Posts

Showing posts from October, 2021

இரும்பு மனுஷி இந்திரா காந்தி

Image
  இன்றைய - அன்றைய ரிப்போர்ட்; நம்ம கவர்மென்டாலே ‘மகாத்மா’ என்பதை உறுதிப்படுத்தாத (இது தனி ஸ்டோரி) காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பொறகு, நம்ம இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான அல்லது அதிர்ச்சியான நிகழ்ச்சி பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சிதான். ஆமாம்.. கிட்டத்தட்ட 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி அவருடைய வீட்டில் செக்யூரிட்டிகளாலேயே (சீக்கியர்கள்) சுட்டுக் கொல்லப்பட்டார். அதாவது சீக்கியர் பொற்கோவிலில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த போருக்குப்பிறகு, இந்திரா மீது சீக்கியர்களில் பலர் ரொம்ப ஆத்திரமா இருந்தாங்க. அதன் காரணமா, பி எம் இந்திரா காந்தியின் வூட்டிலே காவல் பணியில் சீக்கியர்களை அமர்த்த வேண்டாமுன்னு என்று இண்டெலிஜென்ஸ் டைரக்டர் கருத்து தெரிவித்தார். ஆனாக்க அந்த யோசனையை இந்திராகாந்தி ஏத்துகலை. டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தியோட வூடு ஒரே காம்பவுண்டுக்குள் அமைந்த ரெண்டு கட்டிடங்களைக் கொண்டதாகும். இவற்றில் பிரதமர் வசிக்கும் இல்லத்தின் வாசல், சப்தர்ஜங் ரோட்டில் இருந்துச்சு. இந்த வூட்டை அடுத்த பில்டிங், பிரதமரின் அலுவலகமாகும

இரும்பு மனிதர்

Image
  இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப் பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினமின்று: இந்தியா விடுதலை அடைந்தவுடன், நாட்டிலிருந்த அனைத்து சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து ஒரே நிலப்பரப்பாக இந்தியாவை வடிவமைத்தவர் சர்தார் வல்லபபாய் படேல். நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக ஆயுதப்படைகளைப் பயன்படுத்தவும் அவர் தயங்கவில்லை. அவரது உறுதியான தலைமை காரணமாகவே அனைத்து சமஸ்தான அரசுகளும் இயல்பான ஒத்துணர்வுடன் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. . குஜராத்தின் கேடா மாவட்டத்தில், கரம்சத் கிராமத்தில் 1875, அக்டோபர் 31ல் பிறந்த வல்லபபாய், லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பயின்று வந்தார். கோத்ரா, மும்பை, அகமதாபாத் நகர்களில் வழக்கறிஞராகப் பணிபுரிந்த அவர், 1917 ல் காங்கிரஸ் கட்சியால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார். மகாத்மா காந்தியின் போராட்ட வழிமுறைகளாலும் போதனைகளாலும் கவரப்பட்ட அவர் பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டார். பல்வேறு போராட்டங்கள், கட்சி மாநாடுகளில் முக்கிய ஒருங்கிணைப்பாளராக விளங்கிய படேல், 1934 க்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் தவிர்க்க இயலாத தலைவராக உயர்ந்தார். . விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு

ஹாலோவீன் தினமின்று

Image
  ஹாலோவீன் தினமின்று மேலை நாடுகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் தினங்களில் ஹாலோவீன் தினமும் (Halloween) ஒன்றாகும். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31ம் தேதி கலோவின் தினம் அயர்லாந்து, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் இதர நாடுகளில் கொண்டாப் படுகின்றது. பிரித்தானியாவில்தான் முதன்முதலாகக் ஹாலோவீன் தினம் 2000 ஆண்டுகளுக்கு முன்பாகக் கொண்டாடப்பட்டது. அறுவடைக்காலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிப்பதையும், வெளிச்ச காலம் முடிந்து இருட்டுக்காலம் தொடங்குவதையும் இந்தக் கொண்டாட்டம் குறிக்கும். பழைய ஆங்கிலச் சொல்லான ஹாலோவீன் என்றால் தெய்வீகத்தன்மை பெறச் செய்தல் என்ற கருத்துப்படும். பொதுவாக இத்தினத்தில் ஆரேஞ்ச் நிறமும் கறுப்பு நிறமும் அதிகமாகப் பாவிக்கப்படும். அரஞ்சு நிறம் அறுவடைக் காலத்தையும், கறுப்பு நிறம் இறப்பையும் குறிக்கும். அத்தினத்தில் பேய்கள் பிசாசுகள் போலப் பெரியவர்களும், சிறியவர்களும் வேடமிட்டு ஒவ்வொரு வீடுவீடாகச் சென்று வேடிக்கையாக விருந்து தரும்படி கேட்பார்கள். பெரியவர்கள் தெருவிலே நின்று கொள்ள, சிறுவர், சிறுமிகள் பேய் பிசாசுபோல வேடமிட்டு வாசலில் வந்து வேடிக்கையாக ஏமாற்றுவார்கள்.

ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியர்

Image
  ஒட்டுமொத்த இந்தியாவிற்கே ஆஸ்கர் வென்ற இந்திய பிரபலம் என்றால் முதலில் நியாபகம் வருவது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான். ஆனால் அவருக்கு முன்னதாகவே 32 வருடங்களுக்கு முன்பு பானு அதய்யா என்பவர் ஆஸ்கர் விருது வென்று பெருமை சேர்த்துள்ளார். அவர் தான் இந்தியாவில் முதல் முறையாக ஆஸ்கர் வென்ற திரைப்பிரபலம் ஆவார். சிறந்த ஆடை வடிவமைப்பாளரான பானு அதய்யா பாலிவுட், ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளார். 1950ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். 1982-ம் ஆண்டு வெளிவந்த காந்தி திரைப்படத்திற்காக இவர் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருதை ஜான் மெல்லோ என்பவருடன் பகிர்ந்துக் கொண்டார். இதன் மூலமாக இவர் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார். ஆனால் தனக்கு பிறகு ஆஸ்கர் விருதை பத்திரமாக பார்த்துக்கொள்ள யாரும் இல்லை எனக்கூறி, 2012ம் ஆண்டு அந்த விருதை ஆஸ்கர் அகாடமிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார். ஏசியன் நெட் நியூஸ்

கவிஞர் நா.முத்துக்குமாரின் அமெரிக்காவும்

Image
2014ம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு விழாவுக்கு அழைப்பதற்காக நண்பர் ஷங்கர் கவிஞர் நா.முத்துக்குமாரை தொடர்பு கொண்டு கேட்டார். உடனடியாக ஒத்துக் கொண்டவர், எனக்கு முதுகு வலி உண்டு. அதற்கு ஏற்றவாறு பயண ஏற்பாடு செய்யுங்கள் என்று மட்டும் ஒரு வேண்டுகோள் வைத்தார். கடைசி நேர சில குளறுபடியால், அந்த விழாவுக்கு அவர் வரவில்லை. ஆனால் குடும்பத்தோடு அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணமாக வந்திருந்தார். நாமும் சேர்ந்து செய்த ஏற்பாடுகள் சரியாக அமையவில்லையே என்ற வருத்தத்துடன், அழைத்து மன்னிப்பு கேட்டேன். மனிதர் பதறிவிட்டார். அதெல்லாம் ஒன்னுமில்லே. இதெல்லாம் சாதாரணம். வேறு ஒரு விழாவுக்கு வந்தாப் போச்சு என்றார். நான் விடவில்லை. இப்போதே ஒரு நாள் மட்டுமாவது டல்லாஸ் வாருங்கள். உங்களுக்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்கிறோம் என்றேன். குடும்பத்தோடு வந்திருக்கிறேன். வீட்டம்மாவுக்கும் பையனுக்கும்தான் நேரம்ன்னு வாக்கு கொடுத்து இருக்கேன். என்னுடைய நெருங்கிய நண்பனுக்கு (இயக்குநர் விஜய்) சென்னையில் திருமணம். பயணத்தையும் தள்ளிப் போட முடியாது. குறிப்பிட தேதியில் போக வேண்டிய நிலை. இன்னொரு வாய்ப்பு வரும். நேரில் சந்திப்போம் என

