Posts

Showing posts from September, 2020

தமிழகத்தில் ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டம் நாளை முதல்

Image
              தமிழகத்தில் ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டம் நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. மத்திய அரசு ஒப்புதல் அளித்த ஒரே நாடு,ஒரே ரேஷன் திட்டத்தை கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்தவிருந்த இத்திட்டம் கொரோனா காலத்தில் தடைபட்ட நிலையில் தற்போது நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்   நாட்டின் எந்த மாநிலத்திலும் உள்ள நியாயவிலை கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்கி கொள்ளும் திட்டமே ‘ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் . இந்த திட்டமானது தமிழகத்தில் நாளை முதல் அமலாகிறது.  

தனியார் பள்ளி பெண் முதல்வர் பெட்டிக்கடை வைத்து  தேநீர் விற்பனை

Image
சேலம் மாவட்டத்தில்  வாழப்பாடி அருகே, பொதுமுடக்கத்தால் பள்ளி மூடப்பட்டு கிடப்பதால் வேலை இழந்த தனியார் பள்ளி பெண் முதல்வர் பெட்டிக்கடை வைத்து  தேநீர் விற்பனை செய்வது அனைவரையும்  கவர்ந்துள்ளது சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவா(35). இவரது மனைவி செல்வி(32). முதுநிலை இயற்பியல் மற்றும் பி.எட்., ஆசிரியர் பட்டம் பெற்றுள்ளார். 5 ஆண்டுகள் பல்வேறு தனியார் பள்ளிகளிலும், திருமணத்திற்கு பிறகு கடந்த 5 ஆண்டுகளாகத் தனது கணவரின் தனியார் பள்ளியில் முதல்வராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து பள்ளிகள் மூடப்பட்டு கிடப்பதால் வேலை இழந்த இவர், பள்ளிக்கு எதிரே வண்ணாத்திகுட்டை பேருந்து நிறுத்தம் அருகே ஆவின் பாலகம் பெட்டிக்கடை வைத்து, தேநீர் விற்பனை செய்து வருகிறார். பள்ளி மாணவ-மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் இவரிடம் வியாபாரம் செய்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்

இருதயம் காக்கும் இயற்கை உணவு வகைகள்

Image
டாக்டர் ரேவதி அவர்களின்இயற்கை வைத்தியம்   இருதயம் காக்கும் இயற்கை உணவு வகைகள் | Natural foodstuffs to protect the Heart | World Heart Day   video link  

சோளமாவு அல்வா

Image
சோளமாவு அல்வா தேவையான பொருட்கள் : சோளமாவு 1கப், சர்க்கரை 2 கப் , நெய்,முந்திரி , பாதாம் சிறிய துண்டுகளாக நறுக்கியது. தேவையான அளவு . செய்முறை: ஒரு கப் சோளமாவை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும். அடிக்கடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரையுடன் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.சற்று பிசுபிசுப்பான சிரப் வந்தவுடன் சோளமாவு கரைச்சலை சேர்த்து கிளறவும். சுருண்டு வரும் போது கலர் நெய் சேர்க்கவும். பாத்திரத்தில் ஒட்டாது பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி முந்திரி, பாதாம் தூவி ஆறியவுடன் துண்டு போடவும். பாம்பே அல்வா என்ற இந்த சோளமாவு அல்வா செய்வது சுலபம். சுவையாகவும் இருக்கும் . V.ஜான்சிராணி சென்னை- 21.

உலக இதய தினம்

Image
  செப். 29 உலக இதய தினம்🌹 🌹 இன்று உலகம் முழுவதும் இதய தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உணவு முறைகளில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பாக இதயம் மாறி வருகிறது. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. * புகைப் பழக்கமே இல்லாத 6 லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் காற்றில் கலக்கும் புகையால் பாதிப்பட்டு உயிரிழகின்றனர். இதில் உலக அளவில் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 50 சதவீதம். புகைப் பிடிப்பதினால் 10 சதவீதம் பேர் இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். * புகைப்பிடிப்பதை நிறுத்தி 15 வருடமான பிறகும்கூட மாரடைப்பு வரலாம். அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை மற்றும் உப்பு உள்ள உணவை உண்ணுவது இதய நலனுக்கு எதிராவை. இதனால் இதய நோய் மற்றும் வலிப்பு நோய் உண்டாகிறது. * உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் பிறவியிலேயே இதயக் கோளாறுடன் பிறக்கின்றன. இதயக் கோளாறு என்பது பெரும்பாலும் ஆண்களையும், வயதானவர்களையும் மட்டுமே தாக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அது தவறு, பெண்கள், குழந்த

இதயம்

Image
இதயம் போல  படபடக்கும் சிறகொலி தவிர  சூழ்ந்து நிற்கும்  பேரமைதியே பேரழகு நிர்ச்சலனமாய் என்றாலும்  நிறைந்து நிற்கும் காற்று  என்  பேரன்பு போல.  உணரத்தான் வேண்டும்,  தோல் தடித்த மனங்கள் உணர்தலுக்கு அப்பால். சப்தமில்லாமல் நின்று  கொஞ்சம்   அமைதியின் இசைப்பையும்  அன்பின் வழிதலையும்  அரவணைத்துக்கொள்ளுங்கள், அன்பின் விசாலம் புரியும்!      #மஞ்சுளா யுகேஷ்.

கன்ஃபூசியஸ்

Image
கன்ஃபூசியஸ் ( தெளிவுபடுத்தியவர்) பிறந்த நாள்/ இன்று -செப்= 28 செப்டெம்பர் 28, கிமு 551 - கிமு 479 ♨பல சிற்றரசர்களால் ஆளப்பட்டு, பல்வேறு நாடாகச் சிதறிக்கிடந்த சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட சீனம் அது…. பிரபுக்களின் ஆதிக்கத்தினால் மக்கள் சித்ரவதைகளுக்கு ஆளாகி, வரி கொடுக்க முடியாமல் வறுமையில் உழன்றுகொண்டு இருந்தார்கள். அந்தச் சமயத்தில் மக்களின் மனசாட்சியாக மாறி, ‘ஒரு நல்ல அரசாங்கம் எப்படி நடக்கேவண்டும்’ என்பது பற்றி, தனது கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட்டார் கன்ஃபூசியஸ்.👀 ‘‘அதிக வரியும், அதிகத் தண்டனைகளும் கொடுங்கோல் ஆட்சியின் இலக்கணங்கள். அரசன் என்பவன் தகுதியினால் தேர்வு டெய்யப்பட வேண்டுமே தவிர, பரம்பரை மட்டுமே தகுதியாக இருக்கக்கூடாது. மக்களுக்கு மகிழ்ச்சியும் நல்வாழ்வும் அளிக்க முடியாத அரசாங்கம், ஆட்சியில் நீடிக்க உரிமை இல்லை’’ என்று உரக்கக் குரல் கொடுத்தார். மக்கள் கூட்டம் கூட்டமாக அவர் பேச்சைக் கேட்க அணி திரள, அரசன் அதிர்ந்து போனான். கன்ஃபூசியைஸக் கைது செய்தால் அசம்பாவிதம் நேரலாம் என யோசித்த அரசன், புத்திசாலித்தனமாக அவருக்கு ‘சட்டத்துறை அமைச்சர்’ ஒரு என ஒரு பதவி க

இந்தியாவின் இசைக்குயில்

Image
: த நைட்டிங் கேர்ள் ஆஃப் ,புகழப்படும் லதா மங்கேஷ்கரின் பிறந்தநாள் இன்று.💐 .  செப்டெம்பர் 28 ,  1929 )அன்றுபிறந்த இவ்ர் இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற ஒரு பாடகியாவார். இந்தியாவின்  இசைக்குயில் எனப் போற்றப் படுபவர். இந்தியக் குடிமக்களுக்கு (civilian) வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான  பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவர் ஒருவராவார். இவரது கலையுலக வாழ்க்கை 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளா 70 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய இசை ரசிகர்களை இனிமையால் கட்டிப்போட்ட குரல்.... இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா, திரையுலகின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே, 3 தேசிய விருதுகள், 6 பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் இப்படி பல விருதுகளை, அங்கிகாரங்களை தனதாக்கியவர் லதா மங்கேஸ்கர்.. 1942 ஆம் ஆண்டு “கிதி ஹசால்” திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகிய இவர், இந்த 70 ஆண்டுகளில் பாடிய அனைத்து பாடல்களும் ஹிட். அவரின் பாடல்களுக்காகவே பல திரைப்படங்கள் திரையரங்குகளை மாதக்கணக்கில் நிறைத்தன .1942 முதல் சி

உலக சுற்றுலா தினம்

Image
செப்டெம்பர் 27, வரலாற்றில் இன்று. உலக சுற்றுலா தினம் இன்று. உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டெம்பர் 27ஆம் நாளில், 1980ஆம் ஆண்டிலிருந்து உலகெங்கும் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும், சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இத்தினம் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.          "ஆயிரம் தடவைகள் ஒரு விடயத்தினை காதால் கேட்டுக் கொண்டிருப்பதைக் காட்டிலும் ஒரு தடவையாயினும் கண்களால் பார்த்து விடு" என்பார்கள். என் பயணங்கள் அனைத்திற்கும் பின்னால் உள்ள உத்வேகமும், உற்சாகமும் இதுதான். ஞாபகங்களை மட்டுமே மீட்டக் கூடிய வயதுகளில் அனுபவங்களை தேடி அலைய முடியாது என்பதை நான் அறிவேன்.  அவ்வயதுகளில் எனக்கு வாழக் கிடைத்தாலும் நீர் வீழ்ச்சிகளையும், மலைகளையும், காடுகளையும் என்னால் ஒரு தூரத்தில் காருக்குள்ளோ,

சோளச் சுண்டல்

Image
சோளச் சுண்டல்            புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி தினங்களில் மாலை வேளையில் முப்பெரும் தேவியருக்கு விதவிதமான நைவேத்தியங்கள் செய்து படைப்பது வழக்கம். அதிலும் ஒன்பது நாளும் ஒன்பது விதமான சுண்டல்கள் செய்து படைத்து எல்லோருக்கும் விநியோகிப்பது நல்லது. ஏராளமான சத்துகள்கொண்ட சோளத்தில் சுண்டல் செய்து உண்பது என்பது வித்தியாசமானதும் சுவையானதும்கூட. தேவையானவை:- அதிகம் முற்றாத சோளம் - ஒன்று மிளகு - ஒரு டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - அரை கப் எண்ணெய் - 3 டீஸ்பூன் உப்பு - 2 சிட்டிகை செய்முறை:- சோளத்தை உரித்து முத்துகளை எடுத்து அலசி உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெயில்லாமல் தேங்காய்த் துருவலை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய்விட்டு சோள முத்துகளைப் போட்டு வதக்கி, பொடித்த மிளகைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதில் தேங்காய்த் துருவல் தூவிக் கலந்து அம்பிகைக்குப் படைக்கலாம். மாங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை தூவினால் இன்னும் சுவை கூடும்.   மஞ்சுளாயுகேஷ்

இசை, பிரியாது!

Image
இசை, பிரியாது! காலவரையின்றி கனமானக் குரல் கொண்டு மிதமாகத் தாலாட்டியப் பாடல் 'ஸ்கிரீச்'சிடாமல் திக்கியோடி ஐம்பது நாளில் நின்று போக, 'பிளே' பட்டனை அழுத்தியவனே 'இஜெக்ட்'டையும் அழுத்தினானோ? பலப் பெண்களுக்கு 'நானா'வாக திகழ்ந்த காந்தக் குரல் ஒரு 'நாடா'வாக அறுப்படும் என வூஹான் சந்தையிலேச் சொல்லியிருந்தால் கூட நம்பியிருக்கமாட்டோமே! இத்தனைக் கோடி இருதயங்களையும் தூக்கி நிறுத்தியவனை, பட்டாடைப் போர்த்திப் பாராட்டி மகிழ்ந்தோமே... அவனைத் தலைக்கு மேல் தூக்கியாடும் பலமும்  பாக்கியமும்  என்னவோ கடவுள், 'கொரோனா'க்குத்தான் கொடுத்தானோ! உனையுண்ட இக்கிருமி இனி  கொடூரத்தை இழந்திடுமே! குழியில் புதையுண்டது அவரல்ல, வைரஸாக்கும்!! "மண்ணைக் கவ்வியது கோவிட்19" SPB யின் உயிர்ப் பிரியவில்லை, ப...ர...வி...ய...து இன்று!!! - M மிருத்திகா

சபரிமலையில் டோலி தூக்குவோர் காலை தொட்டு வணங்கிய எஸ்.பி.பி.

Image
  சபரிமலையில் டோலி தூக்குவோர் காலை தொட்டு வணங்கிய எஸ்.பி.பி. சென்னை: சபரிமலைக்கு பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சென்ற போது தன்னை டோலியில் தூக்கிச் சென்றவர்களின் காலை தொட்டு வணங்கிய வீடியோ வரைலாகி வருகிறது. மறைந்த பிரபல பாடகர் பன்முகத்தன்மை கொண்டவர் அது மட்டுமல்லாது சபரிமலை கோவிலுக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளார். அவர் சபரிமலைக்கு செல்லும் போதெல்லாம் டோலியில் பயணிப்பது வழக்கம். அவ்வாறு அவர் டோலியில் பயணிக்கும் முன்பாக டோலி தூக்குவோரின் கால்களை தொட்டு வணங்கிய பின்னரே டோலியில் அமர்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதன் வீிடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.     பெரியோர்களுக்கும் இறைவனுக்கு சேவை செய்வோருக்கும் மரியாதை தரும் வழக்கம் இந்தகால இளைஞர்களிடம் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் பெரிய பாடகராக இருந்தும் சாதாரண டோலி தூக்குவோரின் கால்களை கூட எஸ்.பி.பி., தொட்டு வணங்குவது இந்த கால இளைஞர்களுக்கு ஒரு பாடம்.

முதலும் கடைசியும்

Image
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழில் பாடி முதலில் வெளியான பாடல் எம்.ஜி.ஆரின் ‘அடிமைப்பெண்’ படத்தில் இடம் பெற்ற ஆயிரம் நிலவே வா. இந்த பாடலை அவர் பி.சுசீலாவுடன் இணைந்து பாடினார்.  இந்த பாடலுக்கு இசையமைத்தவர் திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன்.   எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக, ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்துக்காக இமான் இசையமைப்பில் பாடி உள்ளார்.  அந்த பாடல் இனிமேல்தான் வெளியாகும்.  

சாதனை திலகம்

Image
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்      தனது அரை நூற்றாண்டுகால திரை வாழ்க்கையில் மறைந்த பாடகர்  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நிகழ்த்திய சாதனைகள்   எஸ்.பி.பி 16 மொழிகள் மற்றும் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்து உள்ளார்.    இயக்குநர் கே.பாலச்சந்தர் தான் இயக்கிய ஏக் துஜே கேலியே படத்தின் மூலம் எஸ்.பி.பி-யை இந்தியில் அறிமுகம் செய்தார். அப்போது எஸ்.பி.பி-க்கு இந்தி துளியும் தெரியாது. எனினும் அப்படத்தில் வரும் 'தேரே மேரே பீச் மெயின்' பாடலை உணர்வுப்பூர்வமாக பாடியதற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.   எஸ்.பி.பி 6 முறை (1979, 1981, 1983, 1988, 1995, 1996) சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.    மத்திய அரசு வழங்கும் பத்ம ஸ்ரீ (2001), பத்ம பூஷன்(2011) விருதுகளை பெற்றுள்ளார்.    எஸ்.பி.பி தொடரந்து 12 மணி நேரம் பாடியும் சாதனை படைத்துள்ளார்.   தனது அரை நூற்றாண்டுகால திரை வாழ்க்கையில் ஆறு தேசிய விருதுகள், 25 நந்தி விருதுகள், 4 தமிழக அரசு விருதுகள் என 50-க்கும் மேற்பட்ட விருதுகளை எஸ்.பி.பி வாங்கி குவித்துள்ளார். ஆனால் அதைவிட கோடிக்கணகான உள்ளங்களை

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முத்தான பாடல்கள்

Image
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முத்தான பாடல்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முத்தான பாடல்கள்     செப்டம்பர் 26,  2020  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனைத்து மொழிகளிலும் பாடிய 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களும் மனதை விட்டு நீங்காத முத்தான பாடல்கள். அவற்றில் சில... ஆயிரம் நிலவே வா, கம்பன் ஏமாந்தான், கடவுள் அமைத்து வைத்த மேடை, பாடும் போது நான் தென்றல் காத்து, அவள் ஒரு நவரச நாடகம், இயற்கை எனும் இளைய கன்னி, முத்து மணி மாலை, இது ஒரு பொன்மாலை பொழுது, ராஜா என்பார் மந்திரி என்பார், நதி ஓரம், யாதும் ஊரே யாவரும் கேளீர். மங்கையரில் மகராணி, தென்மதுரை வைகை நதி, என் கண்மணி உயிர் காதலி, ஆவாரம் பூவு ஆறேழு நாளா, யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே, அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே, இருமனம் கொண்ட திருமண வாழ்வில், தேன் சிந்துதே வானம், சம்சாரம் என்பது வீணை, நிலவே நீ சாட்சி மன நிம்மதி நாடும், மடை திறந்து தாவும் நதி அலை நான், இலக்கணம் மாறுதோ, நான் என்றால் அது அவளும் நானும், வானுக்கு தந்தை அவனே, மண்ணில் இந்த காதல் இன்றி, மன்றம் வந்த தென்றலுக்கு, ராகங்கள் பதினாறு உருவான வரலாறு, காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்

ஆன்லைன் வாய்ப்பு இல்லாதவர்களுக்கு ஆசிரியை ஆன 8-ம் வகுப்பு பழங்குடியின மாணவி

Image
ஆன்லைன் வாய்ப்பு இல்லாதவர்களுக்கு ஆசிரியை ஆன 8-ம் வகுப்பு பழங்குடியின மாணவி செப்டம்பர் 25, 2020 13:16 IST கோவை அருகே ஆன்லைனில் பாடம் கற்கமுடியாத மாணவர்களுக்கு  8- ம் வகுப்பு பழங்குடியின மாணவி வகுப்பு எடுத்து வருகிறார்.   மாணவர்களுடன் அனாமிகா கோவை: தமிழகம்- கேரள எல்லையில் உள்ளது அட்டப்பாடி பழங்குடியினர் மலை கிராமம். இங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு மின்சாரம், சாலை வசதி உள்ளிட்டவைகள் இல்லை. செல்போன், டி.வி. இல்லாதததால் கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பில் இங்குள்ள மாணவர்களால் கல்வி கற்க முடியாமல் அவதியடைந்தனர். இதே பகுதியில் உள்ள சோலையூரை சேர்ந்த கூலித்தொழிலாளி சுதிர். இவரது மனைவி சஜி. இவர்களின் மூத்த மகள் அனாமிகா (வயது 14). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கில் விடுதியில் தங்கியிருந்த அனாமிகா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் சொந்த ஊருக்கு வந்தார். இங்கு மின்சாரம் மற்றும் ஸ்மார்ட்போன் இல்லாததால் அனாமிகா ஆன்லைனில் பாடம் கற்கமுடியாமல் சிரமம் அடைந்தார். இதே நிலை நீடித்தால் கல்வியை இழக்க வேண்டும் என்று பயந்த அனாமிகா தனது தந்த

வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி

Image
          வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் சட்னி 24-09- 2020 நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்க உதவும். மற்றும் இன்சுலின் சுரப்பையும் தூண்ட செய்யும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.   நெல்லிக்காய் சட்னி தேவையான பொருட்கள் : பெரிய நெல்லிக்காய் - 6, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு.  செய்முறை: பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் நன்றாக அரைக்கவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்து துவையலில் சேர்த்துப் பயன்படுத்தவும். உடலுக்கும் மிகவும் நல்லது இந்த நெல்லிக்காய் சட்னி.  

எஸ்.பி.பி. ஒரு சகாப்தம்

Image
இசையால் என்றென்றும் வாழ்வார்                              எஸ்.பி.பி. ஒரு சகாப்தம் 25-09-2020 பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.  74    வயதான அவர் கடந்து வந்த பாதையைப் பார்ப்போம்.  .   எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர். இதுவரை எஸ்.பி.பாலசுப்ரமணியம் வென்றுள்ள ஆறு தேசிய விருதுகளும் 4 வித்தியாசமான மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது எஸ்.பி.பியின் பன்மொழி திறனுக்கு சான்று. 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் உலகின் அதிக பாடல்கள் பாடிய பாடகர் என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் ஒரே நாளில் 21 பாடல்களை பாடிய பாடகர் என்ற தகர்க்க முடியாத சாதனை ஒன்றையும் தன்வசப்படுத்தி இருக்கிறார்.     ஆரம்பத்தில் மோசமான தமிழ் உச்சரிப்புக்காக புறந்தள்ளப்பட்ட எஸ்.பி.பி, பின்னர் எம்எஸ்வி-யின் ஆலோசனைக்கு இணங்க ஓராண்டு பயிற்சி பெற்று தமிழ் சினிமாவில் பாடும் வாய்ப்பை பெற்றார். அதன்பின் கிட

உங்கள் பாடல்களில் உங்கள் ஸ்பரிசத்தை உணர்வோம்

Image
            உங்கள் பாடல்களில் உங்கள் ஸ்பரிசத்தை உணர்வோம்                                                      ----  இயக்குனர் பிருந்தா சாரதி       இ ந்த உலகம் இறந்த  பிறகு பலருக்கும்  நல்ல மனிதர் என்று பட்டம் கொடுக்கும். சாவு கொடுக்கும் சலுகை அது. ஆனால் வாழும்போதே நல்ல மனிதர் என்று பெயரெடுத்தவர் எஸ். பி. பி. அவர்கள். அது மிகவும் கடினம் . உண்மையிலேயே உள்ளும் புறமும் ஒன்றாக இருக்க வேண்டும். அந்தக் குணம் எஸ். பி. பி. இடம் இருந்தது.  அவர் மேடைக்கு வந்தால் அங்கு ஒரு ஈரக் காற்றடிக்கும்.  அன்பு அலையடிக்கும். அவரது புன்னகை எல்லா முகங்களிலும் ஒளியேற்றும். பாடல்களால் இதயத்தை வருடுவார். பின் நல்ல வார்த்தைகளால் நம் உயிரைத் தொட்டுவிடுவார்.  அவர் பாடல் கேட்காத நாளே இந்த அரை நூற்றாண்டில் இல்லை. இனியும் பல நூற்றாண்டுகள் இருக்கப் போவதில்லை.  நேரில் பார்க்காத ஒருவரைக் கூட தம் குடும்ப உறுப்பினராக அவரை நினைக்க வைத்தார். எவ்வளவு நல்ல மனிதர்! தனக்குச் சமமாக அனைவரையும் மதிக்கக் கூடியவர். அதுதான் இன்று கவிந்திருக்கும் இந்த சோகத்திற்குக் காரணம்.  கந்தர்வக் குரல் கொண்ட அந்த மாபெரும் பாடகன் 40000 பாடல்களுக்கு ம

தொப்பை குறைய, இருமல் குணமாக பட்டை மிளகு டீ

Image
தொப்பை குறைய, இருமல் குணமாக பட்டை மிளகு டீ 24-09-2020 இயற்கை முறையிலேயே எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் தொப்பையை குறைக்க உதவும் டீ தயாரிப்பது   பட்டை மிளகு டீ தேவையான பொருள்கள் : தண்ணீர் - 250 மில்லி பட்டை - ஒரு துண்டு மிளகு - 10 மஞ்சள் - சிறிதளவு இஞ்சி - ஒரு துண்டு செய்முறை: 250 மில்லி தண்ணீர் எடுத்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வை.  மிளகை இடித்து  போடு.  சிறிதளவு பட்டையை பொடித்து போடு.  இவற்றை சிறு தீயில் கொதிக்க வை. மஞ்சள் தூளை நன்கு கொதித்து கொண்டிருக்கும் தண்ணீரில் போடு. ஒரு சிறு துண்டு இஞ்சி எடுத்து டீயை குடிக்க இருக்கும் டம்ளரில் சிறு துண்டுகளாக நறுக்கி போடு. கொதிக்க வைத்த தண்ணீரை இந்த டம்ளரில் ஊற்றி பத்து நிமிடம் கழித்து இந்த தண்ணீரை அருந்து. இதனை காலை வேளையில் வெறும் வயிற்றில் குடி. முடியாதவர்கள் இரவு தூங்க செல்லும் முன் கூட அருந்தலாம். இடுப்பு, கால், கழுத்து பகுதிகளில் இருக்கும் வலி குறையும். பால் கொடுக்கும் தாய்மார்களும் குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு குடிக்கலாம். நீரழிவு நோயாளிகளும் குடிக்கலாம்.

புரதம் நிறைந்த சைவ உணவுகள்!

Image
புரதம் நிறைந்த சைவ உணவு 24-09-2020     நன்றி குங்குமம் டாக்டர் * நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்களில், புரதம் (Protein) தனி இடம் பெறுகிறது. அத்தகைய சிறப்புத்தன்மை வாய்ந்த இந்த ஊட்டச்சத்து அசைவ உணவு வகையான கோழி இறைச்சி, முட்டை போன்றவற்றில்தான் அதிகளவில் உள்ளது என பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருப்பதில் ஓரளவு உண்மை இருக்கிறதுது. ஆனாலும், பாரம்பரிய பின்னணி கொண்ட சைவ உணவுப்பண்டங்களிலும் அசைவ உணவுப்பொருட்களை மிஞ்சும் வகையில், புரதச்சத்து கூடுதலாக காணப்படுகிறது. அவர்களுக்காகவே புரதம் நிறைந்திருக்கிற தானியங்கள், காய்கறிகள் மற்றும் அவற்றில் உள்ள இந்த சத்தின் அளவு முதலானவை தொகுத்து தரப்பட்டுள்ளன.   *பாதாம்பருப்பு வளரும் குழந்தைகள் மட்டுமில்லாமல், முதுமைப் பருவத்தினருக்கும் அத்தியாவசியத் தேவையாக பாதாம் பருப்பு திகழ்கிறது. ஏனெனில் வயோதிக காலத்தில் ஏற்படுகிற நினைவாற்றல் குறைதல் போன்ற மூளை தொடர்பான பாதிப்புக்களை சரி செய்யவல்லது பாதாம்பருப்பு. பாதாம் புரோட்டீன் சத்தை தருவதோடு மட்டுமில்லாமல், உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின் A, D, C போன்றவற்றையும் தருகிறது. இன்னொரு கூடுதல்

விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன்உள்ளதாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் அறிவிப்பு

Image
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளதாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.     தேமுதிக தலைவர் விஜயகாந்த்(வயது 68) உடல் நலக்குறைவு காரணமாக, பெரிய அளவில் கட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல், வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து விஜயகாந்திற்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, அவருக்கு தொடர்ந்து கொரோனாவிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று தேமுதிக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்வது வழக்கம் என்றும் மருத்துவமனைக்கு சென்ற போது லேசாக தென்பட்ட கொரோனா அறிகுறி, உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மருத

அக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி

Image
தமிழகத்தில் அக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.   ,   உலக  அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், நாடு முழுவதும் நான்காம் கட்ட பொதுமுடக்க தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியிட்டது. அதில் ஒரு பகுதியாக பள்ளிகள் முதற்கட்டமாக செப்டம்பர் 21 முதல் திறக்க அனுமதிக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. அதில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் தன்னார்வ அடிப்படையில் பள்ளிக்கு வர செப்.21 முதல் அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.   இந்நிலையில் தமிழகத்தில் அக்.1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்படுவதாக தலைமைச்செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும் விருப்பத்தின் பேரில் மாணவர்கள் செல்லலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. Advertisement

சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவுக்கு மேலும் 3 சிறப்பு ரயில்கள்

Image
சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவுக்கு மேலும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.   ,    தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி பொது போக்குவரத்துக்கு அரசு தடை விதித்தது. அதன் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதும், பொதுபோக்குவரத்து சேவைகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் சிக்கிக் கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்களுக்காகவும், அவசரத் தேவைகளுக்காக செல்லும் மக்களுக்காகவும் ஒரு சில சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்தது. இந்தசூழலில் தற்போது சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.   இந்நிலையில் சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவுக்கு 3 சிறப்பு ரயில்கள் (சென்னை- திருவனந்தபுரம், சென்னை - மசூரு, சென்னை- மங்களூரு) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், செப்.27 ம் தேதி முதல் சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூரு செல்லும் தினசரி விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராணுவத் தளத்திற்கு அருகில் விண்வெளி ஏலியன் சுட்டுக் கொல்லப்பட்டது

Image
சுட்டுக்கொல்லபட்ட வேற்று கிரகவாசி மறைக்கபட்ட உடல்; அமெரிக்க விமானப்படை மேஜரின் அனுபவம் 1978 ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவத் தளத்திற்கு அருகில் விண்வெளி ஏலியன் சுட்டுக் கொல்லப்பட்டது என முன்னாள் அமெரிக்க விமானப்படை மேஜர் ஜார்ஜ் ஃபில்லர் கூறியுள்ளார்.     விருது பெற்ற புலனாய்வு நிருபர் ஜான் எல். குரேரா எழுதிய ஒரு விமானப்படை புலனாய்வு அதிகாரியின் உண்மைக்கதை (Strange Craft: The True Story of an Air Force Intelligen வேற்றுகிரகவாசி குறித்துவிவரித்துள்ளார்.   புத்தகத்தில் அவர் 1978 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி, டிக்ஸ் கோட்டையில் ஏலியன் ஒன்று சுடப்பட்டு, மெகுவேர் விமானப்படை தளத்தின் ஓடுபாதை முடிவில் கண்டுபிடித்தாக மூத்த மாஸ்டர் சார்ஜென்ட் ஃபில்லரிடம் கூறியுள்ளார்.

கொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவி

Image
  கொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியதாக, சீனா வைராலஜி நிபுணர் கூறியுள்ளார்.     உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துள்ள கொரோனா வைரஸ் தொற்று குறித்து சீன அரசு மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.   இது போன்ற சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன், சீனாவைச் சேர்ந்த வைராலஜி நிபுணர்  லீ மெங் யான் என்பவர் கொரோனா வைரஸ் உகான் மாகாண ஆராய்ச்சிக் கூடத்தில் உருவாக்கப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கண்ணதாசன் அவர்களின் பெண் வாழ்க

Image
தமிழ் இலக்கியத்திலிருந்து இன்றையச்சுவை கண்ணதாசன் அவர்களின் பெண் வாழ்க என்ற கவிதை     சக்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்த் தர்மத்தில் இணைந்து வாழ்வோம் கத்திவழி நேர்மையாய்ப் பண்புவழி மேன்மையாய்ப் பாரெல்லாம் வணங்க வாழ்வோம்! பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில் பக்கத்தில் பங்கு கொள்வோம்! பாதாதி கேசமும் சீரான நாயகன் பளிச்சென்று துணைவி வாழ்க! படுவதொரு துயரேனும் வருவதொரு சுகமேனும் பாதியாய்த் துணைவன் வாழ்க! தாய்வீடு விட்டபின் தன்வீடு தாய்வீடு என்றெண்ணியே தலைவி வாழ்க! சமகால யோகமிது வெகுகால யாகமென சம்சாரம் இனிது வாழ்க!

சுஷாந்த் சிங் ராஜ்புத் மட்டுமே போதைப்பொருள் பயன்படுத்தினார்

Image
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்  மரண விசாரணையின் போது போதைப்பொருள் வழக்கில் காதலில் ரியா சக்ரவர்த்தி செப்டம்பர் 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.   இரண்டுமுறை ஜாமீன் அப்பீல் செய்தும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை இந்த நிலையில்  ரியா சக்ரபோர்த்தி, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தனக்கு எதிராக சூனிய வேட்டை நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். \\  சுஷாந்த் சிங் ராஜ்புத் "தனது போதை பழக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள தனக்கு நெருக்கமானவர்களைப் பயன்படுத்திக் கொண்டார்" என்றும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.   ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஷோயிக் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மும்பை உயர் நீதிமன்றத்தால் நாளை விசாரிக்கப்பட உள்ள நிலையில் மும்பையில் பலத்த மழை காரணமாக இது ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.   ரியா ஜாமீன் மனுவில், "சுஷாந்த் சிங் ராஜ்புத் மட்டுமே போதைப்பொருள் பயன்படுத்தினார். அவர் தனது ஊழியர்களை தனக்கு போதைப்பொருள் வாங்குமாறு அறிவுறுத்தினார் என்று  தெளிவாகிறது. "மறைந்த நடிகர் இன்று உயிருடன் இருந்திருந்தால், அவர் சிறிய அளவிலான பயன்ப