Posts

Showing posts from February, 2022

பரமு என்கிற பரமேஸ்வரி எட்டாம் வகுப்பு. ... #சிறுகதை./எழுத்தாளர் இளங்கோவன்

Image
 பரமு என்கிற பரமேஸ்வரி எட்டாம் வகுப்பு. ... #சிறுகதை. பூங்குளம் கிராமம்... அந்த கிராமத்தில் குளம் இருக்கா? அதில் பூக்கள் இருக்கா? னு தெரியல... ஆனால் பூங்குளம் கிராமத்தின் பெயர் ஆலங்காயம் - திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். விவசாய வேலைகளில் மக்கள் மூழ்கியே இருப்பதால், படிப்பறிவு குறைவே. இருந்தாலும், கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துள்ளனர். கைநாட்டு கைலாசம் என கிராமமே அழைக்கின்ற கைலாசம், ஒன்னாம் கிளாஸ் கூட போகல, ஆனால், சாகக்கிடக்கிற ஒன்னுவிட்ட அத்தைக்காரி எட்டாவது படிச்ச தன் பொண்ணை கைலாசத்துக்கு கட்டி வச்சிட்டு, தம்பி மகனுக்கு பொண்ணை கொடுத்துட்டோம் இனி கவலையில்லை னு கண்ணை மூடிட்டாள். மசக்கையான கைலாசம் பொண்டாட்டி, வாக்கப்பட்ட பூங்குளத்தில், எட்டாவது படிச்ச படிப்பாளி னு பெயர் பெற்றவள். பிரசவம் பார்த்த உள்ளூர்க்கிழவி, டேய்...கைலாசம் உனக்கு பொம்பள பொண்ணு பிறந்திருக்காடா என கத்தி கொண்டாடினாள். கிராமமே கள்ளிப்பாலை ஊத்தி சிசுக்களை சாகடிச்ச காலம் போயிடுச்சின்னு மகிழ்ந்தன. "யோவ்..மாமா... பொண்ணு பொறந்திருக்கா, அவளையாச்சும் படிக்க வ

முக்கோண மனிதன்'/கவிதைகளின் தொகுப்பு.

Image
 வணக்கம். 'முக்கோண மனிதன்' கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பல்வேறு இதழ்களிலும் முகநூலிலும் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. புதியவை சிலவும் உண்டு. இந்த ஆண்டு சென்னைப் புத்தக கண்காட்சிக்குக் கொண்டு வரத் திட்டமிட்டு இருந்தேன்.  ஆனால் படப்பிடிப்புப் பணிகளின் காரணமாக இறுதிகட்ட வேலையை செய்ய இயலவில்லை.  ஆகவே இந்நூல் 2022 ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.  ஏறக்குறைய இருநூறு பக்கங்கள் கொண்ட தொகுப்பு இது. டெம்மி சைஸ். என்  'ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக் கூடம் ' தொகுதியைப் போன்ற அளவில் இருக்கும்.  முன்பதிவு செய்ய  விருப்பமுள்ள நண்பர்கள் புத்தகத்தின் விலை 200/- (இரு நூறு ரூபாய் மட்டும்) புத்தக கண்காட்சியில் 'டிஸ்கவரி புக் பேலஸில்' நேரிலோ அல்லது கீழ்கண்ட டிஸ்கவரி புக் பேலஸ் Gpay எண்ணிலோ   முன் பணம் செலுத்தினால் அஞ்சல் செலவு இன்றிப் புத்தகம் வீடு தேடி வரும்.  ஒரே ஒரு புத்தகம் முன்பதிவு ஆனாலும் கூட இத்தனை நாள் நான் எழுதியதற்கு பெருமைப்பட்டுக் கொள்வேன்.  நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.                    - பிருந்தா சாரதி முகப்பு: Lark Bhaskaran  📴 G

வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம்

Image
 வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம்  உங்க லைசென்ஸ் பறிபோகும்...! ::::::::::::::::::*:::::::::::::::::::*::::::::::::::::::*:::::::::::::::: இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள சில விதிகள் தெளிவற்றதாக உள்ளன. சில விதிகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இருப்பதில்லை.  இவ்வகையில் கார் உரிமையாளர் ஒருவர், சட்ட விரோதம் என தெரியாமல் செய்த ‘சிறு உதவியால்”, இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி தண்டிக்கப் பட்டிருக்கிறார். இந்தியாவின் முக்கிய நகரங்களின் பட்டியலில் இரண்டாவதாக உள்ள‍து மும்பை. மும்பையை சேர்ந்த நிதின் நாயர் என்பவர். கடந்த மாதம் 18ம் தேதி காலை தன்காரில், அலுவலகம் சென்றுகொண்டிருந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. சில பஸ்கள் கூட்ட நெரிசலில் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன. சில பஸ்கள் மிகவும் தாமதமாக வந்தன. இதனால் அவசரமாக அலுவலகம் செல்ல வேண்டியவர்கள் ‘லிப்ட்’ கேட்டு கொண்டிருந்தனர். அப்படி ஏர்ரோலி சர்க்கிள் என்ற பகுதியில், நிதின் நாயரிடமும் 3 பேர் ‘லிப்ட்’ கேட்டனர். அவர்களில் ஒருவர் 60 வயதை கடந்த முதியவர். 2பேர் புகழ்பெற்ற ஐடி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். அவர்கள் காந்தி நகர்

கற்றல் திருவிழா

Image
 கற்றல் திருவிழா இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் மாலைநேர திறன்வளர் மையங்களில் இதுவரை கற்றுக்கொடுத்த பாடங்களிலிருந்து குழந்தைகளின் திறன் ஆய்வு செய்யும் விழா கற்றலின் விழாவாகும். இந்த கற்றல் திருவிழா காலை 10 மணி முதல் மதியம் 12 30 வரை நடைபெற்றது இந்த கற்றலின் விழாவை இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின்  தலைமை செயல்ப்பாட்டாளர் திரு அல்லா பகேஷ் அவர்களின் தலைமையில் AID INDIA  நிறுவனத்தின் பயிற்சியாளர் திரு ராஜேஷ் அவர்கள் குழந்தைகளுக்கு இடையே திறனாய்வு செய்தார். இந்த விழாவில் புதிய கண்ணியம்மன் நகர் மாலைநேர திறன்வளர் மையம், புதுநகர் மாலைநேர திறன்வளர் மையம் மற்றும் ஆவடி திறன் வளர் மையம் ஆகிய மையங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் (மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும்) கலந்து கொண்டனர். பயிற்சியாளர் திரு ராஜேஷ் அவர்கள் குழந்தைகளிடம் திறனாய்வு செய்தார் ஆங்கிலம் கணிதம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களிலிருந்து குழந்தைகளுக்கு கேள்விகள் கேட்கப்பட்டன. குழந்தைகள் சிறப்பாக தங்களின் பதில்களை பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தனர். ஆங்கில வாக்கியங்களை அருமையாக அமைத்தனர், கணிதங்கள

விடுதலைப் போரட்ட வீரர் சந்திரசேகர ஆசாத் நினைவுநாள்

Image
  விடுதலைப் போரட்ட வீரர் சந்திரசேகர ஆசாத் நினைவுநாள் இன்று பெப்ரவரி 27, 1931 அன்று அலகாபாத் அல்ஃப்ரட் பூங்காவில் தன் இயக்கத்தவரான் சுக்தேவுடன் பேசிக்கொண்டிருந்த போது பிரித்தானிய காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். சுக்தேவைத் தப்பிக்க விட்டுவிட்டு நீண்ட நேரம் காவல்துறையினரிடம் போராடினார். காலில் குண்டடிபட்டதால் ஆசாத்தால் அங்கிருந்து தப்பிக்க இயலாமல் போனது. தன் துப்பாக்கியில் ஒரு தோட்டா மட்டும் மட்டுமிருக்க காவல்துறையினரிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். ஆனால் பிரித்தானிய காவல்துறையினர் அவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவே கூறினர். அவர் பயன்படுத்திய துப்பாக்கி அலகாபாத் அருங்காட்சியகத்திலும் அதன் ஆவணங்கள் லக்னோ சி.ஐ.டி. தலைமையகத்திலும் உள்ளது. இணையத்தில் இருந்து எடுத்தது THANKS .r.kandasamy

அகிலன் .

