Wednesday, March 31, 2021
கமலா தாஸ்.
தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பற்றி தொடர் பகுதி (3)
தில்லானா மோகனாம்பாள். (3 )
ஒருவேளை எஸ்எஸ் வாசனின் ஜெமினி நிறுவனம் 1950களின் இறுதியில் தில்லானா மோகனாம்பாளை தயாரித்திருந்தால் அதில் வைஜெயந்திமாலாதான் கதாநாயகியாக நடித்திருக்க அதிக வாய்ப்பு. காரணம், வஞ்சிக்கோட்டை வாலிபன், இந்திதிரைப்படமான பைகாம், இதன் தமிழ் ரீமேக்கான இரும்புத்திரை போன்ற ஜெமினி நிறுவனத்தின் படங்களில் தொடர்ந்து வைஜெயந்திமாலாதான் கதாநாயகி.
வைஜெயந்திமாலா பின்னர் இந்திக்கு போய் சூப்பர் ஸ்டாராக ஆகிவிட்டதாலும், ஜெமினி நிறுவனம் தயாரிக்காமல் ஏபி நாகராஜன் தயாரித்ததாலும் தில்லானா மோகனாம்பாளாக பத்மினி மாறிவிட்டார்.
சிவாஜி, பத்மினிக்குபிறகு மற்ற பாத்திரங்களை தேர்வு செய்வதில் ஏபிஎன் அளவுக்கு அதிகமாக தீவிரம்காட்டினார். காரணம். ஜெமினி நிறுவனம் ஒரு படத்தை தயாரித்தால் பிரமாண்டமாகவும் நேர்த்தியாகவும் இருக்குமோ அதற்கு எள்முனையளவு குறைந்தாலும், வாசனிடம் கெஞ்சிக்கூத்தாடி கதையை பெற்றதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்று நினைத்ததுதான்.
நாட்டியதாரகை மோகனாவை, சொகுசாக வாழவைக்க பல பெரிய மனிதர்களின் தயவை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார் மோகனாவின் தாயாரான வடிவாம்பாள்.. அவருக்கென,வீட்டில் சொல்வதெற்கெல்லாம் பக்கவாத்தியம் வாசிக்க ஏகப்பட்ட பாத்திரங்கள்.
அதேபோல மோகனாவுடன்மோதி காதலில்விழும் நாதஸ்வர வித்வான் மட்டும் தனியொரு ஆளாக இருக்க முடியுமோ? அவருக்கும் ஒரு பட்டாளத்தை உருவாக்க வேண்டியிருந்தது. இதுபோதாதென்று மோகனாவுக்கும் நாதஸ்வர வித்வானுக்கும் அடிக்கடி இடையூறு செய்வதற்கென்றே ஒரு பட்டாளம் வேண்டுமே..
இன்னொருபக்கம் இசையையும் நாட்டியத்தையும் மையப்படுத்தி எடுக்கப்படும் படம் என்பதால் பாத்திரங்களாக வரும் அத்தனை நடிகர் நடிகைகளையும் அந்த உலகத்தின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அச்சு அசலாக மாற்றியாக ஆகவேண்டும்.
வெளிப்படையாக சொன்னால், ஒருநாள் ஷுட்டிங் என்றால் அதற்கு நாலுநாள் ரிகர்சல் பார்க்கவேண்டும். இப்படிப்பட்ட மலையளவு வேலைகளுடன் இறங்கிய இயக்குநர் ஏ.பி.நாகராஜனுக்கு அடுத்து மனதை குடைந்தெடுந்த விஷயம். படத்திற்கான இசை… ஏபிஎன்னின் ஆஸ்தான இசையமைப்பாளரான திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன்தான் என்பதில் சந்தேகமில்லை.
சாஸ்திரிய சங்கீதத்தில் கேவிஎம் படுகில்லாடி. திருவிளையாடல் படத்தில் ஒரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா,… அப்புறம் பாட்டும் நானே பாவமும் நானே.. அப்புறம் இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை போன்ற பாடல்களெல்லாம் கேவிஎம்மின் சாஸ்த்திரிய இசையை பறைசாற்றும்.
