Posts

Showing posts from March, 2020

பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்

Image
             பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள் பல்வேறு புராண சம்பவங்கள் ஹரியும், சிவனும் ஒன்றே என்று நமக்கு உணர்த்துகின்றன.   திருமாலின் இருதய மத்தியில் என்றும் நீங்காமல் சிவன் இருக்கிறார் என்று தைத்திரிய ஆரண்யம் என்ற நூல் கூறுகிறது. சிவபெருமான் கைலாயத்தில் எப்போதும் ராமநாமாவை சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று விஷ்ணு சகஸ்ரநாமம் கூறுகிறது.               திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தார். இந்த பத்து அவதாரங்களில் பெருமாள் சிவபிரானை பூஜித்ததற்கு பல சான்றுகள் உள்ளன. அவற்றின் தொகுப்பே இது. 01. மச்சாவதாரம் சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று, கடலுக்கடியில் ஒளிந்துகொண்டபோது, திருமால் பெரிய சுறா மீனாக உருவம் தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். பிறகு மீன் உருவத்துடன் கடலுக்கடியில் சென்று மகிழ்ச்சியில் கடலை கலக்கி விளையாடினார். இந்த செயலால் உலகம் துன்பமடைந்தது. அப்போது சிவபெருமான் பெரிய கொக்கு வடிவமெடுத்து திருமாலுக்கு தன் தவறை உணர்த்தினார். திருமால் மத்ஸ்ய (மீன்) உருவத்துடன் பல காலம் சிவபூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் க

கூட்டுறவுகள் மூலம் மக்களுக்கு அவர்கள் இருப்பிடத்திற்கு பொதுவிநியோகபொருட்கள் வழங்க ஆலோசனை

Image
கொரானா வைரஸ்வின் சமுதாய விலகல் காலத்தில்  பொது விநியோகம் முறையில் வழங்ப்படும் பொருட்களை மக்களுக்கு வழங்க கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றினால் நிச்சயமாக இதிலிருந்து மீளலாம் என . ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர்கள் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர்கள் அவர்கள் நமக்கு அரசுக்கு தெரிவிக்கும் பொருட்டு  இதனை செயல்படுத்த கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.என தெரிவித்துள்ளனர்     தற்போதுள்ள அனைத்து  தரப்பு மக்களுக்கும் (சுமார் 80% மக்கள்)ஆதார் கார்டுடன் இணைக்கபட்ட காஸ் பதிவு உள்ளது அதில் அவர்களுடைய வங்கிக்கணக்கு விவரங்கள் உள்ளன . சுமார்i 2 கோடிகார்டுதாரர்க ளில் அரிசி கார்டு,கெரசின்கார்டு சர்க்கரை கார்டு மற்றும் இதர பிரிவினருக்கான வெள்ளை கார்டு உள்ளன.சுமார் 95%பேர் ஆதார் கார்டு வைத்துள்னர். சென்னையில் சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மற்றும் கூட்டுறவு கடைகள் மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன.தமிழ்நாடு முழுவதும்  கூட்டுறவு கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு அரிசி கோதுமை சர்க்கரை பருப்பு பாமாயில் கெரசின் ஆகிய பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. டியூசிஎஸ் மற்றும் சிந்தாமணி கூட்டுறவு மொத்த விற்பனை பண்ட

விழிப்புணர்வு இல்லாத மக்கள்

Image
சென்னை பல்லாவரம் மார்க்கெட்டில் மக்கள் இன்னும் விழிப்புணர்வு இல்லாததால் கூட்டம் கூட்டமாக   வருகிறார்கள் 144 தடையுத்தரவை சிறிதும் மதிக்காத நம் மக்கள் நமது செய்தியாளரின் புகைப்படங்கள் இது இன்று சமூ க பொறுப்புணர்வுடன் நண்பர் திரு அல்லாபக்ஷ் அவர்கள் விழிப்புணர்வு பதாககைள அவரே சுமந்து கொண்டு உலா வந்தாலும் மக்கள் அதை கவனித்ததாக தெரியவில்லை நண்பர் திரு அல்லாபக்ஷ் அவர்களுக்கு பாராட்டுதல்கள் சமூக விலக்கலை கடைபிடியுங்கள்  மக்களே    