Image
  அடிமை இந்தியாவில் பிறந்து (27/6/1922 ) , சுதந்திரப் போராட்ட உணர்வில் ஈர்க்கப்பட்டு ஈடுபட்டு , மாணவப் பருவத்திலேயே காந்திய வழியில் தேச நலனை வளர்க்கமுடியும் எனக் கனவு மிகக் கொண்டார் அகிலன் . காட்டிலாகா அதிகாரியாக ராஜாங்க உத்தியோகம் பார்த்த தந்தை . ஊரில் கணக்கப் பிள்ளை வீடு எனும் செல்வாக்கும் செல்வச் செழிப்பும் திடீரென ஓர் நாளிரவு பெய்த புயல் மழையில் அடித்துச் செல்ல , அதன் பின் நோய்ப் படுக்கையில் வீழ்ந்தார் அன்புத் தந்தை . தன் மகன் அகிலனை ஐ சி எஸ் படிக்க வைத்து அடிமை இந்தியாவில் மிக உயர்ந்த பதவியான கலெக்டராகவோ , சுதேச சமஸ்தானத்தின் திவானாகவோ வேலையில் அமர்த்திப் பார்க்க விரும்பியவரின் ஆசையும் அடித்துச் சென்றது அப் புயல் மழையில் . பள்ளிச் சிறுவன் அகிலனை அருகழைத்து , ” நீ திறமைசாலி ; வாழ்க்கையில் முன்னுக்கு வருவாய். நீ எந்தப் பதவியில் , எந்தப் பொறுப்பில் , எந்த உத்தியோகத்தில் இருந்தாலும் லஞ்சம் மட்டும் வாங்கக் கூடாது. நீ வாங்கமாட்டாய் என்று எனக்குத் தெரிந்தாலும் , நான் உனக்கு இதைச் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது ” என்று கூறி விடை பெற்றார். ( 1938 ) தந்தை அப்பழுக்கற்ற ராஜ விசுவாசி. தாயி

பாசி பயிறு முளைகட்டுவது எப்படி)/

Image
  5 mins Healthy Snacks - Sprouts - Easy to make, Zero efforts (பாசி பயிறு முளைகட்டுவது எப்படி) VIDEO LINK BY

பாரதி படத்தை கமலுக்கு போட்டுக் காட்ட முயன்ற சுஜாதா**

Image
  பாரதி படத்தை கமலுக்கு போட்டுக் காட்ட முயன்ற சுஜாதா** பாரதி படத்தை இயக்கிய ஞான ராஜசேகரன் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாக / தணிக்கைக் குழு அதிகாரியாக தன் பணிகளைத் திறம்படச் செய்தவர் என்பது பலர் அறிந்த விஷயம். அவர் பாரதி படத்தை இயக்கியபோது, அதை மீடியா ட்ரீம்ஸ் நிறுவனம் சார்பாகத் தயாரித்தவர் நம் சுஜாதா. அவருடன் வரதராஜன், மணிபிரசாத் என்ற இருவரும் இணைந்து தயாரித்து வெளியிட்டனர். பாரதி திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதா என்பது தெரியாது, இருந்தும் ஒரு யுக புருஷனைப் பற்றிய அந்தப் படத்தில் பாரதியாக மராட்டிய நடிகர் சாயாஜி ஷிண்டே பாரதியாக வாழ்ந்திருந்தார் என்றால் அது மிகையாகாது. பாரதியார் என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு எஸ் வி சுப்பையாவின் பண்பட்ட நடிப்புதான் நினைவுக்கு வரும். அந்த அளவு அவர் பாரதியாராக கப்பலோட்டியத் தமிழன் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் கப்பலோட்டியத் தமிழனாக நடிகர் திலகம் அருமையாக நடித்திருந்தும், மகாகவி பாரதியாராக நடித்த எஸ் வி சுப்பையாவின் மறக்க முடியாத நடிப்பும் அப்போது பெரிதும் பேசப்பட்டது என்பார்கள். மீடியா ட்ரீம்ஸ் சார்பாக எடுத்த பாரதி படத்தைப் பற்றி, இயக்

புத்தகத்துக்கு வலிக்கும்'

Image
  புக் ஷாப்புக்குச் சென்று சில புத்தகங்கள் வாங்கினாள். அழகேசனுடன் சேர்ந்ததில் வந்த பழக்கம் அது... ' முதலில் சின்னப் புத்தகமாக ஏதாவது வாங்கிப் படி.. லேசான கதைகள், கட்டுரைகள். உனக்கு நாட்டமிருந்தால் கவிதைகள்... ஏதாவது புத்தகம் வாங்குவதற்கு முதலில் பழகவேண்டும். அப்புறம் அதில் தவறாமல் கையெழுத்து போடு. வாங்கின தேதி, இடம். நிச்சயம் மறுபடி அதைப் புரட்டும்போது, அடடா வாங்கி ஒரு மாசமாகி விட்டதே என்று படிக்கக் ஆரம்பிப்பாய். அப்புறம் படித்த பக்கம்வரை ஒரு அடையாளம் வை. காதை மடக்காதே. புத்தகத்துக்கு வலிக்கும்' என்பான்.” ― சுஜாதா [Sujatha] இன்று இவரின் நினைவு நாள்

