. ரவுண்டானாவில் உள்ள போலீசாரின் தடுப்புகளையும் சிசிடிவி கேமிராக்களையும் உடைத்தனர். கற்களை வீசி வெறித்தனமாக  தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர்.    விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அங்கு கூடிநின்ற விஜய் ரசிகர்கள் நாலாபுறமும் பயந்து சிதறி ஓடினார்கள். இதனால் அந்த பகுதியில் பதட்டமான நிலை உருவானது.  இந்த நிலையில், ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.    

தீபாவளி மலர் --சினிமா

Image
இரண்டு   படங்கள் ஒரே பார்வை       கே பாலசந்தர் இயக்குனர் சிகரம், தமிழ் சினிமாவிற்கு புது குருதிப்பாய்ச்சியவர்!  பெண்களுக்கு அவரை ஒரு படி கூடவே பிடிக்கக்காரணம் அவரது ஹீரோயின்களை புரட்சி நாயகியாக,நாம் செய்யமுடியாததை திரையில் அந்த பெண் கதாபாத்திரங்கள் செய்யும் போது பெண்களை தாங்களே அதை செய்வதாக உணர்ந்ததுடுண்டு !     குறிப்பாக மனதில் உறுதி வேண்டும் , அவள் ஒரு தொடர்கதை சொல்லலாம்.   கே.பி சார் படைத்த பல முத்துக்களில் எதை எடுக்க..கோர்க்க எனும் நிலை தான்.   கமல்ஹாசனையும் , ரஜினி காந்த் ஐயும் திரையில்,ரசிகர்களின் மன சிம்மானத்தில் அமர்த்தி உலவச்செய்த  அவர்களின் ஆசானாகிய கேபி ஏனோ .. சூப்பர் ஸ்டார் என தனக்கென ஒரு இமேஜ் வளையத்துக்குள் சென்றபோது அவரை வைத்து கமர்ஷியலாக இயக்கவில்லை.ஆனால்..அவர் நடித்த கமர்சியல் படங்களுக்கு கவிதாலயா புரொடக்சன்ஸ் மூலம் தயாரிப்பாளராக இருந்திருக்கிறார்.    எஸ் பி முத்துராமன் அவர்கள் பல திரைப்படங்களில் சூப்பர்ஸ்டாராகக்காண்பித்திருக்கிறார். அதில் கேபி அவர்களின் தயாரிப்பில்..எஸ்பிஎம் இயக்கத்தில் வந்த புதுக்கவிதை. 1982 ஜூனில் வெளியான இக்கவிதை கன்னடத்தில் ராஜ்குமார், லஷ்மி நடி