Posts

Showing posts from March, 2021

காத்திருக்காதே எழுந்திரு /இ்ன்றைய நயினாரின் உணர்வுகள்

Image
  இ்ன்றைய நயினாரின் உணர்வுகள் காத்திருக்காதே எழுந்திரு|தன்னம்பிக்கை கவிதை|motivational|thannambikai kavithai|Nynarin Unarvugal . வீடியோ லி்ங்க்

கமலா தாஸ்.

Image
  கமலா தாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுராயா அல்லது மாதவிக்குட்டி தெரியுமில்லையா?… மூன்று மொழிகளில் பேசுகிற-இரண்டு மொழிகளில் எழுதுகிற ஆனால் ஒரே மொழியில் கனாக் காண்கிற ” அந்த இந்திய எழுத்தாளர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை சர்வதேச புகழ் புகழ் பெற்றவை. 1934ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி, கேரளத்தின் திருச்சூர் அருகிலுள்ள நாலாப்பட்டு தறவாட்டில், மாத்ருபூமி நாளேட்டின் நிர்வாக ஆசிரியரான வி.எம்.நாயர் என்பவருக்கும், கவிஞர் பாலாமணியம்மாவிற்கும் மகளாகப் பிறந்தவர் ஆமி என்று சிறுவயதில் அழைக்கப்பட்ட மாதவிக்குட்டி. மலையாளத்தில் மாதவிக்குட்டியாகவும் ஆங்கிலத்தில் கமலாதாஸ் ஆகவும் அறியப்பட்ட இவருடைய ‘என் கதை’என்ற தன்வரலாற்று நூல் இந்தியாவிலேயே மிக அதிகமாக விற்பனையானதாகக் கூறப்படுகிறது. அந்நூல் பலவிதமான சர்ச்சைகளுக்கு உள்ளானது. அதில் தன்னுடைய பாலியல் பரிசோதனைகளை கிளர்ச்சியூட்டும்படி எழுதியிருந்தார். இளவயது ‘தோழனின்’ விந்துவின் வாசனையைப்பற்றிய வருணனைகள் அவரை புகழ்பெறச்செய்தன. இந்த நூல் மலை

தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பற்றி தொடர் பகுதி (3)

Image
தில்லானா மோகனாம்பாள். (3 )  ஒருவேளை எஸ்எஸ் வாசனின் ஜெமினி நிறுவனம் 1950களின் இறுதியில் தில்லானா மோகனாம்பாளை தயாரித்திருந்தால் அதில் வைஜெயந்திமாலாதான் கதாநாயகியாக நடித்திருக்க அதிக வாய்ப்பு. காரணம், வஞ்சிக்கோட்டை வாலிபன், இந்திதிரைப்படமான பைகாம், இதன் தமிழ் ரீமேக்கான இரும்புத்திரை போன்ற ஜெமினி நிறுவனத்தின் படங்களில் தொடர்ந்து வைஜெயந்திமாலாதான் கதாநாயகி. வைஜெயந்திமாலா பின்னர் இந்திக்கு போய் சூப்பர் ஸ்டாராக ஆகிவிட்டதாலும், ஜெமினி நிறுவனம் தயாரிக்காமல் ஏபி நாகராஜன் தயாரித்ததாலும் தில்லானா மோகனாம்பாளாக பத்மினி மாறிவிட்டார். சிவாஜி, பத்மினிக்குபிறகு மற்ற பாத்திரங்களை தேர்வு செய்வதில் ஏபிஎன் அளவுக்கு அதிகமாக தீவிரம்காட்டினார். காரணம். ஜெமினி நிறுவனம் ஒரு படத்தை தயாரித்தால் பிரமாண்டமாகவும் நேர்த்தியாகவும் இருக்குமோ அதற்கு எள்முனையளவு குறைந்தாலும், வாசனிடம் கெஞ்சிக்கூத்தாடி கதையை பெற்றதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்று நினைத்ததுதான். நாட்டியதாரகை மோகனாவை, சொகுசாக வாழவைக்க பல பெரிய மனிதர்களின் தயவை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார் மோகனாவின் தாயாரான வடிவாம்பாள்.. அவருக்கென,வீட்டில் சொல்வதெற்கெல

