Posts

Showing posts from January, 2022

சில நேரங்களில் சில மனிதர்கள்./

Image
 சில நேரங்களில் சில மனிதர்கள். திரைப்பபத்தை குறித்து தன் எண்ணங்களை பதிவு செய்கிறார்   கீர்த்தனா பிருத்விராஜ் விபத்தை மையமாகக் கொண்ட 4 கதைகளின் கதாபாத்திரங்களின் மன மாற்றம் குற்றவுணர்வு கோபம் இவை தான் சில நேரங்களில் சில மனிதர்கள்.  தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வசிக்கும் அசோக் செல்வன் எதற்கெடுத்தாலும் தன் தந்தையின் மீது கோபத்தை வீசிக் கொண்டே இருக்கிறார்.  அசோக் செல்வனின் தந்தையான நாசர் சராசரி தகப்பனின் நிலையில் தனது நடிப்பை எப்போது போலும் அழகாக நடித்துள்ளார்.  அன்றோடு வேலையை விடும் அசோக் செல்வன் தன் தந்தை கல்யாணத்திற்கு பத்திரிகை வைத்து விடலாம் இன்று நல்ல நாளென்று கூறுவதை ஒரு நிமிடம் கூட காதில் வாங்காது தான் செய்வதை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்.  கெளரவம், பணம், பெயர், புகழ், தன்னை விட உயர்ந்தவன் இல்லையென்ற பிரவின் வெளிநாட்டிற்கு செல்வதற்கு மனைவியான ரித்விக்காவிடம் கேட்கவே இல்லையென்று தங்களின் வாக்குவாதத்தில் நேர்ந்தது தான் அந்த விபரீதம் மற்றும் மனமாற்றம்.  லாட்ஜில் ரூம் சர்வீஸ் மேனேஜராக பணிபுரியும் மணிகண்டன் 24 மணிநேரமும் புகைப்பிடித்தலே முதன்மைத் தொழிலாக கொண்டுள்ளார். ஆனால்,வேறு

கவிதையாகவே வாழும் அய்யப்பமாதவன்

Image
  கவிதையாகவே வாழ்கிறார் கவிஞர் அய்யப்பமாதவன் கவிதை தன்னைப்பற்றி சொல்வைதை கேளுங்க என் சொந்த ஊர் நாட்டரசன்கோட்டை என்கிற சிறு ஊர். இங்குதான் பத்தாம் வகுப்புவரைப் படித்தேன். பத்தாம் வகுப்புவரை எனக்கு இலக்கியம் தெரியாது. கவிதைகள் படித்ததில்லை. கவிதைகள் எழுதியதில்லை. குறிப்பாய் என் வீட்டில் படித்தவர்கள் இருந்தார்கள். ஆனால் யாரும் இலக்கியம் கற்கவில்லை. இலக்கியம் பேசவில்லை. என் ஊரில் கம்பன் கழகமிருந்தது. அதில் இன்னொருவர் எழுதிக்கொடுத்து ராமாயணம் பற்றிப் பேசியிருக்கிறேன். அதற்குப் பிறகு என் ஊர் நூலகத்தில் வார சஞ்சிகளைப் படித்திருக்கிறேன். கல்கிப் பத்திரிகையில் தராசு என்ற கேள்வி பதில் பகுதியில் நிறைய கேள்வி கேட்டிருக்கிறேன். அதில் சிறந்த கேள்விக்கான பரிசு பத்துரூபாய் பெற்றிருக்கிறேன். பிறகு நண்பன் செழியன் மூலம் கவிஞர் மீராவின் அறிமுகம் கிடைத்தது. செழியனின் ஊரான சிவகங்கைக்கு அவ்வப்போது அவனைப் பார்க்கப் போவேன். அப்போது அங்கிருந்த மீராவின் அன்னம் பதிப்பகத்திற்குப் போகத் தொடங்கி நிறைய நல் இலக்கிய நூல்கள் வாசிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் ஹைகூ கவிதை நூல் ஒன்றை மீரா அவர்கள் மொழி பெயர்த்து தமிழில் அழக

