Posts

Showing posts from May, 2021

உங்களுக்கு IQ குறைவா?.. வானதியை கண்டித்த பிடிஆர்

Image
  நிறுத்துங்கள்! நீங்கள் பிறவியிலேயே பொய்யரா?.. இல்லை உங்களுக்கு IQ குறைவா?.. வானதியை கண்டித்த பிடிஆர் உங்கள் பொய் மூட்டைகளுடன் என்னை டேக் செய்வதை நிறுத்துங்கள், அதற்கு பதிலாக ஏதேனும் பயனளிக்கக் கூடிய பணிகளை பாருங்கள் என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசனுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காட்டமாக பதில் அளித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கோவாவிற்கு எதிராகவும் அந்த மாநிலத்தை அவமதித்ததும் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கோவாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதில் கோவா போன்ற சிறிய மாநிலங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கோடின்ஹோ கோரிக்கை வைத்தார். இதை பிடிஆர் எதிர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே கோவாவை அவமதித்த பிடிஆர் கோவா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த மாநில அமைச்சர் கேட்டுக் கொண்டார். இதற்கு விளக்கமளித்த பிடிஆர் நடந்தவற்றை விளக்கிக் கூறி, தான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை என கூறிவிட்டார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் வானதி ஸ்ரீனிவாசன் தலையிட்

- பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான திட்டத்தை விமர்சிக்கும் பிரஷாந்த் கிஷோர்

Image
  மோடி அரசின் மாஸ்டர் ஸ்ட்ரோக்- பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான திட்டத்தை விமர்சிக்கும் பிரஷாந்த் கிஷோர் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலின் போது மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. நிச்சயம் நூற்றுக்கும் குறைந்த அளவிலான இடங்களை மட்டுமே பெற்று தோல்வியை தழுவும் என்று, திரிணாமுல் காங்கிரஸின் தேர்தல் ஆலோசகரான பிரஷாந்த் கிஷோர் திட்டவட்டமாக தெரிவித்தார். அதேபோல், வெளியான தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க-விற்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 10 சதவீதமாக இருந்தது. அதைத்தொடர்ந்து, மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வருபவர் தற்போது மத்திய அரசு அறிவித்திருக்கும், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவித் திட்டத்தை பா.ஜ.க-வின் மற்றொரு ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ என்று நகை முரணோடு விமர்சித்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டையும், நாட்டு மக்களையும் புரட்டிப் போட்டு வருகிறது. தினந்தினம் சற்றும் எதிர்பார்த்திராத மரணங்களும், அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் நம்மைச் சுற்றி நிகழ்ந்து வருகிறது. இதில் கொரோனாவால் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளின்

மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை"

Image
  "மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை".. கோவா அமைச்சரின் புகாருக்கு.. பி.டி.ஆரின் பொளேர் பதிலடி! கொரோனா மருந்து பொருட்களின் இறக்குமதி மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க கோவா அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்ததாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார். அதோடு கோடின்ஹோ வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பிடிஆர் சரமாரி பதிலடி கொடுத்துள்ளார் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கோவாவிற்கு எதிராக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கோவாவின் போக்குவரத்து துறை அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதில் கோவா போன்ற சிறிய மாநிலங்களுக்கு முன்னிரிமை கொடுக்க வேண்டும் என்று கோடின்ஹோ கோரிக்கை வைத்தார். ஆனால் இதை பிடிஆர் எதிர்த்ததாகவும், கோவா போன்ற சிறிய மாநிலங்களுக்கு முன்னுரிமை கொடுக்க கூடாது என்று பிடிஆர் பேசியதாகவும் கோடின்ஹோ குற்றஞ்சாட்டி இருந்தார். அதோடு பிடிஆர் இதற்காக கோவா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோடின்ஹோ குறிப்பிட்டு இருந்தார். இதற்குதான