இட்டலி இட்லி /விவேகானந்தன் கவிதை

Image
  ஊட்டம் தருவது இட்லி                         என்று நாட்டம் கொண்டார் அனைவரும் இட்லி தினம் என்று அயல்  நாட்டவரும் இட்டமுடன் கொண்டாடி மகிழ்கின்றார் இட்டு அவித்த பண்டம் இட்டலி இட்லி என்று மருவி வந்தது என்றார் நெருங்கிய நண்பர் ஒருவர் -  எனக்கோ  மரு விருந்து நினைவு வந்தது.  இரு மணம் இணைந்து திருமணம் நிகழ்ந்து மருவிருந்ததில் மகிழ கருத்தாய் அழைத்தார் மாமி.  விடி வெள்ளி  ஒளியிலே விடியலில் எழுப்பினார் மாமா தடி தடியாய் இருவர் வந்து பிடி பிடி என்றே  உடம்பை பிடித்து விட்டார் நன்றே அருவியெனக் கங்கை குளியல் அணிவதற்குப் புது ஆடைகள் ஆடை கட்டும் ஆவின் பால் மேடை கட்டும் பட்சணங்கள்.   அரிசியும் உளுந்தும் மசிய ஆட்டி வைத்தார் மாமா அட்டியின்றி  நெய் இட்டு இட்டு அவித்த இட்லி சுட்டு வைத்தாள் மாமி!   தட்டில்லா மகிழ்வுடன் தட்டத்தில் வைத்துச் சாப்பிட அட்டியின்றி மனையாளும் மெட்டி ஒலி எழுப்பிட ஊட்டமான குஷ்பு இட்லி  வட்ட வட்டமான வடிவத்தில்  தொட்டால் பஞ்சுபோலே  தொடுத்த மல்லிப் பூபோலே அட்டி இட்டு  எடுத்து வந்தாள் வட்டில் நிறைய இட்லி கலர் கலராய் சட்டினி பலவித பெயரில் வைத்தாள் மல்லி புதினா பச்சை  கொள்  எள்ளு சந்தனம் தே

கொன்றை வேந்தன் | 5.உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு

Image
  கொன்றை வேந்தன் உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு 5.| கவிஞர் ச.பொன்மணி video link விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி

திரைப்பாடல்களில் அசலும் நகலும் தொடர் பகுதி 3 ( 2 )

Image
  திரைப்பாடல்களில் அசலும் நகலும் தொடர் பகுதி  3  ( 2 ) வழங்குபவர் ருத்ரா நமது தமிழ்  மொழி படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அதே திரைப்படம் இதர மொழிகளில்  எடுத்தபோது அந்த மொழி  இசையமைப்பாளர்கள் அந்த பாடல்களின்அசல் மெட்டில் அமைக்காமல் மாற்றி அமைத்த பாடல்களை காணலாம் அந்த பாடல்கள் மிகவும் பாப்புலராக அமைந்துள்ளன இப்போ நிகழ்ச்சிக்கு போகிறோம்  ,இன்று  அசல் தமிழ் படம் பயணங்கள் முடிவதில்லை(1982) பாடல் இளைய நிலா இசை இளையராஜா நகல் படம்  இந்தி (1983) kalakaar பாடல்  Neele Neele Ambar  இசை கல்யாண்ஜி ஆனந்த்ஜி பாடல் இதோ

இட்லிதினம் ஸ்பெஷல் ரவா இட்லி

Image
  இன்று உலக இட்லி தினம் இட்லிதினம் ஸ்பெஷல் ரவா இட்லி தேவையானவை ரவை – 1 கப் எண்ணெய் – 1டேபிள் ஸ்பூன் கடுகு – சிறிதளவு உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கடலை பருப்பு – 1 டீஸ்பூன் இஞ்சி – 1 துண்டு பச்சை மிளகாய் – 2 கருவேப்பிலை – சிறிதளவு வெங்காயம் – 1/2 கப் தயிர் – 1/2 கப் உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிதளவு செய்முறை:- முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு போட்டு அதனுடன் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பிறகு சிறிது நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் மற்றும் கருவேப்பிலை எடுத்து பொடியாக நறுக்கி அதனுடன் கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதில் வெங்காயத்தினை கொட்டி கிளறி மேலும் அதனுடன் ரவை கொட்டி மிதமான சூட்டில் நன்றாக 5 நிமிடம் வரை வறுக்கவும். அதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றி எடுத்து வைத்து கொள்ளுங்கள். ரவை ஆறியதும் அதனுடன் கெட்டியான தயிர் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டியால் நன்றாக கலக்கவும். பிறகு 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து அதில் உப்பு, மற்றும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

