Posts

Showing posts from November, 2019

சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை

Image
தாம்பரம் பல்லாவரம் குரோம்பேட்டை மீனம்பாக்கம் அனகாபுத்தூர் குன்றத்தூர் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது    

பாஸ்டாக் அட்டை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

Image
    தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்துவதற்கான பாஸ்டாக் அட்டையை பொருத்துவதற்கான அவகாசம் வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாஸ்டாக் அட்டையை வாகனங்களில் பொருத்தாவிடில் நாளை முதல் இரு மடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பாஸ்டாக் அட்டை பெறுவதற்கான அவகாசத்தை வரும் 15ம் தேதி வரை சாலைபோக்குவரத்து அமைச்சகம் நீட்டித்துள்ளது. அதுவரை ரொக்கமாகவும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தலாம். இதுவரை சுமார் 70 லட்சம் வாகனங்களுக்கு பாஸ்டாக் அட்டை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பாஸ்டாக் அட்டை இல்லாத வாகனங்களுக்கு நாளை முதல் இரு மடங்கு சுங்கக் கட்டணம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகை நமீதா பாஜகவில் இணைந்தார்.

Image
இன்று சென்னையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ள பாஜகவின் செயல்தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடிகை நமீதா பாஜகவில் இணைந்துள்ளார்.

சும்மா கிழி பாடல் 'தண்ணி கொடம்' பாடலின் காப்பி

Image
தர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் ' தண்ணி கொடம் ' பாடல் டியூன் காப்பி தண்ணி கொடம் எடுத்து பாடல் டியூனை காப்பியடிச்சா கூட பரவால  அதை எஸ்.பி.பி.யை வைத்தே பாட வைத்தது தான் ஹைலட் என்று நெட்டிசன்கள் அனிருத்தை கிண்டல் செய்து வருகின்றனர். தர்பார் படத்தில் வரும் சும்மா கிழி பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியானது. அனிருத் இசையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய அந்த பாடலை  கேட்டவர்கள் ஆஹா, நல்லா இருக்கே என்றார்கள். ஆனால் இசை பிரியர்களோ, இதை எங்கேயோ கேட்டது போல  இருக்கே என்று யோசிக்கத் துவங்கினார்கள். அனிருத்து ஐயப்பன் பாட்டு டியூனை இப்படி காப்பியடித்திருக்காரே  சாமி கண்ணைக் குத்தாதா என்று கேட்டு சமூக வலைதளங்களில் சிரிக்கிறார்கள் . பெரிய ஆளுய்யா நீங்க, இதில் சும்மா கிழிக்க ரெடியா கண்ணுங்களான்னு கொஞ்ச நஞ்ச பில்ட்அப்பா கொடுத்தீர் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.            இன்னும் சிலரோ சும்மா கிழி பாடலை கேட்டவுடன் அட தண்ணி கொடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது மனசு தவிக்குது பாடலின் டியூனை தான் அனிருத் சுட்டுட்டார் என்று கூறி அந்த பாடலின் வீடியோ வெளியிட்டுள்ள

வசூல் ராஜா

Image
மக்கள் நீதி மய்யமா? அல்லது , மல்ட்டி லெவல் மார்க்கட்டிங்கா?   நடிகராக இருந்த கமல்ஹாசனின் படங்கள் கலெக்‌ஷனை பார்ப்பதே கடினம் ஆனால் அரசியல்வாதி ஆகிவிட்ட கமலின்.. கட்சி தற்போது  செம  கலெக்‌ஷனை அள்ளிக் குவிக்க துவங்கியிருக்கிறது! என்று தாறுமாறாக வசூல் ராஜா எள நம்மவரை கிண்டலடிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்....  கட்சியை வெச்சு சம்பாதிக்க ஆரம்பித்துவிட்ட கமல் அது  மக்கள் நீதி மய்யமா? அல்லது , மல்ட்டி லெவல் மார்க்கட்டிங்கா என பேச ஆரம்பித்துவிட்டனர்... எதிர்வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்ள தயாராகி வரும் மக்கள் நீதி...மைய்யம் இதுவரையில் மாநில, மண்டல  மற்றும் மாவட்டத்தின் தலைமை பதவிகளில்தான் நபர்களை நியமித்திருந்தார் கமல். தற்போது உள்ளாட்சி  தேர்தல்களை எதிர்கொள்ள வசதியாக இப்போது மாநிலம் முழுக்க வட்டங்கள், மாவட்டத்தின் பிற அணிகள் என .. எல்லாவற்றையும் ஏகபோகமாக நிரப்ப முடிவெடுத்து, ஆணைகளை வழங்கிவிட்டார். ... மாவட்டம், வட்டம் அளவில் நிர்வாகிகளை நியமிக்க அவர் போட்டிருக்கும் திட்டம் அக்கட்சியின் நிர்வாகிகளை  திகைக்க வைக்கிறதாம் ...அது கிட்டத்தட்ட மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் பிஸ