ஆனால் பிரச்சினை என்னவென்றால் ஷண்முகசுந்தரத்திற்கு பின்னணியில் நாதஸ்வர இசையை கரைபுரண்டோட செய்யப்போகும் உண்மையான நாதஸ்வர ஜாம்பவான் யாரைக்கொண்டுவருவது என்ற கேள்விதான்.
1962ல் ஜெமினி, சாவித்திரி நடித்த கொஞ்சும் சலங்கை படத்தில் நாதஸ்வரம் முக்கிய பங்காற்றியது. எஸ்.ஜானகி பாடும் சிங்கார வேலனே தேவா என்ற பாடல், ஜானகி என்ற புல்லாங்குழலுக்கும் உண்மையான நாதஸ்வரத்துக்கும் இடையிலான சரிக்கு சமமான போட்டி என்ற அளவுக்கு இருந்தது.
தமிழ் சினிமாவில் நாதஸ்வர இசையால் ஒரு பாடல், பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் அளவுக்கு தெறி ஹிட்டாக அமைந்தது என்றால் அது சிங்கார வேலனே தேவா பாடல்தான். அதற்கு முக்கிய காரணம், படத்தின் இசையமைப்பாளரான எஸ்எம் சுப்பையாநாயுடு,
நாதஸ்வர இசைக்காக அவர் நாடியது நாதஸ்வர சக்ரவர்த்திகளில் ஒருவர் என போற்றப்பட்ட காருக்குறிச்சி அருணாச்சலத்தை.. அந்த நாதஸ்வர இசைமேதை 1964லிலேயே காலமாகிவிட்டார்.
இதனால் ஏபிஎன் மனதிலும் கேவிஎம் மனதிலும் தோன்றியவர்கள் மதுரை சகோதரர்கள் எனப்படும் எம்பிஎன் சேதுராமன் மற்றும் எம்பிஎன் பொன்னுசாமி ஆகியோர்தான். உடனே இருவரும் புக் செய்யப்பட்டனர்.
விவேகானந்தன்
இட்டலி இட்லி /விவேகானந்தன் கவிதை
ஊட்டம் தருவது இட்லி என்று
நாட்டம் கொண்டார் அனைவரும்
இட்லி தினம் என்று அயல் நாட்டவரும்
இட்டமுடன் கொண்டாடி மகிழ்கின்றார்
இட்டு அவித்த பண்டம்
இட்டலி இட்லி என்று
மருவி வந்தது என்றார்
நெருங்கிய நண்பர் ஒருவர் -
எனக்கோ
மரு விருந்து நினைவு வந்தது.
இரு மணம் இணைந்து
திருமணம் நிகழ்ந்து
மருவிருந்ததில் மகிழ
கருத்தாய் அழைத்தார் மாமி.
விடி வெள்ளி ஒளியிலே
விடியலில் எழுப்பினார் மாமா
தடி தடியாய் இருவர் வந்து
பிடி பிடி என்றே உடம்பை
பிடித்து விட்டார் நன்றே
அருவியெனக் கங்கை குளியல்
அணிவதற்குப் புது ஆடைகள்
ஆடை கட்டும் ஆவின் பால்
மேடை கட்டும் பட்சணங்கள்.
அரிசியும் உளுந்தும் மசிய
ஆட்டி வைத்தார் மாமா
அட்டியின்றி நெய் இட்டு
இட்டு அவித்த இட்லி
சுட்டு வைத்தாள் மாமி!
தட்டில்லா மகிழ்வுடன்
தட்டத்தில் வைத்துச் சாப்பிட
அட்டியின்றி மனையாளும்
மெட்டி ஒலி எழுப்பிட
ஊட்டமான குஷ்பு இட்லி
வட்ட வட்டமான வடிவத்தில்
தொட்டால் பஞ்சுபோலே
தொடுத்த மல்லிப் பூபோலே
அட்டி இட்டு எடுத்து வந்தாள்
வட்டில் நிறைய இட்லி
கலர் கலராய் சட்டினி
பலவித பெயரில் வைத்தாள்
மல்லி புதினா பச்சை
கொள் எள்ளு சந்தனம்
தேங்காய் சென்னா வெள்ளை
தெலுங்கர் சட்டினி சிகப்பு
சொல்ல முடியா நிறைவுடன்
மெல்ல மெல்லச் சுவைத்தேன்.