ஆவியால் அவித்த அழகி / இட்லி தின கவிதை

Image
                                                         ஆவியால் அவித்த அழகி இட்லி தின கவிதை ஆளையே மயக்கும் நழுவி ஆகாயம் பூலோகம் அயல்நாடு உள்நாடு எங்கெங்கு தேடினாலும் கிடைக்காது உன்னைப் போல ஒரு சுவையான நிறமி.. கூட்டாளிகளுக்குத் தகுந்தபடி தன்னிலை மாற்றும் மாயவி... சட்னியானாலும் சாம்பாரானாலும் மிளகாய்ப் பொடியானாலும் அனைவரோடும் ஒத்துப்போகும் தன்னிகரில்லாத் தலைவி... நிலாவைப்போல வெள்ளை உன் ருசிக்கு இல்லை எல்லை... அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கியும் தலைக்கனம் ஏறாத மிருது உள்ளம்... தமிழ்நாட்டு காலை உணவின் கெத்து... "இட்லியே" நீ தான் எங்க பரம்பரை சொத்து... மார்ச்-30: உலக இட்லி தினம்.

தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பற்றி தொடர் பகுதி (2)

Image
 தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பற்றி  தொடர் பகுதி (2) தில்லானா மோகனாம்பாள்.. சினிமாவில் எப்படி நடந்தது இந்த மேஜிக் என்று வியப்பார்களே அதுபோன்ற மேஜிக் தமிழ் திரைப் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவற்றில் மிக முக்கியமானது தில்லானா மோகனாம்பாள் .. 1968 ஆம் ஆண்டு ஜுலை 27ந்தேதி வெளியான இந்த படத்தை பார்க்காத தமிழ் ரசிகர்களே இருப்பார்களா என்பது சந்தேகம். பொன்விழா கண்ட தில்லானா மோகனாம்பாளை கோடிக்கணக்கானோர் பார்த்திருப்பார்கள். இனியும் கோடிக்கணக்கானோர் பார்க்கத்தான் போகிறார்கள். இன்றைக்கு டிவியில் போடும்போதெல்லாம் சமூக வலைதளங்களில் அந்த படத்தை பற்றிய பல விஷயங்களை குறிப்பிட்டு இப்போதைய தலைமுறையினரும் உருகி உருகி எழுதுகிறார்கள்.  இப்போதே இப்படி என்றால் அந்தப்படம் உருவான கால கட்டத்திலும் வெளியான கால கட்டத்திலும் ரசிகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் படம் தொடர்பான செய்திகள் எப்படியெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்? கொத்தமங்கலம் சுப்பு.. இவர்தான் தில்லானா மோகனாம்பாளின் உண்மையான கதநாயகன். படத்தின் கதை இவருடையதுதான். கொத்தமங்கலம் சுப்புவை வெறும் கதை வசனகர்த்தா என்று நினைத்துவிடாதீர்க

உலக இட்லி தினம்

Image
 இன்னிக்கு வேர்ல்ட் இட்லி டே!30.3.20221 கடந்த 30-03-2015 முதல் இந்த உலக இட்லி தினம் சென்னையில் கொண்டாடப்பட்டு வருது. வருடந்தோறும் நாட்கள் தவறாமல் இட்லியைத் தான் உணவாக உண்டு வருகிறோம் ஆனால் மார்ச் 30ல் மட்டும் ஏன் இட்லி தினம் என்று கொண்டாடப்படுகிறது என்ற கேள்வி உங்களுக்கு எழுவது இயற்கைதான். இதோ அதற்கான பதில் இதே மார்ச் 30ல் தான் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் தேசிய பாப்கான் தினம் கொண்டாடப்படுகிறது அதே போல சுவீடன் நாட்டிலும் இதே நாளில் தான் அவர்கள் நாட்டின் பாரம்பரிய உணவான அப்பம் தினம் கொண்டாடப்படுகிறது. அதைப்போல நம் நாட்டின் பாரம்பரிய உணவான இட்லியின் புகழை உலகுக்கு பறைசாற்றும் நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30ஆம் தேதி உலக இட்லி தினமாக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருது.