"உங்களில் ஒருவன்" மு.க ஸ்டாலினின் சுயசரிதை

Image
  தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் சுயசரிதையான "உங்களில் ஒருவன் (பாகம் 1)" வெளியீட்டு விழா, நாளை  பிப்ரவரி 28 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த வெளியீட்டு விழாவில், இந்தியா முழுவதிலுமிருந்து முக்கிய எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். மு.க.ஸ்டாலி‌னின் அரசியல் வாழ்க்கை 1967ஆம் ஆண்டு, ‌‌அவரது பதினான்காவது வயதிலேயே தொடங்கி விட்டது. ‌ஏறத்தாழ அரைநூற்றாண்டு கால அரசியல் அனுபவத்தை ஸ்டாலின் பெற்றிருக்கிறார். முதலமைச்சர் அவ்வளவு சாதாரணமாக இந்த பதவிக்கு வந்துவிடவில்லை. பல சவால்களை சந்தித்த பின் தான் இந்த பதவிக்கு வந்துள்ளார். "உங்களில் ஒருவன்" சுயசரிதையைப் படிப்பதன் மூலம் அவரது போராட்டங்களைப் பற்றி மேலும் அறியலாம்.  இந்த விழாவில், நடிகர் சத்யராஜ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தருணம். எங்கள் "புரட்சித் தமிழன்" அவர்கள் இந்த விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் சத்யராஜ் அவர்களின் குரல் ஒலிப்பது என்பது பெருமைக்குரியது. புரட்சித் தமிழனின் வாழ்க்கைப் பயணத்தில் இந்தப் பெருமைக்குரிய தருணத்தை வழங்கிய முதல்வ

போலியோ சொட்டு மருந்து முகாம் 2022/#பீப்பிள் டுடே செய்தி

Image
 நாட்டில் போலியோ நோயை முழுமையாக ஒழிப்பதற்கு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதன் பலனாக இந்தியாவில் போலியோ நோயின் தாக்கம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை தொடர 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூடுதலாக கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று தொடங்கியது.  காலை 7 மணிக்கு தொடங்கிய சொட்டு மருந்து முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக  43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் இந்த முகாம் நடைபெறவுள்ளது. இந்த மையங்களில் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காய

"ஹீரோ" ஸ்டாலின்.. நியூஸ்பேப்பரை திறந்தால்

Image
  "ஹீரோ" ஸ்டாலின்.. நியூஸ்பேப்பரை திறந்தால்.. இப்படியும் ஒரு முதல்வரா.. மாஸ் காரியம். சென்னை:  நேற்று  திமுக அரசு செய்த காரியத்தை பார்த்து, பல்வேறு தரப்பினர் வியந்துபோயுள்ளனர்.. குறிப்பாக திமுக தலைவரை பாராட்டி கொண்டிருக்கிறார்கள்.. சோஷியல்மீடியா முழுமையிலும் இதே பேச்சாகத்தான் உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர் ராயப்பேட்டை, தலைமை கழகமான எம்ஜிஆர் மாளிகையில் உள்ள ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக அரசு அதேபோல, தமிழக அரசு சார்பில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது... இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு. மா.சுப்ரமணியன் கலந்துக் கொள்ள உள்ளனர்.. இந்நிலையில், நாளிதழ்களில் இன்றைய தினம் திமுக அரசு ஒரு விளம்பரம் தந்துள்ளது.. அதுவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விளம்பரம் தந்துள்ளது.. அந்த விளம்பரத்தில் உள்ளதாவது: திமுக அரசு விளம்பரம் "முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 74-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை

மகா சிவராத்திரியால் இந்த 4 ராசிக்கும் மூட்டை மூட்டையாக பணம் கொட்ட போகுதாம்

Image
  மகா சிவராத்திரியால் இந்த 4 ராசிக்கும் மூட்டை மூட்டையாக பணம் கொட்ட போகுதாம்...யாருக்கு விபரீத ராஜயோகம்! மகாசிவராத்திரி மார்ச் 01 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நாளில் பலர் விரதம் இருந்து இரவு முழுவதும் தூங்காமல் சிவபெருமானை வழிபடுவார்கள். மகா சிவராத்திரி நாளானது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும், எப்படிப்பட்ட பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதையும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.   மேஷம் மகா சிவராத்திரியில் இருந்து நல்ல காலம் ஆரம்பிக்கிறது. மகா சிவராத்திரியால் உங்கள் அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் மேலும் உயரும். சம்பள உயர்வுக்கான வாய்ப்புக்களும் உண்டு. சிவபெருமானின் அருளால் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.   சிம்மம் சிவருபெருமானின் அருளால் சிம்ம ராசிக்காரர்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் சிறப்பான சாதனைகளைப் புரிவார்கள். புதிய வேலையைப் பெற நினைப்பவர்களுக்கு அல்லது வேலை தேடுபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெற்று மூட்டை மூட்டையாக பணம் சேர்க்க அதிக வாய்ப்புகள் கிடைக்கும். த