பீகாரி ல் வெங்காயம் கிலோ 35ரூ

Image
*பீகார் மாநிலத்தில் வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் அலைமோதும் மக்கள் கூட்டம். *பாதுகாப்பு கருதி ஹெல்மெட் அணிந்து விற்பனை செய்யும் கூட்டுறவு அங்காடி ஊழியர்கள்.  

கனமழை காரணமாக திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Image
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.    இந்த நிலையில், கனமழை காரணமாக திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.  

பாரதிராஜா கோரிக்கை

Image
இசையமைப்பாளர் இளையராஜா 45 ஆண்டுகளாக இசையமைத்து வந்த இசைக்கூடத்தை காலி செய்ய பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் போதுமான அவகாசம் தர வேண்டும் -பாரதிராஜா கோரிக்கை .         இளையராஜா கடந்த 45 ஆண்டுகளாக தனது படங்களுக் கான இசைப் பணிகளை சென்னை சாலிக்கிராமம் பிரசாத் ஸ்டுடியோவில் மேற்கொண்டு வந்தார்., கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரசாத் ஸ்டுடியோ - இளையராஜா தரப்பினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு. தனது இசைப் பணிகளுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இடையூறாக இருப் பதாக இளையராஜா தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இளையராஜாவும்  கடந்த 2 மாதங்களாக பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லாமல் இருந்தார்.    இந்நிலையில், இயக்குநர்கள் பாரதி ராஜா, பாக்யராஜ், சீமான், ஆர்.கே.செல்வ மணி உள்ளிட்ட திரையுலகினர் பலரும் நேற்று கூட்டாக பிரசாத் ஸ்டுடியோவுக்கு சென்று, இந்த விவகாரம் தொடர்பாக நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு முடிவு காண முன்றனர் . பிறகு செய்தியாளர் களிடம் பாரதிராஜா இது குறித்து : இசையமைப்பாளர் இளையராஜா வுக்காக ஒட்டுமொத்த திரையுலகமும் இங்கு வந்திருக்கிறது. அவர் ஓர் அற்புத மான கலைஞன். கடந்த 45 ஆண்டுகளாக ஒ

ரஜினி சொன்னது தப்பு ரோஜா

Image
ரஜினி சொன்னது தப்பு.. முதல்வர் பழனிசாமி நல்ல ஆளுமை மிக்க தலைவர்.. ரோஜா !     தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையுடன் செயல்படுகிறார், தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என்று நடிகர் ரஜனிகாந்த் கூறியது தவறு என்று நடிகையும் ஆந்திர பிரதேச எம்எல்ஏவுமான ரோஜா கருத்து தெரிவித்துள்ளார் . கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் ஆளுமையான தலைவர்கள் இல்லை. நல்ல தலைவர்களுக்கு இங்கு வெற்றிடம் நிலவி வருகிறது. முறையான வலிமையான தலைவர்களுக்கு வெற்றிடம் நிலவி வருகிறது என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். முதல்வர் பழனிசாமி உட்பட அதிமுக தலைவர்கள் எல்லோரும் இதை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக எல்லை இந்த நிலையில் இது தொடர்பாக நடிகையும் ஆந்திர பிரதேச ஆளும் கட்சி எம்எல்ஏவுமான ரோஜாஅளித்த பேட்டியில், ஜெயலலிதா இறந்த பின் நானும் தமிழக அரசியலை கவனிப்பதை நிறுத்திவிட்டேன். ஆனால் என்னுடைய தொகுதியில் பல இடங்கள் தமிழகத்தின் எல்லையில் இருக்கிறது. இதனால் அங்கு தமிழக மக்கள் நிறுவனங்கள் அமைக்க வருவார்கள். அப்போது என்ன