அடுத்து வந்தது சாம்பார்
தடுக்க மனம் வருமோ
துடுக்காய் ஊற்றிட மிதந்தது
படுத்துக் கிடந்த இட்லி
மெல்லுதற்கு மிருதான உளுந்துவடை மெதுவடை இடையில் சேர்த்தாள்
நல்லெண்ணெய் இரு கரண்டி
மேலுக்கு ஊற்றிட கரைந்தது மல்லிப்பூ இட்லி வடையுடன் சேர்ந்து.
மல்லுக்கு அழைத்தது என்னை
கலந்து உள்ளுக்குள் தள்ளினேன்
மேலுக்கு வந்தது ஏப்பம்
சாலும் என மகிழ்ந்து துள்ளினேன்
இட்டு அவித்த இட்லி உண்டு
மட்டுப்பட்டது என் பசியும்
கட்டுக்கடங்கா மன ஆவலை
இட்டமுடன் வந்து என் கண்ணே
தொட்டு அவி என்றேன்!.
எட்ட நின்று முத்தம் ஒன்று தந்தாள். 💐😘🙏
விவேகானந்தன்
கொன்றை வேந்தன் | 5.உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
கொன்றை வேந்தன்
5.| கவிஞர் ச.பொன்மணி
Tuesday, March 30, 2021
திரைப்பாடல்களில் அசலும் நகலும் தொடர் பகுதி 3 ( 2 )
திரைப்பாடல்களில் அசலும் நகலும்
தொடர்
பகுதி 3 ( 2 )
வழங்குபவர் ருத்ரா
நமது தமிழ் மொழி படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அதே திரைப்படம் இதர மொழிகளில் எடுத்தபோது அந்த மொழி இசையமைப்பாளர்கள் அந்த பாடல்களின்அசல் மெட்டில் அமைக்காமல் மாற்றி அமைத்த பாடல்களை காணலாம்
அந்த பாடல்கள் மிகவும் பாப்புலராக அமைந்துள்ளன
இப்போ நிகழ்ச்சிக்கு போகிறோம் ,இன்று
அசல் தமிழ் படம்
பயணங்கள் முடிவதில்லை(1982)
பாடல் இளைய நிலா
இசை இளையராஜா
நகல் படம்இட்லிதினம் ஸ்பெஷல் ரவா இட்லி
இன்று உலக இட்லி தினம்
இட்லிதினம் ஸ்பெஷல்
ஆவியால் அவித்த அழகி / இட்லி தின கவிதை
ஆவியால் அவித்த அழகி
இட்லி தின கவிதை
ஆளையே மயக்கும் நழுவி ஆகாயம் பூலோகம் அயல்நாடு உள்நாடு எங்கெங்கு தேடினாலும் கிடைக்காது உன்னைப் போல ஒரு சுவையான நிறமி.. கூட்டாளிகளுக்குத் தகுந்தபடி தன்னிலை மாற்றும் மாயவி... சட்னியானாலும் சாம்பாரானாலும் மிளகாய்ப் பொடியானாலும் அனைவரோடும் ஒத்துப்போகும் தன்னிகரில்லாத் தலைவி... நிலாவைப்போல வெள்ளை உன் ருசிக்கு இல்லை எல்லை... அனைத்து சத்துக்களையும் உள்ளடக்கியும் தலைக்கனம் ஏறாத மிருது உள்ளம்... தமிழ்நாட்டு காலை உணவின் கெத்து... "இட்லியே" நீ தான் எங்க பரம்பரை சொத்து... மார்ச்-30: உலக இட்லி தினம்.
தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பற்றி தொடர் பகுதி (2)
தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பற்றி தொடர் பகுதி (2)
தில்லானா மோகனாம்பாள்..