‘என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல்

Image
  இளையராஜா இசையமைத்த ‘என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்’ (வள்ளி), ‘காற்றில் எந்தன் கீதம்’ (ஜானி) போன்ற பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் இதயத்தை யாரோ பறித்தெடுத்துச் செல்வது போன்ற உணர்வுநிலைக்குத் தள்ளப்படுவேன் . இந்த இரண்டு பாடல்களும் கீரவாணி ராகத்தால் மிக நுண்மையாக படைத்தப்பாடல்கள்  இந்த ராகம் பறவைகளுக்குப் பிடித்தமான ராகம் என்று சங்கீத நூல்கள் குறிப்பிடுகின்றன என கேள்விப்பட்டிருக்கிறேன் நம்  பயணத்தின்போது ‘என்னுள்ளே என்னுள்ளே’ பாடல், ஒரு மரத்தில் பறவைகள் பறந்து எழுந்து மீண்டும் அமர்வது போன்ற உணர்வை  தரும் . பாடலுடன் பாடலின் நிரவல் இசைக்கோவையும் ஒன்றிணைந்து ஒரு காட்சிப் படிமமாகி, கவித்துவமான நுண் ஒலியால் நிரம்பியதே இளையராஜாவின் தனித்துவமான உலகம்.  வள்ளி திரைப்படத்திற்காக வாலி எழுதிய வரிகளுக்கு இசை அமைத்தவர்  இளையராஜா. பாடியவர் ஸ்வர்ணலதா, இந்த பாடலை நான் கேட்கும் போதெல்லாம் ஏனோ என் நினைவுகள் மறைந்து போன பாடகி ஸ்வர்ணலதாவையே சுற்றி வருகின்றது!                                                                                 இளையராஜாவின் கிட்டார் இசை, நரம்புகளுக்குள் ஏதோ செய்கின்றது,

தமிழறிஞர் ம.வே. பசுபதி

Image
  தமிழறிஞர் ம.வே. பசுபதி அவர்கள் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.  அவரது தமிழ்ப் பணி பற்றி இன்று இணையத்தில் படித்தறிந்தேன்.  தமிழ் இலக்கியத்தின் ஆணிவேராக இருக்கும் தொல்காப்பியம், சங்க இலக்கிய நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அவற்றோடு திருக்குறள் முதலான பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் , இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம்,   மணிமேகலை , மற்றும் முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள் உரை ஆகிய நூல்களைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்காக ஒரே நூலாகத் தொகுக்கும் பணியினை மேற்கொண்டவர் என்பதைப் படித்தபோது இப்பணிக்காக அவர் எவ்வளவு நூல்களைப் படித்து ஒப்பிட்டிருக்கவேண்டும்; பாடபேதங்களை அறிந்து நுணுக்கமாகப் பணியாற்றி இருக்கவேண்டும் என்ற பிரமிப்பு உண்டானது. அந்நூல் தவிர ஆய்வு நூல்கள், கட்டுரைகள், பதிப்புகள் என ஏறக்குறைய ஐம்பது நூல்கள் வெளியிட்டிருக்கிறார். அவருக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட உ.வே.சா. விருது அவ்வளவு பொருத்தமானது.  கம்பன் கழகக் கவிஞரங்குகளில் அவரது கவிதைகளைத் தூரத்தில் இருந்து கேட்டிருக்கிறேன்.  நான் கல்லூரியில் படித்த காலத்தில் அவர் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றிய திருப்பனந்த

அவளின் மூச்சு

Image
உன்னை  காண துடிக்கிறது  மனம்  அன்பே  நீ  அனுப்பும் மொழிகள்  வெறுமை  அல்ல என  உணர்ந்தேன்  நான்  விடும்  மூச்சு உனக்கு  கேட்குதா  எந்த  வழி மறுப்பும்  இல்லாமல் வழி விடு காற்றே  அவளின்  மூச்சு  எனக்கு  கேட்கணும்