பாக்கியராஜ்க்கு பெண்கள் ஆணையம் சம்மன் 

Image
பெண்களைப் பற்றி அநாகரீகமான முறையில் பேசியதற்காக நடிகர் பாக்கியராஜ்க்கு பெண்கள் ஆணையம் சம்மன்  . தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி கண்ணகி பாக்கயநாதன் சம்மன் வருகின்ற திங்கட்கிழமை விசாரணைக்கு நடிகர் பாக்கியராஜ் ஆஜராகுமாறு அனுப்பியுள்ளார். முன்னதாக பெண்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகர் பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் 'கருத்துக்கள் பதிவு செய்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 25ம் தேதி நடந்தபோது விழாவில் கலந்து கொண்ட பாக்யராஜ் 'ஊசி இடம் தராமல் நூல் நுழையாது' என  சொல்வர், பெண்கள் இடம் கொடுப்பதால்தான் தப்பு நடப்பதற்கு வழி வகுக்கிறது. பெண்கள் உஷாராக இருந்தால் நல்லது. ஆண்களை மட்டுமே தப்பு சொல்வது தவறு, ஆண் தவறு செயதால் போகிற போக்கில் போய்விட்டு வந்து விடுவான்.  ஆனால் பெண் தவறு செய்தால் அது, மிகப்பெரிய தவறுக்கு வழி வகுத்துவிடுகிறது. பெண்கள் சுய கட்டுப்பாடு வைத்துக்கொள்ள வேண்டும். இன்று மொபைல் போன் வளர்ச்சியால் பெண்கள் எங்கேயோ போய்க்கொண்டிருக

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் தொடக்கம்

Image
பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.   ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடக்கி வைக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று காலை நடைபெற்ற விழாவில், பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் மற்றும் 1கோடி 67 இலட்சம் மதிப்புள்ள.விலையில்லா வேட்டி சேலை வழங்கும திட்டத்தையும் தொடங்கி வைத்தார்  நிகழ்வீன் அடையாளமாக முதற்கண் இன்று 16 குடுமபங்களுக்கு பொங்கல் பரிசும் மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளும் வழங்கப்பட்டன.    இந்த விழாவுக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.    தலைமைச் செயலாளர் க.சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.    இந்தப் பொங்கல் பரிசு 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பில், ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், பச்சரிசி

திருப்பத்தூர் மாவட்டம் உதயம்

Image
வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் உதயமானது. இந்த மாவட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். , வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக 3 ஆக பிரிக்கப்படும் என்று சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்படி  வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு திருப்பத்தூர் மாவட்டமும், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு ராணிப்பேட்டை மாவட்டமும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களின் தொடக்க விழா 28.11.2019 நேற்று கோலாகலமாக நடந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தின் தொடக்க விழா திருப்பத்தூரில் உள்ள டான்பாஸ்கோ மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று காலை 11 மணிக்கு நடந்தது. விழாவுக்கு  துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயலாளர் க.சண்முகம் வரவேற்று பேசினார். கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யமிஸ்ரா திட்ட விளக்க உரையாற்றினார். தமிழக முதல்-அமைச்ச

மராட்டியத்தில் முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே

Image
மராட்டியத்தில் முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே   மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியாததால், அந்த மாநிலத்தில் கடந்த 12-ந்தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.   அதன்பிறகு அங்கு அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்தன. காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைக்க இருந்த நிலையில், எதிர்பாராத திருப்பமாக கடந்த 23-ந்தேதி அதிகாலை 5.37 மணிக்கு மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டு, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் ஆதரவுடன் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று மாலைக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு உத்தரவிட்டதால், தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் துணை முதல்-மந்திரி பதவியை விட்டு அஜித்பவார் விலகினார். அவரை தொடர்

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த கார்ட்டோசாட் 3

Image
கார்ட்டோசாட்-3' உள்பட 14 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது.     இந்த வெற்றிக்காக இஸ்ரோ குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். , . இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ ஏற்கனவே பூமி ஆராய்ச்சிக்காக 'கார்ட்டோசாட்' என்று அழைக்கப்படுகிற, முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 8 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியுள்ள நிலையில், 9-வது செயற்கைகோளாக 'கார்ட்டோசாட்-3' என்ற செயற்கைகோளை இஸ்ரோ உருவாக்கியது. இது மேம்படுத்தப்பட்ட, அதிநவீன, மூன்றாம் தலைமுறை செயற்கை கோள் ஆகும்.     1,625 கிலோ எடை கொண்ட இந்த 'கார்ட்டோசாட்-3' செயற்கைகோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் கடந்த 25-ந் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து இதற்காக 26 மணி நேர 'கவுண்ட் டவுன்' என்னும் இறங்குவரிசை ஏற்பாடுகள் நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) காலை 7.28 மணிக்கு தொடங்கி  நேற்று காலை சரியாக 9.28 மணிக்க