சினிமாவில் எப்படி நடந்தது இந்த மேஜிக் என்று வியப்பார்களே அதுபோன்ற மேஜிக் தமிழ் திரைப் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவற்றில் மிக முக்கியமானது தில்லானா மோகனாம்பாள் ..
1968 ஆம் ஆண்டு ஜுலை 27ந்தேதி வெளியான இந்த படத்தை பார்க்காத தமிழ் ரசிகர்களே இருப்பார்களா என்பது சந்தேகம். பொன்விழா கண்ட தில்லானா மோகனாம்பாளை கோடிக்கணக்கானோர் பார்த்திருப்பார்கள். இனியும் கோடிக்கணக்கானோர் பார்க்கத்தான் போகிறார்கள்.
இன்றைக்கு டிவியில் போடும்போதெல்லாம் சமூக வலைதளங்களில் அந்த படத்தை பற்றிய பல விஷயங்களை குறிப்பிட்டு இப்போதைய தலைமுறையினரும் உருகி உருகி எழுதுகிறார்கள்.
இப்போதே இப்படி என்றால் அந்தப்படம் உருவான கால கட்டத்திலும் வெளியான கால கட்டத்திலும் ரசிகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் படம் தொடர்பான செய்திகள் எப்படியெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்?
கொத்தமங்கலம் சுப்பு.. இவர்தான் தில்லானா மோகனாம்பாளின் உண்மையான கதநாயகன். படத்தின் கதை இவருடையதுதான். கொத்தமங்கலம் சுப்புவை வெறும் கதை வசனகர்த்தா என்று நினைத்துவிடாதீர்கள். அவர் மிகப்பெரிய ஜாம்பவான்.. நடிகர், இயக்குநர், கதாசிரியர் என பன்முகம் கொண்டவர்.
ஜெமினி ஸ்டுடியோவின் செல்லப்பிள்ளை. இந்திய சினிமா உலகில் பிரமாண்டத்தின் உச்சம் என்று காலம்காலமாய் கொண்டாடப்படும் சந்திரலேகா (1948) படத்தின் கதை இவர் எழுதியதுதான்.
வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை போன்ற பிரம்மாண்ட படங்களெல்லாம் இவரின் கதைதான்.
கொத்தமங்கலம் டைரக்ட் செய்து கதாநாயகனாக நடித்த மிஸ் மாலினி(1947) படத்தில்தான் ராமசாமி கணேசன் என்பதை குறிக்கும் ஆர்.ஜி.என்று டைட்டில் கார்டு வரும். அவர் வேறு யாருமல்ல, நம்ம ஜெமினி கணேசன்தான். துண்டு ரோலில் இந்த படத்தில்தான் அறிமுகமானார்.. இதே படத்தின் கதாநாயகியான புஷ்பவள்ளியை பின்னர் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு பிறந்ததுதான் இந்தி நடிகை ரேகா.
சரி, கொத்தமங்கலம் சுப்பு விவகாரத்திற்கு வருவோம். இப்படிப்பட்ட சுப்பு 1957 வாக்கில் ஆனந்தவிகடன் வார இதழில் ஒரு நாட்டியப்பெண்மணிக்கும் நாதஸ்வர கலைஞனுக்கும் இடையில் மோதலில் ஆரம்பித்து காதலில் முடியும் சம்பவங்களை சித்தரித்து அழகாக தொடர் கதை எழுதிவந்தார்.
வாசகர்கள் மத்தியில் அதற்கு அவ்வளவு வரவேற்பு, கதையில் அடிக்கடி வந்து செமையாக கலாட்டா செய்துவிட்டுப்போகும் வில்லத்தனமான சவடால் வைத்தி, ஜில்ஜில் ரமாமணி என நிறைய பாத்திரங்கள் அக்கப்போர் பண்ணிவிட்டு செல்லும்
தொடர்கதைக்கு அப்போது ஓவியர் கோபுலு வரைந்த சித்திரங்கள் இன்னும் அற்புதம்.
