Posts

Featured Post

இமான் அண்ணாச்சி தாக்கு

Image
  இமான் அண்ணாச்சி தாக்கு: சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வந்த இமான் அண்ணாச்சி சில படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்ட இவர், சமீபத்தில் பட விழா ஒன்றில் பேசும் போது இப்போதெல்லாம் சினிமா ரொம்பவே கெட்டு விட்டது. ஒரு சமூகத்தை வைத்து படம் பண்ணாலே ஹிட் அடித்து விடலாம் என்கிற நிலை உருவாகி விட்டது. மேல் தட்டு, கீழ் தட்டுன்னு சும்மா தட்டு தட்டா வியாபாரம் பண்றாங்க, தமிழ் சினிமாவில் இப்படியொரு நிலைமை தொடர்வது சினிமா உலகுக்கு நல்லது அல்ல, இதையொரு காமெடியனாக சொல்லாமல் பொதுநலம் உள்ள மனிதனாக சொல்கிறேன் என இமான் அண்ணாச்சி பேசி உள்ளார். அவரது பேச்சைக் கேட்ட ரசிகர்கள், இயக்குநர் மாரி செல்வராஜைத்தான் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் இமான் அண்ணாச்சி என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். நன்றி: பிலிமிபீட் தமிழ்

ஏனிந்த அவசரம் மயில்? ஏற்க முடியவில்லையே....

Image
 ஏனிந்த அவசரம் மயில்? ஏற்க முடியவில்லையே.... * 'சண்டைக் கோழி- 2' திரைப்படத்தில் குடிகாரனாக நடித்த ஒரே ஒரு காட்சியில் அமர்க்களப்படுத்திவிட்டார் மயில்.  அற்புதமான மிமிக்ரி கலைஞர். சண்டைக் காட்சிகளின் டப்பிங்கின் போது நாயகனிடம் அடி வாங்கும் எல்லாச் சண்டைக்கலைஞர்களுக்கும்  ஒரே நேரத்தில் விதவிதமாக இவர் குரல் தருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். 'ஆனந்தம்' முதல் நான் பணியாற்றிய பெரும்பாலான படங்களில் டப்பிங் குரல் கொடுக்க வருவார்.  கையில் ஏதேனும் வித்தியாசமான தின்பண்டம் இருக்கும். அவித்த பனங்கிழங்கு.... சுட்ட சோளக்கருது... தேன் குழல் முறுக்கு... இப்படி....  அடைந்த புகழை விட பெரிய கலைஞன் அவர்.  ஆனால் குறையின்றி வாழ்ந்தார்.  தன்னைச் சுற்றி ஈரத்தையும் பசுமையையும் பரப்பினார். உதவி தேவைப்பட்ட நண்பர்களுக்கு உதவினார்.  பெருமழை, பெருந் தொற்று ஆகிய நெருக்கடி நேரங்களில் தன் பகுதியில் களப் பணி ஆற்றினார்.  சந்தித்தாலே சிரிப்பை உதடுகளில் அல்ல...  உள்ளத்துக்கு உள்ளேயும் பற்ற வைத்து விடுவார். நாள் முழுக்க அது நமக்குள் வெடித்துக் கொண்டு இருக்கும். யாரேனும் பார்த்தால் தானே எதற்கு சிரிக்கிறான

முட்டாள்களிடையே வாழ்ந்துகொண்டிருந்த கெட்டிக்காரனொருவன், கெட்டிக்காரர்களோடு பழகத்தொடங்கி முட்டாளாக செத்துப் போனேன்.”