மு.க.ஸ்டாலின் மும்பையில்

Image
உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழா   உத்தவ் தாக்கரேவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மும்பை சென்றுள்ளார்.   ,   மராட்டிய மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி (மராட்டிய வளர்ச்சி முன்னணி) அரசு அமைய உள்ளது. இந்த கூட்டணியின் தலைவராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.1 இதையடுத்து உத்தவ் தாக்கரே இன்று மராட்டிய மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார். மும்பையில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் இன்றி மாலை 6.40 மணிக்கு இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சத்திஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல், மத்திய பிரதேச முதல்வர் கமல் நாத் மற்றும் பல முக்கிய நபர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக  மும்பை சென்றுள்ளார்.  இன்று மாலை நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். 

1980 களின் பிரபல  நடிகர்கள் நடிகைகள் சந்திப்பு

Image
1980-களின் பிரபல  நடிகர், நடிகைகள் சந்திப்பு   தென்னிந்திய திரையுலகம் 1980கள்  ஒரு பொற்காலமாக திகழ்ந்ததது  அப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் அறிமுகமானவர்கள் முன்னணி கதாநாயகர்களாகவும்  கதாநாயகியாகளாகவும் பிரபலமானார்கள். சினிமாவில் நீண்ட காலம் நீடித்து பல சாதானைகளை செய்தார்கள்ர். அப்போதைய நடிகர்களைத்தான் ஒவ்வொரு மொழியிலும் இன்றைக்கும் சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.    . 80-களின் திரையுல நடிகர்-நடிகைகள் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து பேசுவது வழக்கம்.   சென்னையில்தான் இந்த சந்திப்புகள் நடந்துள்ளன. இந்த ஆண்டுக்கான சந்திப்பு ஐதராபாத்தில் உள்ள நடிகர் சிரஞ்சீவி வீட்டில் நடந்தது. இதில் நடிகர்கள் சரத்குமார், பாக்யராஜ், பிரபு, சிரஞ்சீவி, ஜெயராம், சுமன், சுரேஷ், ரகுமான், நாகார்ஜுனா, மோகன்லால், வெங்கடேஷ், ஜெகபதி பாபு, ரமேஷ் அரவிந்த், பானுசந்தர், நடிகைகள் குஷ்பு, ராதிகா, ஜெயசுதா, ஷோபனா, சுமலதா, நதியா, ராதா, அமலா, சரிதா, லிசி, பூர்ணிமா, ஜெயபிரதா, ரேவதி, மேனகா, அம்பிகா, சுகாசினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.    அனைவரும் வழக்கம்போல ஒரே நிறத்தில் ஆடை அணி

அரிசி குடும்ப அட்டையாக மாற்றுவதற்கான காலக்கெடு

Image
        சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி குடும்ப அட்டையாக மாற்றுவதற்கான காலக்கெடு மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.        தமிழகத்தில் ரேசன் பொருட்களை பெறுவதற்கான குடும்ப அட்டைகளில் 10 லட்சத்திற்கும் அதிகமானவை சர்க்கரை குடும்ப அட்டகளாக உள்ளன.  இவற்றை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற விரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி இன்றோடு  முடிவடையும் நிலையில் இதனை வரும் 29-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான சர்க்கரை குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் இதுவரை 1 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. எனவே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மேலும் மூன்று நாட்கள் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.    சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி அட்டையாக மாற்ற விரும்புவோர் வட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும், இணையதளம் வாயிலாக www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியிலும் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