தாய் கண்முன் நடித்த ‘நடிகர் திலகம்’ சிவாஜி

Image
  தாய் கண்முன் நடித்த ‘நடிகர் திலகம்’ சிவாஜி ‘‘திருவருட் செல்வர் படத்தில், அப்பா சிவாஜிக்கு மிக வயதான முதியவர் போன்ற வேடம். படப்பிடிப்பு முடிந்தது. ஆனால், அப்பா மேக்கப்பை கலைக்கவில்லை. அப்படியே வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டை அடைந்ததும் வாசலில் நின்றபடி குரலை மாற்றி, ‘‘அம்மா தாயே’’ என்று குரல் கொடுக்கிறார். வெளியே வருகிறார், பாட்டி ராஜாமணி அம்மாள். அவரிடம், ‘‘நான் ஒரு சிவபக்தன். கைலாய மலைக்கு போய்க்கொண்டிருக்கிறேன். வழியில் கிடைப்பதை சாப்பிடுவேன். ஒரு வாய் சோறு கிடைக்குமா?’’ என்று கேட்கிறார். பக்தி பரவசத்தில் ராஜாமணி அம்மாள், வந்திருப்பவர் தன் மகன் என்று அறியாமல், வீட்டுக்குள் அழைத்து சென்று உணவு கொடுத்து வணங்குகிறார். சாமியார் சாப்பிடும் விதத்தை பார்த்து, `நம்ம கணேசன் சாப்பிடு வதைப்போல் இருக்கிறதே' என்று ராஜா மணி அம்மாள் கூர்ந்து கவனிக்கிறார். எத்தனையோ முக பாவங்களை காட்டுபவர், அம்மாவின் முகமாறுதலை பார்த்து சத்தம் போட்டு சிரிக்கிறார். அந்த சிரிப்பை பார்த்து சாப்பிடுபவர் தன் மகன்தான் என்பதை உணர்ந்து பிரமிக்கிறார், ராஜாமணி அம்மாள். நடிப்பு திறமையால் பெற்ற தாயின் கண் களையே ஏமாற்றியவர்

கொத்தமல்லி, இஞ்சி, ஏலக்காய்… காலைகாபி

Image
உடலுக்கு ஆரோக்கியம் தரும் கொத்தமல்லி காபி செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் காணலாம்  கொரோனா அச்சுறுத்தும் இந்த காலத்தில் நாம் இயற்கை உணவுகளையே அதிகம் உட்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த காலம்  நாம் இயற்கை உணவுகளின் அவசியத்தையும் அதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளையும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்றே கூறலாம். அந்த வகையில் தற்போது நாம் இந்த பதிவில் கூறப்போகும் இயற்கை பொருட்கள் அடங்கிய காபி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். அஜீரணத்தை சீராக்கவும், ஆரோக்கிய நன்மைகளையும் தரக்கூடியது. மேலும் பக்கவிளைவுகளும் ஏற்படாது. நம் முன்னோர்களின் அருமருந்தாக இருந்த கொத்தமல்லி காபிதான் இப்போது நாம் சொல்ல வந்த இயற்கை திரவம். இதை எப்படி செய்வது? தேவையான பொருட்கள். வரமல்லி – 2 ஸ்பூன், இஞ்சி – 2 சிறிய துண்டுகள், ஏலக்காய் – 2, நாட்டு சர்க்கரை – 2 ஸ்பூன். செய்முறை : முதலில் இஞ்சி,மல்லி, 2 ஏலக்காய் தனித்தனியாக எடுத்து இடித்து வைத்துக்கொள்ளவும். அடுத்து பாலை கொஞ்சம் சூடு படுத்தி எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, நச

வறுமை|கவிதை|கவிதை வரிகள்

Image
இன்றைய நயினாரின் உணர்வுகளில்   வறுமை|கவிதை|கவிதை வரிகள்

பாம்பன் சுவாமிகள் திருவான்மியூரில் கோவில் கொண்ட நினைவு நாள்.

Image
  இன்று பாம்பன் சுவாமிகள்  திருவான்மியூரில் கோவில் கொண்ட  நினைவு நாள். பாம்பன் சுவாமிகள் பாடல் | சமாதான சங்கீதம் | கவிஞர் ச.பொன்மணி  அறுமுகச்சிவனாம் முருகப் பெருமானின் அருள் அனைவருக்கும் வாய்க்கட்டும். சஞ்சலமேன் மனமே  என்று அவர் அருளிய சமாதான சங்கீதம் முருகப்பெருமானின் பேரருளை அனைவருக்கும் வழங்கட்டும் பாடல் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் இசை, குரல், & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கிண்டல்

Image
  என் அரசியல் வாழ்க்கையின் "துயரம்" இதுதான் மக்களே.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கிண்டல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒரு மாநில பிரதிநிதி பேசியதை குறிப்பிட்டு, "இது எனது அரசியல் வாழ்க்கையின் துயரம்" என்று கிண்டலாக தெரிவித்தார் தமிழக நிதித்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன். சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 8 மாதங்களுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலமாக கூட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதன் முறையாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், இன்று மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிருபர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறியதாவது: பேசுவதே புரியவில்லை நேற்று நிறைய மாநில நிதியமைச்சர்கள் இந்தி மொழியில் பேசினார்கள். எனக்கு ஓரளவுக்கு இந்தி புரியுமே தவிர அதிக அளவு தெரியாது. அருகே நிதித்துறை செயலாளர் இருந்ததால் அவர்கள் எ

கார்ப்பரேட்டு நிறுவனங்கள்

Image
1857 ல் முதல் இந்திய சுதந்திரப் போர் நடைபெற்று முடிந்ததும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றியது. கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்ட ஏகபோக வர்த்தக உரிமையைப் பறித்தது. இத்துடன் பிரித்தானிய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா வந்தது. 18-ம் நூற்றாண்டின் இந்தியப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜெயின் மற்றும் மார்வாடி சமூகத்தைச் சேர்ந்த வியாபாரிகள், வங்கியாளர்களின் ஆதரவைக் கிழக்கிந்திய கம்பெனி பெற்றிருந்தது. 1718-க்கும் 1730-க்கும் இடைப்பட்ட காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி இவர்களிடமிருந்து ஆண்டுக்கு சராசரியாக ரூ.4 லட்சம் கடனாகப் பெற்றது. இந்திய வர்த்தகர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு கிழக்கிந்தியக் கம்பெனி இயற்கையான கூட்டாளிகளாகத் துணையாக இருந்தது. இந்திய மேட்டிமைச் சமூகத்தின் ஆதரவும் நம்பிக்கையும் இல்லாமல் பிரித்தானியர்கள் இவ்வளவு காலம் நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி செய்திருக்க முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் எப்படி ஒரு மிகப்பெரும் பொருளாதாரச் சுரண்டலை கிழக்கிந்திய கம்பெனியும் அதனைத் தொடர்ந்து பிரிட்டன் அர

கான் சாகிப்

Image
  1763 செம்டம்பரில் தொடர் மழையின் ஊடே மதுரையை கும்பினி படைகள் 22 நாள்கள் தாக்கியது, கான் சாகிப்பின் தாக்குதலில் கும்பினி படைகள் பெரும் சேதத்தைச் சந்தித்து நிலைகுலைந்து போனது. மீண்டும் சென்னை, மும்பையிலிருந்து கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டு நவீன ஆயுதங்களுடன் மேஜர் பிரஸ்டன் தலைமையில் மீண்டும் தாக்குதல் தொடங்கியது. கான் சாகிப் உடன் இருந்தவர்கள் தங்கள் விசுவாசத்தை மாற்றிக்கொண்டனர், அவருடன் இருந்த பிரெஞ்சு தளபதி கமேண்டர் மெர்ச்சன் காட்டிக்கொடுக்க முன்வந்தார். கும்பினியாரிடம் விலைபோனவர்கள் தொழுகையில் இருந்த கான் சாகிப்பைப் பின்னிருந்து தாக்கிக் கட்டிப்போட்டனர். கான் சாகிப் கும்பினி படைகள் வசம் ஒப்படைக்கப்பட்டார். 1763 அக்டோபர் 15 அன்று கான் சாகிப் மதுரைக் கோட்டைக்குத் தெற்கே ஒரு மாமரத்தில் தூக்கிலிட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இருமுறை கயிறு அறுந்து கீழே வீழ, மூன்றாவது தூக்குக்கயிறு கான் சாகிப்பின் உயிரைப் பறித்தது. நெல்லூர் சுபேதார், ஈசப், யூசுப், யூசுப்கான், மகம்மது யூசுப், கான்சாகிப், கும்மந்தான் என்று மதுரையின் வரலாற்றில் பல பெயர்கள் கொண்ட ஒரு முக்கிய பாத்திரம் முடிவுக்கு வந்தது. ஒருவருக்கு

பாம்பன் ஸ்வாமிகள்

Image
  திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு மூன்று பிள்ளைகளுக்குத் தகப்பனார் ஸ்வாமிகள். ‘சண்முகக் கவசம்’, ‘பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்’ போன்ற பாடல்களை இயற்றினார். துறவறம் இருக்க பழநிக்கு முருகப்பெருமான் வரச் சொன்னதாக தனது நண்பரிடம் பொய்யுரைத்தார் ஸ்வாமிகள். உடனே அவரது கனவில் காட்சி தந்த முருகப்பெருமான், பொய்யுரைக்குத் தண்டனையாக 'தாம் கட்டளையிடும் வரை பழநிக்கு வரவே கூடாது' என்று தடை விதித்தார். இதனால் ஸ்வாமிகள் தமது இறுதிக்காலம் வரை பழநியை தரிசித்ததே இல்லை என்கிறது வரலாறு. 1894-ம் ஆண்டு ராமநாதபுரம் அருகிலுள்ள பிரப்பன்வலசை என்ற இடத்தில் அமர்ந்து 35 நாள்கள் கடும் தவமிருந்து முருகப்பெருமானின் அருட்காட்சியைக் கண்டார். அன்றைய தினம் சித்ரா பௌர்ணமி. அன்றிலிருந்து பௌர்ணமி வழிபாட்டைத் தொடங்கினார். துறவறம் மேற்கொண்டு சொந்தங்களையும் சுகங்களையும் இழந்தார். அருணகிரிநாதரைப்போல தலம்தோறும் சுற்றி, பாடத் தொடங்கினார். 6,666 பாடல்களையும், 32 வியாசங்களையும் எழுதி முருகப்பெருமானைக் கொண்டாடினார். தமிழகம் மட்டுமின்றி பெஜவாடா, கோதாவரி, விசாகப்பட்டினம், ஜகந்நாதம், கல்கத்தா, கயா... என்று காசி வரை திருத்தல யாத்திரை மே

தாம்பத்தியம்|கணவன் மனைவி காதல் கவிதை|

Image
  இன்றைய நயினாரின் உணர்வுகளில் தாம்பத்தியம்|கணவன் மனைவி காதல் கவிதை|

கணவருக்கு எதிராக மனைவி தவறான புகார் அளிப்பது கொடுமை

Image
 பிரிவு 13 (I) (அ) *இந்து திருமணச் சட்டம்: கணவருக்கு எதிராக மனைவி தவறான புகார் அளிப்பது கொடுமை   நீதிபதி வி.எம்.கனாடே மற்றும் பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி. கோட் ஆகியோர் பதிலளித்தவர் கணவருக்கு எதிராக தவறான 498 ஏ புகாரை பதிவு செய்துள்ளதாகவும் அது கணவருக்கு எதிரான கொடுமைக்கு ஒப்பாகும் என்றும் குறிப்பிட்டார். கணவருக்கு விவாகரத்து செய்ய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேல்முறையீட்டாளரும் பதிலளித்தவரும் அவர்களது திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்கு இடையே உராய்வு ஏற்பட்டது, மேலும் பதிலளித்தவர் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக தவறான 498A புகாரை பதிவு செய்தார். ஆதாரங்களை பரிசீலித்த பின்னர் விசாரணை நீதிமன்றம் புகாரை தள்ளுபடி செய்தது. கணவர் விவாகரத்து மனுவை புனே மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார், அங்கு நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. நீதிமன்றம் கருதிய பம்பாய் உயர்நீதிமன்றத்தில் குடும்ப நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது: *ஒரு தவறான குற்றப் புகாரைத் தாக்கல் செய்வது இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13 (i) (அ) இன் அர்த்தத்திற்குள் கொடுமைக்கு சமம்." இது இந்தியாவின் சிறந்த சட்ட

ஆம்புலன்சுகள் வரிசை கட்டி நின்றுகொண்டிருந்த நிலை மாறியது

Image
 சென்னை அரசு பொது ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சுகள் வரிசை கட்டி நின்றுகொண்டிருந்த நிலை மாறியது; ஆக்சிஜன் வசதியுடன் ஏராளமான படுக்கைகள் தயார் சரியான நேரத்துக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை கிடைக்காததால், ஆம்புலன்சில் இருந்தபடியே சில உயிர்கள் பிரிந்ததும் வேதனையை அளித்தது. அது தொடர்பான செய்திகளும் வெளியாகின. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன்கூடிய படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்யும் முனைப்பில் அரசு தீவிர கவனம் செலுத்த தொடங்கியது. சென்னையில் பல இடங்களில் ஆக்சிஜன் படுக்கைகள் தயார்படுத்தப்பட்டன. இதனால் சென்னை அரசு ஆஸ்பத்திரிகள் முன்பு நீண்ட வரிசையில் ஆம்புலன்சில் இருந்தபடி சிகிச்சை பெற்ற அவலநிலை தற்போது மாறி இருக்கிறது.அதிலும் குறிப்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிப்பதற்காக நின்றன. ஆனால் தற்போது படுக்கை வசதிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, வெகு நாட்களுக்கு பிறகு நேற்று அரசு பொது ஆஸ்பத்திரி முன்பு ஆம்புலன்ஸ் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி இருந்த

தம்பதியர்கள் தினம்

Image
 தம்பதியர்கள் தின வாழ்த்துகள். தன் பதியுடன் சிறப்புற வாழ்பவர்களே தம்பதியர்! ஓரறையில் ஒன்றாக இருப்பதல்ல தாம்பத்தியம்! ஒருவரை ஒருவர் மனம் விட்டுப் புரிந்திருத்தலே தாம்பத்தியம்! ஒரு கை என்றும் ஓசை எழுப்புவதில்லை! இருகரங்கள் இணைந்தாலே ஓசை எழும்பும்! இது சப்தங்களுக்கு சரிதானென்றாலும்  வாக்குவாதங்களின் பொழுது ஒருவர் பேசுகையில் மற்றொருவர் அமைதி காப்பதே அமைதிக்கான மாற்று வழி! பிறருக்கு முன்னால் நடிப்பதை விடுத்து என்றும் உள்ளன்போடிருப்பதே உறவுகளின் சங்கமம். தர்மங்கள் செய்வதில் இருவரும் இணைந்தே மனமுவந்து செய்வது தான் புண்ணியமென புராணங்கள் கூறுகின்றன! எவரிடத்திலும் விட்டுக் கொடுக்காமல் தவறுகளைத் தனிமையிலும் பாராட்டுகளைப் பொதுவிலும் கூறி இல்லாளின் முகத்தினை புன்சிரிப்பினைக் கண்டு  கணவரும், கணவரின் குறைகளைத் தனிமையிலும், நிறைகளைச் சபையிலும் கூறி அவரைக் கௌரவப்படுத்தும் மனைவியும் அமைகையில் சொர்க்கம் வேறெங்கும் தம்பதியர் தேடவேண்டியதில்லை. வாழ்வில் இறுதிவரை   இணைபிரியாத மகன்றிலாக வலம் வருவோம்! நிர்மலா ராஜவேல் சென்னை

69 வயதிலும் இளமையாக காட்சியளிக்கும் மம்முட்டி.

