Posts

Showing posts from December, 2021

புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை|2022|/ இன்றைய நயினாரின் உணர்வுகள்

Image
 இன்றைய நயினாரின் உணர்வுகள் புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை|2022|new year wishes in tamil|Nynarin Unarvugal

*முளைத்த தானியங்களின் பலன்கள்.*

Image
*முளைத்த தானியங்களின் பலன்கள்.* முளைத்த தானியங்கள், சில சமயங்களில் உங்கள் வழக்கமான சமைத்த பருப்பு வகைகளை விட சரியான ஊட்டச்சத்தை கொடுக்க முடியும். ஏனெனில் முளைக்கும் செயல்முறை கார்போஹைட்ரேட்டுகளை குறைக்கிறது மற்றும் புரதம் மற்றும் நார்ச்சத்தின் அளவை 10-20 சதவீதம் அதிகரிக்கிறது. 72 மணி நேரம் ஊறவைத்த பருப்பு வகைகளை சாப்பிடுவதன் மூலம் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். ஏனெனில் அவற்றில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அளவு 50 சதவீதம் அதிகரிக்கும். ஊறவைத்த தானியங்களை உட்கொள்வது உங்கள் இருதய ஆரோக்கியத்திற்கு எவ்வாறு சிறந்தது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. ஏனெனில் அவற்றை சாப்பிடுவது நீரிழிவு அல்லது உடல் பருமன் உள்ளவர்களுக்கு கொழுப்பின் அளவைக் குறைக்கும். முளைகளை சாப்பிடுவது உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்வதோடு ட்ரைகிளிசரைடுகள் மற்றும் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க உதவும் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. முளைக்கும் செயல்முறை கார்போஹைட்ரேட்டுகளைப் பயன்படுத்துகிறது. கார்போஹைட்ரேட்டுகள் பயன்படுத்தப்படுவதால், மற்ற எல்லாவற்றின் அடர்த்தியும் அதிகரிக்கிறது. புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து இரண்டும் 10 முதல் 20% வரை உயர

*அல்சருக்கு தீர்வு தரும் பழங்கள்.*

Image
*அல்சருக்கு தீர்வு தரும் பழங்கள்.* தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக 'பெப்டிக் அல்சர்' (Peptic ulcer) என்கிறோம். இரைப்பையில் புண் ஏற்பட்டால் 'கேஸ்ட்ரிக் அல்சர்' (Gastric ulcer) என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் 'டியோடினல் அல்சர்' (Duodenal ulcer) என்றும் அழைக்கிறோம். இரைப்பையில் உணவு செரிப்பதற்காகச் சுரக்கப்படுகின்ற ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் எனும் என்சைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது, இரைப்பை, முன்சிறுகுடலின் சுவற்றில் உள்ள மியூகஸ் படலம் அழற்சியுற்று வீங்கிச் சிதைவடையும். இதை 'இரைப்பை அழற்சி' (Gastritis) என்கிறோம். இதைக் காலத்தோடு கவனிக்கத் தவறினால், நாளடைவில் இது இரைப்பைப் புண்ணாக மாறிவிடும். நமது உடலில் செரிமானம் என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான வரப்பிரசாதம். நமது இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை பிரித்தெடுத்து நமது செரிமானத்துக்கு உதவுகிறது.   நமது இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்

*உடலுக்கு பல நன்மைகளை அள்ளித்தரும் சிவப்பு அவல்.*

Image
*உடலுக்கு பல நன்மைகளை அள்ளித்தரும் சிவப்பு அவல்.* சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது பட்டை தீட்டப்படாத சிவப்பு அரிசியில் இருந்து தயாரிக்கப்படுவதால் மிகவும் சத்து நிறைந்ததாக உள்ளது.   அவல் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது. காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுமையும் சுறுசுறுப்புடன் இருக்க செய்யும். குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும் அவலை அப்படியே வேக வைக்காமல் வெல்லம் கலந்து சாப்பிட தரலாம். நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். தனித்து உண்ணும் போதே நல்ல ருசியாக இருக்கும் அவலை விதவிதமான உணவு வகைகளாக சமைத்து உண்ணலாம். சத்துக்கள் நிறைந்த சிகப்பு அரிசியில் தயார் செய்யப்படுவது சிகப்பு அவல். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரும் சிகப்பு அவல் கொண்டு ஏராளமான உணவு வகைகள் செய்யப்படுகின்றன. சிகப்பு அவல் இனிப்பு மி

*சர்க்கரை வள்ளிக் கிழங்கை தொடர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள்.