நீங்கள் அனைவருமே முதல்-மந்திரிகள் தான் உத்தவ் தாக்கரே

Image
நான் மட்டுமல்ல, நீங்கள் அனைவருமே முதல்-மந்திரிகள் தான் உத்தவ் தாக்கரே   நா ன் மட்டுமல்ல நீங்கள் அனைவருமே இம்மாநிலத்தின் முதல்-மந்திரிகள் தான் என்று எம்எல்ஏக்கள் முன்னிலையில் உத்தவ் தாக்கரே கூறினார். ,   மராட்டிய  மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக  சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே விரைவில் பதவி ஏற்க உள்ளார். இன்று மாலை மும்பையில் நடைபெற்ற 3 கட்சிகளின் எம்.எல்.ஏக்கள்  ஆலோசனை கூட்டத்தில் உத்தவ் தாக்கரே ஒருமனதாக முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.   இந்த நிலையில் சிவசேனா,தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் முன்னிலையில் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-   ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து தேசத்துக்கு புதிய பாதையை காட்டியுள்ளோம். மாநிலத்தின் முதல்-மந்திரி ஆவேன் என ஒருபோதும் கனவு கண்டது இல்லை. சோனியா காந்திக்கும் மற்றவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சிவசேனா தொண்டர்களுக்கு நன்றி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் நன்றி. முக்கியமான நேரத்தில் ஒற்றுமை காத்த  அனைத்து எம்எல்ஏக்களுக்கும் நன்றி. நான் எதற்கும் அஞ்சவும் இல்லை, பொய்கள் எ

பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000

Image
பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000                  பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.          கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்து பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் பேசியதாவது:-                      பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 1000 ரூபாய் வழங்கப்படும். அரிசி ரேசன் அட்டை வைத்திருப்போருக்கு இந்த தொகை வழங்கப்படும். மேலும் பொங்கல் வைப்பதற்கான ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சையுடன் கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும்” என்றார்.

இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்  பேச்சுவார்த்தை

Image
இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்  பேச்சுவார்த்தை இசையமைப்பாளா் இளையராஜாவுக்கு ஆதரவாக பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துடன் பேச திரையுலகம் மற்றும் ரசிகா்களுக்கு இயக்குநா் பாரதிராஜா அழைப்பு விடுத்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ. இங்குதான் பல ஆண்டு காலமாக இளையராஜா இசையமைத்து வருகிறார். அவருக்கென தனி தியேட்டா் ஒதுக்கி கொடுத்திருந்தது பிரசாத் நிர்வாகம்.  தற்போது வருமானத்தை பெருக்கும் விதமாக, எல்.வி.பிரசாத்தின் வாரிசுகள் இளையராஜாவின் ஸ்டூடியோவை இடித்து விட்டு, மாற்று தியேட்டா் கொண்டு வர முடிவு செய்தனா். இதனால் அங்கே இப்போது இளையராஜாவின் இசைப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திரையுலகினா் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினரை சந்தித்து இளையராஜாவின் காலம் வரை அவரை அந்த ஸ்டூடியோவை பயன்படுத்திக் கொள்ள அனுதிக்க கேட்டு பேச இருக்கிறார்கள். இது தொடா்பாக பாரதிராஜா அவர்கள் ''அரை நூற்றாண்டு கடந்து தமிழ் சினிமாவை இன்றும் தன் இசையால் உலகத் தமிழா்களின் நெஞ்சங்களை தொடா்ந்து தன்வசப்படுத்திக் கொண்டிருக்கும் இளையராஜாக்வுகும், பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட கருத்த

இளையராஜா விழாவில் பிரதமர் மோடி

Image
இளையராஜா விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு? மோடியின் நம்பிக்கைக்குரியவரும், பா.ஜ.க. நிர்வாகிகளிடம் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் மோடி கலந்துரையாடிய நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவருமான ப்ரித்வி. தமிழ்நாட்டு அரசியலில் சினிமாவுக்கு இருக்கும் தாக்கத்தை உணர்ந்து, நட்சத்திரக் கலைவிழாவை சென்னையில் நடத்த அனுமதி பெற்றிருக்கிறார்    சினிமா ஸ்டார்கள் சங்கமிக்கும் விழாவாக நடத்தி அதில் மோடி கலந்துகொள்ள வைப்பதன்  மூலமாக பா.ஜ.க.வின் மீதான பார்வையை தமிழகத்தில் அதிகம் பதியவைக்க முடியும் என்ற அடிப்படையில், "இளையராஜாவுக்கு சென்னையில் பாராட்டு விழா' என்ற பெயரில் கலைவிழா நடத்தி, அதில் ஒட்டுமொத்த தென்னிந்திய திரைப்பட உலகமே கலந்துகொள்வதற்கான கான்செப்ட்டை தயாரித்து, மோடியின் ஒப்புதலையும் பெற்றுவிட்டது ப்ரித்வி டீம்.     தேதி குறிக்கப்பட்டதும் விழாவுக்கான செயல்திட்டங்கள் விறுவிறுப்படையும்...'. மேலும் நட்சத்திர கலை விழாவில் மோடி பங்கு பெறுவதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளதாகவம்  சொல்லப்படுகிறது. இந்த விழாவில் தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து பிரபலங்களும்ம் கலந்து கொள்ள ஏற்பாடு நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை

Image
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-   “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பசலனம் காரணமாக, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும்.   சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.   தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தங்கச்சிடம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 7 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சிறந்த செய்திவாசிப்பாளர் ரஞ்சித்

Image
நேர்மையான           மக்கள்_விருதுகள் . இந்த வருடத்தின் அடுத்த அங்கீகாரம்.  சிறந்த_செய்திவாசிப்பாளர்   விருதினை திரு ரஞ்சித் அவர்கள் பெற்றுள்ளார். இந்த கௌரவத்தை   Sparkling_Event s ' அவருக்கு வழங்கியுள்ளது இந்த பரிசு குறித்து திரு ரஞ்சித் அவர்கள்     ' பாலிமர்_தொலைக்காட்சி   இல்லை என்றால், இந்த விருது இல்லை. உணர்ச்சியோடு செய்தியின் தன்மை அறிந்து செய்தி வாசிக்க முழு சுதந்திரம் தந்ததால்தான் எனக்கென்று தனி ஸ்டைல் உருவாக்கி அதை மெருகேற்றினேன். பல நேரங்களில் அதுவே ட்ரெண்டிங்கிலும் வந்தது. தொடர்ந்து ஊக்கமளித்து வரும் என் பெற்றோர், மனைவி, முகநூல் சொந்தங்கள், என் மகள் அனைவருக்கும் எனது முத்தங்கள். தொடர்ந்து இது போல விருதுகளும் அங்கீகாரமும் கிடைத்திட உங்கள் ஆதரவு இன்று போல் என்றும்' தெரிவித்தார்

டாக்டர் ராமதாசை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரிப்பு

Image
            சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.   . மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் என்ற முறையிலும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக  கட்சி நிறுவனர் என்ற வகையிலும் அவரை முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி சம்பத் உடனிருந்தனர்.

மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்

Image
மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசரச்சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.   ,   மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம், மேயர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களும் மறைமுகத்தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர்  என்று அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அஜித். கண்ணியமானவர் ;

Image
          தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தும் டீசென்ட் நடிகர் அஜித். கண்ணியமானவர் ; தொழில் பக்தி மிக்கவர் -அமைச்சர் ஜெயக்குமார். அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-   உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுகவினர் அச்சத்தில் உள்ளனர்.  உள்ளாட்சி தேர்தலை தடுப்பதற்கான முயற்சியில் திமுக இறங்கி உள்ளது.   ரஜினி, கமல், விஜய் எல்லாம் மாய பிம்பங்கள், கானல் நீர் போன்று காணாமல் போய்விடுவார்கள். அதிமுக கூட்டணி முன் ரஜினி கமல் இணைப்பெல்லாம் தூள் தூளாகும்.   தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தும் டீசென்ட்  நடிகர் அஜித்.  நடிகர் அஜித் கண்ணியமானவர் ; தொழில் பக்தி மிக்கவர் என கூறினார் .

வெளிநாட்டு நிறுவனங்கள் முதலமைச்சருடன் ஆலோசனை

Image
முதலமைச்சருடன் ஆலோசனை. ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் மற்றும் தொழிலதிபர்கள் முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவது தொடர்பாக ஆலோசனை.

மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழ்நிலை ரஜினிகாந்த்

Image
கோவா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டி! மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்.   ஓ.பன்னீர்செல்வம் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது "பதில் கூற விரும்பவில்லை" என பேட்டி! [நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்- கமல்ஹாசன்.   ரஜினி சொன்ன அதிசயம் உண்மைதான்.   நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்; தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம்- கமல்ஹாசன்.   நல்ல தலைவராக இருக்கும்பட்சத்தில் கோத்தபய ராஜபக்ச நியாயமான ஆட்சியை தர வேண்டியது அவரது கடமை- கமல்ஹாசன்.  