சுருக்கமாகச்சொன்னால் கலைமணி என்ற புனைப்பெயரில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் என்ற ஒற்றை தொடர்கதை ஒட்டுமொத்த ஆனந்த விகடன் விற்பனையை பட்டையை கிளப்ப வைத்துவிட்டது.
தில்லானா மோகனாம்பாளாக சுப்பு மனதில் வடிவமைத்துக்கொண்டது பந்தநல்லூர் ஜெயலட்சுமி என்ற இளம் நாட்டியக்கலைஞரை.. நாதஸ்வர வித்வான் ஷண்முக சுந்தரமாக படைத்தது, அப்போது காலமாகிவிட்டிருந்த நாதஸ்வர வித்வான் திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் மேனரிசங்களை வைத்துத்தான் என்று சொல்வார்கள்.
எழுத்து வடிவில் தூள்கிளப்பிய இந்தக்கதையை படமாக்க ஆனந்த விகடன் ஆசிரியரும் இந்திய திரைப்பட ஜாம்பவானுமான ஜெமினி அதிபர் எஸ்.எஸ் வாசனுக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது.. ஆனால் படம் எடுக்கும் சூழல்தான் அமையவில்லை.
தில்லானா கதையால் கவரப்பட்ட வாசகர்கள் மத்தியில், அதிகம் கவரப்பட்டவர் இயக்குநர் ஏபி நாகராஜன். கதையை வாங்கி எப்படியாவது படமெடுத்துவிடவேண்டும் என்று துடியாய் துடித்தார்.
ஜெமினி வாசனிடம் கதையை தரச்சொல்லி கேட்டு பல தடவை, நடையாய் நடந்தார்
வாசன் மனமிரங்கவேயில்லை. இருப்பினும் ஏபிஎன், ஒரு கட்டத்தில் கரைத்துவிட்டார். இவ்வளவு ஆர்வத்துடன் கேட்கும் ஒரு கலைஞன், நம்மைவிட சிறப்பாக படமாக்குவான் என்று முடிவுக்குவந்து கதையை தர சம்மதித்தார்.
உடனே கதையின் உரிமத்துக்காக அதுவெளியான பத்திரிகையின் உரிமையாளர் என்ற முறையில் ஆனந்தவிகடன் எஸ்.எஸ்.வாசனிடம் இருபத்தைந்தாயிரத்தை இயக்குநர் ஏ.பி.நாகராஜன் கொடுத்தார். அதன்பிறகு கதையை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவை அவரது வீட்டில் சந்தித்து அவருக்கு தனியாக பத்தாயிரம் ரூபாயை கொடுத்தார்.
ஆனால் சுப்புவோ அதை வாங்கவேயில்லை.. ‘’தில்லானா மோகனாம்பாள் கதைக்காக நீங்கள் ஏற்கனவே கொடுத்த பணக்கவரை பிரித்துக்கூடப்பார்க்காமல் அப்படியே வாசன் எனக்கு அனுப்பிவிட்டார். ஆகையால் ஒரே கதைக்காக இரண்டுபேரிடம் பணம் வாங்குவது முறையாகாது’’ என்று சுப்பு சொல்ல, எழுத்துக்கான சன்மானம் எழுத்தாளனுக்குத்தான் போய் சேரவேண்டும் என செயல்பட்ட வாசனின் நேர்மை, இயக்குநர் ஏபிஎன்னை வியக்கவைத்த தருணம் அது..
கதை கிடைத்துவிட்டது. கதாநாயகன்? குலமகள் ராதை, நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் என சிவாஜியை வைத்து வரிசையாக சரவெடி வெடித்து வந்த ஏபிஎன் வேறு யாரை கதாநாயகனாக போடப்போகிறார்? அதனால் கதாநாயகன் சாட்சாத் நடிகர் திலகம் சிவாஜியேதான்.
அடுத்து கதாநாயகி?
( தொடரும்)
விவேகானந்தன்
உலக இட்லி தினம்
இன்னிக்கு வேர்ல்ட் இட்லி டே!30.3.20221
கடந்த 30-03-2015 முதல் இந்த உலக இட்லி தினம் சென்னையில் கொண்டாடப்பட்டு வருது.