இது நாகாலாந்து அல்ல.. தமிழகம்.. உருட்டல், மிரட்டல் அரசியலில் எடுபடாது" ஆளுநர் பற்றி முரசொலி

Image
  தமிழகம் நாகாலாந்து அல்ல என்பதை தமிழக ஆளுநர் ரவி உணர வேண்டும் என முரசொலியில் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து முரசொலியில் "கொக்கென்று நினைத்தாரோ; தமிழக ஆளுநர் ரவி!" என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது அந்த தலையங்கத்தில், தமிழக ஆளுநர் பொறுப்பேற்றுள்ள ரவி சில நேரங்களில் தனது அதிகார எல்லை மீறி செயல்படத் தொடங்கியுள்ளாரோ என எண்ணிடத் தோன்றுகிறது! இன்றைய தமிழக ஆளுநர் ரவி தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்பதற்கு முன் நாகாலாந்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றிய போது நடந்து கொண்ட விவகாரங்கள் பெரும் விமர்சனத்துக்கு ஆளாகின!  நாகாலாந்தின் தேசியவாத ஜனநாயக கட்சியின் தலைவர் சிங்வாங் கோன்யாக் அங்கு ஆளுநராகப் பணியாற்றிய ரவி குறித்து கருத்தறிக்கையில், ஆளுநர் ரவியின் செயல்பாடு மகிழ்ச்சி தருவதாக இருந்ததில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் அவரது குறுக்கீடு அதிகமிருந்தது என பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார் நமது ஆளுநராக வந்துள்ள ரவியின் அத்துமீறல்கள் நாகாலாந்து அரசு நிர்வாகத்தின் மீது மட்டுமல்ல, அங்குள்ள ஊடகவியாளர்கள் மீதும் இருந்துள்ளது. நாகாலாந்து ஆளுந

வெங்காயம் சேர்த்து இப்படி புதினா சட்னி செஞ்சு பாருங்க

Image
  வெங்காயம் சேர்த்து இப்படி புதினா சட்னி செஞ்சு பாருங்க  விதவிதமான சட்னி வகைகளில் புதினா சட்னி ரொம்பவே வித்தியாசமான சுவை உடையதாக இருக்கும். புதினாவின் சுவைக்கு அடிமையாகி போனவர்கள் அடிக்கடி துவையல், சட்னி செய்து சாப்பிடுவார்கள்.  பசியை  தூண்டக் கூடிய இந்த புதினா இலைகள் உடல்நலக் கோளாறுகளை சரி செய்யக்கூடியது. இதன் மணமும், குணமும் முழுமையாக நமக்குக் கிடைக்க இப்படி ஒரு புதினா சட்னி புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்: புதினா – ஒரு கட்டு, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, வெங்காயம் – 2, உளுத்தம் பருப்பு – கால்  கப்,  பூண்டு – 4, இஞ்சி – 2 துண்டு, வர மிளகாய் – 5, தேங்காய் – ஒரு கப், புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு, பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், தாளிக்க எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்தம் பருப்பு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து. புதினா சட்னி செய்முறை விளக்கம்: முதலில் புதினா இலைகளை காம்பைப் பிடித்துக் கொண்டு ஒரு முறை நன்கு தட்டிக் கொள்ளுங்கள் அப்போது தான் பூச்சி, புழுக்கள் இருந்தால்  கீழே  விழுந்துவிடும். பின்னர் பச்சையா