கமலை கிண்டல் செய்த இளையராஜா

Image
கமலை கிண்டல் செய்த இளையராஜா        க மல் 60 நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனை இளையராஜா கிண்டல் செய்து ரசிகர்களை  கவர்ந்தார் .  இந்த நிகழ்வில் இசைஞானியின் இசைக்கச்சேரி நடைபெற்றது        கமல் 60 ஆண்டுகள் சினிமாவில் அவர் சாதனை புரிந்ததை கவுரவிக்கும் வகையில் அவருக்கு விழா17.11.22019 அன்று நடத்தப்பட்டது.   சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த விழாவில்  கமலுடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், அவரது நண்பர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.    உங்கள் நான் எனும் இந்த பிரமாண்ட விழாவில் கமலுடன் 80களில் ஜோடியாக நடித்த பல கதாநாயகிகள் பங்கேற்றனர்.  பங்கேற்க வந்த சகோதரிகளான அம்பிகாவையும் ராதாவையும் நடிகர் கமல்ஹாசன், மேடையிலிருந்து கீழே இறங்கி சென்று வரவேற்றார். அம்பிகா, கமலுக்கு கை கொடுத்து வாழ்த்து கூறினார். ஆனால் நடிகை ராதா கமலை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டர். இதனை மேடையிலிருந்து கவனித்த இளையராஜா, கமல் சார் என அவசரமாக அழைத்தார். ஆனால் அது கமலுக்கு கேட்காததால் அவர், தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார் இதையடுத்து இப்போதெல்லாம் நாங்கள் கூப்பிட்டால் உங்களுக்கு காது கேட்

ஜி யோ மி 5G

Image
வருகிற 2020-ம் ஆண்டு முதல் ஜியோமி சார்பில் வெளியாகும் அத்தனை ஸ்மார்ட்போன்களும் 5ஜி தொழில்நுட்பத்துடனே இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி

Image
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி . முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது சமாதியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.   இதேபோன்று முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.   

காவியமான கருப்பு வெள்ளை திரைப்படங்கள் ---அவள் அப்படிதான்

Image
காவியமான கருப்பு வெள்ளை திரைப்படங்கள் அவள் அப்படிதான் திரைப்படம்     ருத்ரய்யா... கிட்டத்தட்ட 36 ஆண்டு காலம் தமிழ் சினிமா தவறாமல் உச்சரிக்கும் படைப்பாளியின் பெயர் இது. இத்தனைக்கும் ருத்ரய்யா இயக்கியவை இரண்டே இரண்டு படங்கள்தான். இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் பெரிதாகப் போகவில்லை. ஆனால் ருத்ரய்யாவுக்கென்று தமிழ் சினிமாவில் ஒரு பக்கத்தை உருவாக்கும் அளவுக்கு அழுத்தமான பதிவுகளாக அமைந்தன.   ஒன்று அவள் அப்படித்தான். இன்னொன்று கிராமத்து அத்தியாயம்.    சி . ருத்ரைய்யா  தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட ஒரு இயக்குனராக நுழைந்தவர்.இவரின் சொந்த ஊர் சேலம் அருகிலுள்ள ஆத்தூர். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்தவர்.சென்னை தரமணியில் உள்ள திரைப்படக் கல்லூரியில் திரைக்கதை எழுத்து மற்றும் இயக்கம் படித்தார்      இவரது முதல் படமான " அவள் அப்படித்தான் ", முன்னணி நட்சத்திரங்களான  கமலஹாசன் ,  ரஜினிகாந்த்  மற்றும்  ஸ்ரீபிரியா  ஆகியோர் நடித்திருந்தபோதும்  அவர்களிடமிருந்து வழமையாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களைக் கொண்டிராது,     வேறுபட்ட, உளவியல் தொடர்பான கதையைமைப்பைக் கொண்டிருந்ததால் தோல்வியுற்

மெட் ரோ ரயில் களில் பொழுது போக்கு அம்சங்கள்

Image
மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இலவச பொழுதுபோக்கு அம்சங்கள்: புதிய செயலி ஜனவரியில் அறிமுகம் சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்காக பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த செல்லிடப்பேசி செயலி, வரும் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தினசரி ஒரு லட்சம் பயணிகள்: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி, விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், பரங்கிமலை-சென்ட்ரல் வரை இரண்டாவது வழித்தடத்திலும் திட்டப்பணிகள் நிறைவடைந்து, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி ஒரு லட்சம் போ வரை பயணம் செய்கின்றனா். இந்தப் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்து வருகிறது. இணைப்பு வாகன சேவை, இணைய வசதி(இண்டா்நெட்) உள்பட பல்வேறு வசதிகளை பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்கள்: இந்நிலையில், மெட்ரோ ரயில் பயணிகளுக்காக பொழுதுபோக்கு அம்சங்களுடனான செல்லிடப்பேசி செயலி, வரும் ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மெட்ரோ ரயில் பயணத்தின்போது, பயணிகள் இந்த செயலியை பதிவிறக்கும் செய்து,

