Posts

Showing posts from February, 2021

Nynarin Unarvugal/ஏமாற்றமா|தன்னம்பிக்கை வரிகள்

Image
 Nynarin Unarvugal/ இன்று ஏமாற்றமா|தன்னம்பிக்கை வரிகள்| video link by

தைராய்டு குறைபாட்டிற்கு இயற்கை வழியில் தீர்வு

Image
  தைராய்டு குறைபாட்டிற்கு இயற்கை வழியில் தீர்வு | Natural Methods to cure Hypothyroidism video link  by  Dr.S.Revathi's Vlog

ஞாயிறு திரை மலர்,

Image
  ஞாயிறு திரை மலர், 28/02/2021 --------------------------------------------------------------------------------------------------------- முகநூல் பதிவு பார்த்திபன் அவர்கள் சமூக வலையதளங்களில் அழகாய் எழுதி பல பதிவுகளை போடுவார். அந்த வகையில் கொரோனா நேரத்தில் டாஸ்மாக் திறப்பதை பற்றியும் மிக அழகாக முகநூலில் எழுதியுள்ளார். அதை தன் ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அதில் வழக்கம் போல அவரின் கவரும் வார்த்தை கோப்புகள் இருந்தன. அவர் எழுதியதாவது. நாளை நமதே'என நினைத்திருந்தேன் TASMAC திறக்கும் வரை. இனி doubt தான். Social DR(Istanc)KING! பாருங்க..எழுத்துக்களே கொளருது!Bottle மூடியைத் திறந்தாலே போதையேறிகளுக்கு. கடையைத் திறந்தா? Immunity & community நாசமாப் போகும். நன்றி: பிலிம் பீட் தமிழ் ------------------------------------------------------------------------------------------- ரஜினியை பொதுமேடையில் படுமோசமாக திட்டிய மனோரமா.. பதிலுக்கு கூப்பிட்டு உதவி செய்த சூப்பர் ஸ்டார் ஆச்சி மனோரமா தமிழ் சினிமாவில் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை 1000 படங்களுக்கு மேல் நடித்து சரித்திரம் படைத்த நாயகிய

கல்லீரல் நோய்க்கு குட்பை

Image
 கல்லீரல் நோய்க்கு குட்பை சொல்லி விடுங்கள் ஒரு நாளில் 500 விதமான வேலைகளை நீங்கள் செய்ய வேண்டும், ஆனால் உணவு மட்டும்தான் உங்களுக்குச் சம்பளம்' என்று யாராவது கூறினால் அவரை முறைத்துத்தான் பார்ப்போம். ஆனால் அவ்வளவு வேலைகளைத்தான் தினந்தோறும் செய்துகொண்டிருக்கிறது நம் உடலின் அதிசய உறுப்பான 'கல்லீரல் (Liver)'! ஜீரணத்தில் உதவி, உடற்கழிவுகள் மற்றும் நச்சுக்களை நீக்குவது, ஹார்மோன்களை சீர் செய்வது என்று எந்நேரமும் கல்லீரல் படு பிஸி... நோய் முற்றும் முன்பே காத்துக்கொள்ளக் கூடிய முக்கிய உறுப்புகளில் முதலிடத்தில் இருப்பது கல்லீரல்தான்! கல்லீரல் தொடர்பான நோய்களில் 90% தவிர்க்கக்கூடியவை என்றால் நீங்கள் நம்புவீர்களா? வாடிக்கையாக மதுபானம் அருந்துகிறீர்களா? ஒரு முதலாளி அற்ப சந்தோஷத்திற்காக தன் வேலையாளுக்கு அதிக வேலை கொடுத்து, அடித்து உதைத்து துன்புறுத்துகிறார். ஆனாலும்கூட வலியை எல்லாம் தாங்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் அந்த அப்பாவி வேலைக்காரர் அந்த முதலாளிக்காகவே வேலை பார்க்கிறார். அதீதமாக மது அருந்துபவர்களும் இப்படித்தான் கல்லீரலைக் காயப்படுத்துகின்றனர், தன்னைத் தானே சரிசெய்துகொள்ளக்கூடிய அம்

