Posts

Showing posts from June, 2021

ஷோபனா ரவி

Image
  உங்கள் அம்மா துார்தர்ஷனில் பணிபுரிந்ததால், உங்களுக்கு செய்தி வாசிப்பாளராகும் எண்ணம் வந்ததா? அப்படியும் சொல்லலாம். என் அம்மா வானொலியில் செய்தி வாசித்ததை, சிறுவயதில் இருந்தே கேட்டிருக்கிறேன். அதனால், அந்த வாய்ப்பு வந்தபோது, எனக்கு எளிதாக இருந்தது. முதன் முதலில் செய்தி வாசித்தபோது ஏற்பட்ட உணர்வு... படிப்பது தானே... எளிதாக தான் இருந்தது. தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திகளை வாசிக்க பிரத்யேக பயிற்சி எடுத்தீர்களா? தமிழ் உச்சரிப்பின் முக்கியத்துவத்தை பள்ளி நாடகங்களில் நடித்தபோதும், ஆங்கில உச்சரிப்பை, கல்லுாரி பாடத்தின் போதும், நான் ஏற்கனவே உணர்ந்திருந்தேன். எனக்கு எழுத, படிக்கத் தெரிந்த மொழிகளான ஆங்கிலத்தையும், தமிழையும் சரியாக உச்சரிக்கும் போது, நாவில் அமுதுாறுவதாக உணர்வேன். அத்துடன், தமிழை ஏற்ற, இறக்கத்துடன் வாசிக்க, என் ஆசிரியர்களும், அம்மாவும் எனக்கு பழக்கி இருந்தனர். ஆங்கில இலக்கியம் படித்தபோது, அதற்கு, என்னை நானே பழக்கிக் கொண்டேன். தமிழ், 'ட' வேறு, ஆங்கிலத்தில், 'ட' உச்சரிப்பு வேறு. மொழிக்கு மொழி இப்படி பல வேறுபாடுகள் உண்டு. ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவம் உள்ளது. மறக்க முடி

வாட்ஸ்அப் நம்பர் Save செய்யாமல் எப்படி மெசேஜ் அனுப்புவது?

Image
  வாட்ஸ்அப் நம்பர் Save செய்யாமல் எப்படி மெசேஜ் அனுப்புவது? உங்கள் வாட்ஸ் அப்பில் இருந்து நீங்கள் யாருக்கும் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால், முதலில் உங்களுடைய வாட்ஸ்அப் காண்டக்ட்டில் அவர்களின் வாட்ஸ்அப் எண் சேமிக்கப்பட்டிருப்பது அவசியம். வாட்ஸ்அப் எண்களை நமது காண்டக்ட்டில் சேமித்து வைக்காமல் வேறு ஒருவருக்கு மெசேஜ் செய்ய வலி எதுவும் உள்ளதா என்ற சிலரின் கேள்விக்கு நிமிடம் பதில் இருக்கிறது. வாட்ஸ்அப் எண்களை சேவ் செய்யாமல் மெசேஜ் அனுப்ப ஒரு எளிய வழி உள்ளது. அதை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். வாட்ஸ்அப் பற்றி நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், வாட்ஸ்அப் மூலம் நாம் வேர் ஒருவருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால், முதலில் அவர்களின் நம்பரை சேவ் செய்வது என்பது கட்டாயம். அவர்களின் எண்களை நீங்கள் சேவ் செய்திருந்தால் மட்டுமே அதற்குப் பிறகு தான் நீங்கள் அந்த நபருக்கு மேசேஜ் அனுப்ப முடியும். ஆனால், சில நேரங்களில் சிலரின் எண்களை சேவ் செய்ய விரும்புவதில்லை. இருப்பினும் அவசரத்திற்கு மெசேஜ் செய்ய நினைப்போம். இப்படியான நேரத்தில் அவர்களின் எண்களை சேவ் செய்யாமல் எ