கொன்றை வேந்தன் 4.ஈயார் தேட்டைத் தீயார் கொள்வார் | கவிஞர் ச.பொன்மணி

Image
  கொன்றை வேந்தன் 4.ஈயார் தேட்டைத் தீயார் கொள்வார் | கவிஞர் ச.பொன்மணி  video link விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி

கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்ளை பதறவைத்த கடைசி ஓவர்,பதட்டமின்றி போட்டு இதயங்களை கவர்நத நடராஜன்

Image
  கடைசி ஓவர் அக்னிப் பரீட்சையில் ‘அசால்ட்டாக’ தேறிய நடராஜன்; சிறந்த பவுலர் என்கிறார் சாம் கரன் புனேயில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் 50வது ஓவர் எனும் அக்னி பரீட்சையை எதிர்கொண்ட நடராஜன் அற்புதமாக வீசி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.  புனேயில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் 50வது ஓவர் எனும் அக்னி பரீட்சையை எதிர்கொண்ட நடராஜன் அற்புதமாக வீசி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். புனேயில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில்  நேற்று சாம் கரன் 83 பந்துகளில் 9 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 95 ரன்கள் விளாசினார். ஷர்துல் தாக்கூரின் ஒரே ஓவரில் 18 ரன்கள் விளாசி இந்திய கேப்டன் விராட் கோலியின் வயிற்றில் புளியைக் கரைத்தார் சாம் கரன். ஆனால் கடைசியில் ஒரு ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் டி.நடராஜனிடம் கடைசி ஓவரைக் கொடுத்தார் விராட் கோலி. இது உண்மையில் பார்த்தால் தவறுதான், ஒரு பிரஷர் சூழ்நிலையில் அனுபவ வீரரை வீசச் செய்வதுதான் முறை. 48வது ஓவரை நடராஜனை வீசச் செய்து விட்டு, 49 ஹர்திக், 50, புவனேஷ்வர் என்றுதான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், நேற்று ஒருவேளை நடராஜனை சாம் கரன் அடித்திருந்தால் நிச்சயம் கெட்ட ப

காதல் கவிதைகள்/Nynarin Unarvugal

Image
  இன்றைய நயினாரின் உணர்வுகளில் காதல் கவிதைகள் video link

கடந்த காலம்…! இதே நாள்.../ பொன்வண்ணன் பக்கம்

Image
இது பொன்வண்ணன் பக்கம் இன்று   கடந்த காலம்…! இதே நாள்.... கடந்து போய்விடவில்லை ...

காந்தி அனுப்பிய பாராட்டுத் தந்தி;

Image
  காந்தி அனுப்பிய பாராட்டுத் தந்தி; பொக்கிஷமாய் பாதுகாக்கும் குடும்பம் மகாத்மா காந்தி கோவையைச் சேர்ந்த அபைச்சந்த் வேந்த்ரவன் என்பவருக்கு அனுப்பிய தந்தியை அவரது குடும்பத்தினர் இன்றுவரை பொக்கிஷமாய் பாதுகாத்து வருகின்றனர். கோயில்களில் உயிர் பலி கொடுப்பதைத் தவிர்த்ததற்காக காந்தி அவரைப் பாராட்டி அனுப்பிய தந்திதான் அது. கோவையின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான கோனியம்மன் கோயிலில் நடைபெறும் தேர் திருவிழாவின் துவக்க நிகழ்வாக ஆடு, கோழிகளை பலிகொடுக்கும் சம்பிரதாயம் நடைமுறையில் இருந்து வந்தது. 1941ஆம் ஆண்டு நடைபெற்ற கோனியம்மன் தேர் திருவிழாவின்போது உயிர்களை பலிகொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து Southern India Humanitarian League எனும் தன்னார்வ அமைப்பினரோடு இணைந்து அபைச்சந்த் வேந்த்ரவன் என்பவர் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்மக்களிடம் வாதாடியுள்ளார். உயிர் பலி கொடுத்தால் மட்டுமே தேர் திருவிழா விபத்துகளின்றி நடக்கும் எனக் கூறிய மக்கள், அபைச்சந்தின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். இதனால், 11 வயதான தனது மகன் கனக்லால் அபைச்சந்தை பலியிட்டு தேர் திருவிழாவை துவங்குமாறு கூறினார் அபைச்சந்த். அபைச்சந்தின் எதிர்

தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பற்றி தொடர் பகுதி (1)

Image
 "தில்”லானா மோகனாம்பாள் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பற்றி ஒரு சுவாரஸ்யமான தொடர் இத்தொடரை இலக்கிய பெருந்தகை திரு விவேகானந்தன் அவர்கள் நமது வாசகர்களுக்காக வழங்குகிறார் பகுதி ( 1 ) பொதுவாக மூவி போஸ்டர்களில் வித்தியாசமான பரிமாணத்தை உருவாக்கி படத்தின் எதிர்பார்ப்பை தூண்டுவது இக்காலத்தில் ட்ரென்ட் ஆன விஷயமாக இருந்து வருகிறது. ஆனால் 1968 ஆம் ஆண்டு வித்தியாசமான மூவி போஸ்டர் ஒன்றை தில்லானா மோகனாம்பாள் படக்குழுவினர் வெளியிட்டுள்ளது வியப்பூட்டும் விதமாக இருக்கிறது. சிவாஜி கணேசன், பத்மினி, பாலைய்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த வெற்றி திரைப்படம் “தில்லானா மோகனாம்பாள்“. இப்படம் நடிகர் திலகம் சிவாஜியின் திரையுலக வாழ்க்கையில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தின் போஸ்டர் ஒரு திருமண பத்திரிக்கை வடிவில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. சண்முகசுந்தரம் எனும் சிவாஜியின் கதாபாத்திரத்திற்கும் மோகனாம்பாள் எனும் பத்மினியின் கதாபாத்திரத்திற்கும் திருமணம் ஆகவிருக்கிறது, எனவே அனைவரும் அந்த திருமணத்திற்கு வந்து சுற்றமும் நட்பும் சூழ திருமணத்தை நடத்தி வைக்க கேட்டு கொண்டவாறு இந்த போஸ்டர்

சுப்புடு நினைவு நாள்

Image
  சுப்புடு நினைவு நாள் இன்று மார்ச் 29 சுப்புடு சென்னையில் வருடந்தோரும் நடைப்பெறும் மார்கழி கர்நாடக இசை உற்சவங்கள் நேரத்தில், அதைப்பற்றி தினமணியிலும்,ஆனந்த விகடனிலும் சிறப்பு செய்திகளை வெளியிடுவார்கள் எது இருக்குமோ இருக்காதோ ஆனால் பாடகர்கள் பற்றியும் நாட்டியம் சம்பந்தமாகவும் விமர்சனம் செய்வதற்கென்றே சிலப்பக்கங்களை ஒதுக்கிவிடுவார்கள்! தற்போதைய சுழல்களில் அது அந்தளவுக்கு முக்கியத்துவமாக யாராலும் கருதப்படாவிட்டாலும், ஒரு காலத்தில்அதைக்காண்பதற்கு பாடகர்கள் & நாட்டியக்கலைஞர்கள் மத்தியில் கொள்ள பயமாக இருந்து வந்தது, அதற்கு காரணம் சுப்புடு! பேரைக்கேட்டு அதிர்ந்தவர்கள் பலருண்டு..! பாடும் பணியை விட்டு சென்றவர்களும் உண்டு! மனுசன் யாருக்கும் பயந்தவர் கிடையாது,கச்சேரிக்கு சுப்புடு வந்திருக்காருன்னு சொன்னாலே அலறியவர்கள் பலர்! ஒரு முறை ஜேசுதாஸ்,இவர் வந்திருப்பதை பற்றி கேள்விப்பட்டு நான் கச்சேரி செய்யமுடியாது என்று கூறினாராம்! அதற்குமுன்பெருமுறை ஜேசுதாஸை கச்சேரி செய்யவரும்முன்பு நன்றாக பயிற்சி எடுத்துவரணும் சொன்னதுல இவருக்கு அவர் மேல ரொம்ப கோபம்! ஒரு முறை திருவையாறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த