Image
*சர்க்கரை வள்ளிக் கிழங்கை தொடர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள்.* சர்க்கரை வள்ளிக் கிழங்கில் கொழுப்பு என்பது அறவே இல்லை. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தாராளமாக சாப்பிடலாம். அன்றாடம் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கும், அதிகமான கார வகை உணவுகளை சாப்பிடுபவர்களுக்கும் வயிறு மற்றும் குடல் போன்றவற்றில் அல்சர் உருவாகிறது. சக்கரை வள்ளி கிழங்கை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் ஏற்படும் இத்தகைய அல்சர் விரைவில் குணமாகிறது. சர்க்கரைவள்ளி கிழங்குகளில் அதிகம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. சர்க்கரைவள்ளிக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் ப்ரீ ராடிக்கல்கள் செல்களின் அழிவினை தடுத்து, உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி தந்து எப்போதும் இளமை தோற்றத்தை இருக்குமாறு செய்கிறது. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டின், வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து போன்றவை உள்ளன. இக்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கும். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

புதுவருட சிந்தனைகள்/மஞ்சுளாயுகேஷ்

Image
  நாட்காட்டியின் இறுதி பக்கத்தினை கிழிப்பது என்பது எப்போதும் ஒரு கண நேரத்து செயலாய் இருப்பதேயில்லை. கிழிப்பதென்ற எண்ணம் மனதில் எழும் போதே வருடத்தின் ஒட்டுமொத்த நிகழ்வுகளும் சிந்தனையில் தோன்றி மறைகின்றன. 2019 என்பது ரொம்பவே சந்தோசமாக இருந்த வருடம்‌. பாரீஸ் தலைநகரில் அட்டகாசமாச வானவேடிக்கையை கண்டுகளித்தவாறே 2020 புத்தாண்டை வரவேற்றது அவ்வளவு ஆனந்தமாக இருந்தது. இந்த வருடத்தினை நாங்கள் ரொம்பவே ஆனந்தமாக தான் ஆரம்பித்தோம். போன வருடம்என் வாழ்க்கையை என் கையில மீட்டுத் தந்திருக்கின்றது. தூரப் பயணங்கள், அவை தந்த அனுபவங்கள், வாழ்க்கையில் மறக்க முடியாத சந்திப்புக்கள், அந்த சந்தோசங்களை சுமந்த எழுத்துகள், நம்பிக்கை தந்து வாழ்வை மீட்டுத் தந்த வார்த்தைகள், எங்குமே வெளிப்படுத்தத் தோன்றாத பொக்கிஷமான புகைப்படங்கள என இந்த ஆண்டின் நினைவுகள் எல்லாம் எண்ணிலடங்காதவை. எனக்கு எழுத்தாளர்,கவிஞர் என பெருமையை தேடித்தந்த *பீப்பிள் டுடே * உமாகாந்தன் அவர்களும் என்னை கவிஞர் என அடையாளம் படுத்தி பெருமை தந்த நிலாமுற்றம் மாறன் ஐயா மற்றும் குழுவினர்கள் உலகமெங்கும் எனக்கு பெருமையைத்தேடி தந்த * ராணி வார இதழ் *

350 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் சத்யராஜ்.

Image
  350 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் சத்யராஜ். தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, மெயின் வில்லனாக உயர்ந்து, துணை நடிகராகி, கதாநாயகனாகச் கலக்கி, இப்போது குணச்சித்திர நடிகராக ஹந்தி உட்பட பல மொழிகளில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் சத்யராஜ். ராதா கிருஷ்ணாகுமார் இயக்கத்தில் பாகுபலி நடிகர் பிரபாஸ், பீஸ்ட் படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே இணைந்து நடித்தவரும் ராதே ஷ்யாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காதல் படமாக எடுக்கப்பட்டுள்ளது.டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் அனைத்து மொழிகளிலும் 64 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் பாகுபலி 2 டிரைலர் 24 மணி நேரத்தில் படைராதே ஷ்யாம் படத்தில் சாமியாராக நடித்துள்ள சத்யராஜ் கதாபாத்திரமும் பாகுபலி கட்டப்பா அளவுக்கு பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராதே ஷியாம் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக முழுவதும் திரையரங்கில் வெளியாகும் என் படக்குழு அறிவித்துள்ளது.த்த சாதனையை ராதே ஷ்யாம் படம் முறியடித்தது. பாகுபலி படத்தில் கட்டப்பாவாக கலக்கிய

