Posts

Showing posts from March, 2022

ரயில் பயணிகளுக்கு சூப்பர் வசதி.. இந்திய ரயில்வே அசத்தல்!

Image
  ரயில் பயணிகளுக்கு சூப்பர் வசதி.. இந்திய ரயில்வே அசத்தல்! ரயில்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது. பயணத்தின் போது உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு இந்திய ரயில்வே சிறப்பு வசதிகளை செய்து வருகிறது. பயணத்தின் போது மக்களுக்கு நவராத்திரி சிறப்பு உணவு வழங்க இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ( IRCTC ) முடிவு செய்துள்ளது. அதாவது, இப்போது நீங்கள் உங்களுக்கு பிடித்த உணவை பயணத்தின் போது ஆர்டர் செய்து சாப்பிடலாம் IRCTC இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தொடங்கும் நவராத்திரி பயணத்தின் போது, பயணிகளுக்கு துரித உணவு வழங்கப்படும். பயணிகள் தங்களுக்கு விருப்பமான உணவை இ-கேட்டரிங் மூலம் ஆர்டர் செய்யலாம். பயணிகள் 1323 என்ற டோல் ஃபிரீ நம்பரை அழைத்து உணவுக்கு முன்பதிவு செய்யலாம். பூண்டு-வெங்காயம் இல்லாமல் இந்த உணவு தூய்மையாகவும், கல் உப்பு பயன்படுத்தி சமைக்கப்பட்டதாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பயணிகளின் விருப்பங்களைக் கருத்தில் கொண்டு IRCTC உணவு மெனுவைத் தயாரித்துள்ளது. இதன் கீழ் நான்கு விதமான தட்டுகள் காணப்

. கேமராமேன் சொல்லியும் கேட்காத ரஜினிகாந்த்

Image
  . கேமராமேன் சொல்லியும் கேட்காத ரஜினிகாந்த் ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் பல எதிர்மறையான கருத்துகள் அப்போதே சந்தித்து தான் உள்ளார். அப்படிப்பட்ட கருத்துக்களை எடுத்துக் கொண்டு தான் தற்போது வரை சூப்பர் ஸ்டாராக நிலைத்து இருக்கிறார் ரஜினி. அந்த வகையில் பாபா படத்தில் மேக்கப்பினால் வந்த பிரச்சனை, அதற்கு ரஜினி எடுத்த முடிவு என்ன என்பது போன்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது. ரஜினிகாந்த், மனிஷா கொய்ராலா, நம்பியார் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் பாபா. மக்கள் எதிர்பார்த்த அளவு இந்த படம் ஓடாவிட்டாலும் ரஜினியின் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது என்று தான் கூற வேண்டும். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினி 50 நாட்களில் முடிக்க வேண்டு ஆனால் அதற்கு ரஜினி இந்த ஒரு காரணத்திற்காக ஷூட்டிங்கை தள்ளி போட வேண்டாம், இப்பொழுது லாங் சாட் எல்லாம் முடித்து விடுவோம் என தெரிவித்திருந்தார். மேலும் குளோஸ் அப் ஷார்ட்டுக்கு எல்லாம் அதே மாதிரி டிரஸ் மீண்டும் போட்டு அதையும் எடுத்து விடலாம் என கூறி நடித்து முடித்தார். மேலும் சில அரசியல் சர்ச்சைகளும் இப்படத்தை சுற்றி இருந்து வந்த நிலையில் பல விநியோகஸ்தர்களுக்கு