தேமல் பிரச்சனைக்கு தீர்வு தரும் மூலிகைகளும் பலன்களும்

Image
  தேமல் பிரச்சனைக்கு தீர்வு தரும் மூலிகைகளும் பலன்களும்...!! # சில மூலிகைகள் உங்களுக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளும் இன்றி, தேமல் பிரச்சனைக்கு தீர்வு அளிக்கின்றன. அவற்றை நீங்கள் கடைகளில் தான் வாங்க  வேண்டும் என்பதில்லை. உங்களது வீட்டின் அருகிலேயே இருக்கும் மூலிகைகளை பயன்படுத்தி தேமல் பிரச்சனைக்கு தீர்வு காணலாம். # அருகம்புல்: அருகம்புல் உடல் நலத்திற்கும், இரத்தத்தை சுத்தம் செய்யவும் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. அருகம்புல், கஸ்தூரிமஞ்சள், மருதோன்றி  போன்றவற்றை அம்மியில் வைத்து அரைத்து பூச தேமல் விரைவாக குணமாகும்.   # ஆரஞ்சு தோல்: கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளித்து வரவும். எலுமிச்சை பழச்சாறு தேமல் உள்ள  இடங்களில் தேய்த்தால் தேமல் மறையும்   # எலுமிச்சை தோல்: எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்தை சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமலில் பூசி குளித்து வந்தால் தேமல் குறையும்   # மஞ்சள்: மஞ்சள் இடித்து நல்லெண்ணெய்யில் போட்டு காய்ச்சி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் குறையும். துளசி இலை, வெற்றிலை எடுத்து அரைத்து தேமல

இறப்பு என்பது முற்றுபுள்ளியா?

Image
  இறப்பு என்பது முற்றுபுள்ளியா? – சுஜாதா செத்த பின் என்ன என்று தெரிந்து கொள்வதால் யாருக்கு லாபம்? நான் செத்த பின் நானாக இருந்தால்தான் எனக்கு பிரயோசனம்; என் மூளை ,என் புத்தகங்கள் ,என் லேசான முதுகெரிச்சல் எல்லாம் இருந்தால்தான் நான் நானாக இருக்க முடியும் .செத்தாலும் ஆத்மா தொடர்ந்து இந்தோனேசியாவிலோ அல்லது வெனிஸ் நகரத்தில் ஒரு படகோட்டியாகவோ பிறப்பதில் அர்த்தமில்லை. நான் நானாகவே தொடர வேண்டும் . அதற்கு என்னை அறிந்தவர்கள் வேண்டும். உறவினர்கள், என் வாசகர்கள் வேண்டும் . கட்டுரை அனுப்பினால் அதை பற்றி விமர்சிப்பவர்கள் வேண்டும். தமிழ் வேண்டும் . அதெல்லாம் இல்லாவிடில் உயிர் என்பது தொடர்ந்தால் என்ன , முடிந்தால் என்ன? எனவே சாவு என்பது கொஞ்சம் யோசித்து பார்த்தால் நம் நினைவுகளின் அழிவுதான். அப்பா மரணத்தைப் பற்றி ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது “அது ஒரு முற்றுப் பள்ளி.வி ஸீஸ் டு எக்ஸிஸ்ட்.எபிக்யுரஸ் சொன்னதை மறுபடி படி” “Death is nothing to us since so long as we exist death is not with us but when death comes. we do not exist”. ஒருவர் தன் தந்தை இறந்ததை பற்றி சுஜாதாவிற்கு உருக்கமாக மெயிலனுப்பிய போது, வந்

பயிரை மேயும் வேலிகள்

Image
  வேலியே பயிரை மேய்ந்தது என்பார்கள். இங்கு வேலி, வேலியையே மேய்ந்த அவலமாகியுள்ளது. பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் காவல்துறை உயரதிகாரியான சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது கொடுத்துள்ள புகார், காவல்துறை தாண்டியும் அரசியல் தளம் முதல், பொதுமக்கள் வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், மேலும் அதிர்ச்சி ஏற்படுத்துவது, புகார் கொடுக்கச் சென்ற பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, ராஜேஷ் தாஸ் அழுத்தத்தின் காரணமாகக் காவல்துறை உயரதிகாரிகள் இருவரால் புகாரை தவிர்க்கும்படி அறிவுரை கூறப்பட்டிருக்கிறார், தடுக்கப்பட்டிருக்கிறார், மிரட்டப்பட்டிருக்கிறார், உடல் ரீதியான மல்லுக்கட்டு அளவுக்கு மரியாதையின்றி நடத்தப்பட்டிருக்கிறார். நடந்த சம்பவங்களின் கோவை, ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால், சாமான்யப் பெண்களின் நிலை என்ன என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. குற்றங்களைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் முதலாவதாக இருக்கும் காவல்துறையிலேயே மலிந்துகிடக்கும் பாலியல் குற்றங்கள், அம்பலமாகியுள்ளன. என்ன நடந்தது? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது

சுஜாதா தரும் எழுத்து ஆலோசனைகள்

Image
  எழுத்தாளர் சுஜாதா தரும் எழுத்து ஆலோசனைகள் எழுத்தாளர் சுஜாதா எழுத்தாளர்களில் நமக்கு யாரைத் தெரியவில்லை என்றாலும், நிச்சயம் எழுத்தாளர் சுஜாதா தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. தன் எளிமையான எழுத்துக்களால் பலரைக் கவர்ந்தவர். Image Credit எழுத்தாளர் சுஜாதா சுஜாதா கேள்வி பதில்கள் ரொம்ப பிரபலம். அதில் நான் ரசித்த கேள்வி பதில்களைக் கொடுத்துள்ளேன் படித்துப் பாருங்கள். நீங்களும் ரசிப்பீர்கள் என்று நினைக்கிறேன். Credit http://balhanuman.wordpress.com/ பல்செட்டில் உள்ள பற்கள் கூசுமா ? தெரியவில்லையே. உங்களுக்குக் கூசுகிறதா என்ன ? ஒருவன் எப்போது வயதாகி விட்டது என்பதை அப்பட்டமாக உணர்கிறான் ? பக்கத்து வீட்டுப் பெண் பதற்றம் இல்லாமல் பக்கத்தில் உட்கார்ந்து பேசும்போது! பிரிட்னி ஸ்பியர்ஸ், ஜென்னிஃபர் லோபஸ் கேட்பதுண்டா ? அவர்கள் கேட்பதற்கல்ல, பார்ப்பதற்கு. உங்களுடைய எழுத்து நடையை நீங்களேதான் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்களா? ஆமாம், நானேதான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ‘அவன் அங்கே போனான்’ அப்படின்னு எழுதணுமானா’ அவன்’ஐ எடுத்துட்டு ‘அங்கே போனான்’னு எழுதுவேன். திரும்பப் படிக்கும்போது எழுதினதைச் சின்னதாக ஆக்குவது. இ

எளிமையான நபர்

Image
  மறைந்த எழுத்தாளர் சுஜாதா குறித்து பலரும் அறியாத அவரது வாழ்க்கை பயணம் பற்றி அவரது மனைவி சுஜாதா ரங்கராஜன் Behindwoods-ன் பிரத்யேக பேட்டியில் பகிர்ந்துக் கொண்டுள்ளார். அவர் பேசுகையில், சுஜாதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்தால் அதில் யார் நடிக்கலாம் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அப்படி ஒரு படம் உருவானால் அதில் சுவாரஸ்யமே இருக்காது. அவருக்கு எழுதுவதும் மிகவும் பிடிக்கும். அது அவருடைய கற்பனை உலகம். அதைத்தவிர அவரது வாழ்க்கை பற்றி சுவாரஸ்யமான விஷயங்கள் ஏதும் இல்லை. அவர் மிகவும் எளிமையான நபர் என கூறினார். இயக்குநர்நள் மணிரத்னம், ஷங்கர் ஆகியோரின் பல வெற்றிப்படங்களில் பணியாற்றிய சுஜாதா மறைவுக்கு முன் பணியாற்றிய திரைப்படம் ‘எந்திரன்’. அப்படத்தில் வெறும் 30 சீன்களுக்கு மட்டுமே வசனம் எழுதிய சுஜாதா, அதில் ஐஸ்வர்யா ராயை கடித்த கொசுவுக்கு தனது நண்பர்கள் தன்னை அழைக்கும் ரஷ்ய பெயரான ரங்கூஸ்கி என்பதை வைத்தார் என்ற உண்மையை பகிர்ந்துக் கொண்டார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது, சாப்பிட முடியாமல் வருத்தப்பட்டபோது, வாழ்க்கையே வெறுத்து