திருக்குறள் சுவையான தகவல்கள்

Image
திருக்குறள் சுவையான தகவல்கள் திருக்குறளின் முதல் பெயர்- முப்பால் திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133 திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380 திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700 திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250 திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330 திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது. ஒவ்வொரு குறளும் இரண்டு  அடிகளால் , ஏழு  சீர்  களை கொண்டது. திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000 திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194 திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம் திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல் திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில் திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து-னி திருக்குறளில் ஒரு சொல

உலக இட்லி தினம்

Image
உலக இட்லி தினம் இன்று 30.3.2020 உலக இட்லி தினம்      இட்லியைப் பற்றி தெரியாத  தமிழர்களே இருக்க முடியாது.    இந்த இட்லி பற்றி  கி.பி.1130-ம் ஆண்டில், மேலை சாளுக்கிய மன்னன், மூன்றாம் சோமேஸ்வரன், `மானசொல்லாசா” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.   உலக சுகாதார அமைப்பு, உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுப் பண்டங்களின் பட்டியலில் இட்லிக்கு, முக்கிய இடம் அளித்ததன் அடிப்படையில் கடந்த 2015ம்  ஆண்டு  முதல்  உலக  இட்லி  தினம்  கொண்டாடப்படுகிறது. இட்லி (இட்டளி) ) என்பது அரிசி மற்றும் உளுத்தம்பருப்பு கலந்து  செய்யப்படும் ஒரு  உணவு . இது  ஆவியில் வேகவைத்து  செய்யப்படுகிறது.  தென் இந்தியாவின்  பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும்.  அரிசி , உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது.   இது இட்டவி (இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். இட்லியின் பண்டையகால பெயர்  இட்டரிக  என்பதாகும். பண்டைய இந்திய இலக்கியங்களில்,

டாஸ்மார்க் கடையில் மதுபாட்டில்களை திருடிச் சென்ற இருவர் கைது.

Image
திருத்துறைப்பூண்டியில் கரோனாவைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் 144 தடை உத்தரவு உள்ள நிலையில் வயல்பகுதியில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடையில் பின்புறம் துளையிட்டு ரூ 47 ஆயிரம்  மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிச் சென்ற இருவர் கைது. உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமா் அறிவித்துள்ள ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பள்ளி கல்லூரிகள், டாஸ்மாக் மதுபான கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை ஏப்ரல் 14 வரை திறக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.  கடந்த 5 நாட்களாக அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே  மடப்புரம் மெயின்ரோட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருந்த டாஸ்மாக் கடை ( எண் 9667) செயல்பட்டு வந்தது தமிழக அரசின் உத்தரவின்படி வரும் ஏப்ரல் 14-ந்தேதி பூட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி மர்ம  நபர்கள் டாஸ்மாக் மதுபான கடையின் பின்புற சுவரை  துளையிட்டு கடையின் உள்ளே நுழைந்து ரூ 47 ஆ