இரும்புக்குள் ஒரு சிங்கம் டத்தோ நோரா மனாஃப்

Image
 🌟 டத்தோ நோரா மனாஃப் 🌟 அழகும் அறிவும் நிறைந்த இரண்டு எழுத்து மந்திரம் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி, ஆசிய பசிபிக் மற்றும் ஆசியான் வணிகத் தலைவர் விருதுகளுக்காக 10 புகழ்பெற்ற தலைவர்கள் கௌரவிக்கப்பட்டனர். பொதுத்துறை, தனியார் துறை, கல்வித்துறை மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்த 10 முக்கியஸ்தர்கள் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான அவர்களின் பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.  முன்னாள் மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜா ரோஹானி பிந்தி அப்துல் கரீம் விழாவைத் தொகுத்து வழங்கினார். மலேசியாவுக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் திருமதி பமீலா டன் அவர்களும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.  விருது பெற்ற 10 வணிகத் தலைவர்களில், ஒருவர் எனக்கு நன்கு அறிமுகமானவர். அவர் என்னுள் தொடர்ந்து உத்வேகத்தை விதைத்து வரும் அழகும் அறிவும் நிறைந்த இரண்டு எழுத்து மந்திரமான டத்தோ நோரா மனாஃப்.  மலேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மிகப் பெரிய நிறுவனமும் மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய வணிக வங்கிகளில் ஒன்றான மேபேங்கின் குழுமத் தலைமை மனித மூலதன அதிகாரியாகச் செயல்படுகிறார் அவர். உலகெங்

காத்திருக்கிறேன்/சகுந்தலா ஸ்ரீனிவாசன்

Image
  இந்த உலகத்தில் வெறுப்பதற்கு ஒன்று உண்டு என்றால் அது காத்திருப்பது அதுவும் பிடித்தவருக்காக.. காத்திருப்பது பிடித்தவருக்கே அப்படின்னா பிடிச்சவனுக்கு.. ஆம்.. காத்திருக்கிறேன் ஒரு கதவின் வழியாக... சகுந்தலா ஸ்ரீனிவாசன்

மின் நுகர்வோரின் திருப்தியே குறிக்கோள்: வாரியத்திற்கு குறை தீர்ப்பாளர் அறிவுரை

Image
 மின் நுகர்வோரின் திருப்தியே குறிக்கோள்: வாரியத்திற்கு குறை தீர்ப்பாளர் அறிவுரை ----------------*-----------------*------------------*--------------- மின் நுகர்வோரின் திருப்தியே குறிக்கோளாக இருக்க வேண்டும்' என மின் குறைதீர்ப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை ஆலந்துாரைச் சேர்ந்த பெனாசிர் அலி என்பவர் கொரோனா காலமான 2020 ஏப்ரல் மே மாதங்களில் கடை மூடப்பட்டிருந்த போது மின் கட்டணம் அதிகம் வந்துள்ளதாக ஆலந்துார் உதவி பொறியாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மீட்டர் சோதனை முடிந்த பின் மின் கட்டணம் செலுத்துமாறு பொறியாளர் தெரிவித்துள்ளார். மூன்று மாத தவணை அபராத தொகையுடன் மின் கட்டணத்தை நுகர்வோர் செலுத்தியுள்ளார்.தான் அளித்த புகாரின் அடிப்படையில் தன் மீட்டர் ஆய்வு செய்யப்படாததால் அவர் சென்னை தெற்கு மின் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்துள்ளார். அங்கு அளித்த தீர்ப்பால் அதிருப்தியடைந்த அவர் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் குறைதீர்ப்பாளரிடம் மேல் முறையீடு செய்துள்ளார். இதற்கு மின் வாரியம் பதில் மனு செய்துள்ளது. இரு தரப்பு வாதங்களை விசாரித்த பின் மின் குறை தீர்ப்பாளர் த

பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை-

Image
 பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை- சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அதிரடி தீர்ப்பு. (#High_Court) ::::::::::::::::::*:::::::::::::::::*:::::::::::::::::*:::::::::::::::::::  மதுமிதா ரமேஷ் என்பவர் தனது குழந்தை தவிசி பெரேரா என்பவரின் பிறப்புச் சான்றிதழில் உள்ள மணிஷ் மதன்லால் மீனா என்ற பெயரை நீக்க  திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடக்கோரிசென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  வழக்கு தொடர்கிறார். மனுதாரர் மதுமிதா ரமேஷ் என்பவர் தனது கணவரிடமிருந்து பரஸ்பர விருப்பத்தின் பேரில் முறையாக விவாகரத்து பெற்றவர்.  பின்னர் தனது விருப்பத்தின் பேரில்  மருத்துவமனை உதவியுடன் ஒரு ஆண் உயிரணு கொடையாளி (  Sperm donor  ) மூலம் செயற்கை கருத்தரிப்பின் வழியே ஒரு குழந்தையை 23. 4. 2017 அன்று பெற்றெடுக்கிறார்.  இந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கிய திருச்சி மாநகராட்சி சான்றிதழில் தந்தையின் பெயர் என்ற இடத்தில் ஏற்கனவே sperm donate செய்தவரின் பெயரை கட்டாயப்படுத்தி குறிப்பிட்டு சான்றிதழை வழங்குகிறது. பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்படும் மணிஷ் மதன்லால் மீனா அந்தப் பெண்ணின்

