இன்றைய - அன்றைய ரிப்போர்ட்;

இன்றைய - அன்றைய ரிப்போர்ட்;
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப் பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினமின்று:
ஹாலோவீன் தினமின்று
ஒட்டுமொத்த இந்தியாவிற்கே ஆஸ்கர் வென்ற இந்திய பிரபலம் என்றால் முதலில் நியாபகம் வருவது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான். ஆனால் அவருக்கு முன்னதாகவே 32 வருடங்களுக்கு முன்பு பானு அதய்யா என்பவர் ஆஸ்கர் விருது வென்று பெருமை சேர்த்துள்ளார். அவர் தான் இந்தியாவில் முதல் முறையாக ஆஸ்கர் வென்ற திரைப்பிரபலம் ஆவார். சிறந்த ஆடை வடிவமைப்பாளரான பானு அதய்யா பாலிவுட், ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளார்.
எங்கே போனார்கள் இந்த எழுத்தாளர்கள்?
இன்றைய நயினாரின் உணர்வுகளில்
கிடைத்தது வெற்றி
சாலை ஓரத்து இரப்பர் மரங்களின் மிதமான
ஒட்டுப்பால் வாசனையில் விதைக்கப்பட்டது என்னுள்ளான
இந்த கனவு..
பதின்ம வயது
தொடங்கி வார்த்தைகள் மூளை நரம்பில்
பேசத் தொடங்கின..
என் ஒவ்வொரு
பாதச் சுவடுகள் நூறாயிரம்
கதைகளை எழுதி வைத்திருக்கின்றன
இருதலைக் கொள்ளியாய் எத்தனையோ தருணங்களில் தனித்தன்மை இழந்து
தடுமாறியது உண்டு
அவமானங்கள் நெஞ்சை
நிலைகுழைய வைத்தது
சுதந்திரம் பெண்ணுக்கு பொது என
பொய்யாய் பிரகடனப் படுத்தப்படுகின்றது
இங்கு நம்
தலை மட்டுமே
ஆடவேண்டும்
அறிவு மருந்துக்குக் கூட வேலை செய்வதை
பல தலைகள் விரும்புவதில்லை
காணாப் பிணமாய் நம் கருத்தும் உழைப்பும்
புதைக்கப்படுகின்றன
எல்லா நிலைகளையும் தகர்த்தெடுத்து
மகிழ்ச்சி மந்திரத்தை சொந்தமாக்கி இதோ இங்கு இன்று எனக்கு
* கிடைத்தது வெற்றி
எல்லையில்லா ஆனந்தத்தில் மனம் துள்ளிக்குதிக்க என் கனவுகள் மெய்பட காரணமானவர்களுக்கு கரம் கூப்பி குவிக்கின்றேன்
நன்றி மலர்களை🌹
--ராதை சுப்பையா, ஈப்போ, மலேசியா
ஒரு உயிலின் அடிப்படையில் ஒரு வழக்கைத் தீர்மானிக்கும் பொழுது, அந்த உயில் உள்ளது என்பதை விடவும், அந்த உயில் முறையாக எழுதப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இது குறித்து உச்ச நீதிமன்றம் " S. R. சீனிவாசா Vs பத்ம வாத்தம்மா (2010-5-SCC-274)" என்ற வழக்கில் தெளிவாக கூறியுள்ளது.
இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 68 ஆனது ஒரு உயிலை எப்படி நிரூபிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஒரு உயிலில் சாட்சி கையெழுத்து போட்டுள்ளவர்கள் உயிரோடு இருந்தால் அல்லது நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தால் அவர்களில் ஒருவரையாவது சாட்சியாக விசாரித்துக் அந்த உயில் எழுதப்பட்டதை நிரூபிக்க வேண்டும். ஒருவர்கூட உயிரோடு இல்லை என்றால் இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 69 ல் கூறப்பட்டுள்ளவாறு சாட்சிக் கையொப்பம் போட்டுள்ளவர்களில் ஒருவருடைய கையெழுத்தை தெரிந்துள்ள நபரை சாட்சியாக விசாரிக்க வேண்டும். அவ்வாறு கையெழுத்தை மட்டும் அடையாளம் காட்டுபவர் அந்த உயில் எழுதப்பட்டதை குறித்து சாட்சியம் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
சென்னை உயர்நீதிமன்றம் " ஜானகிதேவி Vs R. வசந்தி மற்றும் பலர் (2005-1-LW-455)" என்ற வழக்கில், இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 68 யைப் படித்து பார்த்தால், உயிலில் சாட்சிக் கையொப்பமிடுவதும், உயிலை எழுதுவதும் வெவ்வேறான சங்கதிகளாகும். ஒன்று மற்றொன்றை தொடர்ந்து வருகிறது என்றும், ஒரு உயில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிற காரணத்தால், அந்த உயில் எழுதப்பட்டதை நிரூபித்து விட்டதாக கருத முடியாது, ஒரு வழக்கில் உயிலை நிரூபிக்க எந்தவிதமான சாட்சியங்களும் இல்லாத நிலையில் தான் உயில் பதிவு செய்யப்பட்டதற்காக இந்திய பதிவுச் சட பிரிவு 60 ன்படி சார் பதிவாளரால் வழங்கப்படுகின்ற சான்றிதழை, உயில் எழுதப்பட்டுள்ளது என்பதை நிரூபிப்பதற்கான முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் "கற்பகம் Vs E. புருஷோத்தமன் மற்றும் இருவர் (2010-3-LW-282)" என்ற வழக்கில், ஒரு உயில் எழுதப்பட்டது குறித்து மிகத் கடுமையாக மறுத்துரைக்கப்படாத நிலையில், உயிலில் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளவர்களை நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே ஒரு உயிலை நிரூபிப்பதற்கு அதில் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளவர்களில் ஒருவரை சாட்சியாக விசாரிக்க வேண்டும். யாரும் உயிருடன் இல்லாத பட்சத்தில் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளவர்களின், கையெழுத்தை அடையாளம் காட்டக்கூடிய ஒருவரை சாட்சியாக விசாரித்து உயிலை நிரூபிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
A. S. No - 159/2013
Dt - 25.3.2015
செல்வ சுப்பிரமணியன் Vs சுப்பு ரத்தினம்
2015-3-LW-7
தகவல்களை பகிர்ந்தவர் வழக்கறிஞர். செல்வகுமாரி நடராஜன்
ரஜினிகாந்த் இவருக்கு வைத்த பெயர் துருவாச முனி அவ்வளவு கோவம் வரும் இவருக்கு "டேய் நான் மீன் திங்கிற பார்ப்பான் என்கிட்டயேவா" என்று கோபப்படுவார் அவர்
பூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.. கண்ணை கவரும் உதகை ரோஜா மலர் கண்காட்சி ! நீலகிரியில் ஆண்டுதோறும் கோடை விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் ரோஜ...