வருடந்தோறும் நாட்கள் தவறாமல் இட்லியைத் தான் உணவாக உண்டு வருகிறோம் ஆனால் மார்ச் 30ல் மட்டும் ஏன் இட்லி தினம் என்று கொண்டாடப்படுகிறது என்ற கேள்வி உங்களுக்கு எழுவது இயற்கைதான்.
இதோ அதற்கான பதில் இதே மார்ச் 30ல் தான் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் தேசிய பாப்கான் தினம் கொண்டாடப்படுகிறது அதே போல சுவீடன் நாட்டிலும் இதே நாளில் தான் அவர்கள் நாட்டின் பாரம்பரிய உணவான அப்பம் தினம் கொண்டாடப்படுகிறது.
அதைப்போல நம் நாட்டின் பாரம்பரிய உணவான இட்லியின் புகழை உலகுக்கு பறைசாற்றும் நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30ஆம் தேதி உலக இட்லி தினமாக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருது.
கொன்றை வேந்தன் 4.ஈயார் தேட்டைத் தீயார் கொள்வார் | கவிஞர் ச.பொன்மணி
கொன்றை வேந்தன்
4.ஈயார் தேட்டைத் தீயார் கொள்வார் | கவிஞர் ச.பொன்மணி
Monday, March 29, 2021
கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்ளை பதறவைத்த கடைசி ஓவர்,பதட்டமின்றி போட்டு இதயங்களை கவர்நத நடராஜன்
கடைசி ஓவர் அக்னிப் பரீட்சையில் ‘அசால்ட்டாக’ தேறிய நடராஜன்; சிறந்த பவுலர் என்கிறார் சாம் கரன்
புனேயில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் 50வது ஓவர் எனும் அக்னி பரீட்சையை எதிர்கொண்ட நடராஜன் அற்புதமாக வீசி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
புனேயில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் 50வது ஓவர் எனும் அக்னி பரீட்சையை எதிர்கொண்ட நடராஜன் அற்புதமாக வீசி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
புனேயில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் நேற்று சாம் கரன் 83 பந்துகளில் 9 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 95 ரன்கள் விளாசினார். ஷர்துல் தாக்கூரின் ஒரே ஓவரில் 18 ரன்கள் விளாசி இந்திய கேப்டன் விராட் கோலியின் வயிற்றில் புளியைக் கரைத்தார் சாம் கரன்.
ஆனால் கடைசியில் ஒரு ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் டி.நடராஜனிடம் கடைசி ஓவரைக் கொடுத்தார் விராட் கோலி. இது உண்மையில் பார்த்தால் தவறுதான், ஒரு பிரஷர் சூழ்நிலையில் அனுபவ வீரரை வீசச் செய்வதுதான் முறை.
48வது ஓவரை நடராஜனை வீசச் செய்து விட்டு, 49 ஹர்திக், 50, புவனேஷ்வர் என்றுதான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், நேற்று ஒருவேளை நடராஜனை சாம் கரன் அடித்திருந்தால் நிச்சயம் கெட்ட பெயர் நடராஜனுக்குத்தானே தவிர தவறாகக் கொடுத்த கோலியின் மேல் விமர்சனங்கள் எழாது.
ஆனால் நடராஜன் இந்த கடைசி ஓவர் அக்னிப்பரீட்சையை அனாயாசமாகக் கடந்தார், அபாரமாக வீசி வெற்றி பெறச் செய்தார்.
ஏனெனில் 47வது ஓவரில் சாம் கரன் எழுச்சி பெற்று ஷர்துல் தாக்கூரை 18 ரன்கள் விளாசினார். இதனையடுத்து இங்கிலாந்து 307/8 என்று வெற்றி பெறும் நிலைக்கு வந்தனர். 3 ஓவர் 23 என்ற வெற்றி பார்முலாவை இங்கிலாந்து எட்டியது.