சமையலில் தெரியாமல் கூட இந்த 12 விஷயங்களை செய்து விடாதீர்கள்

Image
  சமையலில் தெரியாமல் கூட இந்த 12 விஷயங்களை செய்து விடாதீர்கள் ஆண், பெண் என்கிற பாகுபாடின்றி சமையல் கலையை மனிதன் வளர்த்துக் கொண்டால் நீண்ட நாட்கள் ஆயுளுடன் வாழ முடியும்! ஒரு ஜான் வயிற்றுக்கு தானே இந்த  போராட்டம்  எல்லாம் என்று நினைக்க தோன்றும் அளவிற்கு உணவின் முக்கியத்துவம் இன்றி அமையாதது. அதில் இந்த 12 விஷயங்களை செய்யக்கூடாதது எதெல்லாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம். குறிப்பு 1: சமையல் கலையில் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது ரசத்தை அதிகம் கொதிக்க வைக்கக் கூடாது என்பது ஏன்? முந்தைய காலங்களில் ஈய பாத்திரத்தில் ரசம்  வைப்பார்கள்.  அதிகம் கொதித்தால் ஆகாது என்பதால் அவ்வாறு கூறப்பட்டது. ஆனால் இப்போது எவர்சில்வரில் வைப்பதால் ரசம் கொதிக்கும் முன்பு அணைக்க தேவை இல்லை. குறிப்பு 2: மோர் குழம்பு செய்யும் பொழுது குறைந்த தீயில் வைத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் மோர் திரிந்துவிடும். மோர் குழம்பு ஆறிய பிறகே மூடி  வைக்க  வேண்டும். அதற்கு முன்பு மூடி போடக்கூடாது. குறிப்பு 3: காய்கறிகளை நறுக்கும் பொழுது எப்பொழுதும் அதன் முழு சத்துக்கள் நமக்கு கிடைப்பதற்கு பெரிது பெரிதாக

அமெரிக்கா அவ்வளவு "கெஞ்சியும்".. ரஷ்யாவை எதிர்க்காத இந்தியா!

Image
  அமெரிக்கா அவ்வளவு "கெஞ்சியும்".. ரஷ்யாவை எதிர்க்காத இந்தியா! உருவான மாஸ் டீம்? ரஷ்யாவிற்கு எதிரான ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீ ர்மானத்தை இந்தியா புறக்கணித்து உள்ளது. அதாவது இந்தியா இந்த தீர்மானத்தின் மீது வாக்களிக்கவில்லை. இந்தியாவின் இந்த முடிவிற்கு பின் வேறு சில காரணங்கள் இருக்கின்றன. உக்ரைனில் ரஷ்யா தீவிரமாக போர் நடத்தி வருகிறது. உக்ரைன் எல்லைக்குள் புகுந்த ரஷ்யா இன்று காலை உக்ரைன் தலைநகர் கிவ் அருகே சென்றுள்ளது. அங்கு ரஷ்யா - உக்ரைன் படைகளுக்கு இடையே கடுமையான போர் நடந்து வருகிறது . ரஷ்யாவின் இந்த போர் உலக நாடுகள் இடையே கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இன்று ரஷ்யாவிற்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முக்கியமான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை கண்டிக்கும் வகையில் அமெரிக்கா இந்த தீர்மானத்தை கொண்டு வந்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் நிரந்தர உறுப்பினர்கள், தற்காலிக உறுப்பினர்கள் ஆகியோர் முன் இன்று இந்த தீர்மானம் வாக்கெடுப்பிற்கு வந்தது. முறைப்படி இந்த தீர்மானம் இன்று காலை மிக சீக்கிரமாக வந்து இருக்க வேண்டும்

இயற்கை கவிதை| இன்றைய நயினாரின் உணர்வுகளில்

Image
  இன்றைய நயினாரின் உணர்வுகளில் இயற்கை கவிதை|Nynarin Unarvugal வீடியோ லிங்க் நன்றி