சென்னை 2-வது விமான நிலையம் இடம் தேர்வு இறுதிக் கட்டம்

Image
  பன்னூர் அல்லது பரந்தூர்: சென்னை 2-வது விமான நிலையம் இடம் தேர்வு இறுதிக் கட்டம் சென்னையில் அமையவுள்ள கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கு குறைந்தபட்சம் 2,000 முதல் 3,000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. சென்னையில் 2 ஆவது விமான நிலையத்திற்காக மாநில அரசு பரிந்துரைத்த இடங்களில் பன்னூர், பரந்தூர் ஆகிய இரண்டு தளங்களை இந்திய விமான நிலைய ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவலின்படி, முதலில், சென்னையை சேர்ந்த குழு பன்னூர், பாரந்தூர், திருப்போரூர், படலம் ஆகிய நான்கு இடங்களை ஆய்வு செய்து, முன் சாத்தியக்கூறு அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால், தற்போதுள்ள விமான நிலையத்தை திருசூலத்தில் தொடர அனுமதிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருவதால், கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கு பயணிக்க பயணிகள் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கும். நான்கு தளங்களின் பல்வேறு அம்சங்களை கவனமாக ஆலோசித்த பிறகு, இந்த இரண்டு இடங்களை இந்திய விமான நிலைய ஆணையம் பட்டியலிப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பன்னூர் பன்னூர் கிராமம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் அமைந்திருந்தாலும், அங

முதலில் என்னை மூடியுள்ள உடைகளையும் ஆபரணங்களையும் அகற்றி வைக்கிறேன்!”

Image
  “முதலில் என்னை மூடியுள்ள உடைகளையும் ஆபரணங்களையும் அகற்றி வைக்கிறேன்!” இந்த வாக்கியம் உங்களுள் சில சலனங்களையும் அச்சங்களையும் முளைக்கவிடுகிறதா? எனில், கமலா தாஸ் எனும் அற்புத மனுஷியைப் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆபரணங்கள் மற்றும் ஆடைகளைக் அகற்றுவது குறித்து ஏன் அப்படி சொன்னார் என்பதைப் பிறகு சொல்கிறேன். அதற்கு முன்பு சில கேள்விகள். நீங்கள் ஆணாக இருந்தால், ஒரு பெண்ணின் அன்பில் திளைத்திருக்கிறீர்களா? காமவயப்பட்டுள்ளீர்களா? காதலின் சூடான குளிர் ஊசிகளை நெஞ்சில் வாங்கியிருக்கிறீர்களா? நிச்சயம் அவை அழகான தருணங்கள். அந்த அனுபவங்கள் ஒரு பெண்ணுக்கு எப்படி இருக்கும் எனத் தெரியுமா? மாதம் மாதம் மாதவிடாய் தருணங்கள், மாதவிடாய்க்கு முன்பான அந்த ஒரு வார உணர்வுக் கலவைகள் எனப் பெண்ணின் காதல் உணர்வுகளும் அத்தகையதே. ஆணின் காதல் கொண்டாட்டங்களைப் பதிவுசெய்தே வளர்ந்த இலக்கியங்களின் கட்டமைப்பே நம் சமூக அடித்தளம். பூவினால் தொட்டால்கூட சிறு கோடு விழுந்துவிடும் என்று தயங்கும் அளவுக்கு மென்மைகளின் இதழ்கள் வளர்த்த பெண்ணின் உணர்வுகள், காதல் தொட்டால் என்னென்ன அற்புதங்கள் நிகழ்த்தும்? பெண்ணின் காத

தெய்வம் தந்த வீடு ..வீதியிருக்கு

Image
  அவள் ஒரு தொடர்கதை”திரைப்படத்தின் கதாசிரியர் திரு.எம்.எஸ்.பெருமாள். அமரர் சுகி.சுப்பிரமணியன் அவர்களின் புதல்வர்.திரு.சுகி.சிவம் அவர்களின் மூத்த சகோதரர். சென்னை தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், வெவ்வேறு மாநிலங்களில் நிலைய இயக்குநராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது “தெய்வம் தந்த வீடு” பாடல் பற்றி அபூர்வமான தகவல் ஒன்றைச் சொன்னார். தன் சம்பாத்தியத்தால் குடும்பத்தைத் தாங்குகிற இளம்பெண், ஊதாரியாகவும், ஊர்சுற்றியாகவும் குடிகாரனாகவும் இருக்கும் அண்ணனை வீட்டிலிருந்து வெளியேற்றுகிறாள்.அண்ணன் கதாபாத்திரம் ஆர்ப்பாட்டமாக வெளியேறுவதுதான் கதை. அங்கே ஒரு பாடல்வைக்க வேண்டுமென இயக்குநர் கே.பாலசந்தர் சொன்னதும் கடுமையாக எதிர்த்தவர் எம்.எஸ்.பெருமாள். அந்த இடத்திற்கும் சரி, கதாபாத்திரத்திற்கும் சரி, பாடல்காட்சி பொருந்தாது என்பது அவருடைய கட்சி. வாதங்களைப் பொறுமையாகக் கேட்டுவிட்டு பாலசந்தர் சொன்னாராம், “பெருமாள்! பாட்டெழுதப் போறது நீங்களோ நானோ இல்லை. கவிஞர் எழுதப் போறார்.சரியா வந்தா வைச்சுக்குவோம் .இல்லேன்னா விட்டுடுவோம்” தயாரிப்பாளர் இராம.அரங்கண்ணல் அலுவலகத்தில்

குற்ற வழக்கில் கைப்பற்றப்படும் வாகனங்கள்

Image
 குற்ற வழக்கில் கைப்பற்றப்படும் வாகனங்களை நீதிமன்றத்திலோ அல்லது காவல்நிலையத்திலோ ஆண்டுக் கணக்கில் வைத்திருக்க தேவையில்லை. அவ்வாறு செய்வதால் வாகன உரிமையாளருக்கு மிகுந்த இழப்பு ஏற்படும்.  எனவே குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை புகைப்படம், வீடியோ எடுத்து அவற்றை நீதிமன்ற விசாரணையின் போது பயன்படுத்தி கொள்ள வேண்டும்.  இந்த நடைமுறையை எல்லா நீதிமன்றங்களும் கடைப்பிடிக்க வேண்டும். #வாகனம் உரிமையாளர்களிடம் வாகனத்தை ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் (#High_Court) தீர்ப்பு கூறியுள்ளது. CRL. OP - 5278 /2007 & 9744/2010, Manager, Sundaram Finance Company Vs Inspector of police, Kaveripattinam P. S. Krishnagiri and Mani (2010-2-LW-CRL-1122)

காங்கிரஸார் நடத்திய ஒரு ஊர்வலங்கள்

Image
  ஒருமுறை காங்கிரஸ் ஊர்வலம் திருவல்லிக்கேணித் தேரடியில் துவங்குவதாகவும் ஊர்வலத்தை சிவாஜி கணேசன் துவக்கி வைப்பதாகவும் ஏற்பாடாகி இருந்தது. மதியம் 3 மணிக்குத் துவங்க வேண்டிய ஊர்வலம் சிவாஜி கணேசன் வராததால் 4 மணிவரை துவங்கவில்லை. இதற்கிடையே வேடிக்கை பார்க்க வந்த ஜனங்கள் எங்களிடம் ‘சிவாஜி வந்தால் அவரை சரியாகப் பார்க்க முடியுமா அல்லது அவசரமாய் புறப்பட்டு விடுவாரா?’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். “நேரமானாலும் பரவாயில்லை. நீங்கள் அவரைப் பார்ப்பதற்கு வசதியான சந்நிதித் தெருவில் ஒருமுறை அவரை வரச்சொல்கிறோம்” என்று சொல்லி வைத்திருந்தோம். சிவாஜி கணேசன் வந்தவுடன் அவரை அணுகி மக்களுடைய விருப்பத்தைத் தெரிவித்தோம். அவருடன் வந்த நபரொருவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதற்கிடையே எங்களோடு வந்த சிறுவனொருவன் சிவாஜி கணேசனைத் தொட வேண்டுமென்ற ஆசையில் வேன் மீது ஏறிக் கையை நீட்டினான். இதைக்கண்டு சிவாஜி கணேசன் முகம் சுளித்தார். இதனால் கோபமுற்ற நாங்கள் ஊர்வலத்தை விட்டு வெளியேறினோம். இரவோடிரவாக ரசிகர் மன்றத்தை மாற்றி ‘மகாத்மா காந்தி நற்பணி மன்றம்’ என்று பெயரிட்டோம். சிம்சன் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஸ்தா

தள்ளுவண்டியில் ஹோட்டல் நடத்தும் தி.மு.க., பெண் கவுன்சிலர்

Image
  ஆத்தூர் :தள்ளுவண்டியில் ஹோட்டல் நடத்தும் தி.மு.க., பெண் கவுன்சிலர், தன் கணவருடன் உடல் தானம் செய்துள்ளார்.சேலம் மாவட்டம்,ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம் நகராட்சி, 8வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் புஷ்பாவதி, 47; இவர், தன் கணவர் கதிர்வேலுடன் சேர்ந்து, பல ஆண்டுகளாக ஆத்தூர், விநாயகபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன், சாலையோரம் தள்ளுவண்டியில் இரவு நேர ஹோட்டல் நடத்தி வருகிறார்.தற்போது, நகராட்சி கவுன்சிலராக வெற்றி பெற்றபோதும், வழக்கம்போல், தினமும்தள்ளுவண்டியில்ஹோட்டல் நடத்தும் தொழிலை செய்துவருகிறார். தன் வார்டில் உள்ளமக்களிடம், அடிப்படை பிரச்னைகளை கேட்டறிந்து, நகராட்சி அலுவலர்களிடம் தெரிவித்து, சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.கவுன்சிலர் புஷ்பாவதி கூறியதாவது:நான், 17 ஆண்டுகளாக தி.மு.க., உறுப்பினர். எங்கள் வார்டு மக்களின் விருப்பத்தால் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.சாலையோரம் தள்ளுவண்டியில் ஹோட்டல் நடத்தி, என் இரண்டு மகளையும் திருமணம் செய்து கொடுத்துள்ளேன்.கவுன்சிலராக வெற்றி பெற்றதால், எங்களை காப்பாற்றிய தொழிலை விட்டு விட முடியாது. பலருக்கு உணவளிக்கும் தொழில் என்பதால், மனம் தளராமல் செய்து வருகிற

தன்னை சந்திக்க வருபவர்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்

Image
  தாம் சினிமா துறையில் இருப்பதால் அதிமுக ஆட்சியில் கோவில்களில் ஆவணப் படம் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்ததாகவும் திமுக ஆட்சி அமைந்த பிறகு ஆவணப்பட எடுக்க அனுமதி கோரி விண்ணப்பித்த 30 நாட்களில் தனக்கு அனுமதி கிடைத்ததாகவும் பாராட்டினார் நடிகை ஷோபனா. முதலில் திமுக அரசு மீதும் தமக்கு நம்பிக்கையில்லாமல் தான் விண்ணப்பித்ததாகவும் ஆனால் எதிர்பாராத வகையில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டினார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலினை தாம் சந்தித்து பேசச் சென்ற போது, அவரை என்ன சொல்லி அழைப்பது என தாம் குழம்பியதாகவும் அப்போது தன்னுடன் வந்தவர்கள் 'தலைவர்' என்றும் 'தளபதி' எனவும் அழைக்குமாறு அறிவுறுத்தியதாக கூறினார். ஆனால் தாம் அவரை 'அண்ணா' என அழைத்ததாகவும் தன்னை சந்திக்க வருபவர்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதில் அவர் தீவிரம் காட்டுவதாகவும் புகழாரம் சூட்டினார். நன்றி: ஒன்இந்தியா தமிழ்

நீ ஒரே ஒரு ரூபா சம்பளம் கொடு; நான் நடிச்சுத் தர்றேன்'