Image
  கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளை கேட்டதால்தான், அவர்களுக்கு அத்தனை ஆத்திரம். 'பாவ மன்னிப்பு' படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது. அதற்கான பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்து சென்சாருக்கு போனது. படத்தில் ஆரம்பத்தில் சிவாஜி பாடுவதாக வரும் 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை..' பாடலைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் பதறிப் போனார்கள். "இல்லை . இந்த பாடல் வரியை அனுமதிக்க முடியாது." "ஏன் ?" "அந்தப் பாடலின் இடையில் கண்ணதாசன் எழுதிய வரியில் மாபெரும் தவறு இருக்கிறது." "தவறா ?" "ஆமாம். அது என்ன 'எதனைக் கண்டான் மதங்களை படைத்தான்' என்று எழுதி இருக்கிறார் ? அதை மாற்றி எழுதித் தர சொல்லுங்கள். இல்லாவிட்டால் இந்தப் பாடலை அனுமதிக்க முடியாது." படக் குழுவினர் கண்ணதாசனிடம் போய் சொன்னார்கள். சென்சார் கண்டித்து அனுப்பிய தன் பாடலை கண்ணதாசன் வாசித்துப் பார்த்தார். "பறவையை கண்டான் விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினை கண்டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான் எதனைக் கண்டான் மதம்தனைப் படைத்தான்." கண்ணதாசன்

நீச்சல்குளத்தில் நீரின் மேற்பரப்பில் நடிகர் கமல் பிரம்மாண்ட ஓவியம்..!

Image
  நீச்சல்குளத்தில் நீரின் மேற்பரப்பில் நடிகர் கமல் பிரம்மாண்ட ஓவியம்..! நீச்சல் குளத்தில் தண்ணீர் மேற்பரப்பில், நரைத்த தாடி, தலைமுடியுடன் நடிகர் கமல்ஹாசன் சிரிக்கும் பிரம்மாண்ட ஓவியம். கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் பகுதியை சேர்ந்த இளைஞர் டவன்ஸி சுரேஷ். இவர் ஒரு வித்தியாசமான சிந்தனைகள் உடைய ஓவியர். சக ஓவியர்களை காட்டிலும் ஏதாவது சாதிக்க வேண்டும் என நினைப்பவர். ஓவியர் டவன்ஸி சுரேஷ், பிரபலங்களின் படங்களை அடிக்கடி வரைவதை வழக்கமாக கொண்டு இருந்தார். நடிகர் கமல்ஹாசனின் உருவப்படத்தை தண்ணீரின் மேல் வரையும் புதுமையான எண்ணம் ஏற்பட்டது. மூணாறில் உள்ள ஒரு விடுதியின் மூன்றாவது மாடியில் உள்ள நீச்சல் குளத்தில், தண்னீரின் மேற்பரப்பில் 2,500 ஏ போர் பேப்பர் சீட் மற்றும் வர்ணங்களை கொண்டு கமலஹாசன் படத்தை காட்சிப்படுத்தினார். இந்தப் படம் 50 அடி உயரமும் 30 அடி நீளமும் உடையது. ஓவியர் டவின்ஸி சுரேஷ், நீச்சல் குளத்தில், தண்ணீரின் மேற்பரப்பில் இந்த படத்தை உருவாக்குவதற்கு மூன்று நாட்கள் ஆகியுள்ளது என்பது தான் கூடுதல் தகவல்! நரைத்த தலை, தாடியுடன் சிரிக்கும் கமலின் தற்போதைய தோற்றத்தை அந்த ஓவியத்தில

மம்முட்டியின் 70வது பிறந்தநாளின் போது 600 மொபைல் போன்களை பயன்படுத்தி பிரமாண்ட ஓவியத்தை உருவாக்கிய கேரள கலைஞர்!

Image
  நடிகர் மம்முட்டியின் 70வது பிறந்தநாளின் போது 600 மொபைல் போன்களை பயன்படுத்தி பிரமாண்ட ஓவியத்தை உருவாக்கிய கேரள கலைஞர்! ஓவியர் டாவின்சி சுரேஷ் கருத்துப்படி, 600 மொபைல் போன்கள் மற்றும் 6,000 மொபைல் பாகங்கள் மூலம் உருவப்படம் 20 அடி பெரியது. திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவருக்குப் பரிசளிக்கும் வகையில் இந்த தனித்துவமான உருவப்படம் உருவாக்கப்பட்டது. "நடிகர் மம்முட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு, தொழில்துறையில் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மொபைல் கடை உரிமையாளர் அனஸ் வழங்கிய பரிசு இது. "மொபைல் போன்கள் மற்றும் துணைக்கருவிகளைப் பயன்படுத்தி இந்த உருவப்படத்தை உருவாக்குவதன் மூலம், எந்தவொரு பொருளையும் பயன்படுத்தி கலைப்படைப்புகளை உருவாக்கும் திறமையை அவர் நிரூபித்துள்ளார்," என்று Kbees தர்பார் கன்வென்ஷன் சென்டரின் உரிமையாளர் பாபு கூறினார். நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், நடிகர் என்று பல்கலை வித்தகரான கொத்தமங்கலம் சுப்பு காலமான நாளின்று