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் புதிய கோவில்

Image
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் புதிய கோவில் கட்டப்படும்        திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புவனேஸ்வர், மும்பை மற்றும் டெல்லி ஆகிய 5 இடங்களில் உள்ள திருமலை- திருப்பதி தேவஸ்தான வெங்கடேஸ்வர சாமி கோவிலில் உள்ளூர் ஆலோசனை குழுக்கள் செயல்பட்டுவருகிறது. இந்த குழுக்களின் தலைவர்களை  சமீபத்தில் ஆந்திர மாநில அரசு தேர்வு செய்து முறைப்படி அறிவிப்பு செய்ததது   நேற்று சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை- திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் உள்ளூர் ஆலோசனை குழுவின் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா . விழாவுக்கு தியாகராயநகர் திருமலை-திருப்பதி தேவஸ்தான கோவில் உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜெ.சேகர் ரெட்டி தலைமை தாங்கி  திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைவர் ஓய்.வி.சுப்பாரெட்டி, துணைத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த குழுவின்  ஆலோசகர்களாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.பி.கே.வாசுகி, பி.கலையரசன் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.ராஜேந்திரன் பதவி ஏற்றனர். துணைத்தலைவர்களாக ஆனந்தகுமார், பிரபாகர், அனில்குமார் ஆகியோர் பதவி ஏற்றனர். மேலும்

தமிழ் மொழி கடிகாரங்கள்

Image
வாட்ச்சில் தமிழ் டைட் டன் நிறுவனம் . நம்ம தமிழ்நாடு என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்ட வாட்ச் மாடல்களில் தமிழ் மொழியை டைட்டன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.         டைட்டன் வாட்ச் நிறுவனம் புதுமை புகுத்துவதில் தனித்துவமானது ஆகும். இந்த நிறுவனத்தின் சார்பில் சாதாரண மக்கள் கோட்டீஸ்வரர்கள் அணியும் வகையிலான வாட்ச்களை நிறுவனம் விற்பனை செய்கிறது. தற்போது வாட்சில் தமிழ் மொழியை புகுத்தும் முயற்சியில் டைட்டன் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.         அதன்படி டைட்டன் தமிழ்நாடு என்ற பெயரில் தமிழ்மொழி மற்றும் தமிழர்களின் கலையை போற்றும் விதமாக அதன் நிறுவன வாட்சுகளில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் வாட்ச்சின் உள்ளே தமிழக கோவில் தூண்கள், யாழி, கோபுரங்களை பொறித்துள்ளது. அதற்கு நம்ம தமிழ்நாடு வாட்ச் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் அணியும் வாட்ச்களில் காஞ்சிபுரம் புடவைகளில் பதிக்கப்படும் மயில் டிசைனை உள்ளே பதித்துள்ளனர். அதற்கு காஞ்சிபுரம் வாட்ச் பெயரிடப்பட்டுள்ளது.                  இதுகுறித்து டைட்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ்தான். காஞ்சி

 உலகின் மிக உயரமான 111 அடி உயர சிவலிங்கம்

Image
     உலகின் மிக உயரமான 111 அடி உயர சிவலிங்கம் கன்னியாகுமரி மாவட்டத்தில்  மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் கோலார் அருகே கம்மசந்த்ரா கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள 108 அடி உயர சிவலிங்கமே உலகின் மிக உயரமான சிவலிங்கம் என்ற பெருமையை பெற்றிருந்தது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லை பகுதியான உதயம் செங்கல் மகேஸ்வர சிவபார்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111.2 அடி உயர சிவலிங்கம் அந்த பெருமையை பெறுகிறது. இந்த சிவலிங்கம் அமைக்கும் பணி நிறைவடைந்து, அதன் உட்பகுதியில் பக்தர்கள் சென்று பார்க்கும் வகையில் கட்டமைப்பு பணி நடந்தபோதே, இந்தியா புக் ஆப் ரிக்கார்டு, ஆசியா புக் ஆப் ரிக்கார்டு ஆகிய புத்தகங்களில் உலகிலேயே உயரமான சிவலிங்கம் என இடம்பெற்றுவிட்டது. இந்த சிவலிங்கம் மக்கள் பார்வைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது. கோயில் மடாதிபதி மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் குத்துவிளக்கேற்றி சிவலிங்கத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பிரம்மாண்ட சிவலிங்கத்தை வழிபட்டனர். லிங்கத்தினுள் சிற்பங்கள்இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் கூறும்போது, “உலகிலேயே உ

காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்தின் ஆண்டு விழா

Image