ஒரு குட்டி சிம்மில் எப்படி உலக முழுதும் பேசமுடிகிறது

Image
  ஒரு குட்டி சிம்மில் எப்படி உலக முழுதும் பேசமுடிகிறது ?  ஒரு சிறிய சிம் கார்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எங்கு வேண்டுமானாலும் பேச முடியும். சிம் பல வகைகள் உள்ளன உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் பயன்படுத்தும் சிம் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அவற்றில் பல்வேறு வகைகள் என்ன தெரியுமா? மக்களுடன் பேச அல்லது இணையத்தை இயக்க பயன்படும் சிம்மின் பின்னால் என்ன தொழில்நுட்பம் உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? இல்லையென்றால், உலகில் எத்தனை வகையான சிம் கார்டுகள் உள்ளன, அவை எந்த தொழில்நுட்பத்தில் செயல்படுகின்றன என்பதை இன்று நாங்கள் உங்களுக்குக் கூறுவோம். சிம் கார்டு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது உங்கள் தொலைபேசி எண் மற்றும் பிற பயனுள்ள தகவல்களை தன்னுடன் சேமித்து வைக்கிறது. எனவே இந்த சிறிய சிம் கார்டுகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். முதலில் சிம் கார்டு எவ்வாறு செயல்படுகிறது நாம் அனைவரும் போனில் சிம் போடும்போது, ​​சிறிது நேரம் கழித்து போனில் சிக்னல் வரும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதைத்தான் நெட்வொர்க் என்று அழைக்கப்படுகிறது. சிம் செருகப்பட்ட பின்னர் நெட்வொர்க்குகள் தோன்றும். நாம் போனில

ரயில் கட்டண விலையில் விமான பயணம்.. ரூ.999ல் விமானத்தில் பறக்கலாம்..

Image
  ரயில் கட்டண விலையில் விமான பயணம்.. ரூ.999ல் விமானத்தில் பறக்கலாம்.. ஸ்பைஸ்ஜெட் ஆஃபர்..! கொரோனா காலகட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில், விமான துறையும் ஒன்று. ஏனெனில் அந்த நிறுவனங்களின் சேவை முழுவதும் முடக்கப்பட்டிருந்தது. எனினும் செலவினங்கள் மட்டும் தொடர்ந்து இருந்தன. குறிப்பாக ஊழியர்களின் சம்பளம், பராமரிப்பு செலவு என தொடர்ந்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள் நிறுவனங்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் தற்போது மீண்டும் சேவையினை தொடங்கியுள்ளது குறைந்த கட்டண சலுகை இந்தியாவின் முன்னணி பட்ஜெட் கட்டண விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், mega monsoon sale என்ற அதிரடியான திட்டத்தினை அறிவித்துள்ளது. இதன்படி அதன் உள்நாட்டு விமான கட்டண தொகையானது 999 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. சலுகை எப்போது வரை? இதன் மூலம் உள்நாட்டு பயணிகள் சில பகுதிகளுக்கு வெறும் 999 ரூபாயில் இருந்து பயணிக்க தொடங்கலாம். இந்த 999 ரூபாய் என்பது அனைத்து கட்டணங்களையும் உள்ளடக்கியது. மேலும் இந்த விமான கட்டணத்திற்கு ஈடான தொகைக்கு அதாவது 1000 ரூபாய் வரை இலவச விமான வவுச்சரும் கிடைக்கும் என அறிவித்துள்ளது. எப்போது பயணிக்கலாம் தற்போது

சிற்றன்னையும் உதிரிப்பூக்களும்

Image
  எங்கிருந்தோ கதையை சுட்டு மூச்சு விடாமல் படம் எடுத்து பெயர் வாங்குபவர்களுக்கு மத்தியில் மகேந்திரன் வித்தியாசமானவரே. இதோ அவரது எழுத்தின் வழியே அவரே உங்களிடம் பேசுகிறார்... "மற்றவர்களுக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்கு முன்னாடி முதலில் சிற்றன்னை எழுதிய புதுமைபித்தன் அவர்களின் குடும்பத்திற்கு மூலக்கதைக்கான ஒரு தொகையை கொடுங்கள்" என்றேன். அவரோ ஒரு மாதிரி தயங்கினார். "என்ன தயங்குறீங்க?" "அது ஒண்ணும் இல்லே... நீங்க தந்த சிற்றன்னை புத்தகத்தை வாசிச்சேன்... ஆனா இப்ப நீங்க எழுதியிருக்கிற 'உதிரிப்பூக்கள்' கதைக்கும் சிற்றன்னைக்கும் எந்த சம்பந்தமில்லையே. அப்புறம் எதுக்கு அவுங்களுக்கு பணம் கொடுக்கனும்?" பார்த்தீர்களா... ஒரு நாவல் சினிமாவுக்கான திரைக்கதையாக உருமாறும்போது, பாலகிருஷ்ணன் போன்ற தயாரிப்பாளர் மட்டும் அல்ல, சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் கூட அடிப்படை உண்மை அறியாது எப்படித் தடுமாறுகிறார்கள்? நான் சொன்னேன், "சிற்றன்னை கதையை நான் படிக்காமல் விட்டிருந்தால் இன்று இந்த 'உதிரிப்பூக்கள்' கதை உருவாகியிருக்காது. நானும் வருகிறேன், முதலில் அவர்களின் குடு

மொத்தமாக மாறுகிறது பட்ஜெட்..