ஒரு கட்டு முருங்கை கீரையை ஒரே நிமிடத்தில் ஆய்ந்து முடிக்க

Image
   ஒரு கட்டு முருங்கை கீரையை ஒரே நிமிடத்தில் ஆய்ந்து முடிக்க உடல் சுறுசுறுப்பிற்கு முருங்கைக் கீரை சாப்பிட சொல்வது வழக்கம். ஆனால், அதிலிருக்கும் 18 அமினோ அமிலங்கள், முட்டை, பால், இறைச்சிக்கு இணையான புரத சத்துகளை நம் உடலுக்குக் கொடுக்கக்கூடிய திறன் கொண்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? அடிக்கடி முருங்கை கீரையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் சிறந்தது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இந்த முருங்கை கீரை மிகவும் உதவுகிறது. ஒரே ஒரு முருங்கை மரத்தை நட்டு வைத்து, அதன் பயன்களை முழுவதுமாய் அனுபவித்து இருப்பவர்கள், வயதான காலத்திலும் கோலூன்றி நடக்காமல் ஆரோக்கியமாக வாழ உதவும் என்பதைதான், ‘முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்’ என்று அந்த காலத்தில் பழமொழியாகக் கூறினார்கள். கீரை என்றாலே அதனை ஆய்வதில் இருக்கும் சிரமத்தை நினைத்தே பலரும் அவற்றைத் தவிர்க்கின்றனர். ஆனால், இனி அதை நினைத்துக் கவலைப்படத் தேவையில்லை. ஒரு கட்டு கீரையை ஒரே நிமிடத்தில் ஆய்ந்துவிட முடியுமென்றால், கீரையை ஒதுக்க மாட்டார்கள் தானே! ஆம், மனிதனுக்குத் தேவையான அத்தனை அத்தியாவசிய அ

பஞ்சு போன்ற சுவையான ரவா இட்லியை சுலபமாக வீட்டிலேயே செய்திட

Image
  பஞ்சு போன்ற சுவையான ரவா இட்லியை சுலபமாக வீட்டிலேயே செய்திட வழக்கமான இட்லி, தோசை என்று சமைத்து கொடுக்காமல் அதே இட்லியை சற்று வித்தியாசமான முறையில் சுவையாக செய்து கொடுத்து பாருங்கள். நான்கு இட்லி சாப்பிடுபவர்கள் கூட  இன்னும்  இரண்டு இட்லி வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இதனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட வெங்காய சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி இவற்றில் எதை வேண்டுமானாலும் சேர்த்து தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். இதனை செய்வதற்கு நேரமும் மிகவும் குறைந்த அளவு தான் தேவைப்படும். இந்த ரவா இட்லி செய்வதற்கு சேர்க்கப்படும் பொருட்களும் வீட்டில் எப்பொழுதும் பயன்படுத்தும் பொருட்கள் தான் தேவையான பொருட்கள்: ரவை – ஒரு கப், தயிர் – முக்கால் கப், நெய் – ஒன்றரை ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, உளுத்தம்பருப்பு –  ஒரு  ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – ஒரு கொத்து, இஞ்சி சிறிய துண்டு – 1, சோடா உப்பு – கால் ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து. செய்முறை: முதலில் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய

தீடிரென காட்சி தந்த கண்ணன்/|sumischannel

Image
  இன்றைய  sumischannel மார்கழியில் அவசியம் கேட்க வேண்டியது|தீடிரென காட்சி தந்த கண்ணன் |Anmiga kadhaigal|sumischannel by

சூடான நீரில் எலுமிச்சை கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..

Image
 சூடான நீரில் எலுமிச்சை கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..  காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் அந்த நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கலாம். இந்த தண்ணீரை கொஞ்சம் சூடாக்கி, அதில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும். 1. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. எலுமிச்சையில் உள்ள பொட்டாசியம் மூளை, நரம்பு பிரச்சனையை சீராக்குகிறது. 2. உடல் எடையைக் குறைக்கிறது. எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. 4. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது. 5. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. 6. வாய் துர்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது. 7. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது. 8. காலையில் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கத்தை நீக்குகிறது.

இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு

Image
  தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது.  இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 105.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்களை குவித்தது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  இதன் மூலம் 130 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 62.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், தென் ஆப்பிரிகாவை விட 304 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற தென் ஆப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்சை த

புத்தாண்டு அன்று கோவில்களில் வழிபடுவதற்கு தடையில்லை

Image
 புதிய ஆண்டு அமைச்சர் சேகர்பாபு சென்னை: புத்தாண்டு அன்று கோவில்களில் வழிபடுவதற்கு தடையில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கோயில் நிலங்களை கண்டறிவது தொடர்பாக வட்டாட்சியர்கள் உடனான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் சேகர் பாபு வருவாய் துறையுடன் இணைந்து 36 வட்டாட்சியர்களை நியமித்து இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில்களில் வழிபடுவதற்கு தடையில்லை என்று அவர் குறிப்பிட்டார். குறிப்பாக தமிழக அரசு கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் சேகர் பாபு அறிவுறுத்தினார். ஜனவரி 1 புத்தாண்டையொட்டி அனைவரும் கோவிலுக்கு செல்வது வழக்கம். மக்கள் தற்போது உள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு, கூட்ட நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். திருக்கோயிலில் சாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று எந்த உத்த

போக்குவரத்திற்கு மாநகர காவல்துறை தடை

Image
  சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் நாளை இரவு 12 மணி முதல் ஒன்றாம் தேதி காலை 5 மணி வரை வாகன போக்குவரத்திற்கு மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31-ஆம் தேதி  இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட காவல்துறை தடை விதித்துள்ளது.  அத்துடன் புத்தாண்டில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் டிசம்பர் 31-ஆம் தேதியன்று மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது,  மீறினால் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு,  வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய கட்டுபாடாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை இரவு 12 மணி முதல் ஒன்றாம் தேதி காலை 5 மணி

பூவுலகம்/அனுபரமி

Image
  மனமுவந்து எடுக்காத முடிவுகள்... பெரு மாற்றத்தையே, உண்டாக்கி விடுகின்றன... ஆற, அமர சிந்தித்து எடுத்தவைகளோ...சிதைந்து, செல்லரித்து போகின்றன.... நிகழும் என உறுதியாக்கப்பட்டவைகள், நிமிடத்தில் உருமாறியும், சாத்தியமேயில்லை என்பவைகள் எல்லாம்.... சங்கடமாகவே அனுபவிக்கும்படியும் தொடர்கின்றன..... பத்து பொருத்தங்களின் validity பத்து மாதங்கள் கூட பொறுப்பதில்லை... ஜென்மங்கள் கூட சேர வாய்பில்லாதவைகள்.... எதோ ஒன்றில் கட்டுண்டு காலம் கடக்கின்றன.... பொருத்தமற்றவைகள் எல்லாம்....பொருந்தியும், பொருந்த வேண்டியவைகள் எல்லாம்.....தனித்தும்... அல்லலுறுகின்றன... தேவையானவைகள், தேவைகளைத்தேடாத இடத்தில்.. மிகுதியாகி மீந்தும், தேவைகள், அவசியம் தேவையெனும் இடத்தில் இல்(ய)லாமைகளாகவும், மாறி போகின்றன...... அவசியங்கள் கூட பேராசை என்று அடக்கிவைக்க படுகின்றன.... ஆடம்பரங்கள் அனைத்திலுமே அங்கீகரிக்கபடுகின்றன.... நல்லவை என்ற பெயர் நகைப்புக்கும், சந்தேகத்திற்க்கும், பரிசீலிக்க படுகின்றன .... தீயவைகள், எல்லா விதத்திலும் நியாயமாக்கபடுகின்றன எளியவர்கள்...... ஏந்திகொண்டே இருக்கவும், ஏய்ப்பவர்கள் ஏற்றம் பெறவுமே, எவரோ விரித்த வலை

