Posts

Showing posts from May, 2020

ஆத்தி சூடி             (கௌ)                 *  கௌவை அகற்று

Image
ஆத்தி சூடி             (கௌ)                 *  கௌவை அகற்று                *       ஒருவிகற்ப        இன்னிசை         வெண்பா                 ஒலி ஒளி உணர  கௌவை    (பழி/துன்பம்)     அகற்றிட       கள்ளை         விலக்குவோம்  கௌட     நெறிமுறைக்       காட்டிக்        கடமையாய்  ஔவை      மொழிவழி        ஆற்றுப்        படுத்தினால்  தௌவல்     (கேடு)   விலகிடும்      தான்.            * வணக்கத்துடன்🙏 ச.பொன்மணி

கமலா தாஸ்

Image
கமலா தாஸ்  ( மலையாளம் :  കമല ദാസ്)  என்ற இயற்பெயரைக் கொண்ட   கமலா சுராயா   அல்லது   மாதவிக்குட்டி , ( மார்ச்  31 ,  1934  -  மே  31 ,  2009 )  இந்திய எழுத்தாளர். இவர்   ஆங்கிலம் ,  மற்றும்   மலையாளத்திலும்   ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர்.   கேரளாவில்   இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை கமலாதாஸ்  1934  இல் ,  கேரள மாநிலத்தில்   மலபாரிலுள்ள  ' புன்னயூர்க் குளம் '  என்ற ஊரில் பிறந்தார்.   ஆங்கிலத்தில்   மட்டு ம் கவிதைகள் எழுதியவர்.  ' கல்கத்தாவில் கோடைகாலம் ' (1965), ' வம்சத்தவர் ' (1967), ' பழைய நாடகக் கொட்டகை மற்றும் கவிதைகள் ' (1972)  முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக , ` என் கதா ' (My Story)  என்ற புத்தகம் பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. ஆங்கிலக் கவிதைக்காக   சாகித்திய அகாதமி   விருதினை   1981 இல்   பெற்றா ர்.  ' மாதவிக்குட்டி '  என்ற பெயரில்   மலையாளச்   சிறுகதைகளையு ம் எழுதி வந்தவர். அவர் ஒரு பழமைவாத ஹிந்து நாயர் (நலாபத்) அரச [ மேற்கோள்   தேவை ]   குடு

உயிரைப் பறிக்கும் புகைப்பழக்கம் வேண்டாமே

Image
  உயிரைப் பறிக்கும் புகைப்பழக்கம் வேண்டாமே! - உலக புகையிலை எதிர்ப்பு தினப் பகிர்வு   உலகப் புகையிலையற்ற தினம் , 31  மே  2020 புகை நமக்குப் பகை, புகைப்பழக்கம் உடல்நலத்துக்குக் கேடு, புகைப்பழக்கம் உடல்நலத்துக்குத் தீங்கானது... பீடி, சிகரெட் அட்டைகளின் மேல் ஒட்டப்பட்டிருக்கும் இத்தகைய வாசகங்கள் புகைப்பழக்கத்துக்கு ஆளான எத்தனைபேரை மனம் மாறச் செய்திருக்கும்? இது... சிந்திக்க வேண்டிய ஒரு விஷயமாகும். புகைப்பழக்கம் இன்றைக்குப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. புகையால் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் ஏறத்தாழ 60 லட்சம் பேர் உலகளவில் உயிரை விடுகிறார்கள் என்றால் நிச்சயம் வருத்தப்பட வேண்டிய செய்தியே. இந்தியாவில் மட்டும், ஏறத்தாழ 80 லட்சம் பேர் புகையால் பாதிப்படைந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஒட்டுமொத்த புகையிலை பாதிப்புக்கு ஆளானவர்களில், பலர் புகைபிடிப்பவர்களின் அருகே இருந்து அதை சுவாசித்ததன்மூலம் பாதிப்புக்கு ஆளானவர்கள். இவர்களைப் போன்றே புகையிலையால் பாதிக்கப்படுபவர்கள், தங்களது வாழ்நாளில் 12 முதல் 20 ஆண்டுகள் வரை இழக்கிறார்களாம். 1) புகையிலையைச் சுவாசிப்பதால், அதனுள்ளே இருக்கும்

தூக்கத்தை வரவழைக்கும் உணவுகள்

Image
தூக்கத்தை வரவழைக்கும் உணவுகள் மே 31, 2020    10:00 தூக்கமின்மை பிரச்சினைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. சிலவகை இயற்கை உணவுகள் தூக்கத்தைத் தூண்டும் தன்மை கொண்டவை. தூக்கமின்மை பிரச்சினைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், மனச்சோர்வு, செரிமான பிரச்சினை போன்றவையும் தூக்க சுழற்சி முறையை சிதைக்கக்கூடியவை. சிலவகை இயற்கை உணவுகள் தூக்கத்தைத் தூண்டும் தன்மை கொண்டவை. தூங்க செல்வதற்கு முன்போ அல்லது பகல் வேளையிலோ சிறிதளவு பாதாம் சாப்பிட்டுவந்தால் தூக்கத்தை மேம்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது. தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனான ‘மெலடோன்’ மற்றும் தூக்கத்தை ஊக்குவிக்கும் கனிமமான ‘மெக்னீசியம்’ இதில் ஏராளம் இருக்கிறது. அவை நீண்ட நேரம் மற்றும் ஆழமான தூக்கத்திற்கு வழிவகை செய்யும். மேலும் மூளை மற்றும் நரம்புகளில் இனிமையான விளைவுகளை ஏற்படுத்தும் டிரிப்டோபன் அமினோ அமிலத்தின் செயல்பாட்டையும் மேம்படுத்தும். அதன் காரணமாக தூக்கம் தடைபடுவது தவிர்க்கப்படும். தூக்கமின்மை பிரச்சினைக்கு ஆளாகுபவர்கள், வாழைப்பழத்தையும் சாப்பிடலாம். அதிலும் டிரிப்டோபன் அமினோ அமிலம் நிறைந்திருக்கிறது. இது மூளைக்கு ச

பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்

Image
  பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர் புதுடில்லி: பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளராக தமிழகத்தை சேர்ந்தவரும், சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் மாணவருமான மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை பிரதமர் மோடி தலைமையில் நடந்த நியமன குழு அளித்துள்ளது. 1991ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., பேட்ஜ் அதிகாரியான அவர் தற்போது, தகவல் தொழில்நுட்பத்துறை கூடுதல் செயலாளராக உள்ளார். சென்னை ஐ.ஐ.டி.,யில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப்படிப்பு படித்த அவர், பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எம்., மில் பட்ட மேற்படிப்பு படித்துள்ளார். டெவலெட்மென்ட் ஸ்டடிஸ் தொடர்பாக நெதர்லாந்தின் ரோட்டார்டேமில் உள்ள எஸ்ராமஸ் பல்கலையில் பட்டம் பெற்றுள்ளார். அமைச்சரவை நியமன குழுவானது, பீஹார் கேடரை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதரை, இணை செயலாளராகவும், ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீரா மொகந்தியை பிரதமர் அலுவலகத்தின் இயக்குநராகவும் நியமிப்பதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. 2001ம் ஆண்டு பேட்ஜ் அதிகாரியான ஸ்ரீதர், விவசாயத்துறையில் பட்டமேற்படிப்பு பெற்றுள்ளார். மேலும் மரபியல

ஆடைகளைக்கூட  தின்னும்   உலகம் சுற்றும் வெட்டுக்கிளிகள்

Image
ஆடைகளைக்கூட    தின்று    தள்ளிவிடும்  உலகம் சுற்றும் வெட்டுக்கிளிகள் - அதிர வைக்கும்  15  உண்மைத் தகவல்கள்     பாலைவன வெட்டுக்கிளிகள். கரோனாவுக்கு அடுத்து இன்று அதிகம் உச்சரிக்கும் பெயர் இதுதான். அரபு நாடுகள் ,  பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் பெருங்கூட்டம் கூட்டமாகப் படையெடுத்துவரும் இந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதல்களால் இந்திய விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்தப் பாலைவன   வெட்டுக்கிளிகள்   பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர வைக்கின்றன. இந்த   வெட்டுக்கிளிகள்   பற்றிய சில உண்மைத் தகவல்கள்: *  ஆப்பிரிக்காவில் இனப்பெருக்கம் செய்யும் இந்த வெட்டுக்கிளி பூச்சிகள் ,  ஏமன் ,  ஈரான் ,  சோமாலியா ,  பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் வருகின்றன. * ‘ லோகஸ்ட் ’  என்றழைக்கப்படும் பாலைவன   வெட்டுக்கிளிகள்   அதிக தூரத்துக்கு புலம்பெயர்ந்து வலசை செல்லும் ஆற்றல் கொண்டவை. ஒரு நாளில்  150  கி.மீ. தூரம் வரை பறக்கும். *  ஆப்பிரிக்கக் காடுகளிலும் பாலைவனங்களிலும் உற்பத்தியாகும் இந்த வெட்டுக்கிளிகள் ,  கடலுக்கு மேலே  2,000  மீட்டர் உயரத்தில் பறக்கும் சக்தியுள்ளவை. ஆப்பிரிக்காவுக்கும் அரேபியத் தீபகற்பத்துக்கு

