Posts

Showing posts from January, 2021

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு பிப்., 28 வரை

Image
 சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு பிப்., 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கும், கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கும் பிப்.,8 ம் தேதி வகுப்புகள் திறக்கப்படுகின்றன. @@இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையினாலும், பொது மக்கள் ஒத்துழைப்பினாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது 4,629 பேர்கள் சிகிச்சை என்ற நிலையில் உள்ளது. ஜன.,31 வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. ஆய்வு கூட்டத்தின் அடிப்படையிலும், ஜன.,29ல் நடந்த மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடந்த ஆலோசனை அடிப்படையிலும், உருமாறிய கொரோனா வைரசை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, பல்வேறு கட்டுப்பாடுகளில், கீழ்கண்ட தளர்வுகளுடன் பிப்.,28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது: * கலை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்

தடுப்பூசியால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை

Image
  இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எந்த பக்க விளைவுகளும் இல்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. சில மருந்துகள் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையில் இருக்கும்போதே சில நிபந்தனைகளுடன், அவசர கால பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளும், கடந்த 16ம் தேதி முதல் 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிகள், பூடான், மாலத்தீவுகள், நேபாளம், வங்கதேசம் ஆகிய சார்க் நாடுகளுக்கும், மியான்மர், மொரிஷியஸ் மற்றும் சிஷெல்ஸ் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு உதவியாக வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, பிரேசில் மற்றும் மொராக்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு வர்த்தக ரீதியாகவும் அனுப்பப்படுகிறது. அந்த வகையில் இலங்கைக்கு 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா இலங

கரூர் மாவட்டம் குளித்தலை நகர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ செட்டு மருந்து வழங்கும் முகாம்

Image
                      கரூர் மாவட்டம் குளித்தலை நகர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ செட்டு மருந்து வழங்கும் முகாம் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் 12 முகாம்களின் மூலம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும்  முகாம்கள் மிக  சிறப்பாக நடைபெற்றது.குளித்தலை பெரியபாலம் அரசின் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி கலந்து கொண்டு குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கியதோடு நகரத்தில் அமைக்கப்படிருந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் 12 முகாம்களில்  பணிபுரியும் பணியாளர்களுக்கு  சங்கத்தின் சார்பாக மதிய உணவினை வழங்கி மருத்துவர் மற்றும்  பணியாளர்களிடம் தங்களின் பணி மிக சிறந்த பணி நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக பணியாற்றிடுமாறு அன்புடன் வணங்கி கேட்டு கொண்டார். இந்த நிகழ்வில் அரசு மருத்துவர் அமீர்தீன் , நகராட்சி சுகாதார ஆய்வாளர்  இஸ்மாயில் ,மற்றும் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கல்யாண வெங்கட் ராமன் , தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உணவு நல்லமுறையில் ஜீரணமாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று வழிகள்.

Image
 உணவு நல்லமுறையில் ஜீரணமாக  நாம் கடைப்பிடிக்க வேண்டிய  மூன்று வழிகள். நாம் உண்ணும் உணவு ஜீரணமாக கண்டிப்பாக மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். உணவை நாம் எப்படி சாப்பிட்டால் அதிலுள்ள அனைத்து பொருட்களும் ரத்தத்தில் கலக்கும் என்பதற்கு இந்த மூன்று வழிகளும் முக்கியமானவை. அவை பசி, எச்சில் மற்றும் உணவில் கவனம் போன்றவைதான். பசிதான் நம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளையும் தயார் செய்யும் அம்சம். இந்த பசிதான் நாம் உண்ணும் உணவை நல்லபடியாக ஜீரணமாக்கி ரத்தத்தில் கலக்கச் செய்ய தயார் என்று கூறுகிறது. பசி இல்லாமல் சாப்பிடுகிற ஒவ்வொரு உணவும் கழிவாக மாறுகிறது. சில சமயம் அதுவே விஷமாகவும் மாறுகிறது. நல்ல ஜீரணத்திற்கான முதல் வழி பசித்தால் மட்டுமே சாப்பிடுவது. 2-வது வழி உமிழ்நீர்.. நாம் சாப்பிடும் உணவில் உமிழ்நீர் சேரவேண்டும். உமிழ்நீர் கலக்காத உணவு கெட்ட ரத்தமாகிறது. உமிழ்நீரில் நிறைய நொதிகள் உள்ளன. உணவில் உள்ள மூலக்கூறுகளை பிரிப்பதற்கு இவை மிகவும் உதவி செய்கின்றன. எச்சிலால் வாயில் ஜீரணிக்கப்பட்ட உணவை மட்டுமே வயிற்றால் ஜீரணிக்க முடியும். உமிழ்நீரால் ஜீரணிக்காத ஒரு உணவு வயிற்றுக்

கொய்யா இலைச்சாற்றில் உள்ள நன்மைகள்.

Image
 கொய்யா இலைச்சாற்றில் உள்ள நன்மைகள். கொய்யா இலைகளின் பயன்பாடு உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இதில் உள்ள கூறுகள் அதிக அளவு ஹைப்பர் கிளைசீமியாவைக் குறைக்க உதவுகின்றன, இது கொழுப்பைத் தடுக்க உதவுகிறது. கொய்யா இலைகளின் காபி தண்ணீரில் குர்செடின் உள்ளது. அதாவது இந்த டெங்கு காய்ச்சலின் போது எம்ஆர்என்ஏ என்ற நொதி உருவாவதைத் தடுக்கிறது. கொய்யா இலையில் டீ செய்து குடித்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, செரிமானம் சீராக நடைபெறும். கொய்யா இலை வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வயிற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கொய்யா இலைகளில் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் பண்புகளும் உள்ளன. ஒரு ஆராய்ச்சியின் படி, கொய்யா இலையின் சாறு வயிற்றுப்போக்குக்கு நன்மை பயக்கும் என நிரூபிக்கப் பட்டுள்ளது. கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒருமுறை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊறவைத்து குளித்து வந்தால் தலையில் அரிப்பு, பேன் தொல்லைகள் தடுக்கப்படும். கொய்யா இலைகளின் உதவியுடன் விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்தலாம். மேலும், கொய்யா இலைகள் கருவுறுதலை அதிகரிக்கும் திறன் கொண்டதாக கருதப்படுகிறது. சருமத்தில் பருக்கள் ம

பப்பாளி இலைச்சாறு

Image
 பப்பாளி இலைச்சாறு குடித்தால் சர்க்கரை நோயைக்  கட்டுப் படுத்தலாமா? பப்பாளி இயற்கையாகவே பல நன்மை நிறைந்த ஒரு பழம் ஆகவும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு அமிர்தமாகவும் இருப்பதா சொல்றாங்க. இயற்கை தந்த மரம் நமக்கு ஒரு வரம் அப்படினும், முழு தாவரமும் பல மிகச்சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கு அப்படிங்கிறதும் ஒரு நிரூபணமான உண்மையென்றே சொல்லலாம். பப்பாளியை பொறுத்தவரை அதன் பழம் மட்டுமல்லாமல் இலையும் கூட மருத்துவ குணங்கள் நிறைந்தது. மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் சதைப்பற்றுள்ள பழத்தில் வைட்டமின் சத்துக்கள் நிறைந்திருப்பதைப் போலவே, பச்சை பப்பாளி இலை வைட்டமின் A, C, E, K, B ஆகியவற்றுக்கான களஞ்சியமாக இருக்கிறது, கால்சியம், மெக்னீசியம், இரும்பு, சோடியம் ஆகிய தாதுக்களுடன், பபைன், சைமோபபைன் போன்ற நொதிகளுடன்; கார்பைன் போன்ற ஆல்கலாய்டு கலவைகளும் உள்ளது. இயற்கையாகவே, பப்பாளி இலை பல நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது. அதன் சாறு பல அதிசயங்களைச் செய்யக்கூடியது. உங்களுக்காக பப்பாளி இலை சாற்றின் சில அசாதாரண ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடுவோம்: 1. டெங்குவுக்கு சிறந்த மருந்து: நம் இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளி

அன்பின் அறம் பவுண்டேஷன் மூலமாக சிறந்த மனிதநேய விருதுகள் வழங்கும் விழா

Image
  அன்பின் அறம் பவுண்டேஷன் மூலமாக  சிறந்த மனிதநேய விருதுகள் வழங்கும் விழா சென்னை கொளத்தூர் செந்தில் நகரில் உள்ள ஸ்ரீரங்கா மஹாலில் அன்பின் அறம் பவுண்டேஷன் மூலமாக  சிறந்த மனிதநேய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.  நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 130 க்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினர்களாக ஐஏஎஸ் அதிகாரி ஏ.எஸ். ஜீவரத்தினம், மத்திய சமூக நல வாரிய இணைச் செயலாளர்  ஜி.பெருமாள்சாமி, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர். சரண்யா ஜெய்குமார் மற்றும் எஸ். முருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.    இவ்விழாவினை அன்பின் அறம் பவுண்டேஷன் நிறுவனர்  சி. ஜூலி விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். மேலும் ஆர்.எஸ். மணிசங்கர் மற்றும்  என்.சரவணன் ஆகியோர் இன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக  செய்தனர்.

ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் . ஒரே நாளில் தரிசனம் செய்ய

Image
 ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் . ஒரே நாளில்  தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள்  !!! ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை  சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில்  பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில்  தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம். 1, திங்களூர் (சந்திரன்): ********** தரிசனம் நேரம் :1மணி நேரம் காலை 6மணி ஒன்பது  நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்  வேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து  பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி  கிளம்பலாம். 2, ஆலங்குடி (குரு) : ******* தரிசனம் நேரம்:1மணி நேரம் காலை 7.30மணி ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்

பொதுமக்கள் முன் மன்னிப்பு கேட்ட அமைச்சர்

Image
 திறப்பு விழாவின் போது இடிந்து விழுந்த அம்மா மினி கிளினிக்... பொதுமக்கள் முன் மன்னிப்பு கேட்ட அமைச்சர் கட்டடத்தில் மாற்றுத்திறனாளிகள் செல்லக் கூடிய சாய்வு தரையின் கை பிடி சுவர் இடிந்து விழுந்துள்ளது. கரூரில் அம்மா மினி  கிளினிக் திறப்பு விழாவின் போது கட்டடத்தின் நடைபாதை கைபிடி சுவர் இடித்து விழுந்தது. இதனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்டார். கரூர் மாவட்டம் கொசூரில் அம்மா மினி கிளினிக் அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அங்கு புதிய கட்டடம் இல்லாததால் அங்கிருந்த சமுதாயக் கூடத்தில் தற்காலிகமாக அம்மா கிளினிக்காக பயன்படுத்த முடிவு செய்து இன்று திறப்பு விழா நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு இன்று மாலை அம்மா கிளினிக் திறந்து வைத்தார். திறப்பு விழா முடிந்து அமைச்சர் வெளியே வரும் முன்பே, கட்டடத்தில் மாற்றுத்திறனாளிகள் செல்லக் கூடிய சாய்வு தரையின் கை பிடி சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில், அருகில் நின்றிருந்த குழந்தைகள் உட்பட இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு இ

அனைத்து இந்தியர்களுக்கும் விசா வழங்கப்படும் என ரஷ்ய தூதரகம் அறிவிப்பு

Image
 அனைத்து இந்தியர்களுக்கும் விசா வழங்கப்படும் என ரஷ்ய தூதரகம் அறிவிப்பு இந்திய குடிமக்கள் யாவருக்கும் விசா வழங்கும் நடவடிக்கையை ரஷ்யா மீண்டும் தொடங்கியுள்ளது. மாணவர்கள் விசா உள்பட அனைத்து வகை விசாக்களும் வழங்கப்படுவதாக டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுடன் விமான சேவையை மீண்டும் தொடங்கவும் ரஷ்யா கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது. மாஸ்கோவில் இருந்து டெல்லிக்கும் டெல்லியில் இருந்து மாஸ்கோவுக்கும் தற்போது வாரம் இருமுறை விமான சேவை இயக்கப்பட இருக்கிறது. விசாவுக்கு விண்ணப்பம் செய்வோர் தேவையான ஆவணங்களை ரஷ்ய தூதரக இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். அத்துடன் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என்ற சான்றிதழ் பெற்றும் பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்… வௌவால் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்..!!

Image
 50 ஆண்டுகளில் 5 வைரஸ்கள்…  பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்..!! பூமியில் வாழும் விசித்திர உயிரினங்களில் வௌவாலும் ஒன்று. வௌவால்களால் ஒரு சில போர்களே நின்றதாக வரலாறுகளும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதனை தாண்டி தற்காலத்தில் வௌவால்கள் உணவு சங்கிலியில் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்து வருகின்றன. வௌவால்களில் பல கொடூரமான வைரஸ்கள் இருப்பதை பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2016 ம் ஆண்டு கேரளாவை தாக்கிய நிபா வைரஸ் ஒரு வகை பழந்திண்ணி வௌவால்கள் மூலம் தான் பரவியது. அதற்கு காரணம் பனம்பழம் தின்னும் வௌவால்கள் எனவும் கண்டறியப்பட்டது. 2020 ம் ஆண்டில் எறும்புதின்னிகளிலிருந்து வௌவால்கள் மூலமாகத்தான் கொரோனா வைரஸ் பரவியதாகவும் சில ஆராய்ச்சிகள் கூறின. அப்படிப்பட்ட வைரஸ்களின் பிறப்பிடமான வௌவால்களைப் பற்றி நமக்கு தெரிந்திராத 10 தகவல்களை இங்கே பற்றி காண்போம். 1. சுமார் 1400 வகையான வௌவால் இனங்கள் உலகில் உள்ளன.. ஆம், பனிப்பிரதேசங்கள் முதல் வறண்ட பாலைவனங்கள் வரை உலகின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு வகையான வௌவால்கள் வாழ்கின்றன. உருவ அமைப்பில், நாணயம் அளவில் துவங்கி இறக்கையை விரித்தால் சு

பிஸியான நாகேஷும் பிரியமான தோசையும்!

Image
  பிஸியான நாகேஷும் பிரியமான தோசையும்! ஒப்பற்ற நகைச்சுவையால் ரசிகர்களைக் கட்டிப் போட்ட நாகேஷ், ஒப்பனையற்ற சிரிப்புடன் சக கலைஞர்களுடன் இருக்கும் புகைப்படம். இதன் வலது ஓரத்தில் நிற்பவர் இயக்குனர், எழுத்தாளர் காரைக்குடி நாராயணன். அந்தத் தருணம் அவர் வார்த்தைகளில்... ‘‘நான் தயாரித்து இயக்கிய ‘அன்பே சங்கீதா’ படப்பிடிப்பில் எடுத்த போட்டோ இது. ‘கிழக்கே போகும் ரயில்’, ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்துக்குப் பிறகு ராதிகா மூன்றாவதாக நடித்த படம். பாரதிராஜாதான் ராதிகாவின் கால்ஷீட்டை வாங்கிக் கொடுத்தார். ஏவி.எம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, பக்கத்து ஃப்ளோரில் நாகேஷ் பட ஷூட்டிங். என் படத்தின் ஷூட்டிங் நடப்பதை கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்தவர், எங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவருடன் எனக்கு எதிர்பார்ப்பு இல்லாத நட்பு இருந்தது. ஈகோவே அற்ற மனிதர் அவர். சம்பள விஷயத்தில் கரெக்டா இருந்தாலும் தயாரிப்பாளர் கஷ்டப்படுவது தெரிந்தால், உதவி செய்ய தாமதிக்கமாட்டார். என் நாடகங்களைப் பார்த்துவிட்டு தேடி வந்து பாராட்டுவார். ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை செய்த