தமிழில் எழுதுவோம் தவறில்லாமல்

Image
 தமிழில் எழுதுவோம் தவறில்லாமல்        நாற்பதாண்டு கால ஆசிரியப் பணியில் ஒரு முப்பதாயிரம் விடைத் தாள்களையாவது திருத்தியிருப்பேன். விடைத்தாள் திருத்தும்போது முதலில் மாணவர் செய்த பிழைகள்தாம் கண்ணில் படும். இப்போதும் நான் பார்க்கும் இடங்களில் எல்லாம் பிழைகளே என் கண்ணில் படுகின்றன. படிக்கும் நாளிதழ், பார்க்கும் தொலைக் காட்சி என அனைத்திலும் பிழைகளே முதலில் தெரிகின்றன.      முன்பு ஒருநாள் உணவுப் பொருள் பங்கீட்டுக் கடையில் பொருள்களை வாங்குவதற்காகச் சென்றிருந்தேன்.  நீண்ட வரிசையில் நின்றபடி நோட்டமிட்டேன்.       கடையில் அரிசி மற்றும் பருப்பு வழங்கப்படுகிறது என எழுதப் பட்டிருந்தது.  ஒரு வரியில் இரு பிழைகள். அரிசி, பருப்பு வழங்கப்படுகின்றன என அமைய வேண்டும். And என்பதன் மொழிபெயர்ப்பு மற்றும் என்பது.  ஆங்கிலத்தில் bread and  butter, ladies and gentlemen என்று எழுதுவது அவர்கள் மரபு. நாமும் அவர்களைப்போல ரொட்டி மற்றும் பால் கிடைக்கும் என்று எழுதுவது சரியன்று. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டனர் என்று எழுதுவது தமிழ் மரபு. சேர மற்றும் சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் ஆண்டனர் என எழுதுவது தவறு.     கபிலர் கலை

சென்னை லயன்ஸ் கிளப் அறம் செய்ய விரும்பு சார்பாக குழந்தைகள் புற்று நோய் மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அன்னதானம்

Image
 சென்னை லயன்ஸ் கிளப்பான அறம் செய்ய விரும்பு 324 Mன் சார்பாக இன்று 29.12.2021 நடைபெற்ற நல திட்டம் அறம்  செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் செயலாளர் லயன் திரு பாலசந்தர் அவர்களின்  நண்பர் தனது மகளின் (ஆத்ரிகா பாலாஜி) பிறந்தநாளை இந்த கிளப்பின்  மூலமாக நலத்திட்ட மாக கொண்டாட  இன்று 29.1.202021  எழும்பூரில் உள்ள குழந்தைகள் புற்று நோய் மருத்துவமனையில்  ஏழாவது தளத்தில் உள்ள புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் அன்னதானம் வழங்கினார்கள் இந்த நிகழ்வுக்கு கிளப்பின் செயலாளர் லயன் திரு பாலசந்தர் மற்றும் கிளப்பின் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்  Ln. ஸ்ரீ பாலச்சந்தர் செயலாளர்

மனதைத் தெப்பமாக்குங்கள். துன்பங்கள் ஓடிவிடும்

Image
  மனதைத் தெப்பமாக்குங்கள். துன்பங்கள் ஓடிவிடும் ' மஹா பெரியவர்   காஞ்சி மஹாஸ்வாமிகளின் 28 ஆவது வார்ஷிக ஆராதனை 30 ந் தேதி ( 30-12-21) அனுசரிக்கப்படுகிறது.   ஒரு முறை மகா பெரியவரிடம் ஒரு பெண்மணி ` நான் நிறைய ஸ்லோகங்கள் சொல்றேன்.ஆனால் என் பிரச்னைகள் தீரவில்லை. பகவான் கண் திறந்து பார்க்கலை. ' என்று வருத்தப்பட்டார்.   பெரியவர் கேட்டார்: ` எப்படி சுலோகம் சொல்றே ? சுவாமி முன்னால உட்கார்ந்து ஸ்வாமியை மனசுல நிறுத்தித் தானே சொல்றே ?'   ` வேற வேலை பார்த்துண்டே சொல்றேன். மனப்பாடம் பண்ண ஸ்லோகங்கள். ' என்றார் பெண்மணி.   அதற்குப் பெரியவர் சொன்னார். ` காய் நறுக்கணும்னா அருவாமனை , கத்தியைக் கிட்டே வச்சுக்கறோம். சமைக்கணும்னா அடுப்புகிட்ட போகணும். குளிக்கணும் , துவைக்கணும்னா தண்ணி கிட்டப் போறோம். ஸ்கூட்டர் , கார் எதுவா இருந்தாலும் கிட்ட இருந்து ஓட்டினாத்தான் ஓடறது. சுலோகம் சொல்லணும்னா மனசு சுவாமி கிட்ட போகவேண்டாமா ? சர்வ அந்தர்யாமி அவன். ஆனாலும் பிரச்னை பெரிசுன்னா பக்கத்துல உட்கார்ந்து அனுசரணையா சொல்லுங்கோ. நிச்சயம் கேட்பான். கல்லைத் தூக்கி சமுத்திரத்துல போட்டா மூழ்கிட