தேசிய மருத்துவர்கள் நாள்

Image
தேசிய மருத்துவர்கள் நாள்   சமூகம்  மற்றும் தனி மனிதருக்கு   மருத்துவர்கள்   செய்யும் மகத்தான சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே   தேசிய மருத்துவர்கள் தினம்   ( National Doctors' Day ) ஆகும்.  இந்த நாள் கொண்டாடப்படும் தேதி பல்வேறு காரணங்களைப் பொறுத்து நாட்டுக்கு  நாடு  மாறுபடுகிறது. சில நாடுகள் இதை விடுமுறை தினமாகவும் அறிவித்துள்ளன. பெரும்பாலும் மருத்துவ நிறுவனங்களே இத்தினத்தைக் கொண்டாடுகின்றன.             சில நாடுகளில் கொண்டாடப்படும் மருத்துவர்கள் நாள் வருமாறு           அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் மார்ச் 30 அன்று கொண்டாடப்படுகின்றது.   வியட்நாமில் பிப்ரவரி 28 அன்றும் குவைத்தில் மார்ச் 3 அன்றும் நேபாளத்தில் மார்ச் 4 அன்றும் கனடாவில் மே 1  அன்றும்  மலேசியாவில் அக்டோபர் 10 அன்றும் பிரேசில் நாட்டில் அக்டோபர் 18  அன்றும் க்யூபாவில் டிசம்பர் 3 அன்றும் தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.      இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும்  சூலை திங்கள் முதல் தேதி   தேசிய மருத்துவர்கள்    நாளாக    1991 ஆம் ஆண்டு முதல்    கொண்டாடப் படுகின்றது. வரலாற்று புகழ்மிக்க மருத்துவரும்   மேற்கு வங்க

திருத்துறைப்பூண்டியில் டாஸ்மாக் கடையை உடைத்து 40 ஆயிரம் மது பாட்டில்கள் திருட்டு

Image
              உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பதற்காக  பிரதமா் அறிவித்துள்ள ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கபடுகிறது. தமிழ்நாட்டிலும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளிலியே தங்கி இருக்கின்றனர். அத்தியாவசியத் தேவைகளான பால் பொருட்கள் பொருட்கள் , செய்தித்தாள்கள், காய்கறி கடைகள் உள்ளிட்டவைகள் மட்டும் இயங்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. பள்ளி கல்லூரிகள், டாஸ்மாக் மதுபான கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை ஏப்ரல் 14 வரை திறக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே  மடப்புரம் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை எண் 9667 செயல்பட்டு வந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பின்புற சுவரை  துளையிட்டு கடையின் உள்ளே இருந்த 40 ஆயிரம் மதிப்பிலான 288 மதுபாட்டில்கள் திருடிச் சென்றனர்.  சுவரைத் துளையிட்டு மதுபான பாட்டில்களை திருடிச் சென்றவர்களை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு

திட்டக்குடி  சட்டமன்ற உறுப்பினர் திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சி.வெ கணேசன் டாடா ஏசி வாகனம் மூலம் கொரோனா கிருமி நாசினி மருந்து தெளிப்பு

Image
திட்டக்குடி  சட்டமன்ற உறுப்பினர் திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சி.வெ கணேசன் டாடா ஏசி வாகனம் மூலம் கொரோனா கிருமி நாசினி மருந்து தெளிப்பு கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா கல்லூர் ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க கல்லூர், மற்றும் பொடையூர் ஊராட்சியில் உள்ள கடைவீதி, பேருந்து நிலையம், மருத்துவமனை, தெரு பகுதிகள் வடக்கு ஒன்றிய கவுன்சிலர் கே.என்.டி. சுகுணா சங்கர் தலைமையில்  சிறப்பு அழைப்பாளராக திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் சி.வெ.கணேசன் கலந்துகொண்டு டாடா ஏசி வாகனம் உதவியுடன் ஸ்பிரேயர்  மூலம் கொரோனா கிருமி நாசினி மருந்து தெளித்தார். பின்னர் கொரோனா  நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அனைவரும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வெள்ளையம்மாள் ஜானகிராமன் ,கிராம நிர்வாக அலுவலர் மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.   செய்தியாளர். காமராஜ். விருத்தாசலம்

திருத்துறைப்பூண்டியில் கரோனாவைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ள் டேங்கர் லாரிகள் மூலம் ஏர் கம்பிரஷர் வைத்து நகராட்சிபகுதிகளில் கிரிமிநாசினி தெளிக்கும் பணி