Image
.. மொத்தமாக மாறுகிறது பட்ஜெட்.. சென்னை: தமிழ்நாட்டில் புதிய அரசு பதவி ஏற்று இருக்கும் நிலையில், பட்ஜெட் எப்படி இருக்கும், என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா காலம் என்பதால் தமிழ்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. கடந்த ஆட்சியில் வாங்கப்பட்ட கடன், அதிக செலவு, தவறான பொருளாதார கொள்கை என்று பல்வேறு காரணங்களால் தமிழ்நாடு பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் அதிக கவனம் பெற்றுள்ளது. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் என்ன மாதிரியான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐடியா இல்லை அதன்படி தமிழ்நாட்டில் நிதியை மீண்டும் பெருக்குவதற்கு எந்த காலத்திலும் அரசு நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று பிடிஆர் கூறியுள்ளார். கையில் காசு இல்லை என்பதற்காக அரசு நிறுவனங்களை தனியாருக்கு கொடுத்து நிதி திரட்டுவது தவறான செயல். அது மேலும் சிக்கலை ஏற்படுத்தும். இந்த பட்ஜெட்டில் சில அடிப்படை விஷயங்கள் மீது கவனம் செலுத்துவோம். அடிப்படை வருமானம், செ

கார்த்திக் ராஜா பிறந்த நாள்

Image
  கார்த்திக் ராஜா பிறந்த நாள் ஸ்பெஷல்: இசைஞானியின் பேர் சொல்லும் தலைமகன் இந்தியத் திரை இசை வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்ட மேதையான இளையராஜா ஆயிரம் படங்களைக் கடந்து இன்னும் சினிமா இசையமைப்பாளராகத் தீவிரமாக இயங்கிவருகிறார். அவருடைய இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவும் மாபெரும் ரசிகர் படையைக் கொண்ட இசையமைப்பாளராகத் திகழ்கிறார். இளையராஜாவின் மூத்த மகனும் தந்தையையும் தம்பியையும்போலவே மிகத் திறமை வாய்ந்த இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவுக்கு (ஜூன் 29) இன்று பிறந்த நாள். கார்த்திக் ராஜா, 1990களிலும் புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டுகளில் பல மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்த பாடல்கள் தலைமுறைகளைக் கடந்து ரசிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை. பதின்ம வயதிலேயே தந்தையுடன் இசைப்பதிவு ஸ்டுடியோவுக்குச் செல்லத் தொடங்கிவிட்டார் கார்த்திக் ராஜா. மேற்கத்திய செவ்வியல் இசையையும் கர்நாடக இசையையும் முறைப்படி பயின்றார். இசையமைப்புப் பணிகளில் இளையராஜாவுக்குத் துணையாகவும் பக்க பலமாகவும் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து பணியாற்றிவருகிறார். 1992-ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த்-கு

தேசிய கேமரா தினம்

Image
 தேசிய கேமரா தினம்  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 29ஆம் தேதி அமெரிக்காவில் தேசிய கேமரா தினம் கொண்டாடப்படுகிறது. புகைப்படக் கருவி கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் உலகம் முழுவதும் உள்ள புகைப்படக்கலைஞர்கள் அங்கீகரிக்கவும் கௌரவிக்கும் இந்த தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. புகைப்படங்களும், புகைப்பட கலைஞர்களும் உலகின் பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளனர். பல போர்களை வெளி உலகத்திற்கு காட்டியது, ஆப்பிரிக்க நாடுகளின் வறுமை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதும், அகதிகளில் துயர் மிகுந்த வாழ்க்கையை உலகின் கண்களுக்கு காட்சிப்படுத்தியது, வியட்நாம் போரில் நிகழ்ந்த கொடூரங்களை வெளி உலகத்திற்கு காட்டியது புகைப்படங்களும் புகைப்பட கலைஞர்களும் தான்.அதேபோல, பிரின்சஸ் டயானா உயிரைப் பறித்தது ஒரு புகைப்பட கலைஞன் எடுத்த புகைப்படம் தான்.ஆக இதை எல்லாம் அசை போட தூண்டும் நாளின்று

