Posts

Showing posts from December, 2020

உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது

Image
  உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது என்று ரஜினியை நடிகை கஸ்தூரி கிண்டல் செய்துள்ளார். ‘உடல்நிலையை கருத்தில்கொண்டு கட்சியை ஆரம்பித்து அரசியலுக்கு வரமுடியவில்லை’, என நடிகர் ரஜினிகாந்த் நேற்று பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். இது அவரது அரசியல் வருகையை எதிர்நோக்கியிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் இருப்பதை அறிந்துகொண்டு ரசிகர்கள் நேற்று மாலை அவரது வீட்டின் முன்பு திரண்டனர். அப்போது ‘அரசியலுக்கு வாங்க தலைவா’, என்று தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் நேற்று அதிரடியாக அறிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்புக்கு பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இதுப்பற்றி நடிகை கஸ்தூரி டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, ''கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது. உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது. ரஜினியின் முடிவுக்கு பாராட்டுக்கள். நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி

தேசத்தை கட்டமைப்பதில் காவல் துறையின் பங்கு "

Image
 பள்ளி மாணவ மாணவியர்க்கு " தேசத்தை கட்டமைப்பதில் காவல் துறையின் பங்கு " என்ற தலைப்பில் நடந்த தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டி 73 பள்ளிகளிலிருந்து 316 மாணவ , மாணவிகள் பங்கேற்பு . முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ , மாணவிகளுக்கு காவல் ஆணையாளர் அவர்கள் வெற்றிக்கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார் (3012.2020). சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் , இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் , மண்டல அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் காணொளி வாயிலாக, " தேசத்தை கட்டமைப்பதில் காவல் துறையின் பங்கு " என்ற தலைப்பில் தமிழிலும் , " Role of Police in Nation Building " என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. சென்னை பெருநகரில் உள்ள 73 பள்ளிகளிலிருந்து 316 மாணவ மாணவியர்கள் இப்பேச்சு போட்டியில் பங்கேற்றனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் , இ.கா.ப அவர்கள் இன்று ( 30.12.2020 ) காலை வேப்பேரி , ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு இறுதிப் பேச்சுப்போட்டியில் த

ஜி.கே. வாசன் பிறந்த நாள் விழா

Image
  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மக்கள் தளபதி ஐயா ஜி.கே. வாசன் பிறந்த நாளை முன்னிட்டு இன்று  திங்கட்கிழமை (28.12.2020) காலை 10:00 மணியளவில் வடசென்னை கிழக்கு மாவட்டம் ஆர்.கே. நகர் தொகுதி பகுதி தலைவர் திரு. J.மாரி ஏற்ப்பாட்டில்  மண்ணப்ப முதலி தெருவில் பொதுக்கூட்டமும்,  கேக் வெட்டி, பொதுமக்கள் 500 க்கும் மேற்பட்டோருக்கு  மாவட்ட தலைவர் C.பிஜூ அவர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் . உடன் நிர்வாகிகள் வேணுகோபால், சக்திவடிவேல், முருகன், சுகுமாரன், பாலசந்தானம், சென்னை கணேஷ், பாக்ஸர் ஜானி,பொன்வில்சன்,சுதாகர் ஸ்ரீதர்,வேலு, கிருபாகரன், அங்கவள்ளி, கலாவதி, செல்வக்குமார்,  மகேஷ், துரைபாபு, அனிக்ஸ், சாரா,தீபா,  வட்ட தலைவர்கள் பிரதீப்,மணிவண்ணன், நாகேஷ்,  தினேஷ்பாபு, பாஸ்கரன், டில்லிராஜ், உதயகுமார்,  மற்றும் பலர் கலந்து கொண்டனர்...

ரமணமகரிஷி (24)