சென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வு

  சென்னை பகுதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் முழு விவரம் மே 31, 2020 08:51 IST              பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டலில் அமர்ந்து சாப்பிட அனுமதி (பழைய படம்) * தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும். * வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும். கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.   * மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்

குடும்ப பொறுப்பு என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்

Image
குடும்ப பொறுப்பு என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்           சரி நம்மை படைத்து-காத்து -அருளும் பரமனின் குடும்ப பொறுப்பு எப்படி இருக்கும் என்பதை சிந்தையில் கொண்டு வந்து கற்பனை செய்து அதை இங்கு பதிவிடுகிறேன் -         --கயிலாயமலை --சிவபெருமான் இல்லம் ---தியானம் கலைந்து கண் விழித்தார் சிவபெருமான் ----அப்பா என்று அன்பாக அழைத்து கொண்டே ஓடி வந்து அவர் மடியில் அமர்ந்தான் அவர் மகன் கணபதி ---கணபதியை தன் வலது மடியில் அமர்த்திய சிவபெருமான் -- என் செல்ல மகனே கணபதி என்று கொஞ்சி முத்தமிட்டார் சிவனார்    --அப்போது கணபதி சிவனாரிடம் --அப்பா என் இரு- தந்தத்தில் ஒரு தந்தத்தை பாரதம் எழுதும் போது ஒடித்தேன் அல்லவா ---இப்போது நீங்கள் சூடிய பிறை நிலவை பார்க்கும் போது என் தந்தம் போலவே காட்சியளிக்கிறது அப்பா --என்று மழலை   மொழியில் கூற --அதை கேட்டு சிவனார் கல கல வென சிரித்தார் -            --அப்போது --அவரது இரண்டாவது மகன் முருகன் ஓடி வந்து ---சிவனாரின் இடது மடியில் அமர்ந்து ---அப்பா --நீங்கள் இன்று உலகோருக்கு படியளக்க கிளம்பும் போது நானும் உங்களுடன் வரவா --உலகை சுற்றி பார்த்து பல நாள் ஆயிற்று என்று கேட்க --கணபதி க

ஜூன் மாதம் முழுவதும் காணொலிக்காட்சி மூலம் வழக்கு விசாரணை:

Image
  ஜூன் மாதம் முழுவதும் காணொலிக்காட்சி மூலம் வழக்கு விசாரணை: ஐகோர்ட்டு அறிவிப்பு  மே 31, 2020 07:08   கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை ஐகோர்ட்டில் கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்துக்கு பின்னர் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பின்னர் மார்ச் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த அவசர வழக்குகளும் காணொலி காட்சி மூலமே விசாரிக்கப்பட்டன. இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் நாளை (திங்கட்கிழமை) முதல் அனைத்து வகையான வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.   இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதிகள் காணொலி காட்சி மூலமாக மட்டுமே விசாரிப்பார்கள். இதுகுறித்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை ‘இ-மெயில்’ மூலம் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்குகள் எல்லாம் சம்பந்தப்பட்ட நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்படும். அவர் இந்த வழக்குகளை காணொலி காட்சி மூலமே விசாரிப்பார்கள். ஜூன் மாதம் முழுவதும் இந்த நிலையே நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது   Reply Forward  