FROZEN MUSIC தியாகராஜ பாகவதர்

Image
  அழகான கட்டடத்தை FROZEN MUSIC என்பார்கள் . எது ஒன்று அழகாக இருந்தாலும் அதை இசையாய்ப் பார்ப்பவர்கள் நாம். திருச்சியிலோ ஓர் அழகே இசையாகவும் இருந்தது. அவர்தான் தியாகராஜ பாகவதர். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார். அழகனான எம்.ஜி.ஆர் வியந்த அழகன் அவர். 'நடிகன் குரல்' பத்திரிகையில் எம்.ஜி.ஆர் சொன்னார், “எத்தனை விளக்குகள் எரிந்தாலும் பாகவதர் ஒரு இடத்தை விட்டுச் சென்றுவிட்டால் அந்த இடத்தை இருள் கவ்விக்கொள்ளும். அவரைச்சுற்றி ஒரு ஒளி எப்போதும் இருக்கும்” என்று. இசையை ரசிக்காத 23-ம் புலிகேசி மாதிரி ஒரு மன்னனிடம் ஒரு கவிஞன் சொன்னான், ’மன்னா, உங்கள் இதயத்தை எந்த எதிரியின் வாளாலும் துளைக்கமுடியாது’ என்று. ’ஏன்’ என்றான் மன்னன். கவிஞன் சொன்னான், ’இசையாலேயே துளைக்க முடியாத உங்கள் இதயத்தை வாளாலா துளைக்க முடியும்’ என்று. உண்மைதான். இசை மென்மையானது, வலிமையானது, கூர்மையானது. அதனால்தான் பாரதிதாசன் “தெள்ளு தமிழில் இசைத்தேனைப் பிழிந்தெடுத்துத் தின்னும் தமிழ் மறவர் யாம் யாம்” என்று துள்ளினார். இப்படியான ’இசைத் தமிழில்’ அதிக மக்களால் ரசித்தும் ருசித்தும் கேட்கப்படுவது திரை இசைப் பாடல்கள்தான். ஒருவகை

பி.ஆர்.தேவர்

Image
  ஜவஹர்லால் நேரு பி. ரத்தினவேலு தேவரைச் சந்திக்க இரண்டுமுறை அவர் வீட்டுக்கே வந்தார். 1936-ல் 'தேவர் விலாஸ்' வீட்டில்தான் நேரு தலைவாழை விருந்தைத் தரையில் அமர்ந்து சாப்பிட்டார். நேரு தரையில் உட்கார்ந்தது பி.ஆர்.தேவருக்குத் தந்த மரியாதையாகப் பார்க்கப்பட்டது. உலகின் தலைசிறந்த புத்தகங்களில் இரண்டை எழுதிய நேருவே பாராட்டும் அளவுக்கு அவரிடம் மிகப்பெரிய நூலகம் இருந்தது. அவற்றில் சில நூல்களை மட்டுமே நம்மால் பார்க்க முடிந்தது. ஆங்கில இலக்கியத்தின் மீது அவருக்கு ஈடுபாடு அதிகம். அதைவிட விளையாட்டென்றால் அவருக்கு உயிர். விதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழும் ஒழுங்கை விளையாட்டுதான் கற்றுத்தரும் என்பது அவர் கட்சி. ஏராளமான விளையாட்டுப் புத்தகங்களைத் தன் சேகரிப்பில் வைத்திருந்தார். குறிப்பாக கிரிக்கெட் புத்தகங்கள் அவரிடம் அதிகம். புதிதாக வரும் புத்தகங்களை உடனே தனக்கு அனுப்புவதற்கு ஹிக்கின் பாதம்ஸோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டவர் பி.ஆர்.தேவர். தான் படித்து முடித்த புத்தகங்களில் தேதியைக் குறித்துவைக்கும் பழக்கமும் அவரிடமிருந்தது. நேரு வருகையின்போது இப்போது டவுன்ஹால் என்று அழைக்கப்படும் ராணி மங்கம்மாள்