Image
  ரமணமகரிஷி (24)    பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர்  :   பகுதி 24  பகவான் ஸ்ரீ ரமணர் "அட்சரமணி  மாலை" பாட ஒரு சுவையான பின்னணியும்  இருக்கிறது. அவர் விருபாட்ச  குகையில் வாழ்ந்த காலத்தில் அவருடைய சீடர்கள் "பிட்சை"க்கு போகும் போது" அற்புத விக்ரக அமராவதீஸ்வரர்" (ஆதிசங்கரர்           இயற்றியது) என்ற "அட்சரமண மாலையை "ப்  பாடுவார்கள்.  பகவானின் சீடர்கள் வருவதறிந்து வீட்டில் உள்ளவர்கள் சுத்தமான ஆகாரம் அளித்து வந்தனர். அந்த ஆகாரத்துக்கும்  போட்டி வந்தது. ஊரில் உள்ள பிற  சாதுக்கள் சிலர் தாங்களும் அதே சுலோகங்களை பாடிக்கொண்டு ஆசிரம பக்தர்களுக்கு முன்பே பிச்சை வாங்கி கொண்டு சென்றுவிடுவார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டதறிந்து வீட்டுக்காரர்கள் வருந்துவார்கள். பழனி  சுவாமி இப்பிரச்சனைக்கு முடிவு கட்டவும், வீட்டுக்காரர்களின் சங்கடத்தை போக்கவும் வேறு பாடல்கள் வேண்டும் என்று  பகவானிடம் கேட்டுக்கொண்டார் அப்படி பகவான் அருளியது தான் "அட்சரமணமாலை". பகவானின் சீடர்கள் அது  முதல் "அட்சரமண மாலை" பாடிக்கொண்டு "பிட்சை"க்கு போவார்கள்.  ஸ்ரீரமணரைப் ப

Nynarin Unarvugal/புத்தாண்டு வாழ்த்துக்கள்

Image
  Nynarin Unarvugal புத்தாண்டு வாழ்த்துக்கள்|new year wishes 2021 tamil|கவிதை| video link Nynarin Unarvugal

எடப்பாடி காலில் விழுந்த விஜய்..?

Image
  எடப்பாடி காலில் விழுந்த விஜய்..? டிரெண்டாகும் ஹேஷ்டேக்..! நடிகர் விஜய், விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். பெருந்தொற்று பரவல் காரணமாக, நீண்ட நாட்களாக வெளியாகமல் இருந்த திரைப்படம், வரும் 13-ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக படக்குழுவினர் முதலமைச்சர் பழனிச்சாமியை சந்தித்ததாக தகவல் வெளியானது. இதற்கிடையே, நெட்டிசன்கள் பலர், எடப்பாடி காலில் விழுந்த விஜய் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது

ஒளிக்கற்றுக் குழவி

Image
ஒளிக்கற்றுக் குழவி ---கவிதை தொட்டுக் கொள்ளும் தூரம்தான் இருந்தும் இருவரும் சேர்ந்தே தனிமையின் ஆழ்ந்த இருளுக்குள் தொடுதிரைகளின் ஒளிக்கற்றையில் உன்னை நீயும் என்னை நானும் நம்மை நேரமுமாக மாற்றி மாற்றித் தேடுகிறோம். அதன் குழைந்த சிணுங்கள்கள் தனித்திருத்தலை நினைவுருத்தித் தொட்டணைக்கக் கெஞ்சுகிறது. ஒரு பசியுள்ள சிசுவைப் போல அதன் கணத்த அழுகையானது விரல்காம்புகளில் விசும்புகிறது. சுரக்கும் உள்ளுணர்வுகளையெல்லாம் அதன் மென்மையான நாவிடுக்கில் கசிந்துவிட்டு வற்றிய இருபெரும் என்புகளாக காலத்தைக் கட்டியணைத்து உறங்கச்செல்வோம் வா.. #சாய்வைஷ்ணவி

ஜோதிட தொழிலை கைவிடும் ஷெல்வி

Image
 ரஜினிகாந்துக்காக ஜோதிட தொழிலை கைவிடும் ஷெல்வி..! கணிப்பு பாவங்கள் தமிழக பா.ஜ.க.வில், அறிவுசார் பிரிவுத் தலைவராக உள்ள ஜோதிடர் ஷெல்வி என்பவர், டிசம்பர் மாதத்திற்குள் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால் ஜோதிடம் பார்க்கும் தொழிலை விட்டு விடுவதாக அறிவித்திருந்த நிலையில், அவரது கணிப்பு பொய்யாகி உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். கொரோனாவால் மக்களை முடக்கி போட்டிருந்த 2020 ஆம் ஆண்டு எல்லோருக்கும் சிறப்பாக இருக்கும் என்று முன் கூட்டியே கணித்த யதார்த்த ஜோதிடர் ஷெல்வி இவர்தான்..! இதே போலத்தான், நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதத்திற்குள் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும், அப்படி அவர் தொடங்கவில்லை என்றால் தான் பார்த்துவரும் ஜோதிடத் தொழிலையே விட்டு விடுவதாகவும் யதார்த்தமாக சவால் விட்டிருந்தார் ஜோதிடர் ஷெல்வி. இந்த நிலையில், யதார்த்த ஜோதிடர் ஷெல்வியின் கணிப்பை, ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற அறிக்கை பதம் பார்த்துவிட்டது. தற்போது ஷெல்வி ஜோதிட தொழிலை கைவிடுவாரா ? அல்லது தனது கணிப்பு தவறிவிட்டது என்பதை ஒப்புக்கொள்வாரா? என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்