அறம் செய்ய விரும்பு சென்னை லயன்ஸ் கிளப் நடத்தும் மருத்துவ முகாம் 02.01.2022

Image
அறம் செய்ய விரும்பு சென்னை லயன்ஸ் கிளப் நடத்தும் மருத்துவ முகாம்   

முத்தங்கள் நிரம்பிய நதி/கவிதை./சகுந்தலா சீனிவாசன்

Image
 முத்தங்கள் நிரம்பிய நதி _________________________ உயிரைத் துண்டு துண்டாக வெட்டி எறியப்பட்ட நதி கிழக்கும் மேற்குமாக கிடத்தப்பட்ட வெண்ணிற சாம்பலில் எனது முத்தங்கள்..  நேற்று புத்தனின் பாதங்களில் இருந்து பறித்துக் கொண்ட பூக்களை தான் உன் அன்பெனும் கல்லறைக்கு சாத்தி இருக்கிறேன் நான் உயிர்த்தெழுதலில் உன் சொற்களில் உன் அரவணைப்பில் உன் உள்ளங்கைகளில் கடவுளாய் பிறந்துவிட்ட தினம் ஒன்றில்..  நதி முழுவதும் முத்தங்களாய் பிறந்திருக்கிறேன் முத்தங்கள் நிரம்பிய நதியில் முதல் அடி எடுத்து வைக்கையில்  அதிரும் சிறு அதிர்வு தான் என் இதயம் துடிக்கும் ஓசை...  சகுந்தலா சீனிவாசன்✍️

6-ம் தேதி மாலை 5:30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

Image
 45-வது புத்தகக் காட்சி : வரும் ஜனவரி 6-ம் தேதி மாலை 5:30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

ராசிபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி இலக்கியா (22) வெள்ளிப் பதக்கம்

Image
 துருக்கியில் நடைபெற்று வரும் ஆசிய அளவிலான சீனியர் வலுதூக்கும் போட்டியில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி இலக்கியா (22) வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்!

திருப்பதியில் ஜன., 13ல் சொர்க்கவாசல் திறப்பு: 10 நாட்கள் திறந்திருக்கும்

Image
 திருப்பதியில் ஜன., 13ல் சொர்க்கவாசல் திறப்பு: 10 நாட்கள் திறந்திருக்கும் திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன., 13லிருந்து 22 வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி திருமலையில் நேற்று அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர் கூறியதாவது: ஜன., 13-ம் தேதி வைகுண்ட ஏகாதசி தினம். இதற்காக 13-ம் தேதியிலிருந்து 22-ஆம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஜன., 13ம் தேதி அதிகாலை 2:00 மணிக்குப் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு முக்கிய பிரமுகர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட், இலவச தரிசனம், கல்யாண உற்ஸவம், ஆர்ஜித பிரம்மோற்ஸவம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் பெற்ற பக்தர்கள் காலை 9:00 மணி முதல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். தினமும் 45 ஆயிரம் பக்தர்களை ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

: ஊசி போடலயா..? திருப்பதிக்கு வராதீங்க.. தேவஸ்தானம் ‘

Image
 : ஊசி போடலயா..? திருப்பதிக்கு வராதீங்க.. தேவஸ்தானம் ‘புது’ அப்டேட் ! திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். இல்லையென்றால் அனுமதி கிடையாது என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தி இருக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனம் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழா ஆகியவை நடக்கயிருப்பதால் வருகிற 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை முக்கிய வி.ஐ.பி. பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் கூறியிருப்பதாவது, ‘ திருப்பதி கோவிலில் ஜனவரி மாதம் 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி மற்றும் 14-ந்தேதி வைகுண்ட துவாதசியை முன்னிட்டு கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பக்தர்களுக்கு தரிசன ஏற்பாடுகள் செய்து தரப்படும்.  ஜனவரி 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் தரிசனம் வழங்கப்படும். வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையானை தரிசிக்க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்