Image
இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், நடிகர் என்று பல்கலை வித்தகரான கொத்தமங்கலம் சுப்பு காலமான நாளின்று ஆம் ஜெமினியின் புகழ்பெற்ற படங்களான சந்திரலேகா, ஒளவையார், நந்தனார், மிஸ் மாலினி, வஞ்சிக்கோட்டை வாலிபன் போன்ற படங்களின் வெற்றியில் சுப்புவின் பங்கு அளப்பரியது. ஜெமினியில் நடிகர், கதாசிரியர், இயக்குநராக, கதை வசனகர்த்தா கவிஞர் என தன் பன்முக திறமையுடன் இயங்கி திரையுலகில் புகழ்பெற்றார் சுப்பு. ஜெமினியில் நான்கு படங்களை இயக்கிய சுப்பு, ஏழு படங்களுக்குத் திரைக்கதை எழுதினார். அவரது பல நுாறு பாடல்கள் மக்களால் பெரிதும் பேசப்பட்டது. ஜெமினியின் தயாரிப்பான ஒளவையார் கொத்தமங்கலம் சுப்புவுக்கு பெரும்புகழ் அளித்தது. சினிமாவையே பார்த்திராத, அதன் மீதுவெறுப்பு கொண்ட ராஜாஜி விரும்பி பார்த்த திரைப்படம் ஔவையார் திரைப்படம். விகடனின் அவரது மாஸ்டர் பீஸ் 'தில்லானா மோகனாம்பாள்'. அது வெளிவந்த காலத்தில் ஆனந்தவிகடன் பரபரப்பான விற்பனையானது. திரையுலகில் அவரது அத்தனை புகழையும் இந்த ஒற்றை நாவல் அவருக்கு அளித்தது. தொடர்ந்து விகடனில் அவர் எழுதிய'ராவ் பகதூர் சிங்காரம்' என்னும் ஒரு தொடரும் வாசகர்களிடையே நல்ல

தமிழ் நாடக மேதை அவ்வை டி.கே.சண்முகம் மறைந்த நாளின்று

Image
தமிழ் நாடக மேதை அவ்வை டி.கே.சண்முகம் மறைந்த நாளின்று புராண நாடகங்கள்,தேசபக்தி நாடகங்கள் அறநெறி மற்றும் சீர்திருத்தக்கருத்துக்கள் கொண்ட நாடகங்கள் என பல்வேறு நாடகங்களை அரங்கேற்றித் தமிழ் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று மிகவும் பிரபலமாக விளங்கியது, டி. கே. எஸ். சகோதரர்களின் நாடக சபா, டி.கே.சங்கரன்,டி.கே.முத்துசாமி,டி.கே.சண்முகம்,டி.கே.பகவதி,என்னும் அந்த சகோதரர்கள் நால்வரில் ஒருவர்தான் டி.கே.சண்முகம்.அவர்கள் நாடகத் துறையின் மறுமலர்ச்சிக்கு வித்தூன்றியவர்களில் தலையாய இடத்தைப் பெற்றவர் என்றும் நாடகத்துறையின் தொல்காப்பியர் என்றும் மக்கள் குறிப்பிட்டாங்க. சண்முகம் தமது ஆறாவது வயதிலேயே நாடகத் தந்தை என்று போற்றப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில் நடிகராகச் சேர்த்தார்.74,நாடகங்களில் பல்வேறு குணச்சித்திரபாத்திரங்களை ஏற்றுத் தம் சீரிய நடிப்பால் மக்கள் மனதை ஈர்த்தார். அவற்றுள் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் அறநெறிப் பாடல்களைப் பழந்தமிழ்ப் பெண்பாற்புலவரான அவ்வை ,என்பவரின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக்கி வயது முதிர்ந்த அவ்வைப் பாட்டி வேடத்தை இவர் தாங்கிச் சிறப்பாக நடித