Image
  69 வயதிலும் இளமையாக காட்சியளிக்கும் மம்முட்டி. தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் மம்மூட்டி(mammootty). மலையாள சினிமாவை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் இவருக்கு ரசிகர்கள் ஏராளம் தமிழிலும் அவ்வப்போது நல்ல திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில்கூட இயக்குனர் ராம் இயக்கத்தில் பேரன்பு எனும் படத்தில் மம்முட்டி நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக மம்முட்டியின் படங்கள் பெரும்பாலும் மலையாள சினிமாவில் நடிக்கவில்லை என்ற ஒரு கருத்து நிலவி வந்தது. அவருக்கு வயதாகி விட்டதால் சினிமாவிலிருந்து ஓய்வு பெறலாம் எனவும் கருத்துக்கள் எழத் தொடங்கின. ஆனால் அதற்கு மாறாக சக வயதுடைய மம்முட்டியின் நண்பர் மோகன்லால் பாக்ஸ் ஆபீஸில் இன்னும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். எப்படியாவது ஒரு பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்து விட வேண்டும் என காட்டுத்தனமாக உழைத்து வருகிறார் மம்முட்டி. அந்த வகையில் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்திற்காக கரடுமுரடாக உடலை ஏற்றி உள்ளார். சமீபத்தில்கூட அண்ணாத்த படப்பிடிப்பில் மீனாவிடம் ரஜினி, நீ இன்னும் இளமையாக இருக்க

சுவையான சர்க்கரை வள்ளி போளி ரெடி.

Image
  இது அனன்யா பக்கம் அனன்யா மகாதேவன் .பேஸ்புக்ல பிரபலம்.சரளமான நகைச்சுவை படிப்பவர்கள் ஆனந்தத்தில் திளைப்பது நிச்சயம் எதார்த்தமான உரை நடை பாருங்க இன்று அவர்களின் சமையல் குறிப்பை நான் இருக்கேனே, ஒரு வில்லெஜ் விஞ்ஞானி, ஐடியா மணி, ஐடியா டெப்போ இப்படி எனக்குள்ள பல ரூபங்கள் பத்தி யாருக்கும் தெரியாது . ஏன்னா பீத்திக்கற பழக்கம் எனக்கில்லை. பல சமயம் என்னுடைய சாகசங்களையும் வீர தீர பராக்ரமங்களையும் தன்னடக்கத்தோட கடந்து வந்துடுவேன். ஆனா பாருங்க, திஸ் டைம், என்னாலேயே நம்பமுடியாத அளவுக்கு ஒரு கிரியேட்டிவ் சாதனை படைச்சிருக்கேன். இதையெல்லாம் கல்வெட்டுல பொறிச்சு வைச்சா பிற்கால சந்ததிகள் பார்த்து தெரிஞ்சுப்பாங்க. எங்கே? ஐடியா இல்லாத பசங்க. பல்லாயிரக்கணக்காண வருஷங்களுக்கு அப்புறமா ஃபேஸ்புக்ன்னு ஒரு ஆப்ல நம்ம முன்னோர்கள் சமயல் குறிப்பு கண்டு பிடிச்சேன்னு யாராவது இந்த டாக்யுமெண்டேஷனை பார்த்து புல்லரிப்பாங்க அப்படீங்கற ஒரே காரணத்துக்காக இதை எழுதறேன்னா அது மிகையில்லை. அந்த சர்க்கரை வள்ளி கிழங்கை வாங்கி ஒரு வாரமாச்சு. சாப்பிட இஷ்டமில்லை. "அப்போ ஏன் வாங்கித்தொலையுறே"ன்னு மைண்ட் வாய்ஸ் ராத்தி

பிரெட் ஆனியன் பொடிமாஸ் |

Image
  பிரெட் ஆனியன் பொடிமாஸ் |  . அதிகம் மெனக்கெடாமல், அதே நேரம் வாய்க்கு ருசியாக என்ன சமைக்கலாம் என யூடியூபை தேடிக் கொண்டிருக்கும் சிங்கிள் பசங்களுக்கான சிம்பிள் வீக் எண்ட் மெனு பிரெட் ஆனியன் பொடிமாஸ் தேவையானவை: பிரெட் - 10 நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 பச்சைமிளகாய் - 3 துண்டுகளாக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் உளுந்து - அரை டீஸ்பூன் கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன் சீரகம் - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை: பிரெட்டை நீங்கள் விரும்பும் வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்துத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். பிறகு பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, பிரெட் துண்டுகள் சேர்த்துக் கிளறவும். இறுதியாக எலுமிச்சைச்சாறு