தொல்லைபேசி

Image
  தொல்லைபேசி கஸ்டமர் கேர் கொடுமைகளை தமக்கே உரிய பாணியில்.. ஒரு முறை உன் சொத்தையே எழுதி வை என்று பில் வந்தபோது தான் கஸ்டமர் கேரை தொடர்புகொண்டேன். 180 டயல் செய்தவுடன் முதலில் வாஞ்சையுடன் வரவேற்றது. மொழியை தேர்ந்தெடுத்து அமுக்கி முடிந்ததும் அர்ஜென்ட்டா, ஆர்டினரியா என கேட்கிறது. ஹோட்டல்களில் சாதாவா, நெஸ் ரோஸ்டா என்பதுபோல் உடனே எண்ணை அழுத்துவது தப்பு. தாமதமானால் மீண்டும் முதலிலிருந்து.. அதான் முன்னாடியே சொல்லியாச்சே சனியனேனு திட்டமுடியாது. கேள்வி காலாவதியாகியிருக்கும். மீண்டும் ஆம் என்றால் 1, இல்லையெனில் 2, தலைமுடியை பிய்த்துக்கொள்ள 3, போனை உடைக்க 4 என இருந்தால் பரவாயில்ல என சொல்லியிருப்பார். இது இன்றுவரை தொடர்கிறது. இன்னும் அந்த அதிகாரிகள் ஏழு மலை, ஏழு கடல் தாண்டி கிளியிடம் பேசுவதுபோலத்தான் சேவைமைய அதிகாரிகளிடமும் பேச முடிகிறது. ஒரு டெலிபோன் உரையாடல் நண்பர்: ஹலோ மகள்: நான் சந்தியா பேசறேன். இரண்டாம் வகுப்பு நண்பர்: அப்பா இல்லையா மகள்: ம்..ம்.. இல்லை நண்பர்: வீட்டில வேற யாரு இருக்காங்க மகள்: சேகர் இருக்கான். இருங்க போனை கொடுக்கிறேன் நண்பர்: ஹலோ சேகர்.. சேகர்: ம்ம ல லா (சேகர் இரண்டு வயது குழந

சந்திரசேகர ஆசாத்.!

Image
  சந்திரசேகர ஆசாத்.! பகத்சிங்கை "தம்பி இன்குலாப்.!"என்று அன்புடன் அழைத்தவர். இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு புரட்சிக்காரனை பிடிக்க முடியவில்லை என்று ஆங்கில அரசு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்த புகழுக்கு சொந்தக்காரர். மாறுவேடமிடுவதில் கில்லாடி.சாண்டர்ஸனை சுட்டு விட்டு தப்பிய பகத்சிங்கை பிடிக்க முயன்ற கான்ஸ்டபிள் சனான்சிங்கை சுட்டு தள்ளி பகத்தை தப்பிக்க வைத்தவர். அலகாபாத்பூங்கா ஒன்றில் நண்பர்களை சந்திக்க காத்திருந்தவரை துரோகி ஒருவன் காட்டிக் கொடுக்க போலீஸ் சுற்றி வளைத்தது. உத்திரபிரதேச காவல்துறை உயர் அதிகாரியாக பணியாற்றிய ஹார்லிஸ் என்பவர் தனது ‘பணிக்கால நினைவலைகள்’ என்ற தலைப்பில் (1958 அக்டோபர் மாத ‘Men only’ ஆங்கில மாத இதழில்) ஆசாத்தை சுட்டுக் கொன்ற நிகழ்ச்சி குறித்து கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார். "ஆசாத்தின் முதல் துப்பாக்கிக் குண்டு வெள்ளைக்கார காவல்துறை கண்காணிப்பாளர் நாட்பாவர் கையைப் பதம் பார்த்தது. காவலர்கள் புதர்களில் மறைந்திருந்து ஆசாத்தை குறிபார்த்துச் சுட்டனர். மற்றொரு காவல் துறை கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரர்சிங் குறிபார்த்துச் சுட்டார். தனது உடலில் மூன்று, ந