திருலோக சீதாராம்.

Image
  அழுக்கற்ற அவரின் வாழ்க்கை நெறிதான் காமராஜரையும் அண்ணாவையும் ஒரே நேரத்தில் அவரை நேசிக்க வைத்தது. மனுதர்ம சாஸ்திரத்தைத் தமிழில் மொழிபெயர்த்த அவர்தான் பெரியாரை அவர் நடத்திய எழுத்தாளர் சங்க மாநாட்டில் பேச அழைத்துள்ளார். அவர் அச்சகமும் வீடும் பல எழுத்தாளர்களின் பர்ணசாலையாக இருந்தன. வல்லிக்கண்ணன், ந.பிச்சமூர்த்தி கரிச்சான்குஞ்சு, கு.ப.ரா, தி.ஜா, கி.வா.ஜ, எம்.வி.வெங்கட்ராம், அகிலன், ஜெயகாந்தன், கொத்தமங்கலம் சுப்பு, நா.பார்த்தசாரதி, இந்திரா பார்த்தசாரதி, சுகி.சுப்பிரமணியம், வாலி என்ற அந்தப் பட்டியல் நீளும். 1952 தேர்தலில் சுயேச்சையாக ஶ்ரீரங்கத்திலும் துறையூரிலும் திருலோகம் போட்டியிட்டார். இரண்டு ஜீப், மைக் எல்லாம் ஜி.டி.நாயுடு கொடுத்தார். செலவை என்.எஸ்.கிருஷ்ணன் பார்த்துக்கொண்டார். பாரதி பாடல்களை ஓங்கிப் பாடி உணர்ச்சியோடு பேசுவார் திருலோகம். அதுதான் பிரசாரம். பின்னால் வருகிற அவரின் நண்பர் அ.வெ.ர.கிருஷ்ணசாமி ரெட்டியார் ஓட்டு கேட்பார். யாரையும் திட்டாத, வாக்குறுதி தராத ஒரு வேட்பாளரைச் சந்தித்த புது அனுபவம் திருச்சிக்கு. ஜி.டி.நாயுடுவைச் சந்தித்து நண்பரானதே தனிக்கதை. நாயுடுவின் வீட்டைக் கடந்தபோ

பக்தனுக்காக தை அமாவாசையை பெளர்ணமியாக்கிய அபிராமி

Image
 today sumischannel பக்தனுக்காக தை அமாவாசையை பெளர்ணமியாக்கிய அபிராமி|secret of Abirami Anthathi|sumischannel இதன் தொடர்ச்சியாக இந்த திரைப்பட காணொளி பாருங்க by

கைபேசி செயலி மூலம் மின்கட்டணம் கணக்கிடும் முறை

Image
 கைபேசி செயலி மூலம் மின்கட்டணம் கணக்கிடும் முறை தமிழ்நாடு கைபேசி செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு செய்யும் நடைமுறையை பிப்ரவரி 1ம் தேதி முதல் சோதனை முறையில் தொடங்க தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது. மின்நுகர்வோரே மின்சார கட்டணத்தைக் கணக்கிடும் வகையில் கைபேசி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்து, கட்டணத்தை கணக்கீடு செய்யலாம். செயலியில் மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த ஒரு சில நிமிடங்களில் மின் கட்டண விவரம், குறுஞ்செய்தியாக நுகர்வோருக்கு அனுப்பப்படும். சோதனை முயற்சியாக மின்வாரிய ஊழியர்களுக்கு இந்தச் செயலி வழங்கப்பட்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பணிகளை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை மற்றும் வேலூர் மண்டலங்களில் சோதனை அடிப்படையில் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. >