ஆனால் 48வது ஓவரை புவி வைடு போட்டாலும் அற்புதமாக வீசி 4 ரன்களையே விட்டுக் கொடுத்தார். அடுத்த ஹர்திக் பாண்டியா ஓவரை சாம் கரன் குறிவைத்து தாக்கியிருக்க வேண்டும், ஹர்திக் ஒன்றும் அடிக்க முடியாத அளவுக்கு வீசவில்லை. ஆனால் சாம் கரன் சிங்கிள் எடுப்பதிலேயே குறியாக இருந்தார்.
கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில் நடராஜன் அழைக்கப்பட்டார், நீண்ட விவாதம் நடந்தது, கோலி, ரோகித் சர்மா என்று கூடிக்கூடி பேசினர்.
நடராஜனின் முதல் யார்க்கர் பந்தை லாங் ஆனுக்கு தள்ளிவிட ஹர்திக் பாண்டியாவின் அபார த்ரோவுக்கு பேட்டிங் முனையில் உட் ரன் அவுட் ஆனார்.
டாப்லி வந்தவுடன் 1 ரன் எடுத்தார். சாம் கரன் ஸ்ட்ரைக்குக்கு வர, நடராஜன் ஃபுல் பந்தை வீசினார் கரன் ரன் இல்லை, 4வது பந்து யார்க்கரை மிஸ் செய்தாலும் அடிக்க முடியவில்லை. ஒரு பவுண்டரிதான் அடிக்க முடிந்தது இந்தியா வென்றது, நடராஜன் 10 ஓவர்களில் 73 ரன்களை விட்டுக் கொடுத்தாலும் கடைசி ஓவர் அக்னிப் பரீட்சையில் வென்றார்.
இதனை அங்கீகரித்த சாம் கரன் ஆட்ட நாயகன் விருது வென்றவுடன் சேனலுக்குக் கூறிய போது, “வெற்றி பெற முடியவில்லை, ஆனால் நான் விளையாடிய விதத்தில் மகிழ்ச்சியடைகிறேன். நான் இங்கிலாந்துக்காக இது போன்ற ஒரு இன்னிங்ஸை ஆடியதில்லை.
வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. உள்ளேயிருந்து மெசேஜ் வந்து கொண்டேயிருந்தன, ஸ்ட்ரைக்கை நான் வைத்து கொள்ள வேண்டும் என்றும் கடைசி வரை நில் என்றும் ஆலோசனைகள் வந்தவண்ணம் இருந்தன.
நடராஜனுக்கு 6 பந்துகள் இருந்தன. எங்களுக்கு 14 ரன்கள். ஆனால் இந்த 6 பந்துகளில் தான் ஏன் ஒரு சிறந்த டெத் பவுலர் என்பதை நடராஜன் நிரூபித்து விட்டார். புவனேஷ்வர் குமார் ஒரு தனித்துவ பவுலர்.
நிறைய கற்றுக் கொண்டேன், ஆனால் முடிவு ஏமாற்றமளிக்கிறது. இது ஐபிஎல் தொடரில் ஆட எனக்கு நிறைய நம்பிக்கையை தந்துள்ளது. நேராக சிஎஸ்கே செல்கிறேன்” என்றார் சாம் கரன்.
காந்தி அனுப்பிய பாராட்டுத் தந்தி;
காந்தி அனுப்பிய பாராட்டுத் தந்தி; பொக்கிஷமாய் பாதுகாக்கும் குடும்பம்
தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பற்றி தொடர் பகுதி (1)
"தில்”லானா மோகனாம்பாள்
தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் பற்றி ஒரு சுவாரஸ்யமான தொடர்
இத்தொடரை இலக்கிய பெருந்தகை திரு விவேகானந்தன்
அவர்கள் நமது வாசகர்களுக்காக வழங்குகிறார்
பகுதி ( 1 )
பொதுவாக மூவி போஸ்டர்களில் வித்தியாசமான பரிமாணத்தை உருவாக்கி படத்தின் எதிர்பார்ப்பை தூண்டுவது இக்காலத்தில் ட்ரென்ட் ஆன விஷயமாக இருந்து வருகிறது. ஆனால் 1968 ஆம் ஆண்டு வித்தியாசமான மூவி போஸ்டர் ஒன்றை தில்லானா மோகனாம்பாள் படக்குழுவினர் வெளியிட்டுள்ளது வியப்பூட்டும் விதமாக இருக்கிறது.