ஊரடங்கு 5.0-ல் என்னென்ன தளர்வு

Image
ஊரடங்கு  5.0-ல் என்னென்ன தளர்வுகள்... முழு விவரம் மே 30, 2020     20:08 ஜூன்  30- ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டல்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதிலும் கொரோனாவின் தாக்கமும், உயிர் இழப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்தியாவில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7,964 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,763 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 265 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 4,971 ஆக அதிகரித்தது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போதிலும் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது தளர்த்தின. இதனால் நிபந்தனைகள

ஜூன் 30-ந்தேதி வரை சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும்:

Image
ஜூன் 30-ந்தேதி வரை சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும்: தமிழக அரசு அறிவிப்பு 4-வது கட்ட பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் 8-ந்தேதியில் இருந்து வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், மால்களை திறக்க அனுமதி அளித்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை தடைகள் அப்படியே நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு 5.0

Image
  ஊரடங்கு  5.0-ல் என்னென்ன தளர்வுகள்... முழு விவரம் மே 30, 2020     20:08 ஜூன்  30- ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டல்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 4-வது கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டபோதிலும் கொரோனாவின் தாக்கமும், உயிர் இழப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்தியாவில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 7,964 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,763 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 265 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 4,971 ஆக அதிகரித்தது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போதிலும் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஊரடங்கு தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது தளர்த்தின. இதன

உணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால்

Image
உணவில் அதிகளவு தக்காளியை சேர்த்தால் கிட்னியில் கல் வருமா? மக்களிடையே சில உணவுப் பொருட்களால் கூட சிறுநீரக கற்கள் உண்டாக வாய்ப்புள்ளது என்று நம்புகின்றனர். அந்த வகையில் பார்க்கும்போது தக்காளி சிறுநீரக கற்களை உண்டாக்கும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. அது உண்மைதானா -  இல்லை, அது வெறும் கட்டுக்கதையா?. தக்காளி ஒவ்வொரு இந்திய உணவு வகையிலும் இன்றியமையாத ஒன்று. நாம் சாப்பிடும் கறிக் குழம்பில் இருந்து கெட்ச்அப் வரை இதன் பயன்பாடு இன்றியமையாதது. தக்காளியின் தனித்துவமான சுவை மேலும் உணவிற்கு சுவை சேர்க்கிறது. அதுமட்டுமல்லாமல் தக்காளியில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. விட்டமின் ஏ, பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் ஆகிய ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. தக்காளி கண் பார்வைக்கு நல்லது. நீரிழிவு சிக்கல்களை களைய உதவுகிறது. சூரிய பாதிப்பிலிருந்து காக்கிறது. புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது. சிறுநீரக கற்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் கால்சியம் கற்கள். நமது சிறுநீரகங்களில் அதிகளவு கால்சியம் ஆக்ஸலேட் படிவதால் தான்இந்த மாதிரியான கற்கள் உருவாகிறது. இந்த கால்சியம் ஆக்ஸலேட் பல்வேறு

சென்னை: தமிழகத்திலும், ஜூன் 30 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Image
சென்னை: தமிழகத்திலும், ஜூன் 30 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது இன்றுடன்( மே 31) முடிவடைகிறது. இந்நிலையில், மத்திய அரசு பல்வேறு தளர்வுகளுடன் நாடு முழுவதும் ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்தது. இதனடிப்படையில், தமிழகத்திலும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையிலும் தற்போதுள்ள ஊரடங்குஉத்தரவு ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், கீழ்கண்ட சில தளர்வுகளுடனும் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள தடைகள் மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும். * வழிபாட்டு தலங்கள், பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை * நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா செல்லவும் தடை * தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்கள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடரு

கொரோனா பாதிப்பு உலக அளவில் 61 லட்சத்தை தாண்டியது

Image
கொரோனா பாதிப்பு உலக அளவில் 61 லட்சத்தை தாண்டியது; இறப்பு 3.70 லட்சம் உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,53,372 ஆக அதிகரித்து உள்ளது. மே 31,  2020   08:18 AM   வாஷிங்டன்   உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,53,372 ஆக அதிகரித்து உள்ளது.குணமடைந்தோர் எண்ணிக்கை 27,34,548 ஆக உள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,70,870 ஆக அதிகரித்து உள்ளது.   அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,16,820 ஆக அதிகரித்து உள்ளது.கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,05,557 ஆக உயர்ந்து உள்ளது.   நேற்று ஒரே நாளில் 23 ஆயிரத்து 300 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டதால் அங்கு வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 16 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றினால் ஆயிரம் பேர் வரை உயிரிழந்ததால் இதுவரை ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 17 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் அங்கு மரணிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   இந்த நிலையில் பெரும் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டி

மாங்காய் ஊறுகாய்

Image
kunkuma dhivya's kitchen receipes   Mangai oorugai/mango pickle/pickle variety in Tamil/Home made mango pickle/traditional mango pickle This is the traditional way of making mango pickle. No preservatives. No food colour to see preparation live by

தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்

Image
தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் -  தீர்ப்பில் திருத்தம் செய்து ஐகோர்ட்டு அறிவிப்பு தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என்று தெளிவுப்படுத்தியும், தீர்ப்பில் திருத்தம் செய்தும் சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது. 30-05-2020   05:30    சென்னை   மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சென்னை போயஸ் கார்டன் இல்லம் உள்பட சுமார் ரூ.913 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்க ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகி புகழேந்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.   அதேபோல, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் தங்களை ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோர் விசாரித்து கடந்த 27-ந்தேதி தீர்ப்பு அளித்தனர். அதில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் இரண்டாம் நிலை வாரிசுகள் என்று கூறப்பட்டு இருந்தது.   இந்தநிலையில், இந்து வாரிசு முறைச் சட்டத்தின்படி தங்களை நேரடி வாரிசுகளாக அறிவிக்க வேண்டும் என்றும் இரண்டாம் நிலை வாரி

ஜெயலலிதாவின் சொத்துக்கள் பற்றி முழுமையாக அறிய விசாரணை கமிஷன்

Image
ஜெயலலிதாவின் சொத்துக்கள் பற்றி முழுமையாக அறிய விசாரணை கமிஷன் தேவை: திருநாவுக்கரசர் எம்.பி . சென்னை: ஜெயலலிதாவின் சொத்துக்கள் எவ்வளவு என்பதை முழுமையாக அறிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா, தீபக்கை நீதிமன்றம் அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.  

ஆத்தி சூடி             (கோ)              *     கோதாட்டு ஒழி

Image
ஆத்தி சூடி             (கோ)              *     கோதாட்டு ஒழி              *      ஒருவிகற்ப       இன்னிசை        வெண்பா              * ஒலி ஒளி உணர    கோதினை     ஆட்டும்      குணத்தை       ஒழித்தால்   வாதினை     மாற்றி      வளத்தைப்        பெறலாம்  சூதினை    ஓட்டும்      சுகத்தை       உணர  ஓதிநீ     உயர்வாய்       உணர்ந்து.             * வணக்கத்துடன்🙏  ச.பொன்மணி

லட்சக்கணக்கானோரை புகை பிடிப்பதை கைவிட வைக்கிறது கொரோனா.

Image
லட்சக்கணக்கானோரை புகை பிடிப்பதை கைவிட வைக்கிறது கொரோனா... கொரோனா வைரஸ், புகை பிடிப்போர் வாழ்வில் ‘கேம் சேஞ்சர்’ என்பது போல பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது.   புதுடெல்லி: சிகரெட் புகைப்பது உள்பட புகையிலையை எந்த வகையில் ஒருவர் பயன்படுத்தினாலும் அது அவர்களுக்கு பகை, உயிராபத்தை ஏற்படுத்தும் புற்றுநோய்க்கு வழிவகுத்து விடும் என்றெல்லாம் காலகாலமாக எச்சரிக்கை விடப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. புகைப்பது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று சிகரெட் பாக்கெட்டில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் எளிதில் யாரும் புகை பிடிப்பதை விட்டு விட முன்வருவதில்லை. மது போதை போல சிகரெட் போதையில் கோடிக்கணக்கானோர் உலகமெங்கும் அகப்பட்டுள்ளனர். இப்போது கொரோனா வைரஸ் ,  அவர்கள் வாழ்வில்  ‘ கேம் சேஞ்சர் ’  என்பது போல பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாகிறபோது அது மனிதர்களின் நுரையீரலில்தான் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. சுவாசிப்பதில் சிக்கலை உண்டுபண்ணுகிறது. வென்டிலேட்டர் என்னும் செயற்கை சுவாச கருவிகளை பொரு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது

Image
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த  11  ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது புதுடெல்லி   இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 44 காலாண்டுகளில் அதாவது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது என்று மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. அதேபோல், 2019-20-ஆம் நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 சதவிதமாக குறைந்துள்ளது.   அதற்கு முந்தையை 2018-19-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.1 சதவிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு காரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சரிவு இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.   மேலும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கான முடிவுகள் வரும் போது தான் இந்தியாவில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் முழுமையாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை அடுத்து  இரண்டாவது பெரிய துறையான கட்டுமானத் துறை மார்ச் மாதத்துடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் இரண்டாவது காலாண்டில் 2.2% ஆக சரிவடைந்தது. நகரங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொ

சீனாவின் பிடியில் உலக சுகாதார அமைப்பு

Image
சீனாவின் ஹூய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல் மற்றும் வைரஸ் தொடர்பான விவரங்களை சீன அரசு மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த வைரசின் தீவிரத்தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீது டொனால்டு டிரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.   அந்த அமைப்பின் தாமதமான செயல்கள் உலக நாடுகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தி விட்டதாக தெரிவித்தார். கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதாரவாக உலக சுகாதார அமைப்பு உள்ளது. எனவே அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார். இதையடுத்து முதல் கட்டமாக கடந்த ஏப்ரலில் ரூ. 3000 கோடி நிதியை டிரம்ப் நிறுத்தினார். இந்நிலையில், கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது என அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். இதுதொடர்பாக, அதிபர் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவத

ஆத்தி சூடி            (கொ)               *        கொள்ளை         விரும்பேல்

Image
ஆத்தி சூடி            (கொ)               *        கொள்ளை         விரும்பேல்                *         ஒருவிகற்ப          இன்னிசை           வெண்பா                * ஒலி ஒளி உணர  கொள்ளை     விரும்பும்       குணத்தை         விடுத்திட  அள்ளக்     குறையா       அருளும்        அமைந்திடும்  தெள்ளத்    தெளிந்த      திறமாய்த்       தினந்தினம்  கொள்வாய்     இதயம்       குளிர்ந்து.            * வணக்கத்துடன்🙏 ச.பொன்மணி

பொன்மகள் வந்தாள் திரைப்பட விமர்சனம்

Image
ponmagalvanthaal   #ponmagalvandhal   #padameppadiirukku Ponmagal Vandhal Movie Review | Ponmagal Vandhal Detailed Review by VJ Venkat | Ponmagal Vanthal BY Padam Eppadi Irukku திரை விமர்சனஙம் உங்கள் VJ Venkat  

இலக்கியச் சோலையிலே

Image
  இலக்கியச் சோலையிலே   சுமார் 36 ஆண்டுகளுக்கு முன் வந்த படத்தில் உள்ள, ஒரு பாடல், ஆடல், இசை, அபிநயங்கள்.  . நீங்களும் இலக்கியச் சோலையினுள் புகுந்து பாடலில் உள்ள வரிகளை, இசையை, நடனத்தை, நடிப்பை ஒரு சேர இரசியுங்களேன். ... சா... மக மக சா மக மக சா... சா... அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் என் சிலம்பொலியும் புலம்புவதை கேள் அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தல்லாடுது ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது விடியாத இரவேதும் கிடையாது என்று ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம் பதில் ஏதும் இல்லாத கேள்வி படம்   வைதேகி காத்திருந்தாள் நடிகர்கள்    விஜயகாந்த், ரேவதி பாடலாசிரியர்  வாலி இசை  இளையராஜா பாடிய

ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை

Image
ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் வேதனை 28-05- 2020    20:26   அமெரிக்காவில் கொரோனாவால் ஒரு லட்சம் பேர் உயிரிழந்திருப்பது சோகமான சாதனை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் வேதனையோடு தெரிவித்திருக்கிறார். டொனால்டு டிரம்ப் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58,22,571 ஆக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,58,126 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,22,999 ஆக உள்ளது.   இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. அதாவது அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,02,197 ஆக அதிகரித்துள்ளது.   கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,47,781 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,90,356 ஆக உள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 11,55,238 ஆக உள்ளது.   இதனைத்தொடர்ந்து ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா, துருக்கி, ஈரான், சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்நிலையில