Image
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கரோனாவைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் டேங்கர் லாரிகள் மூலம் ஏர் கம்பிரஷர் வைத்து நகராட்சி, காவல்நிலையம், பழைய பேருந்துநிலையம்,புதிய பேருந்துநிலையம் மற்றும் நகராட்சிபகுதிகளில் கிரிமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.   திருத்துப்பூண்டியில் கரோனாவைரஸ் முன்னெச்சரிக்கை 144 தடை உத்தரவை மீறி நகருக்குள் வரும் வாகனங்களில் மீண்டும் வராமல் இருக்க பெயின்ட் முத்திரையிட்டு எச்சரிக்கை. திருத்துறைப்பூண்டி நகரருக்கள் 144 தடை உத்தரவை மீறி நகருக்குள் வந்த இருசக்கர வாகனம், கார், ஆட்டோ , டாடா ஏசி உள்ளிட்ட வாகனங்கள் கடந்த 25-ந்தேதி முதல் இதுவரை 50 வாகனங்ககளை போலீஸ் டிஎஸ்பி பழனிச்சாமி மேற்பார்வையில்  இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துவந்தனர். இந்த நிலையில் நகருக்குள் மீண்டும் மீண்டும் வரும் வாகனங்களை அடையாளம் காண்பதற்கு போலீசார் பெயின்டால் அடையாளம் இட்டு தொடர்ந்து இதேபோல் தடை உத்தரவை மீறி வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்து திரும்ப வாகனங்களை நீங்கள் பெற முடியா

மொபைல் அப்ளிகேஷன் வழியாக திணைநில வாசிகள் இளைஞர்களின் நாடகம்

Image
Thinai NilaVaasigal - திணை நிலவாசிகள் இளைஞர்களால் நிரம்பிய  குழு நேற்று (March 27) உலக நாடக தினத்தை Zoom என்கிற App வழியாகக் கொண்டாடினார்கள் கொரோனா அச்சத்தால் நடிகர்களும், பார்வையாளர்களும் வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு சூழல்களில் தனித்து இருந்தார்கள் . ஆனாலும் Zoom App வழியாக இணைந்து நேற்று சுமார் ஒரு மணி நேரம் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்கள் . சுமார் 100 பேர் வரை இவர்களுடன்  இணைந்து நிகழ்ச்சியை இரசித்தார்கள். மிக முக்கியமாக திருமிகு.நாசரும், திருமிகு. அம்பையும் இவர்களுடன்  இணைந்திருந்து, இந்த இளைஞர்களின்  முயற்சியை பாராட்டி ஊக்கமளித்தார்கள்.    ”உலகிலேயே முதல் முறை என்று பெருமைபட்டுக் கொள்ளலாம். கொரோனா நம்மை வீட்டுக்குள்ளே முடக்கி வைத்தாலும், ஒரு நிஜக் கலைஞன் தன்னை எப்படியாவது வெளிப்படுத்திக் கொள்வான், தனக்கான பார்வையாளனை எப்படியாவது தேடி இணைத்துக் கொள்வான் என்பதை இந்த நிகழ்வு உணர்த்தியிருக்கிறது”, என்று நாசர் பாராட்டு தெரிவித்தார்.         ”நாடகம் என்பதே ஒரு உயிர்க்கலை, பார்வையாளர்களுடன் நேரடியாக உரையாடும் கலை. அதை மொபைல் ஃபோன் App வழியாக நடத்துவதும், பார்ப்பதும் வித்தியாசமான முதல் முறை