சிவாஜி கணேசன், பத்மினி, பாலைய்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த வெற்றி திரைப்படம் “தில்லானா மோகனாம்பாள்“. இப்படம் நடிகர் திலகம் சிவாஜியின் திரையுலக வாழ்க்கையில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தின் போஸ்டர் ஒரு திருமண பத்திரிக்கை வடிவில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
சண்முகசுந்தரம் எனும் சிவாஜியின் கதாபாத்திரத்திற்கும் மோகனாம்பாள் எனும் பத்மினியின் கதாபாத்திரத்திற்கும் திருமணம் ஆகவிருக்கிறது, எனவே அனைவரும் அந்த திருமணத்திற்கு வந்து சுற்றமும் நட்பும் சூழ திருமணத்தை நடத்தி வைக்க கேட்டு கொண்டவாறு இந்த போஸ்டர் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த திருமண அழைப்பு போஸ்டரில் ” திருவாரூரில் எனது இல்லத்தில் நடக்கும் திருமணத்திற்கு நான்கு நாள் முன்னதாகவே தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து நடத்திவைக்க கேட்டுக்கொள்கிறேன்” என பத்மினியின் தாயாராக நடித்த சரஸ்வதியின் கதாபாத்திரமான வடிவாம்பாள் தனது உறவினர்களை வரவேற்கும் விதத்தில் இந்த அழைப்பிதழ் அமைந்திருந்தது.
அதுமட்டுமின்றி இந்த அழைப்பிதழில் பிரபல நகைச்சுவை நடிகர் டணால் தங்கவேலு அவர்களின் கதாபாத்திரமான நட்டுவனார் முத்துக்குமார ஸ்வாமியின் பெயரும் இடம் பெற்றிருக்கும். ஸ்ரீ தியாகராஜப் பெருமான் திருவருளால் தை மாதம் 15ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை 9 மணிக்கு இந்த திருமணம் நடைபெறுமென இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த நவீன சினிமா உலகில் பல போஸ்டர்கள் வந்திருந்தாலும், 1968 இல் வெளியான தில்லானா மோகனாம்பாள் திருமண அழைப்பு போஸ்டர் காலத்தால் அழியாத சிறப்பு போஸ்டர் ஆகவே பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற வித்தியாசமான எண்ணங்களை கொண்ட படக்குழு அமைந்ததாலோ என்னவோ இப்படமும் வரலாற்றில் ஒரு முக்கிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
(தொடரும்)
விவேகானந்தன்
சுப்புடு நினைவு நாள்
சுப்புடு நினைவு நாள் இன்று மார்ச் 29
கொன்றை வேந்தன்3.இல்லறம் அல்லது நல்லறம் அன்று | கவிஞர் ச.பொன்மணி
கொன்றை வேந்தன்
3.இல்லறம் அல்லது நல்லறம் அன்று
| கவிஞர் ச.பொன்மணி
Featured Post
பூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.
பூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.. கண்ணை கவரும் உதகை ரோஜா மலர் கண்காட்சி ! நீலகிரியில் ஆண்டுதோறும் கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் ரோஜ...

-
கோவா பட விழாவில் இளையராஜா இனிமையான இசை தருணங்கள் . கோவா சர்வதேசத் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக, பாஞ்சிம் பகுதியிலுள்ள கலா அகாடமியில்...
-
ஓய்வு பெற்ற அரசு ஊழிர் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு 25 இலட்சம்
-
‘ நீலமணி கவிதைகள் சூலம் மறந்து வந்த சிவன் சூரனிடம் பேசினார் சமரசம். இராட்டைக்கு மின் இணைப்பாம் உலக மயமாக்கல் தாண்டுவதற்கே கிழித்தது ...