Posts

Showing posts from July, 2022

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட நாள்

Image
  : வரலாற்றில் இன்று - ஜூலை 31, 1805 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட நாள். தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் ஒருவர். 1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன்நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் ஆங்கிலத் தளபதி கர்னல் மேக்ஸ்வெல் தலையைக் மொட்டையடித்துச் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டது குறிப்பிடத்தக்கது. போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக்கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர்.  தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31 ஜூலை 2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு தமிழக அரசால், இவர் தூக்கிலிடப்பட்ட ஊரான சங்ககிரியில் இவருக்கு ஒரு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.. கிண்டியிலுள்ள இவரது உருவச்சிலையும் புதுப்பிக்கப்பட்டு, இவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் வெளியிடப்பட்டது.

திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்த மணிவண்ணன் பிறந்த நாள் (ஜூலை 31,

Image
  . : இன்று திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்த மணிவண்ணன் பிறந்த நாள் (ஜூலை 31, 1954 - ஜூன் 15, 2013) மணிவண்ணன் 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும், 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவிடம் சேர்ந்து உதவி இயக்குனராக பணிபுரிந்த மணிவண்ணன், பின்னர் தனியாக திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். . சினிமாவில் தீவிரமாக இயங்கிக்கொண்டே அரசியல் இயக்கங்களிலும் பங்கேற்றுவந்தவர் மணிவண்ணன். தொடக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்தவர் பிறகு மார்க்சியம். தமிழ்த் தேசியம், ஈழ ஆதரவு ஆகிய அரசியல் நிலைப்பாடுகளை எடுத்தார்.  கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு உள்ளிட்ட பகுத்தறிவு, முற்போக்குக் கருத்துகளைப் பின்பற்றிவந்த மணிவண்ணன் அவற்றைத் தன் படங்கள் வாயிலாக வலியுறுத்தினார். பிரச்சாரமாக அல்லாமல் ஜனரஞ்சகக் கலை அம்சத்துடன் முற்போக்குக் கருத்துகளைக் கதைகளுக்குள்ளும் காட்சிகளுக்குள்ளும் பொருத்தினார். தான் எழுதிய, இயக்கிய படங்களில் மட்டுமல்லாமல் நடிகராக நடித்த படங்களிலும் சமூக அவலங்களைப் பகடி செய்யும் வசனங்களை முற்போக்குக் கருத்துகளையும் நகைச்சுவை வழியாக நுழைக்

செய்குத்தம்பி பாவலர் பிறந்த தினம் இன்று.

Image
   ஜூலை 31, வரலாற்றில் இன்று. செய்குத்தம்பி பாவலர் பிறந்த தினம் இன்று. சதாவதானி செய்குத்தம்பி பாவலர்(ஜூலை31, 1874 - பெப்ரவரி 13, 1950) தமிழ்ப் பெரும் புலவர். சீறாப்புராணத்திற்குச் சிறந்ததோர் உரையெழுதியவர். கோட்டாற்றுப்பிள்ளைத்தமிழ், அழகப்பாக் கோவை முதலிய சிற்றிலக்கிய நூல்களையும், சில நாடக நூல்களையும் எழுதியவர். கூர்த்தமதி படைத்து விளங்கியதால் ஒரே சமயத்தில் நூறு வகையான செயல்கள் செய்யும் சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர். தமிழ் இலக்கண இலக்கியங்களில் சிறந்த ஞானம் பெற்ற செய்குத்தம்பி பாவலர் அவர்கள் 1907-ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி சென்னையில் தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் சதாவதான நிகழ்ச்சிகள் செய்து பாராட்டுப் பெற்று சதாவதானி செய்குத்தம்பி பாவலர் என போற்றப் பெற்றவர். ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்திலும் கலந்துகொண்டார். 1950 பிப்ரவரி 13-இல் பாவலர் காலமானார். அறிஞர் பலரும் கலந்து கொண்ட அந்த இரங்கற் கூட்டத்துக்கு கவிமணிதேசிக விநாயகம் பிள்ளை தலைமை தாங்கினார். " இந்திய அரசால் 31, டிசம்பர், 2008 அன்று இவரது நினைவாகச் சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டது.

இந்தியாவில் முதன் முதலில் செல்போன் சேவை

Image
 : ஜூலை 31, வரலாற்றில் இன்று. இந்தியாவில் முதன் முதலில் செல்போன் சேவை துவக்கி வைக்கப்பட்ட நாள் இன்று  1995 ஆம் ஆண்டு இதே நாளில் முதன் முதலாக மக்களுக்கான செல் போன் சேவை – கொல்கத்தா நகரில் துவங்கியது. 1995 ஜூலை 31 அன்று கொல்கொத்தா நகரில் நடைபெற்ற விழாவில் அன்றைய மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் சுக்ராம் அவர்கள், மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அவர்களுடன் முதல் செல்போன் மூலம் பேசி தொடங்கி வைத்தார். மோதி - டெல்ஸ்ரா என்கிற இந்திய ஆஸ்திரேலிய கூட்டு வர்த்தக நிறுவனம் இந்த சேவையை வழங்கியது. என்றாலும் அதற்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதமே இது வாடிக்கையாளர் பயன்பாட்டுக்கு வந்தது

மாவீரன் உத்தம் சிங் தூக்கிலிடப்பட்ட தினம்

Image
  ஜூலை 31 - வரலாற்றில் இன்று - 1919ம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலைகளை நிகழ்த்திய பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு டயரை சுட்டுக் கொள்வதே தனது வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு அதற்கான தருணத்துக்காக காத்திருந்து 1940ம் ஆண்டு தனது லட்சியத்தை நிறைவேற்றிய மாவீரன் உத்தம் சிங் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று –ஜூலை 31, 1940.அந்தக் கொலை வழக்கில், உத்தம் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்."இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக் கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும்" என்று முழங்கினர் உத்தம் சிங். ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தே மாதரம் கோஷத்துடன் தூக்குக் கயிறை முத்தமிட்டார்.

சாகித்ய அகாடமி விருதுபெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் சா கந்தசாமி

Image
   சாகித்ய அகாடமி விருதுபெற்ற புகழ்பெற்ற  எழுத்தாளர் சா கந்தசாமியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று ஜூலை 31,  2020.  சா.கந்தசாமி 1940 ஜூலை 23 அன்று பிறந்தவர். அவருடைய 15-வது வயதில் 1955-ல் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. வில்லிவாக்கம் சிங்காரம்பிள்ளை உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார். பள்ளி நாட்களிலேயே வாசிப்பு வேட்கை அவரிடம் மிகத் தீவிரமாக இருந்திருக்கிறது. சாயாவனம் நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர் சா. கந்தசாமி. 1940-ம் ஆண்டு மயிலாடுதுறையில் பிறந்தவர். சகாக்களுடன் இணைந்து கசடதபற என்ற இலக்கிய இதழை உருவாக்கினார். பின்னர் குறும்படங்களையும் இயக்கினார் சா. கந்தசாமி. சுடுமண் சிலைகள் தொடர்பான அவரது குறும்படம் சர்வதேச விருது பெற்றது. சிற்பி தனபால், ஜெயகாந்தன், அசோகமித்திரன் ஆகியோரது வாழ்வை குறும்படங்களாக்கி உள்ளார். 1989-ல் சா. கந்தசாமியின் காவல் தெய்வங்கள் ஆவணப்படம், சைப்ரஸ் விழாவில் முதல் பரிசு பெற்றது. சா. கந்தசாமியின் விசாரணை கமிஷன் நாவலுக்கு 1998-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இலக்கியக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் எனப் ப

முன்ஷி பிரேம்சந்த் (Munshi Premchand) பிறந்த தினம்

Image
 இந்தி இலக்கிய உலகின் முடிசூடா மன்னராக விளங்கிய முன்ஷி பிரேம்சந்த் (Munshi Premchand) பிறந்த தினம் இன்று (ஜூலை 31). உத்தரப் பிரதேச மாநிலத்தில் பனாரஸ் அருகே லம்ஹி கிராமத்தில் (1880) பிறந்தார். துனியா கா அன்மோல் ரதன்’ என்ற இவரது முதல் சிறுகதை 1907-ல் வெளியானது. தொடர்ந்து பல நூல்கள் வெளிவந்தன. உருதுவிலும், பிறகு இந்தியிலும் எழுதினார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அரசு வேலையைத் துறந்தார். முழு மூச்சாக இலக்கியப் பணியில் இறங்கினார்.பனிரெண்டுக்கும் மேற்பட்ட புதினங்கள், இருநூற்று ஐம்பது சிறுகதைகள், எண்ணற்ற கட்டுரைகள் மேலும் பல்வேறு மொழிபெயர்ப்புகள் என்று சாம்ராட் பட்டத்திற்கு தகுதியானவர்தான் பிரேம்சந்த். பிரேம்சந்தின் காலம் என்பது ஸ்வாமி விவேகானந்தர், கோகலே, திலகர் அதன்  காந்தி என்று பல்வேறு தலைவர்கள் நாட்டில் பெரும் தாக்கத்தை உருவாக்கிய காலம். அது பிரேம்சந்தின் படைப்புகளிலும் காணலாம். சுதந்திர போராட்டம், ஏழ்மை ஒழிப்பு, கல்வி சீர்திருத்தம், தொழிலாளர்களின் ஒடுக்கப்பட்ட நிலைமை என்ற கருத்துக்கள் இவர் படைப்புகளில் விரவி இருப்பதை நாம் காணலாம். தமிழகத்தில் பாரதி போன்று ஹிந்த

கருமுத்து தியாகராஜன் செட்டியார் நினைவு தினம்

Image
  ஜூலை 29,  கலைத் தந்தை என்று போற்றப்பட்டவரும், கல்வியாளருமான கருமுத்து தியாகராஜன் செட்டியார் நினைவு தினம் இன்று(1974). l சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். குடும்பம் இலங்கையில் துணி வணிகத்தில் ஈடுபட்டிருந்தது. கொழும்பு புனித தாமஸ் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கையில் தமிழர்களுக்கு அடையாள சூடு போடும் வழக்கத்தை தடுத்து நிறுத்தக் காரணமாக இருந்தவர். இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர் நலனுக்காக ஒரு பத்திரிகை நடத்தினார். l இந்தியா திரும்பியவர், காங்கிரஸில் 1917-ல் சேர்ந்து தொழிலாளர் தலைவராகவும், மாகாண காங்கிரஸ் கமிட்டி செயலாளராகவும் இருந்தார். மதுரையில் 1925-ல் மீனாட்சி மில் நிறுவனத்தைத் தொடங்கி, நூற்பாலை, நெசவு ஆலையையும் அமைத்தார். தொடர்ந்து பல ஊர்களில் நூற்பு ஆலைகளை நிறுவினார். l மீனாட்சி ஆலையின் ஆரம்பகால இயக்குநர்களாக தேசியத் தலைவர்கள் பலரும் இருந்துள்ளனர். மகாத்மா காந்தி, நேதாஜி உள்ளிட்ட தலைவர்கள் மதுரைக்கு வந்தபோது இவரது விருந்தினர்களாகத் தங்கினார்கள் என்று கூறப்படுகிறது. l நலிந்த ஆலைகளை ஏற்று தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, வெற்றிகரமாக நடத்தியவர். இந்தியாவின் மாபெரும் தொழில் மேதைகளில் ஒருவர

பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரியின் பிறந்த தினம்

Image
 ஜூலை 29, தொல்காப்பியத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும், பல்கலைக்கழகத்தின் வாயிலாக தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆய்வறிஞருமான பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரியின் பிறந்த தினம் இன்று. ஜூலை 29, 1890 தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றார். தான் கணிதத்தில் பட்டம் பெற்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியிலும் , திருவையாறு மன்னர் கல்லூரியிலும் , அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பல்வேறு பொறுப்புகள் வகித்து , ஓய்வு பெற்றார். தொல்காப்பியத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும் இவரே. தொல்காப்பிய நூலுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் உரை எழுதியுள்ளார். குப்புசாமி ஆய்வு மையமும், அண்ணாமலை பல்கலைக் கழகமும் இதனை நூல்களாகக் கொண்டு வந்தன. பதஞ்சலி முனிவர் எழுதிய ‘மஹாபாஷ்யம்’ நூலினைத் தமிழில் மெழிபெயர்த்தார். பாணினியின் நூல்கலையும் தமிழில் கொண்டுவந்தார். புறநானூறு பாடல்களை ஆய்வு செய்து முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். விளக்கமுறை இலக்கணம், வரலாற்று இலக்கணம், ஒப்பீட்டு இலக்கணம் என மூவகை இலக்கணங்களையும் எழுதியுள்ளார். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் மட்டுமின

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் நினைவு நாள்

Image
  ஜூலை 29, 1891 இன்று ஈஸ்வர சந்திர வித்யாசாகர் நினைவு நாள் ஈஸ்வரர் சந்திர பந்தோபாத்யாயா என்கிற ஈஸ்வர சந்திர வித்யாசாகர் (Ishwar Chandra Vidyasagar, செப்டம்பர் 26, 1820 - சூலை 29, 1891) என்பவர் கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் பெண் கல்வி முன்னேற்றம், விதவைத் திருமணம் போன்ற சமூக மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிக ஈடுபாடு காட்டினார் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், மேட்னிபூர் அருகிலுள்ள பிர்சிங்கா எனும் ஊரில் செப்டம்பர் 26, 1820 ஆம் ஆண்டு பிறந்தார். 1839 ஆம் ஆண்டில் இந்து சட்டக்குழு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1841 ஆம் ஆண்டில் “நியாயா” மற்றும் “ஜியோதிஷ்” தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற இவர் வேதங்களையும், சமஸ்கிருத இலக்கியங்களையும் ஆழ்ந்து படித்தார். இவருக்கு சமஸ்கிருதக் கல்லூரி “வித்யாசாகர்” எனும் பட்டத்தை அளித்தது. இவர் வங்காள மொழியில் 30 நூல்களும், சமற்கிருதத்தில் 17 நூல்களும், ஆங்கிலத்தில் 5 நூல்களும் என மொத்தம் 52 நூல்களை எழுதியிருக்கிறார். “விதவா விவாஹ்”, “பிரந்தி விலாஸ்”, “அக்யான் மஞ்சரி”, “சிதார் பான்பாஸ்”, “பீட்டல் பஞ்ச்வின் சாடி”, “வியாக்ரன் கௌ

உலக புலிகள் நாள்

Image
 ஜூலை 29 - உலக புலிகள் நாள்  இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு நகரங்களில் புலிகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவின் தேசிய விலங்கு புலி. ஆனால் இன்று புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் உலக அளவில் புலிகளின் எண்ணிக்கை ஒரு லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டு 3200 ஆக இருந்த இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 3 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்தியாவில் தற்போது 1,706 புலிகள் உள்ளன. அடுத்ததாக, மலேசியாவில் 500 புலிகள் காணப்படுகின்றன. இதேநிலை நீடித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் குறைந்துவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புலிகளின் எண்ணிக்கை சீராக இருந்தால் தான், வனத்தின் இயல்பு நிலையை பாதுகாக்க முடியும். இல்லையெனில் காடுகளின் வளம் குறையும்..

தொழிற்துறை ஜாம்பவான் ஜே.ஆர்.டி.டாடா பிறந்த தினம்

Image
 ஜூலை 29,  தொழிற்துறை ஜாம்பவான் ஜே.ஆர்.டி.டாடா பிறந்த தினம் இன்று ஒரு மனிதனின் கனவுகள் ஒரு தேசத்தின் கட்டமைப்பில் மிகப்பெரும் பங்கு வகிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஜே.ஆர்.டி.டாடா. இளம் வயதில் பிரான்ஸ் தேசத்தில் இருந்த பொழுது விண்ணில் விமானத்தில் பறப்பதன் மீது காதல் கொண்டார். அவர் இந்தியாவின் முதல் விமானி ஆனார் . டாடா நிறுவனத்தில் தலைமைப்பொறுப்புக்கு வந்த பின்னர் அவர் உருவாக்கிய டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் தான் இந்தியாவின் ஏர் இந்தியாவாக உருவெடுத்தது. . இன்றைக்கு தொழில்துறையில் கலக்கும் டி.சி.எஸ்.டைட்டன் ,டாடா மோட்டார்ஸ் எல்லாமும் இவரின் கனவுக்குழந்தைகளே. இன்றைய இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி டாடாவில் தான் வேலை பார்த்தார். அவர் டாட்டாவை விட்டுக்கிளம்பும் பொழுது ஜே.ஆர்.டி. அவரை அழைத்தார் ,"சுதா !சமூகம் நமக்கு எவ்வளவோ தந்திருக்கிறது. அதனால் நாம் பலனடைந்து இருக்கிறோம் அதை நாம் கண்டிப்பாக திருப்பி செலுத்த வேண்டும். " என்றார் அதன் தாக்கத்தில் தான் இன்போசிஸ் அறக்கட்டளை எழுந்தது. தன்னுடைய பெயரில் ஒரு சொத்தைக்கொண்டு இறுதிவரை

சிற்பி பாலசுப்ரமணியம் பிறந்த தினம் இன்

Image
  இன்று ஜூலை 29, 1936  தமிழ் இலக்கியவாதி, கவிஞர் தமிழகத்தின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவரும் இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்றவருமான சிற்பி பாலசுப்ரமணியம்  பிறந்த தினம் இன்று  சிற்பி பாலசுப்பிரமணியம்  கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர் சிறந்த கவிஞர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர் ஆவார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தில் பிறந்தவர். கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1953 ஆம் ஆண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இடைநிலை கல்வி பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., ஆனர்ஸ் (தமிழ் இலக்கியம்) கற்று, 1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர். 1989-இல் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்று 1997 வரை சிறப்புறப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். மொழிபெயர்ப்புக்காகவும் (2001), படைப்பிலக்கியத்துக்காகவும் (2003) இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.தமி

அற்புதமான பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ்

Image
 அற்புதமான பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ் மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட  வேண்டும்..  அழகிய மிதிலை நகரத்திலே யாருக்கு ஜானகி காத்திருந்தாளை’ விட்டுவிட முடியுமா.அல்லது ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து, ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இது தான், என்னருகே நீ இருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன், என்ற எந்தப் பாடலைத் தான் விட்டுவிட முடியும்? இன்னும் அவரது முத்திரைப் பாடல்களான நிலவே என்னிடம் நெருங்காதே, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், பால் வண்ணம் பருவம் கண்டு, கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே, பார்த்தேன் சிரித்தேன், ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்…..எதைத் தான் விட முடியும்? கர்ணன் படத்தில், மழை கொடுக்கும் கொடையுமொரு என்று கம்பீர நாவுக்கரசர் சீர்காழி கோவிந்தராஜன் தொடங்கும் பாடலில், பி பி எஸ் நுழையும் என்ன கொடுப்பார் எதைக் கொடுப்பார் என்றிவர்கள் எண்ணும் முன்னே வரிகளும் சரி, குழந்தைக்காக படத்தில் ராமன் என்பது கங்கை நதி என்று அதே போல சீர்காழி தொடங்கி வைக்கும் மூவர் பாடலில், இயேசு என்பது பொன்னி நதி என்று பி பி எஸ் அடி எடுத்து, அப்புறம் சரணங்களிலும் மென்குரலில் இசைக்கும் இடங்களும் சரி ரசிகர்களுக்கு போ

ஒரே ஹெட்செட்டில் கேட்ட இசை/-அகதா-

Image
  ஒரே ஹெட்செட்டில் கேட்ட இசை ஒரே குடையுள் அன்பின் மழை கோப உதடுகளில் முதல் முத்தம் முதலில் பரிசளித்த புத்தகம் ஒன்றாக உண்ட ஐஸ் கிரீம் மாற்றி மாற்றி அருந்திய ஒற்றைத் தேநீர் இப்படி ஏதேனும் ஒன்று உன் நினைவைத் திறக்கும் சாவியாகிப் போகிறது எனக்கு நீ மட்டும் நினைவின் பேழையைப் பூட்டிவைத்துவிட்டு சாவியையும் தொலைத்துவிட்டதுபோலவே நடந்துகொள்கிறாய் -அகதா-

Sex இல்லாத ஆண் நட்பு

Image
  Sex இல்லாத ஆண் நட்பு கிடைக்குமா என ஒரு குழுவில் பெண் கேடிருந்தார். அதற்கு பலர் அப்படி வாய்ப்பில்லை என சொல்லி இருக்கின்றனர். என்னைப்பொறுத்தவரை சின்ன சின்ன சீண்டல், கேலி எல்லா ஆண்,பெண் நட்பிலும் இருக்கும். அட்கனக்ட் ஆகட்டும்,பொது வேலைகள் ஆகட்டும் பல நேரங்களில் நான் மட்டும் பெண்ணாக இருப்பேன். அப்போ எனக்கு எந்த ஜெண்டர் வித்தியாசமும் தெரிந்ததில்லை. பெரும்பாலும் சின்ன வயதில் இருந்து என்னை சக மனுஷியாக அணுகியவர்தான் பலர். பெண்ணாக கவனித்தவர்கள் மிகச்சிலரே. அவர்களில் சிலர் நெருக்கமாய் வர நினைத்தாலும் அடுத்தக்கட்டம் செல்ல சமூகத்தடைகள், மனத்தடைகள் மீறி செல்வது கடினம்தான். அப்படி இருக்கும் பொழுது ஆண், பெண் நட்பை அசிங்கப்படுத்துவது என செக்ஸை நான் சொல்ல மாட்டேன். அது மகிழ்வான இருப்பட்டவரின் தனிப்பட்ட விஷயம். அதில் இன்னொரு துணையின் மனக்காயம் சேர்ந்து இருப்பதால் மிக மிக கவனமாய் இருக்க வேண்டிய விஷயம். எனக்கு குறைந்தப்பட்சம் ஆயிரமாவது தூரத்து ஃப்ரெண்ட் என சொல்லும் ஆண் நட்புகளாவது இருக்கலாம். இதில் 20 பேர் நல்ல தொடர்பில் இருக்கலாம். 10 பேர் வேலைகளில், பர்சனலில் தினம் பயணிக்கலாம். இப்போ நான் இவர்

உலகையே வியக்கவைத்த தமிழன் லிடியன் நாதஸ்வரம்..?*

Image
  *இரு கைகளில் இரு பியானோ, இரு இசை..! உலகையே வியக்கவைத்த தமிழன்.. யார் இந்த லிடியன் நாதஸ்வரம்..?* 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடக்கிறது தொடக்க விழாவில் நடந்த கலைநிகழ்ச்சிகளில், தமிழகத்தை சேர்ந்த இளம் இசை கலைஞரான லிடியன் நாதஸ்வரம், ஒரே சமயத்தில் இரு கைகளிலும் இரு பியானோக்களை வாசித்து அரங்கில் குழுமியிருந்த வெளிநாட்டினரை வியப்பில் ஆழ்த்தினார். இரு கைகளிலும் இரு வேறு இசைகளை இசைத்ததுடன், கண்களை கட்டிக்கொண்டும் இசையமைத்து அசத்தினார். இன்று உலகமே வியந்து பார்க்கும் லிடியன் நாதஸ்வரம், ஏற்கனவே உலகை வியக்கவைத்தவர். யார் இந்த லிடியன் நாதஸ்வரம் என்று பார்ப்போம். தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் வர்ஷன் சதீஷ் என்பவரின் மகன் தான் லிடியன். இசை குடும்பத்தில் பிறந்ததால் இயல்பாகவே அவருக்கு இசை வந்தது. தனது 2வது வயதிலேயே சைலஃபோனை வாசிக்க ஆரம்பித்த லிடியனின் இசை திறமையை பார்த்த அவரது தந்தை அவருக்கு இசை கருவிகளை வாங்கி கொடுத்து வாசிக்க வைத்துள்ளார். சென்னையில் பிரபல பியானோ இசை கலைஞர் அகஸ்டியனிடம் முறையாக பியானோ கற்ற லிடியன், பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பள்ளியில் படித்தார். The Wo

*மனுவேல் ஆரோன்: இந்திய செஸ் விளையாட்டின் பிதாமகர்!*

Image
  *மனுவேல் ஆரோன்: இந்திய செஸ் விளையாட்டின் பிதாமகர்!* சென்னையில் செஸ் ஒலிம்பியாட் 2022 தொடங்கியுள்ள இந்த இனிய வேளையில், இந்திய செஸ் விளையாட்டின் பிதாமகர் என போற்றப்படும் மனுவேல் ஆரோன் குறித்து பார்ப்போம். சதுரங்க விளையாட்டில் அவரது அசாத்திய சாதனைகள் படைத்த அவர், மாடர்ன் டே சர்வதேச செஸ் விளையாட்டு நடைமுறைகளை இந்தியாவில் பிரபலப்படுத்திய ஜாம்பவான் எனவும் அறியப்படுகிறார். இன்று இந்தியாவில் செஸ் விளையாட்டில் சர்வதேச அளவில் சாதனை படைத்த பல கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். அதில் லேட்டஸ்ட் சென்சேஷனாக இருப்பவர் பிரக்ஞானந்தா. ஆனால், இவர்கள் அனைவருக்கும் முன்னவராக இந்தியா சார்பில் சர்வதேச அளவில் சாதித்தவர்தான் மனுவேல் ஆரோன். சர்வதேச மாஸ்டர் (இன்டர்நேஷனல் மாஸ்டர்) என்ற பட்டத்தை வென்ற முதல் இந்தியர். 20-ம் நூற்றாண்டில் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான 64 கட்டங்களில் தனது ஆட்சியை நிறுவியவர் மனுவேல் ஆரோன். நெதர்லாந்து வீரர் மேக்ஸ் யூவே, ஹங்கேரி வீரர் லாஜோஸ் போர்டிஷ், ஜெர்மன் வீரர் வூல்ஃப்கேங் உல்மன் போன்ற பல சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்களுடன் இவர் விளையாடிய போட்டிகள் புகழ்பெற்றதாக அறியப்படுகிறது. செஸ்

நினைவில் நிற்கும் ‘தில்லானா மோகனாம்பாள்’