நன்மாறன்:

Image
நன்மாறன்: 'எளிமை எம்எல்ஏ' காலமானார் - இறுதிவரை வாடகை வீட்டில் வாழ்ந்தவர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நன்மாறன் மதுரை கிழக்கு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவும் சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான நன்மாறன், உடல்நலக் குறைவால் காலமானார். அவரது வயது 72. மதுரை ஆரப்பாளையம் பகுதியில் வசித்து வந்த நன்மாறன். கடந்த 27ஆம் தேதி இரவு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி இறந்துவிட்டார். எளிமையின் அடையாளமாக மதுரை வீதிகளில் வலம் வந்த நன்மாறனின் மறைவு, மதுரை மக்கள் மத்தியிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியிலும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. `உத்தப்புரம் தீண்டாமை சுவர் பற்றி சட்டமன்றத்தில் அவர் பேசிய பேச்சுக்கு, அப்போதைய முதல்வர் கருணாநிதி எடுத்த நடவடிக்கைகளே அடுத்தகட்ட நகர்வுக்கு அடிப்படையாக அமைந்தது' என்கிறார், சி.பி.எம் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சுவாமிநாதன். "என்கிட்ட 20 ரூபாய்தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் கடந்த 2001, 200

எங்கே போனார்கள் இந்த எழுத்தாளர்கள்?

Image
  எங்கே போனார்கள் இந்த எழுத்தாளர்கள்? இப்போது நான் சொல்லப் போற ஓர் உண்மை பலருக்குத் தெரியாது.ஒரு நபர் பாடகராக வரவேண்டுமென்றால் ஒரு சங்கீத வித்வானிடம் போய் முறையாய் சங்கீதம் பயின்று பின்னாளில் சிறந்த பாடகராய் உருவாகலாம். அதே போல் ஒரு நபர் ஓவியராக வரவேண்டும் என்று விரும்பினால் அதற்குரிய துறை வாய்ந்த ஓவியக்கலைஞர்களிடம் போய் பயிற்சி எடுத்துக் கொண்டு ஒரு சிறந்த ஓவியராய் திகழலாம். இப்படி எந்தத்துறையில் யார் நிபுணத்துவம் பெற வேண்டுமென்று என்று விருப்பப்படுகிறார்களோ அவர்கள் அந்தத் திறமை சம்பந்தப்பட்ட நபர்களிடம் போய் குருகுலவாசம் செய்யாத குறையாய் ஓராண்டு ஈராண்டு என்று பயிற்சி எடுத்துக் கொண்டால் மட்டுமே அவர்களுக்கு அது சாத்தியமாகும். ஆனால் ஓர் எழுத்தாளரை அப்படி பயிற்சியின் மூலம் உருவாக்கிட முடியாது. ஓர் எழுத்தாளன் என்பவன் சுயமாக தனக்குள் உருவாக வேண்டும். அவனே குருவாகவும், சிஷ்யனாகவும் இருந்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொண்டால் மட்டுமே அந்த நபர் எழுத்தாளனாக பத்திரிகை உலகில் பவனி வர முடியும். அது காலம் காலமாய் நடந்து வருகிற வரலாறு சொல்கிற உண்மை. அண்மையில் ஒரு கல்லூரி விழாவ