Image
 வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்  வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் பாமக நாகை மாவட்ட செயலாளர் C.D..இராஜசிம்மன் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் பாட்டாளி மற்றும்  வன்னிய சொந்தங்கள் கலந்து கொண்டனர் ..

காவல் துறை எப்.ஐ.ஆர் போடவிலையா

Image
 காவல் துறை எப்.ஐ.ஆர் போடவிலையா??? படித்து பயன் அடையுங்கள்!  ஒரு குற்ற சம்பவம் குறித்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கும்போது, காவல்துறையினர் அந்தப்புகார் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை புரிந்து கொள்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது. புகார் கொடுக்க வருபவரையே மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் ஏறக்குறைய அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் வழக்கமான நடைமுறையே. 1.  புகார் ரசீது அல்லது எப்.ஐ.ஆர் கொடுக்காத நிலையில்  புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத நிலையில், அந்தப் புகாரின் நகல் ஒன்றை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம், குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பலாம். பிரிவு 154 (2)  சி.ஆர்.பி. சி படி  விசாரனை செய்ய சொல்லி காவல் கண்காணிப்பாளருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில் தபால் மூலம் அணுபவும் இவற்றை ஆதாரமாக கொண்டு உரிய குற்றவியல் நீதி துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு கொடுத்து முதல் தகவல் அறிக்கை பதிய உத்திரவு பெறலாம் பிரிவு 156 (3) சி.ஆர்.பி. சி  மற்றும் 190  சி.ஆர்.பி. சி    மேலும் புகாரின் நகல்களை, தொலைநகல் மூலம் காவல்துறை ஆணையர

Nynarin Unarvugal/கணவன் மனைவி காதல் கவிதைகள்.

Image
   Nynarin Unarvugal கணவன் மனைவி காதல் கவிதைகள். kanavan manaivi kadhal kavithaigal in tamil கணவன் மனைவியின் ஊடலை காதலோடு கவிதையாக சொல்லியிருக்கிறேன். Nynarin Unarvugal

ஒரு வாழ்வியல் செய்தி

Image
 ஒரு வாழ்வியல் செய்தி புத்தாண்டுக்கு நிறைய வாழ்த்து சொல்லுவாங்க ..நான் உங்களுக்கு ஒரு வாழ்வியல் செய்தி அறிவிக்கிறேன் . வேறொன்றும் இல்லை , இந்த கசப்பான ஆண்டு விட்டு சென்ற தடத்தின் நீட்சியாக இருக்க விருக்கும் பெரும் சவாலான வரவு - செலவு திட்டமிடுதல் சம்பந்த பட்டதே.. இதற்கு ஜப்பானியர்களை துணைக்கு அழைத்து கொள்கிறேன்.. அவர்களின் கூட்டு வெற்றிக்கு தனிப்பட்ட பொருளாதார திட்டமிடுதல் முக்கிய பங்காற்றுகிறது.. அதை காகீபோ முறை (Kakeibo method) என அழைக்கிறார்கள்.. அதை நீங்கள் இணையத்தில் தேடினால் ,கொட்டிகிடைக்கும் உங்களுக்கான வழிகாட்டல்கள்.. அதில் முக்கியமான நான்கு பயிற்சிகளை மட்டுமே குறிப்பிடுகிறேன். அ. உங்கள் செலவுகளை நான்கு தலைப்புக்குள் அடக்குங்கள் . வாழ்வியல் அத்தியாவசிய செலவுகள் , சமூக & கல்வி செலவுகள், பொழுதுபோக்கு செலவுகள் மற்றும் இதர செலவுகள் என.. நான்கு செலவுகளையும் அடிக்கடி பரிசீலனைக்கு உட்படுத்துங்கள் , கடைசி இரண்டையும் கொஞ்சம் அதிகமாகவே .. ஆ. உங்கள் வருமான பணத்தில் முதல் பங்கு சேமிப்பாக இருக்கட்டும்.அதை ஒரு சுப செலவுகணக்காகவே கணக்கில் கொள்ளவும் .  இ. உங்கள் வருமானங்கள் , சேமிப்புகள்,