கிராமத்திற்கே கழிவறை கட்டிக் கொடுத்த பள்ளி மாணவி

Image
  கிராமத்திற்கே கழிவறை கட்டிக் கொடுத்த பள்ளி மாணவியை நேரில் பாராட்டிய கனிமொழி எம்.பி புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஜெயலெட்சுமி. கடந்த ஆண்டு இணைய வழி போட்டித் தேர்வு மூலம் நாசாவுக்கு செல்ல தேர்வாகி இருந்தார். ஆனால் அமெரிக்கா செல்ல பணமில்லை. இதையறிந்த பலரும் ஏழை மாணவிக்கு உதவிக்கரம் நீட்டினார்கள். அதேபோல 'கிராமாலயா' என்ற தொண்டு நிறுவனமும் மாணவிக்கு உதவிகள் செய்ய முன்வந்தபோது தனக்கு போதிய உதவிகள் கிடைத்துவிட்டதாக ஜெயலெட்சுமி சொல்ல, அப்படியானால் உங்கள் வீட்டில் கழிவறை இருக்கா? இல்லை என்றால் 'கிராமாலயா' கட்டித்தரும் என்றனர். இதைக் கேட்ட பள்ளி மாணவி ஜெயலெட்சுமி ''என் வீட்டில் மட்டுமல்ல எங்க ஊரிலேயே யார் வீட்டிலேயும் கழிவறை இல்லை. அதனால என்னைப் போன்ற பெண் குழந்தைகள் ரொம்பவே அவதிப்படுறோம். 2 கி.மீ தள்ளி இருக்கிற குளத்துக்கு போறதுக்கு டாஸ்மாக் கடைகளை கடந்து போகனும். இதுக்கு பயந்தே விடியறதுக்குள்ள போகனும். அப்பவும் அச்சமாக இருக்கும். விடிஞ்ச பிறகு வயசுப் பொண்ணுங்க வலியோட கஷ்டப்படுறாங்க அதனால எங்க ஊருல இருக்க எல்லாருக்கும் கழிவறை

புத்தகக் கண்காட்சி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி துவங்குகிறது.

Image
  44 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி துவங்குகிறது. நந்தனம் YMCA மைதானத்தில் பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை 14 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் . அரசு விதித்துள்ள பாதுகாப்புக் கட்டுப்பாடுகளுடன் இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளதாகப் பபாசி அறிவித்துள்ளது

ஞாயிறு திரை மலர் 31/01/2021

Image
    ஞாயிறு திரை மலர் 31/01/2021 ------------------------------------------------------------------------------------------------------------- கலைவாணருக்கு சிலை வைத்திருக்கிறார்கள், சிவாஜிக்கு ஏன் வைக்கவில்லை என்று ஒரு வாசகர் கேட்ட போது, அவருக்கு ஒரு சிலை வைத்தால் போதாது, ஒன்பது வைக்க வேண்டியிருக்கும் என்று பதில் அரசு பதில் அன்று குமுதத்தில் இணையத்தில் இருந்து எடுத்தது ____________________________________________________________________________________________ அரிய புகைப்படங்கள் குஸ்பூவின் சிறுவயதில் நடித்த திரைப்படங்களில் எடுத்த புகைப்படம் இவர் சிறுவயதிலே ஹிந்தி படங்களில் நடித்து இருக்கிறார் ======================================================= எம்.ஜிஆர் பற்றி நாகேஷ் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒரு மகத்தான மனிதர். என் மீது எப்போதுமே அவருக்குத் தனி பிரியம் உண்டு. கால்ஷீட் பிரச்னை காரணமாக, எம்.ஜி.ஆர் படங்களில் ஷூட்டிங்குகளுக்கு நான் கால தாமதமாகச் சென்றது உண்டு. அது போன்ற சமயங்களில், என் இக்கட்டைப் புரிந்துகொண்டு, டைரக்டரிடம், 'மற்ற காட்சிகளை எடுத்துக்கொண்டு இருங்கள். நாகேஷ் வந்தவுடன்,