ரைட்டர் என்றால்

Image
  சோ தர்மனின் பேஸ்புக் பதிவு: “நேற்று சாயங்காலம் இலேசான பல்வலி.டாக்டருக்கு போன்பண்ணினேன்.க்ளினிக் திறப்பதில்லை என்றும் மாத்திரை மெசேஜ் பண்ணுகிறேன் வாங்கி சாப்பிடுங்கள் பார்த்துக்கொள்ளலாம் வேதனை குறையும் என்றார். சரியாக இரவு ஏழு மணிக்கு முகமூடி ஹெல்மெட் சகிதம் மெடிக்கலுக்குப் புறப்பட்டேன். காவல்துறை விசாரணையில் நான் சொன்ன காரணங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. டாக்டரின் மெசேஜ் காட்டினேன்.கண்டு கொள்ளாததோடு என் டூ வீலரைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டதோடு வீட்டுக்கு நடந்து போ காலையில் போலீஸ்டேஷனில் வந்து வண்டியைப் பெற்றுக்கொள் என்று ஒருமையில் தான் பேச்சு.அவ்வளவு பேரும்‌சின்னப்பையன்கள். ஹோம்கார்டுகள் நாலைந்து பேர். கொஞ்சநேரம் நின்றேன் அறிமுகமான உயர் போலீஸ் ஆபிசருக்கு போன்பண்ணினேன். போனை போலீஸ்காரரிடம்‌ கொடுக்கச்சொன்னார்.கொடுத்தேன்.அடுத்த நிமிஷமே போனை என்னிடம் கொடுத்தவர் ரைட்டர்னு‌ முதல்லயே சொல்ல வேண்டியதுதானே சார் என்றார். அதெல்லாம் வெளியிலே சொல்ல வேண்டிய விஷயமில்லையே‌ என்றேன். அடுத்து கேட்டாரே பார்க்கலாம் ஒரு கேள்வி வெட்கப்பட்டுப் போனேன். ". கடைசியாக எந்த ஸ்டேஷன்ல சார் வேலை பாத்தீக"

கதவு|தமிழ் கவிதை/இன்றைய நயினாரின் உணர்வுகளில்

Image
  இன்றைய நயினாரின் உணர்வுகளில் கதவு|தமிழ் கவிதை கதவு|தமிழ் கவிதை|kavithai tamil|Nynarin Unarvugal Nynarin Unarvugal

கிடைத்தது வெற்றி /--ராதை சுப்பையா, ஈப்போ, மலேசியா

Image
 கிடைத்தது வெற்றி  சாலை ஓரத்து இரப்பர் மரங்களின் மிதமான ஒட்டுப்பால் வாசனையில் விதைக்கப்பட்டது என்னுள்ளான  இந்த கனவு.. பதின்ம வயது  தொடங்கி வார்த்தைகள் மூளை நரம்பில்  பேசத் தொடங்கின.. என் ஒவ்வொரு  பாதச் சுவடுகள் நூறாயிரம்  கதைகளை எழுதி வைத்திருக்கின்றன இருதலைக் கொள்ளியாய் எத்தனையோ தருணங்களில் தனித்தன்மை இழந்து  தடுமாறியது உண்டு அவமானங்கள் நெஞ்சை  நிலைகுழைய வைத்தது சுதந்திரம் பெண்ணுக்கு பொது என  பொய்யாய் பிரகடனப் படுத்தப்படுகின்றது இங்கு நம்  தலை  மட்டுமே  ஆடவேண்டும் அறிவு மருந்துக்குக் கூட வேலை செய்வதை பல தலைகள் விரும்புவதில்லை காணாப் பிணமாய் நம் கருத்தும் உழைப்பும்  புதைக்கப்படுகின்றன எல்லா நிலைகளையும் தகர்த்தெடுத்து  மகிழ்ச்சி மந்திரத்தை சொந்தமாக்கி இதோ இங்கு இன்று எனக்கு  * கிடைத்தது வெற்றி எல்லையில்லா ஆனந்தத்தில் மனம் துள்ளிக்குதிக்க என் கனவுகள் மெய்பட காரணமானவர்களுக்கு கரம் கூப்பி குவிக்கின்றேன்  நன்றி மலர்களை🌹 --ராதை சுப்பையா, ஈப்போ, மலேசியா