Daily Workout from home and training program

Image
TRIDENT FITNESS PARADISE presents daily workout from home today first training programme     Daily Workout from home and training program 1 5 weeks training program plus meal plan for routine. BASED ON BMI AND FRAME STRUCTURE to join the program kindly contact : tridentfitness01@gmail.com video link by TRIDENT FITNESS PARADISE

மிஸ்க்ட் வெஜிட்டப்ள் பிக்கிள் / அனன்யா பக்கம்

Image
  இன்றைய அனன்யா பக்கத்தில் மிஸ்க்ட் வெஜிட்டப்ள் பிக்கிள் மிஸ்க்ட் வெஜிட்டப்ள் பிக்கிள் இந்த பூவுலகத்துலேயே எனக்கு இருக்கற ஒரே வீக்னெஸ்ஸு . அவ்வ்.. அப்படில்லாம் நாக்கு மேல பல்லைப்போட்டு சொல்ல மிடியாது. பல தீனி வீக்னெஸ் இருக்கு. இருந்தாலும் இந்த மிக்ஸ்ட் வெஜிட்டப்ள் பிக்கிள் தான் அதில் முக்கியமான வீக்குனெஸ். டு ஸ்டார்ட் வித்.. பேரே ஒரு அழகு தான். எப்பப்பாரு மாங்கா, எலுமிச்சங்கா, நார்த்தங்காய், கடாரங்காய், கொழுமிச்சங்காய், கிட்டத்தெட்ட எல்லாமே ஒரே டேஸ்டு தான். இதுல பீமகிருஷ்ண ராமுடு, ராமகிருஷ்ண பீமுடுன்னு கொஞ்சம் சிட்ரஸ் சுவையும் வாசனையும் முன்ன பின்ன இருக்கும். எத்தனை காலந்தான் இதையே சாப்பிட்டுண்டு இருக்கறதாம். அபுதாபி போனப்போ தான் இந்த மிக்ஸ்ட் வெஜ் பிக்கிளை ஒரு ஹைப்பர் மார்கெட் ராக்ல பார்த்தேன். Mother's Recipe ப்ராண்ட். லேபிளே கொள்ளையழகு. உள்ளே கால் லிட்டர் எண்ணைக்கு நடுவுல் ரெண்டு ஸ்பூன் பிக்கிளை பேக் பண்ணியிருப்பாங்கறது வேற விஷயம். எக்ஸ்போர்ட் குவாலிட்டி ஊறுகாய்கள் வேறு விதம். கொஞ்சம் எல்லாம் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும். லோக்கல் மார்கெட் மாதிரி காலாவதியான விஷயங்களை யூ ஏ ஈ லஅனுமதிக்

கவிஞரது நெஞ்சத்தில் நீங்காத இடம் பிடித்த தேவிகா

Image
  கண்ணதாசனின் நட்புக் களஞ்சியத்தில் கடைசிவரை நம்பகமான தோழியாக உலா வந்து, கவிஞரது நெஞ்சத்தில் நீங்காத இடம் பிடித்தவர் தேவிகா. கண்ணதாசனின் நட்புக் களஞ்சியத்தில் கடைசிவரை நம்பகமான தோழியாக உலா வந்து, கவிஞரது நெஞ்சத்தில் நீங்காத இடம் பிடித்தவர் தேவிகா. குமுதம் வார இதழில் வெளியானது கவிஞர் கண்ணதாசனின் ‘இந்த வாரம் சந்தித்தேன்’ தொடர். அதில் ஓர் அத்தியாயத்தில், தனக்கும் தேவிகாவுக்கும் இடையே நிலவிய தோழமை குறித்தும் விரிவாக எழுதியுள்ளார் கவிஞர். ‘சினிமா நடிகைகள் எல்லாருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். சுற்றம் காத்தல், விருந்தோம்பல், மரியாதை அனைத்தும் தெரிந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். தயாரிப்பாளர்களின் கழுத்தை நெரித்த நடிகைகளும் உண்டு. கை கொடுத்து உதவிய உத்தமிகளும் உண்டு. அதில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் தேவிகா! அவர் கதாநாயகியாக நடித்த போது இன்றைய பல நடிகைகளை விட, நன்றாகவே நடித்தார். அழகாகவே இருந்தார். வாழ்க்கையை தேர்ந்தெடுக்கத் தெரியாத காரணத்தால் தோல்வி அடைந்தார். இல்லையென்றால் தேவிகாவின் குணத்துக்கும், நடத