கர்ப்பமாக இருந்தால் வேலை கிடை. யாதுசர்ச்சைக்குள்ளான எஸ்.பி.ஐ யின் புதிய திருத்தம்

Image
 கர்ப்பமாக இருந்தால் வேலை கிடை. யாதுசர்ச்சைக்குள்ளான எஸ்.பி.ஐ யின் புதிய திருத்தம் பெண்கள் 3 மாதத்திற்கு மேல் கர்ப்பமாக இருந்தால் வங்கியின் அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்றாலும் பணியில் சேர எஸ்.பி.ஐ தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   “பெண்களுக்கு எதிரான” எஸ்பிஐ வழிகாட்டுதல்களை திரும்பப் பெற வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்கம் (AIDWA) கோரியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, சமீபத்திய சுற்றறிக்கையில், கர்ப்பிணிப் பெண்களை நியமனம் செய்வது தொடர்பான வழிகாட்டுதலைத் திருத்தியுள்ளது. திருத்தப்பட்ட வழிகாட்டுதலின்படி, மூன்று மாதங்கள் மற்றும் அதற்கு மேல் கர்ப்பமாக இருக்கும் தேர்வர்கள் தற்காலிகமாக தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள் மற்றும் குழந்தை பிறந்த நான்கு மாதங்களுக்குள் பணிக்கு சேர அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த வழிகாட்டுதலில், ஆறு மாத காலம் வரை கர்ப்பமாக இருக்கும் பெண்கள், வங்கியில் வேலை செய்வது கருவின் வளர்ச்சியில் எந்த பாதிப்பை ஏற்படுத்தாது என்று தகுந்த மருத்துவரின் சான்றிதழ் சமிர்பித்தால் பணியில் அமர்ந்தலாம் என்று கூறியது. இதில் த

23 சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் உடனுக்குடன் பெறலாம்” - பள்ளிக் கல்வித்துறை

Image
 “23 சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் உடனுக்குடன் பெறலாம்” - பள்ளிக் கல்வித்துறை பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக பெற்றுகொள்ள வழிவகை செய்யும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக பெற்றுகொள்ள வழிவகை செய்யும் அரசாணையை பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.  இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “2021-2022ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறையின் மானியக்கோரிக்கையின் போது கல்வித்துறை அமைச்சரால் ஏனையவற்றுடன் வரிசை எண் 18-ல் மின்னணு சேவைகள் என்ற தலைப்பில் கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.  பள்ளிக் கல்வித் துறையில் பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றுகளான நன்னடத்தைச் சான்று, ஆளறிசான்று, தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட அனைத்துச் சான்றுகளும் அவர்தம் இல்லத்திற்கு அருகில் உள்ள அரசு பொது சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பித்து காலவிரயமின்றிப் பெற்றுக் கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படும்.  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக பள்ளிக் கல்வித் துறையில் உள்ள

எங்கும் கண்டிராத ஈசனின் திருக்கோலம்..

Image
 எங்கும் கண்டிராத ஈசனின் திருக்கோலம்..!!  நான் பார்த்ததெல்லாம் சிவலிங்க வழிபாடு, முகலிங்க வழிபாடு இல்லையேல் சிவனின் முழு உருவ கோலம். ஆனால், இந்த வடிவம் ஆவுடை மீது லிங்கம் இருக்கும் இடத்தில் நந்தி தேவர் மீது அமர்ந்த கோலத்தில், ஜடாமுடி மற்றும் இதர அணிகலன்கள் அணிந்து காட்சியளிக்கின்றார் ரிஷபவாகனதேவர்.  இது 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புரசோமேஸ்வரர் கோவில், ஷிமோகா மாவட்டத்தில் இருப்பதாக ஒரு பதிவு இருந்தது. இன்று  மஹா சனி பிரதோஷ நாளில் கண்டு அருள் பெறுவோம் ஓம் நமசிவாய🙏🙏🙏

சிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள்.

