கிராம_நீதி_மன்றம் என்றால் என்ன? கிராம நீதிமன்றங்கள்…!
#கிராம_நீதி_மன்றம் என்றால் என்ன? கிராம நீதிமன்றங்கள்…! இந்திய கிராமப்புற மக்களின் 2 கோடியே 86 லட்சம் வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் தேங்கியுள்ளன....! வரப்பு, வாய்க்கால் தகராறு, வாய்ச்சொல் தகராறு உள்ளிட்ட சின்னச்சின்ன பிரச்சினைகளுக்கு கூட வருடக் கணக்கில் கிராமத்து எளிய மனிதர்கள் மாவட்ட தலைநகரங்களுக்கு அலையோ, அலையென்று அலைந்து கஷ்டப்படுகிறார்கள்! இதற்கு முடிவுகட்டவும், கிராம மக்களுக்கு அவர்கள் வாழும் இடங்களிலேயே நீதி வழங்கவும் கொண்டு வரப்பட்டது தான் ‘கிராம நீதியாலயா- 2008’ என்ற சட்டமாகும், இதுவே கிராம நீதிமன்றம் என்று குறிப்பிடப்படுகிறது. கிராமப்புற மக்களுக்கு விரைவாகவும், சுலபமாகவும் நீதி கிடைக்க வழிவகை செய்வதே சட்ட கமிஷனால் பரிந்துரைக்கப்பட்ட இந்த சட்டத்தின் நோக்கம் என்று வியாக்கியானமும் தரப்பட்டது. இது சட்டமாக்கப்பட்ட ஆண்டு 2008. நடைமுறைக்கு வந்த தேதி அக்டோபர் 2, 2009. இதற்காக யு.என்.டி.பி. எனப்படும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சி முகமை 2009 ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை ரூ.44 கோடியே 60 லட்சம் நிதி உதவியும் தந்துள்ளது. ஆனால், இந்த அற்புதமான சட்டம் இது வரை இந்தியாவில் சரியாக நடைமுறை...