திருப்பதி லட்டுக்கு வயது 300

Image
திருப்பதி லட்டுக்கு வயது 300            திருமலை: திருப்பதி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது லட்டு பிரசாதம்தான். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல்லவர் காலத்தில் இருந்து பிரசாதங்கள் சுவாமிக்கு சமர்ப்பிக்கப் பட்டது.  அதன்பின்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் பிரசாதத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதை தயாரிக்க அப்போதைய அமைச்சர் சேகர மல்லண்ணா, கோயிலில் பலவிதமான தானங்களை செய்துவந்தார். அந்த நாட்களில் திருமலை கோயில் அடர்ந்த காடுகளுக்கிடையே இருந்தது.  கோயிலுக்கு வருபவர்கள் மலை அடிவாரத்திலிருந்து பல நாட்கள் நடந்துதான் மேலே  வரவேண்டும். கீழேயோ, இடையிலோ, மலை மேலோ உணவு கிடைப்பது அரிதாக இருந்தது. எனவே சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சுவாமிக்கு சமர்ப்பிக்கப்படும் நைவேத்திய பிரசாதங்களே வழங்கப்பட்டு வந்தன. இது திருப்பொங்கம் என அழைக்கப்பட்டு வந்தது. இதில் அப்பம், சுழியம், அதிரசம், வடை ஆகிய பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து கி.பி.1715 ஆகஸ்டு 2 முதல் பூந்தி அறிமுகம் செய்யப்பட்டது. 1940 முதல் இது லட்டாக மாற்றப்பட்டது. லட்டு 3 ரகமாக தயாரிக்கப்பட்டது. 750 கிராம் எடையில் ஆஸ்தான லட்டு தயா

PM CARES FUND

Image
It is my appeal to my fellow Indians, ‬ ‪Kindly contribute to the PM-CARES Fund. This Fund will also cater to similar distressing situations, if they occur in the times ahead.  The PM-CARES Fund accepts micro-donations too. It will strengthen disaster management capacities and encourage research on protecting citizens. ‬ ‪Let’s leave no stone unturned to make India healthier and more prosperous for our future generations.

இசைப்பேரரசி டி. கே. பட்டம்மாள்  

Image
       பாபநாசம்  சிவன்   1939 – ல்  நடித்த  "தியாக பூமி"  படத்தில்  எழுத்தாளர் கல்கி எழுதி,  பாபநாசம் சிவன் & ராஜகோபால அய்யர்  இசையமைத்து,    "தேச சேவை செய்ய வாரீர்"  என்று  தொடங்கும் பாடல்தான்  அந்த இசைக் குயில் பாடிய முதல் திரையிசைப் பாடல்.  12 வாரங்களாக அரங்கம் நிறைந்து ஒடி கொண்டிருந்த அந்த "தியாக பூமி" படம் ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டது.  இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகே தடை விலக்கப்பட்டது.           "தேச சேவை செய்ய வாரீர்" என்ற அந்தப் பாடலைப் பாடியவர்  யார் தெரியுமா?   பாடகி   நித்யஸ்ரீ   மகாதேவன் ,    அவர்களது பாட்டியான டி. கே. பட்டம்மாள்  என்று   பரவலாக   அறியப்படும்   தாமல்   கிருஷ்ணசாமி பட்டம்மாள் என்ற புகழ்பெற்ற கருநாடக இசைப்  பாடகிதான்.      காஞ்சிபுரத்தைச்    சேர்ந்தவர்.       இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கருநாடக இசை மேடைகளில் தங்கள் இசைத் திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர். மற்றவர்கள்  எம். எஸ். சுப்புலட்சுமியும்   எம். எல். வசந்தகுமாரியும் .       அலமேலு

பிரபாஸ்   கொரோனா நிவாரணமாக பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.4 கோடி நன்கொடை.

Image
தெலுகு நடிகர் பிரபாஸ்   கொரோனா நிவாரணமாக பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.4 கோடி நன்கொடை. இந்திய நடிகர்களிலேயே மிக அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கியவர் பிரபஸ். தனது படம் ரிலீஸ் நேரத்தில் மட்டும் பட புரமோஷனுக்காக சமூக அக்கறை பற்றியோ அரசியலோ பேசாதவர் பிரபாஸ் என்பது குறிப்பிடக்தக்கது...

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் COVID19 மருத்துவமனையாக 500 படுக்கை வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி

Image
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் COVID19 மருத்துவமனையாக 500 படுக்கை வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வார்டுகளை பார்வையிட்டார்