ரமணமகரிஷி (23)

Image
  ரமணமகரிஷி (23)    பகவான் ஸ்ரீ ரமணர் குறித்தான தொடர்  :   பகுதி 23 முகவைக் கண்ண முருகனார்''  பகவான் ஸ்ரீ ரமணரால் ஈர்க்கப்பட்டவர் முருகனார்  என்னும் தமிழ்க் கவிஞர்.  இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். உற்றார் உறவினர்களால்  சாம்பமூர்த்தி என்றழைக்கப்பட்டார்.  கல்லூரி நாட்களில் அவருக்கிருந்த  தமிழ்ப்  பற்றின் காரணமாக தமது பெயரை முருகனார் என்று   தூய தமிழாக்கிக் கொண்டவர். தமிழ் பண்டிதர் வேலையில் இருந்தவர். வீடு வாசல் துறந்து தனியாக திருவண்ணாமலை சென்று ரமணரின் மனதில் இடம் பிடித்தார்.  புற  வாழ்வை அறவே துறந்து கடைசிவரை துறவியாகவே வாழ்ந்தார்.  மகரிஷியை சந்தித்தது முதல் வேறு ஒருவர் பற்றியும் எதைப் பற்றியும் பாடாமல் இருந்தவர். குரு ரமணர், தனக்கும் பிற அடியார்களுக்கும் கூறிய கருத்துக்களையும், உபதேசங்களையும், ரமணர் குறித்து தாம் இயற்றிய தோத்திரங்கள், அவரால் தனக்கு ஏற்பட்ட ஆன்மீக அனுபவங்கள் பற்றியும் கிட்டத்தட்ட 30,000 தமிழ்ப் பாக்களாக  இயற்றியுள்ளார்.  ரமணர் பக்தர்களுக்கு அருளிய உபதேச வாசகங்களையும், எளியே ஆன்ம விசாரத்  தத்துவத்தையும் முருகனார் கவனமாக கிரகித்துக் கொண்டு அவற்றை கருத்துச் செறிவா

உட்கார்ந்திருக்கும் மேடைக்கும் தான் உயிர் இருக்கிறது - பகவான் ரமணர்

Image
  உட்கார்ந்திருக்கும் மேடைக்கும் தான் உயிர் இருக்கிறது - பகவான் ரமணர் ( நன்றி : arull .wordpress.com) (31-12-20 பகவான் அவதார   தினம்) (உண்ணும் உணவு   பற்றி ரமண மகரிஷி) முன்பொருமுறை திருமதி பிக்காட் என்கிற ஆங்கிலேயப் பெண்மணி பகவானுடன் நடத்திய உரையாடலின் ஒரு பகுதி; “ஆன்ம ஞானம் பெற எந்த வகையான உணவினை பரிந்துரைக்கிறீர்கள் ?” “சாத்வீக உணவு – குறைந்த அளவில் . அதாவது ரொட்டி , பழம் , காய் , பால் போன்றவை” பிக்காட் : வட இந்தியாவில் சிலர் மீன்களை உண்கிறார்களே , அது சரியா ? ( பகவானிடமிருந்து பதில் இல்லை)f பிக்காட் : ஐரோப்பியர்களான எங்களுக்கு எங்கள் ஒருவித உணவு பழகிவிட்டது . அதை மாற்றினால் , உடலும் அதனால் மனமும் சக்தியிழந்து விடுகிறது . உடல் நலம் பேணுவது அவசியம் அல்லவா ? ரமணர் : நிச்சயமாக . உடல் சக்தியிழக்கையில் , வைராக்கியம் என்னும் சக்தியை மனம் பெறுகிறதே ! பிக்காட் : ஆனால் , நாங்கள் மனவலிமை இழக்கிறோமே ? ரமணர் : மனவலிமை என்று எதைச் சொல்கிறீர்கள் ? பிக்காட் : உலகத்தின் பந்தங்களில் இருந்து விடுபடும் சக்தியினை சொல்க

உடல் உறுப்புகளை பலப்படுத்த சின்னச்சின்ன வழிகள்

Image
 உடல் உறுப்புகளை பலப்படுத்த  சின்னச்சின்ன வழிகள்.  பெரிய பெரிய பலன்கள். மூளை கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம். வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும். தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது. கண்கள் பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது. தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும். அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும். வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது. தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது. பற்கள் மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும். கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச்