Posts

Showing posts from August, 2022

பன்னிரண்டு ராசிகளுக்கான ராசியான பிள்ளையார்கள்*

Image
 பன்னிரண்டு ராசிகளுக்கான ராசியான பிள்ளையார்கள்* பிள்ளையார் என்றாலே பிறந்த குழந்தைக்கும் பிடிக்கும். குழந்தை முதல் கிழவர் வரை விநாயகப் பெருமானைக் கண்டாலே மனதில் தனி ஆனந்தம் பிறக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. விநாயகர் சதுர்த்தி நாளன்று களிமண் பிள்ளையாரை ஓடிச் சென்று வாங்கி வரும்போது வீட்டிற்குள் விநாயகப் பெருமான் பிரத்யட்சமாய் உள்ளே வந்துவிட்டதாய் ஓர் உணர்வு. வீட்டினில் பூஜை முடித்த பின்பு அன்றைய தினத்திற்குள் குறைந்தது 108 பிள்ளையாரையாவது தரிசித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நகர்வலம் கிளம்பிவிடும் பக்தர்களும் இருக்கிறார்கள்.  இந்த நன்னாளில் அவரவர் ராசிக்குரிய விநாயகப்பெருமானின் மூர்த்தங்களை வழிபட்டால் மேலும் சிறப்பு  அல்லவா...  இதோ 12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகரின் திருவுருவங்கள்.  அன்று மட்டுமல்லாது எப்போதும் எங்கு தரிசித்தாலும் வணங்குங்கள். உங்களின் தியான சித்திரமாக மனதில் கொள்ளுங்கள். மேஷம்: செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் இயற்கையில் வீரம் மிக்கவர்கள். எவருக்கும் அஞ்சாதவர்கள். மனதிற்கு சரியென்று பட்ட விஷயத்தை எவர் தடுத்தாலும் விடாது தைரியத்துடன் செயல்படுத்த

விநோதமான விநாயகர்கள்*

Image
 விநோதமான விநாயகர்கள்* நன்றி குங்குமம் ஆன்மிகம் *பிள்ளையார் பட்டியைப் போலவே புதுக்கோட்டையில் உள்ள திருமயத்தை அடுத்த மலையக்கோயில் விநாயகர் ஆலயமும், மலையைக் குடைந்தே அமைக்கப்பட்டதாகும். இந்த மூலவரும் ‘கற்பக விநாயகர்’ என்றே அழைக்கப்படுகிறார். கி.பி. 7ஆம் ‘நூற்றாண்டில் மகேந்திர வர்மப் பல்லவரால் இந்த ஆலயம் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. *காஞ்சிபுரம் திருவோண காந்தன் தளி எனும் கோயிலில் கர்ப்பகிருக மண்டபத்தின் நுழைவாயில் சுவரில் விநாயகர் திருஉருவம் இருக்கிறது. இந்த விநாயகர் பக்கத்தில் சென்று காதை வைத்து கேட்டால் ‘ஓங்கார ஒலி’ கேட்கிறதாம். *ஸ்ரீ சைலத்தில் இருக்கின்ற விநாயகர் ஆலயத்தில், விநாயகர் ஸ்ரீ கிருஷ்ணரைப் போல் கையில் புல்லாங்குழலை வைத்து இசைக்கும் கோலத்தில் காட்சி அளிக்கிறார். *வேலூர் கோட்டை ஜல கண்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயகர் குழந்தை வடிவில் காட்சி தருவதால் இவரை ‘‘குழந்தை விநாயகர்'' என்றே போற்றி வணங்குகிறார்கள். *அம்பாசமுத்திரத்தை அடுத்த காக்கையநல்லூர் என்ற ஊரில் உள்ள விநாயகர், வயிறு வெடித்த நிலையில் காட்சி தருவதால் இவருக்கு ‘வயிறு வெடித்த பிள்ளையார்’ என்று பெயர் விளங்கி வரு

*நல்லன அருளும் நவ கணேச பீடங்கள்*

Image
 *நல்லன அருளும் நவ கணேச பீடங்கள்* அதே போன்று, தமிழ் நாட்டில் ஒன்பது கணபதி பீடங்கள் உள்ளன. அவற்றை ‘நவ கணேச பீடங்கள்’ என்கிறார்கள். அவை கணேச பீடம், ஸ்வானந்த கணேச பீடம். தர்ம பீடம், நாராயண பீடம், ஓங்கார பீடம், காம தாயினி பீடம், புருஷார்த்த பீடம், புஷ்டி பீடம், ஷட்சக்தி பீடம் எனப்படும். காவிரி நதி கடலோடு கலக்கும் கடைமுகப் பகுதியில் உள்ள திருத்தலம் திருவெண்காடு பதியாகும். இதற்கு சுவேத வனம் என்ற பெயரும் உண்டு. சீர்காழிக்கு அருகில் இத்திருத்தலம் உள்ளது. ஒரு சமயம் தேவர்களுக்கு அஞ்சி ஒளிந்து வாழ்ந்த இந்திரன், சீர்காழிப்பதியில் தவம் செய்து வந்த நேரம். அப்போது அங்கே கடும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியது. சிவபூஜை செய்ய அவன் மிகவும் சிரமப்பட்டான். தேவர் தலைவன் இந்திரனுக்கு உதவி செய்யவே விநாயகப் பெருமான் காவிரியைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தார் என்கிறது கந்த புராணம். குடகு மலையில் காவிரி நதியைத் தோன்றச் செய்து, சோழ நாட்டிற்கு வளம் சேர்க்கக் காரணமானவர் கணபதி. காவிரி, இவள் பிரம்ம தேவனின் மாஸை புத்திரி. காவேரி மகரிஷி என்ற முனிவரால் வளர்க்கப்பட்டவள். அகத்தியமா முனிவரின் அன்பு மனைவி உலோபா முத்திரை இவளே. இவள் பெ

*தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா வந்த வரலாறு*

Image
 *தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா வந்த வரலாறு* இந்தியா முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவானது, தமிழ்நாட்டிற்குள் எப்படி வந்தது என்பது குறித்த சிறப்பு தொகுப்பை காணலாம். சென்னை: இந்துக்களின் முக்கியமான பண்டிகையான விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறையில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் விநாயகருக்கென ஒரு வரலாறு உள்ளது. சிவன்-பார்வதி தம்பதியின் மகனாகவும், உலகை சுற்றுவரும் போட்டியில் சிவனையும் பார்வதியையும் சுற்றிவந்து பழத்தை வாங்கிய கதையையும் நாம் நிச்சயம் கேட்டிருப்போம். விநாயகருக்கு கணேசன், கணபதி, ஆனைமுகன், பிள்ளையார், கணநாதன், ஒற்றைக்கொம்பன், தும்பிக்கை ஆழ்வார், விக்னேஸ்வரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. சுதந்திர போராட்டக் காலத்தில், அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டுதோறும் பொதுமக்களிடையே தேசிய பற்று வளர ஊர்வலமாக கொண்டாட ஊக்குவித்தார். தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி வ

விநாயகர் சதுர்த்தி சிறப்பு பாடல்/ஆவணிசதுர்த்தியில்விழாக்கோலம்

Image
#AAVANISATHURTHIYILVIZHAKOLAM   #ஆவணிசதுர்த்தியில்விழாக்கோலம்   #விநாயகர்சதுர்த்திபாடல் #கவிஞர்Eயோகி நோர்வே தேசத்தில் வாழும் கவிஞர் E யோகி அவர்கள் எழுதிய பாடல் இது .2022 ம் ஆண்டின் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் ,எங்களது MIDNIGHTSUNVIEW சேனல் அறிமுகத்திற்காகவும் இந்தப்பாடல் வெளியீடு செய்யப்படுகிறது . Song Aavani sathurthiyil Voice Dr.Seergazhi Sivasidambaram Lyrics Kavingar E Yohi Norway Editing M.Rejin Bsc,DFtech Recording Engineer .T.Swaminathan Music,Mixing And Mastering Udayan Victor Special Thanks To Panipulam Video Bala Canada and Toronto Sithivinayagar Temple. Copy Rights Music Composer Udayan Victor SHOW MORE video link

விநாயகர் சதுர்த்தி புதிய பாடல்/.பிள்ளையார் சுழி போட்டு | கவிஞர் முனைவர் ச.பொன்மணி |

Image
முருகு தமிழ் | விநாயகர் பாடல் | பிள்ளையார் சுழி போட்டு | கவிஞர் முனைவர் ச.பொன்மணி | . விநாயகர் சதுர்த்தி புதிய பாடல். video link கவிஞர் முனைவர் ச.பொன்மணி 

மரத்தடி பிள்ளையார்கள்*

Image
மரத்தடி பிள்ளையார்கள்* நன்றி குங்குமம் ஆன்மிகம் வில்வமரப் பிள்ளையார்: தெற்கு நோக்கியிருந்தால் சிறப்புடையது, சித்திரை நட்சத்திரத்தன்று குடும்பத் தேவைக்கேற்ப மளிகைப் பொருட்களை ஏழைக் குடும்பங்களுக்கு தானமாக அளித்து வில்வமர விநாயகரைச் சுற்றி வந்தால் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வர். அரசமரப் பிள்ளையார்: மேற்கு நோக்கி இருப்பது சக்தி வாய்ந்ததாகும். பூச நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகம் செய்தால் நிலம் மற்றும் தோட்டத்தில் விளைச்சல் பெருகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். பணக் கஷ்டம் நிவர்த்தியாகும். ஆலமரப் பிள்ளையார்: வடக்கு நோக்கியிருந்தால் சிறப்புடையது, நோயாளிகள் மகம் நட்சத்திரத்தன்று ஐந்து வகை சித்திரான்னங்களை (எலுமிச்சை, தயிர், பால், புளி, தேங்காய்) படைத்து தானமளித்தால் கடுமையான நோய்கள் விலகும். வேப்பமரத்துப் பிள்ளையார்:  கிழக்கு முக விநாயகர் விசேஷம் நிறைந்தவர். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஐந்து வித எண்ணெய்த் தீபமான பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் மனதுக்கேற்ற வரன் அமையும். மாமரப் பிள்ளையார்: கேட்டை நட்சத்திரத்தன்று விபூதிக் காப்பிட்டு மூன்று ஏழைச் சுமங்கலிகளுக்கு உடை, உணவு அளித்து வந்

*எதிரிகளின் தொல்லைகளை நீக்கும் உச்சிஷ்ட கணபதி*

Image
  *எதிரிகளின் தொல்லைகளை நீக்கும் உச்சிஷ்ட கணபதி* திருநெல்வேலி - மணிமூர்த்தீஸ்வரம் விநாயகப் பெருமான் எங்கும் இருப்பவர். அவரை எப்படி வேண்டும் என்றாலும் வணங்கலாம். நமது மனதுக்கு ஏற்ப அவர் நமக்கு அருள் தர தயாராகிவிடுவார். தெருமுனை, குளக்கரை, ஆற்றங்கரை, கோயில் கொட்டகை என எங்கும் இவர் நிறைந்திருப்பார். ஒரே ஒரு பூவைக்கொண்டு வழிபட்டாலும், அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார். இதனால்தான் இவரை சிவன் கோயில் முழுவதும் மற்றும் கன்னி மூலையில் வைத்து அழகு பார்பார்கள். நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில், பல பெயர்களில் இவர் எழுந்தருளியுள்ளார். தாமிரபரணி நதிக்கரையில், பாண தீர்த்தம் என்ற இடத்தில் மட்டும் சித்தி புத்தி விநாயகராக காட்சியளிக்கும் இவரை, அதே தாமிரபரணி கரையில் ஆசியாவிலேயே மிகப் பெரிய உச்சிஷ்ட கணபதியாக சுமார் 900 ஆண்டுகளுக்கு முன்பே பிரதிட்சை செய்துள்ளார்கள். பிள்ளையாரை பற்றி கூறும் போது பாலும், தெளிதேனும், பாகும் பருப்பும் கலந்தளித்த அவ்வையார், இவருக்கு அகவலும் தந்தார். மும்மூர்த்திகளும், பரிதேவதைகளும், மகாயோகிகளும், சித்தர்களும் முதலில் விநாயகரை வழிபட்டே அவரவர் காரியங்களை தொடங்கி உள்ளனர். பண்டாச

ஜீவனாம்சம்

Image
  கு. வி. மு. ச பிரிவு 125(4) ஆனது, மனைவி எந்தவிதமான காரணமும் இல்லாமல் கணவனை விட்டு பிரிந்து சென்று வாழ்ந்தால் அவருக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று அவசியம் இல்லை என கூறுகிறது.  ஆனால் கு. வி. மு. ச பிரிவு 125(4) ஆனது விவாகரத்து பெறாமல், திருமணம் நடைமுறையில் இருக்கும் போது ஜீவனாம்சம் கோருகிற மனைவிகளுக்கு மட்டுமே பொருந்தும். ஒரு நீதிமன்றத்தால் மனைவி வேண்டுமென்றே பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்ற அடிப்படையில் விவாகரத்து வழங்கப்பட்ட மனைவிக்கு பொருந்தாது.  உச்சநீதிமன்றம் "ரொக்காட் சிங் Vs திருமதி. ராமுந்திரி *2000-3-SCC-180*" என்ற வழக்கில்,  கு. வி. மு. ச பிரிவு 125(4) இல் இரண்டு பிரிவுகள் உள்ளதாகவும், முதல் பகுதியில் திருமணம் நடைமுறையில் இருக்கும் பொழுது, ஒரு மனைவி ஜீவனாம்சம் கோருவது குறித்து கூறப்பட்டுள்ளதாகவும், விவாகரத்து பெற்ற மனைவி கு. வி. மு. ச பிரிவு 125(1)(b) இல் கூறப்பட்டுள்ள விளக்கத்தின் படி விவாகரத்து கோரலாம் என்றும், விவாகரத்து பெற்ற மனைவி தன்னைத்தானே பராமரித்து கொள்ள இயலாத நிலையில், அவர் மறுமணம் எதுவும் செய்து கொள்ளாமல் இருந்தால், அவர் ஜீவனாம்சம் பெறுவதற்கு தகுதியு

பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கிய தேங்காய் பால்

Image
  பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கிய தேங்காய் பால்!!♥️ தேங்காய் பால் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, அனைத்து வகை பி கம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில்  உள்ளன. தேங்காய்ப்பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப் படுகிறது. குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. சிறுநீரக கற்கள் இருக்கும் நோயாளிகள் கூட பாலை அருந்தலாம்.   தேங்காய் பாலில் கசகசா, பால் தேன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும். தேங்காய் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து  கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும். தேங்காய் பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்று  புண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது. உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் கண்டிப்பாக 500 மி.லி. வரைக்கும் பால் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.   எலும்புகளின் வல

மகாகவி பாரதி பற்றி பாரதிதாசன்.

Image
  மகாகவி பாரதி பற்றி பாரதிதாசன். இதைப் படித்தும் பாரதியைக் குறை சொல்வார் தமிழர் இல்லை. பாரதி உலககவி! அகத்தில் அன்பும் பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்! ஓரூருக் கொருநாட்டுக் குரிய தான ஓட்டைச்சாண் நினைப்புடையவர் அல்லர்! மற்றும் வீரர்அவர்! மக்களிலே மேல்கீழ் என்று விள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்போர்! சீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க் கின்ற செம்மைநலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம் (4:1) அகத்திலுறும் எண்ணங்கள் உலகின் சிக்கல் அறுப்பவைகள், புதியவைகள், அவற்றை யெல்லாம் திகழ்பார்க்கு பாரதியார் எடுத்துச் சொல்வார் தெளிவாக, அழகாக, உண்மை யாக! முகத்தினிலே களையிழந்த மக்கள் தம்மை முனைமுகத்தும் சலியாத வீர ராகப் புகுத்துமொழிப் பேச்செல்லாம் பொன்னி யாற்றுப் புனல்போலத் தொடர்வதுண்டாம் அன்னார் பாட்டில்! (4:2) பழய நடைபழங் கவிதை பழந்தமிழ்நூல் பார்த்தெழுதிப் பாரதியார் உயர்ந்தா ரில்லை பொழிந்திடு செவ்விய உள்ளம் கவிதையுள்ளம் பூண்டிருந்த பாரதியா ராலே இந்நாள் அழுந்தியிருந் திட்டதமிழ் எழுந்த தன்றே ஆணையிட்டுச் சொல்லிடுவோம் அன்னை மீதில்! அழகொளிசேர் பாரதியார் கவிதை தன்னை அறிந்திலதே புவியென்றால் புவிமேற் குற்றம்! (

திரைப்படமாகிறது #ஆனந்தமடம்

Image
  திரைப்படமாகிறது #ஆனந்தமடம் எதிர்பார்த்ததுதான். என்ன... இந்திக்கு பதில் தெலுங்கில் உருவாகி pan Indiaவுக்கு செல்கிறது... எஸ். வங்க எழுத்தாளர் பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய 'ஆனந்த மடம்' நாவல், ‘1770’ என்ற பெயரில் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் வங்காள மொழிகளில் திரைப்படமாகிறது. எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத், ‘ஆனந்த மடம்’ நாவலுக்கு திரைக்கதை அமைக்கிறார். ராஜமவுலியின் உதவியாளரும் ‘ஆகாஷ்வாணி’ இயக்குநருமான அஸ்வின் கங்கராஜு டைரக்ட் செய்கிறார். ‘வந்தே மாதரம்’ பாடலை பக்கிம் சந்திர சட்டர்ஜிதான் எழுதினார். ‘ஆனந்த மடம்’ நாவலில் இப்பாடல் இடம்பெற்றிருக்கிறது. பாலிவுட் எப்படி கோட்டை விட்டது என்று தெரியவில்லை. இந்தப் படமும் ஆயிரம் கோடி வசூல் செய்யலாம். ஆச்சர்யப்படுவதற்கில்லை... கே.என்.சிவராமன் முகநூல் பதிவில்

வயது குறித்த கவனம்

Image
  வயது குறித்த கவனம் எல்லோருக்கும் உண்டு. பால்ய காலத்தில் சீக்கிரம் கூட வேண்டும் என்றிருந்த ஏக்கம், ஒரு கட்டத்திற்குப் பிறகு கூடாமல் இருந்தால் நன்றாக இருக்குமென மாறி விடுகிறது. வயது கூட வேண்டாம் என்று விரும்புவோர் புத்திசாலித்தனமெனக் கருதி ஒப்பனைகள் மூலமாக தன்னை இளமையான தோற்றத்தில் காட்டிக் கொள்வர். அடுத்தது தனக்கு வயதாகவில்லை என்று அடிக்கடி சொல்வது. வயது குறித்துப் பேச்சு வந்தால், வயது என்பது வெறும் எண்தானே எனச் சொல்வது. வயதுகளின் எண்ணிக்கையை மட்டுமே பக்குவத்தின் அடையாளமாக வெளிப்படுத்துவோரும் உண்டு. சிலருக்கு வயது என்றால், இன்னும் சிலருக்கு அவர் வகிக்கும் பொறுப்பு. குறிப்பிட்ட பொறுப்பில் இருப்பதன் காரணமாகவே தனக்குப் பக்குவம், உரிமை வந்து விட்டதாகக் கருதுகின்றனர். வயதை அனுபவங்களின் ஒப்பீடாக வைத்துக் கொள்வதில் எனக்கு மறுப்பேதுமில்லை. வயது கூடியிருப்பதால் மட்டுமே ஒருவர் சொல்வதை மறுக்காமல் ஒப்புக் கொள்வதில் உடன்பாடு இல்லை. ஆனால் வயதிற்கும் அனுபவத்திற்கும் இடையே கடும் முரண்பாடுகளை வைத்திருக்கும் மனிதர்களையும் வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்துத்தான் ஆக வேண்டும். ஒன்று இணைந்து பயணிக்கலாம். அல்ல

ஸ்ரீ நாராயண குருவின் வது பிறந்த நாளின்று.

Image
  ஸ்ரீ நாராயண குருவின் வது பிறந்த நாளின்று. மனிதர்கள் தங்களுக்குள் மதத்தாலும், சாதியாலும் பிரிந்து மனம் வேறுபட்டு நின்ற காலத்தில் ’மனிதர்கள் எல்லோரும் சகோதரர்களே! அவர்களுக்கு ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம் போதும்’ என்ற அறைகூவலை எழுப்பி, தீண்டாமை வேற்றுமையை, பிரிவினையைப் போக்கப் பாடுபட்ட மகான் ஸ்ரீ நாராயண குரு. கேரளாவில் தோன்றிய நாராயணகுரு ஆன்மீகத்துறை மட்டுமல்லாது கல்வித்துறையிலும் பல்வேறு சீர்த்திருத்தங்கள் செய்தவர். உயர்சாதியினர்க்கு எதிராக கல்வி, பொருளாதாராம், ஆன்மீகம் என அனைத்திலும் தாழ்த்தப்பட்டவர்கள் வலிமை பெற்று விட்டாலே போதும் சமச்சீர் சமுதாயம் உருவாகி விடும் என்ற எண்ணம் கொண்டவர். அதற்காகவே உழைத்தவர். கல்வி கற்பது அனைவரது உரிமை என்று சொல்லி, சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டிருந்தவர்கள் கல்வி கற்பதற்காக பல்வேறு கல்விக்கூடங்களை உருவாக்கியவர். சாதி, மத பேதமில்லாமல் அனைவரும் வந்து தரிசித்துச் செல்வதற்காக சிறந்த வழிபாட்டுத் தலங்களை ஏற்படுத்தியவர்.ஸ்ரீ நாராயண குரு நாராயண குரு ஆரம்பகாலத்தில் கன்யாகுமரி அருகே உள்ள மருத்துவாமலையில் சில மாதங்கள் தங்கி தவம் செய்து வந்தார். பெரும்பாலும் மௌனமாக

திராவிட மொழிகளுக்கு பெருங்கொடையளித்த பிதாமகன் கால்டுவெல் காலமான தினமின்று

Image
  திராவிட மொழிகளுக்கு பெருங்கொடையளித்த பிதாமகன் கால்டுவெல் காலமான தினமின்று வாசிப்புப் பழக்கம் இல்லாமல் மாணவன் உயர்மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியும்; ஆனால், எதனையும் விரிவாக அறியாமல், தன் பாடத்திட்டத்தில் மட்டும் திருப்தி கொண்டுவிடுவான்'' என்றார் ராபர்ட் கால்டுவெல். வாசிப்புமேல் அவருக்கு இருந்த காதல்தான், 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்கிற நூலை எழுதவைத்தது. தமிழ்மொழிக்குச் 'செம்மொழி' என்ற சிறப்பைத் தேடித்தந்தவர் அந்தப் பெருமகனார் 1838-ல் சமயப்பணி தொடர்பாக இந்தியா வந்த அவர், கப்பலில்... பிரௌன் என்பவருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாகத் தமிழைக் கற்றுக்கொண்டார். தமிழின் அழகியலை அறிந்த அந்த அறிஞர் பெருமகனார், தமிழைக் கற்பதற்காகச் சென்னையில் சில காலம் தங்கி மொழியைத் திறம்பட பயின்றதாக நூல்கள் சொல்கின்றன. வட்டார வழக்குமொழிகளைக் கொண்டது தமிழ் என்பதால், பேச்சு வழக்கை அறியவும், அதன் மூலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளவும் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டார் கால்டுவெல். திருச்சி, சிதம்பரம், நீலகிரி, நாகப்பட்டினம் போன்ற பல்வேறு மாவட்டங்கள், பிற ஊர்கள், மலைக்கிராமங்கள் என தனது பயணத்