Image
  அருணாச்சலம்' படத்துல ரஜினிக்கு மாமியார் கேரக்டர்ல நடிச்சேன். அப்போ, `கல்யாணம் பண்ணாம உங்களை எப்படி விட்டு வெச்சாங்க'னு ஆச்சர்யமா கேட்டார். நான் கல்யாணம் பண்ணிக்காம இருந்ததுக்கு என் அம்மாவும் அப்பாவும்தான் காரணம். சின்ன வயசுல நான் ரொம்ப துறுதுறுப்பா இருப்பேன். நான் வேகமா நடந்தா `வேகமா நடந்து கீழே விழுந்து மூக்கை உடைச்சிக்கிட்டீன்னா உன்னை யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க'ன்னு கண்டிப்பாங்க. வேகமா படியிறங்கினா, `கீழே விழுந்து காலை உடைச்சிக்கிட்டினா உன்னை யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க'னு திட்டுவாங்க. இந்தப் பேச்சை அடிக்கடி கேட்டுக் கேட்டு சலிப்பாகி ஒரு கட்டத்துல `என்னை யாரும் கல்யாணம் பண்ணிக்க வேணாம்'னு சொல்ல ஆரம்பிச்சிட்டேன். இதைவிட முக்கியமான காரணம் எங்கப்பாவோட சந்தேக குணம். எங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க. நாம நினைச்சே பார்க்க முடியாத அளவுக்கு எங்கப்பா, எங்கம்மாவை சந்தேகப்படுவார். `அப்பா மாதிரியே நமக்கும் ஹஸ்பண்ட் அமைஞ்சுட்டா என்ன பண்றது'ங்கிற பயத்துலேயே கல்யாணத்தை ஒத்திப்போட்டுட்டு வந்துட்டேன்'' என்கிறார் வெண்ணிற ஆடை நிர்மலா. ``என் அண்ணனுங்க மூணு

கதை எழுதலாம் வாங்க I Amirtham Surya

Image
 அமிர்தம் சூர்யாவின் கதை எழுதலாம் வாங்க I Amirtham Surya I Karumaandi junction video link by

அமாவாசையில் சுபகாரியங்கள் செய்யலாமா|sumis channel

Image
 இன்றைய  sumis channel அமாவாசையில் சுபகாரியங்கள் செய்யலாமா |dos and don'ts on amavasya day|sumis channel video link\

எனக்கும் அந்த செக்ஸ் ஆசை|தமிழ் கவிதை

Image
 இன்றைய நயினாரின் உணர்வுகளில் எனக்கும் அந்த செக்ஸ் ஆசை|தமிழ் கவிதை|kavithai in tamil|Nynarin Unarvugal video link

முதல்வர் ஸ்டாலின் ஏ.ஆர்.ரஹ்மான் சந்திப்பு

Image
  துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியை பார்வையிட சென்ற என்னை நண்பர் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ஸ்டுடியோவுக்கு அழைத்து, தான் தயாரித்துள்ள மூப்பில்லா தமிழே தாயே ஆல்பத்தைக் காண்பித்தார். தமிழுக்கும், இசைக்கும் உலகில் எல்லை இல்லை'' - முதல்வர் ஸ்டாலின் நன்றி: தினமணி

ஆஸ்கர் விருதுகள் - சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் வில் ஸ்மித்

Image
  ஆஸ்கர் விருதுகள் - சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் வில் ஸ்மித் 28 மார்ச் 2022 பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சிறந்த நடிகர் - வில் ஸ்மித் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.   இதுவரை வழங்கப்பட்ட விருதுகளில், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, சிறந்த சவுண்ட், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளில், 'டுன்' என்ற திரைப்படம்  விருதுகளை குவித்துள்ளன. சிறந்த அனிமேஷன் படமாக, டிஸ்னி தயாரித்த 'என்காண்டோ' (Encanto) திரைப்படம் தேர்வாகியுள்ளது. சிறந்த நடிகருக்கான விருதை, 'கிங் ரிச்சர்ட்' என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதை, 'தி ஐஸ் ஆஃப் டாமி ஃபயே' திரைப்படத்திற்காக, நடிகை ஜெசிகா சாஸ்டெய்ன் வென்றுள்ளார். பட மூலாதாரம், WARNER BROS படக்குறிப்பு, ஆறு விருதுகளைப் பெற்ற திரைப்படம் - டுன் சிறந்த துணை நடிகைக்கான விருது, 'வெஸ்ட் சைட் ஸ்டோரி' திரைப்படத்தில் நடித்த ஹரியானா டிபோஸ் என்ற நடிகை வென்றுள்ளார்.