Image
 சிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள்.  சிவ வழிபாடு என்பது மிகப் பெரிய செயல் ஆகும். அதற்கு தடைகளும், இடையூறுகளும் வருவது இயற்கையே. இதற்கு காரணம் நமது கர்மவினைகளே. கர்மவினைகளை அழிக்க பல எளிய வழிகள் உண்டு. கர்மவினைகளை அழிக்கும் செயலே இயற்கைக்கு மாறான ஒன்றாகும்.  நாம் பிறந்த இந்த பூமியானது ஒரு கர்ம பூமி. இதில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் தம் கர்ம வினைகளை தொலைக்க பிறந்தவர்களே. இந்த கர்மவினைகள் இரண்டாகும். அவை நல்வினை மற்றும் தீவினை ஆகும். நல்வினை மற்றும் தீவினை இவற்றை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். இது தான் விதி என்று அழைக்கப்படுகிறது.  மதி என்கிற சந்திரனை சூடிய கடவுள்கள் வழிபாடு நமது கர்மவினைகளை போக்கக்கூடியது. பிறைசூடிய தெய்வங்கள் சிவபெருமானை பிரதிபலிக்கும் தெய்வங்கள் ஆகும். அவ்வாறு இருக்கும் தெய்வங்கள் சிவபெருமானின் அம்சம் பொருந்தியவையே. நமது சிவ வழிபாட்டில் வரும் தடைகளும், இடையூறுகளும் முதலில் நமது மனதை பாதிக்கக்கூடியவை. இவ்வாறு வரும் இடையூறுகளை களைந்து சிவ வழிபாடு முழுமை பெற இரண்டு சிவ வடிவங்களின் அருள் மிகவும் தேவை.  முதலில் வரும் சிவ வடிவம் அமைதியே உருவான தென்முகக்கடவுள் (தட்

காத்திருக்கிறேனடா காதலா/ரேகா

Image
  பல மைல்களுக்கு அப்பால் நீ இருந்தாலும் உன்னைப் பற்றிய  என் நினைவலைகள் எப்போதும்  உன் நெருக்கத்திலே  இருக்கிறது எதிர்பார்ப்புகள்  ஏமாற்றங்களை தரும் என்பதை  நான் அறிவேன் உன்னை குறித்தான எதிர்பார்ப்பு களிலேயே  என் நாட்கள் நீண்டு  கொண்டிருக்கிறது  வாழ்வதற்கான காரணமும்  தோன்றுகிறது உன்  இரவுகளில் எப்போதும்  யாரேனும் துணைக்கு  இருக்கத்தான் செய்கிறார்கள் என் இரவுகளில்  உன் நினைவுகள்  மட்டும்  எப்போதும் என்னோடு உறக்கத்தின் பல நேரங்களில் கனவுகளிலும்  நீ என்னோடு என்னைப்பற்றி  சிந்திப்பதற்கான நேரம்  உனக்கு உண்டா என்று  எப்போதும்  எனக்கு ஐயமில்லை காரணம்  தினம் வரும்  விக்கல் சொல்கிறது  என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறாய்  என்று புனிதமானதா  புண்ணியமானதா  என்றெல்லாம் எனக்கு  தெரியாது நாளை காலை வரவேண்டும் காலையில் என்னை நான் ஆரோக்கியம் செய்ய வேண்டும் என்னை அழகாய் அலங்காரம் செய்ய வேண்டும் என்கிற ஆசை எல்லாம் தொடர்ந்து வருவதற்கு  நீ ஒரு காரணம் நினைவாய் என் கனவாய் வந்து கொண்டே இரு என்னோடு தொட்டுவிடும் தூரத்தில் நீ இல்லை என்றாலும் என்றாவது எட்டிப் பிடித்து விடுவேன் உன்னை என்கின்ற நம்பிக்கையில் இந்த