ஒரு உயிலை எப்படி நிரூபிக்க வேண்டும்/. அடிப்படை சட்ட தகவல் பகுதி,

Image
  ஒரு உயிலின் அடிப்படையில் ஒரு வழக்கைத் தீர்மானிக்கும் பொழுது, அந்த உயில் உள்ளது என்பதை விடவும், அந்த உயில் முறையாக எழுதப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இது குறித்து உச்ச நீதிமன்றம் " S. R. சீனிவாசா Vs பத்ம வாத்தம்மா (2010-5-SCC-274)" என்ற வழக்கில் தெளிவாக கூறியுள்ளது. இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 68 ஆனது ஒரு உயிலை எப்படி நிரூபிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஒரு உயிலில் சாட்சி கையெழுத்து போட்டுள்ளவர்கள் உயிரோடு இருந்தால் அல்லது நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தால் அவர்களில் ஒருவரையாவது சாட்சியாக விசாரித்துக் அந்த உயில் எழுதப்பட்டதை நிரூபிக்க வேண்டும். ஒருவர்கூட உயிரோடு இல்லை என்றால் இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 69 ல் கூறப்பட்டுள்ளவாறு சாட்சிக் கையொப்பம் போட்டுள்ளவர்களில் ஒருவருடைய கையெழுத்தை தெரிந்துள்ள நபரை சாட்சியாக விசாரிக்க வேண்டும். அவ்வாறு கையெழுத்தை மட்டும் அடையாளம் காட்டுபவர் அந்த உயில் எழுதப்பட்டதை குறித்து சாட்சியம் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. சென்னை உயர்நீதிமன்றம் " ஜானகிதேவி Vs R. வசந்தி மற்றும் பலர் (2005-1-LW-455)

துருவாச முனி

Image
  ரஜினிகாந்த் இவருக்கு வைத்த பெயர் துருவாச முனி அவ்வளவு கோவம் வரும் இவருக்கு "டேய் நான் மீன் திங்கிற பார்ப்பான் என்கிட்டயேவா" என்று கோபப்படுவார் அவர் எல்லா மதத்தையும் இனத்தையும் ஒன்றாய் பார்த்து வளர்ந்தவர் அவர் ஆனால் இன்றும் பலர் அவரை குறிப்பிட்ட இனம் சார்ந்து பேசுவது தான் அபத்தமே.... ஒரே ஆள் அம்பேத்கர் பற்றியும்,அழகிய சிங்கர் பற்றியும் பேச முடியும் எனில் அது நிச்சயம் வாலி மட்டும் தான் தான் சொல்ல நினைப்பதை கவிதையின் வழியே சொல்ல வேண்டும் என்பதில் மிகுந்த ஆசை கொண்டவர் அவர் அவரிடம் எதுகை, மோனைகள் விளையாடும் அதே சமயம் கவித்துமான பாடலுக்கும் அவரிடம் குறைவில்லை இன்றைய சமூகம் ரசிக்கும் பெரும்பாலான எம்.ஜி.ஆர் பாடல் எல்லாம் வாலி வாய் வந்த வார்த்தைகள் தான் ஒரு முறை கண்ணதாசன் ஒரு பாடலை கேட்டு விட்டு "வர வர இந்த வாலி பய ஒழுங்கா எழுதவே மாட்டேங்குறான் டா"என்றாராம் உதவியாளரிடம் உடனே அவர் அருகில் வந்து ஐயா அது நம்ப பாட்டு தான் ஐயா என்று நினைவுப்படுத்தினாராம் அப்படி இருவரும் ஒருவரை ஒருவர் முந்தி கொண்டு பாடல்கள் எழுதினர் என்னவாயினும் கண்ணதாசனை வாலியை போல் புகழ்ந்தவர் எவரும் இல்லை &