Image
நினைவில் நிற்கும் ‘தில்லானா மோகனாம்பாள்’ சிறந்த இயக்கம், சிறப்பான ஒலிப்பதிவு, நேர்த்தியான வசனம், வசன உச்சரிப்பு, ஈஸ்ட்மென் கலர், சிவாஜி, பத்மினியின் நடிப்பு என அத்தனை அம்சங்களும் தில்லானா மோகனாம்பாள் என்ற திரைப் படத்தை காலம் கடந்து பேச வைத்துக் கொண்டிருக்கிறது. நாவலை படமாக்கும் போது ஏற்படும் இடர்கள் எதுவும் தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிறிதளவும் இல்லை என்று இலக்கியவாதிகளே சான்றளித்துள்ளனர். ஆம்.. தமிழ் திரைப்பட உலகில் மாபெரும் காவியமாக நடிகர் சிவாஜிகணேசன், நடிகை பத்மினி நடித்த ‘தில்லானா மோகனாம்பாள் 1968 ஆம் ஆண்டு இதே நாளில் வெளியானது. 54 வருடங்கள் கடந்தும் தில்லானா மோகனாம்பாள் சித்திரத்திற்கு இணையான ஒரு படம் உருவாகவில்லை என்று சினிமா விமர்சகர்கள் சிலாகித்து ட்ரெண்டிங் உருவாக்கி மகிழ்கிறார்கள். இச்சூழலில் இந்த தில்லானா மோகனாம்பாள் குறித்து நம் கட்டிங் கண்ணையா ஆந்தை ரிப்போர்ட்டர்-ரில் வழங்கிய சிறப்புக் கட்டுரை இதோ: 1968 ஆம் ஆண்டு ஜுலை 27ந்தேதி வெளியான இந்த படத்தை பார்க்காத தமிழ் ரசிகர்களே இருப்பார்களா என்பது சந்தேகம். பொன்விழா கண்ட தில்லானா மோகனாம்பாளை கோடிக் கணக்கானோர் பார்த்திருப்ப

திமுகவின் முதல் தலைவராக 1969 ஆம் ஆண்டு ஜூலை 27 ம் தேதி கலைஞர் கருணாநிதிபதவியேற்றார்

Image
  திமுகவின் முதல் தலைவராக 1969 ஆம் ஆண்டு இதே ஜூலை 27 ம் தேதிதான் பொறுப்பேற்றார் கலைஞர் கருணாநிதி. ஆம்.. திமுகவை தலைமையேற்றும், தமிழகத்தின் முதல்வராக ஆட்சியும் நடத்தி வந்த அண்ணா, 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். இதையடுத்து, கட்சிக்குள் நிலவி வந்த சில குழப்பங்கள் சரி செய்யப்பட்டு, 1969 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி கருணாநிதி, திமுக-வின் தலைவராக பதவியேற்றார்

ஏ.வி.எம் எனப்படும் ஆவிச்சி மெய்யப்ப செட்டியார் பிறந்த நாள்

Image
  ஏ.வி.எம் எனப்படும் ஆவிச்சி மெய்யப்ப செட்டியார் பிறந்த நாள் இன்று 28 ஜூலை சில அரியமனிதர்கள் தாங்கள் தோற்றுவிக்கும் நிறுவனங்களால் அறியப்படுகிறார்கள்... ஆனால், நிறுவனமே அவர்தான்... அவர்தான் நிறுவனம்... அப்படிப்பட்ட புகழ் ஒரு சிலருக்குத்தான் வாய்க்கிறது... அந்த அரிய மனிதர்தான் ஏ.வி.எம் எனப்படும் ஆவிச்சி மெய்யப்ப செட்டியார்ஓர் இந்தியத் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், நன்கறியப்பட்ட சமூகத் தொண்டாற்றியவரும் ஆவார். இவர் வடபழனியில் உள்ள ஏவிஎம் புரொடக்சன்சு என்ற நிறுவனத்தை நிறுவியவர். தமிழ்த் திரைப்படத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். தென்னிந்தியத் திரைத்துறையின் மும்மூர்த்திகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். (மற்ற இருவர் எஸ். எஸ். வாசனும் எல். வி. பிரசாத்தும்)[3]. தமிழ்த் திரையுலகில் ஐம்பது ஆண்டுகளாக மூன்று தலைமுறையினரால் வெற்றிகரமாக இயங்கிய ஒரே நிறுவனம் ஏவிஎம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இறக்கும் முன்னர் 167 திரைப்படங்களைத் தயாரித்திருந்தார். மெய்யப்பர் திரைத்துறையில் ஈடுபட்டது மட்டுமின்றி, பல நற்பணிகளும் செய்துள்ளார். இதற்கென ஏவி.எம் அறக்கட்டளை என்னும் அமைப்பை உருவாக்கினார். அத

உலக இயற்கை வள பாதுகாப்பு தினம்

Image
  உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் (World Nature Conservation Day) இன்று. உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.