Posts

Showing posts from February, 2020

வயதானலும் கலக்கல் கிரண்

Image
 ஜெமினி புகழ் கிரண்  தனது இணையதளத்தில் அவ்வபொழுது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கலக்குகிறார்.  சினிமா துறையை விட்டு வெளியே வந்தாலும் தனது சோஷியல் மீடியாவில் தங்களை பிஸியாக காண்பித்து கொள்வது இப்போ ட்ரெண்ட்

கண்ணிலே டாட்டு இப்ப கண்ணே அவுட்டு

Image
கண்ணில் டாட்டு (பச்சை குத்துதல்)  போட்டால்  பார்வை  பறிபோகுமா?   போலந்து நாட்டின் ரோக்லாவ் நகரத்தைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா என்ற மாடல் அழகி  போலந்தைச் சேர்ந்த பிரபல ராப் பாடகரும் குத்துச் சண்டை வீரருமான போபெக்-கின் தீவிர ரசிகை.   போபேக் தனது 2 கண்களிலும் கருமை நிற டாட்டு போட்டிருப்பார். அவரைப் போலவே கண்ணில் டாட்டு போட விரும்பிய மாடல் அழகி, டாட்டு போடும் அனுபவம் இல்லாத, பணத்துக்காக  பொய் கூறிய ஒரு நபரிடம் தெரியாத் தனமாக     டாட்டு போட்டுக் கொண்டார்.   போட்டு முடித்தவுடன், 2 கண்களும் எரிச்சலாக இருப்பதாகவும் வலிப்பதாகவும் கூறினார். அந்த நபர் சிறிது நேரத்தில் சரியாகி விடும்  என கூறி, வலி நிவாரணி ஒன்றை கொடுத்து, பணத்தை பெற்றுக் கொண்டு  அழகியை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.        ஒருசில நாட்களில் அவர் இடது கண் பார்வையை இழந்து மருத்துவரை அணுகியபோது  கண்ணில் கருமைநிற டாட்டு பரவியதில் கண் பார்வையைத் திரும்பப் பெற முடியாது என்று கூறியதோ? மேலும் விரைவில் வலது பக்க கண்ணிலும் பார்வையை இழக்க நேரிடும் என எச்சரித்தனர். இனிமேல் டாட்டு போடுவதற்கு முன் எங்கெங்கு போட வேண்டுமென்று

திருத்துறைப்பூண்டியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் 67வது பிறந்த தினவிழா

Image
 திமுக தலைவர் மு க ஸ்டாலின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 15 குழந்தைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன் தலைமையில் மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி திமுக சார்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில்  30 லட்ச ரூபாய் மதிப்பில் அவசர சிகிச்சை மைய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிகளில் நகர செயலாளர் பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் கார்த்தி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் உடனிருந்தனர்.     செய்தியாளர் பாலா திருத்துறைப்பூண்டி

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா

Image
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன ர்.  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் டெல்லியில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது போராட்டத்தின்போது உடனடியாக தமிழக அரசு சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.  இதேபோல் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு பகுதியிலும் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஏராளமானோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.     செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி

பெப்ரவரி 29 

Image
தகவல் களஞ்சியம் பெப்ரவரி 29   அல்லது   லீப்நாள்   லீப்நாளைக்கொண்டிருக்கும்ஆண்டு   நெட்டாண்டு  எனஅழைக்கப்படுகிறது.  கிரெகொரியின்நாட்காட்டியில் , 100 ஆல்வகுபடும்ஆண்டுகள்லீப்நாளைக்கொண்டிருப்பதில்லை .ஆனால் 400 ஆல்வகுபடும்ஆண்டுகளில்லீப்நாள்வருகிறது.  1700 ,  1800 ,  1900 , 2100 போன்றவை  நெட்டாண்டுகள்  அல்ல ஆனால்,  1600 ,  2000 , 2400 ஆகியனநெட்டாண்டுகள்ஆகும்.  இந்தநாள்நான்குஆண்டுகளுக்குஒருமுறை 4 ஆல்  வகுபடும்   2016 ,  2020 ,  2024  போன்றஆண்டுகளில்மட்டுமேவருகிறது.  சீனநாட்காட்டியில்  பெப்ரவரி 29 ஆம்நாள்  குரங்கு ,  டிராகன் ,  எலி  ஆகியஆண்டுகளில்மட்டுமேவருகிறது.   பூமிசூரியனைமுழுமையாகச்சுற்றிவருவதற்கு 365 நாட்களும்மேலதிகமாகக்கிட்டத்தட்ட 6 மணித்துளிகள்அதிகமாகஎடுப்பதால்லீப்நாள்சேர்க்கப்படுகிறது.மேலதிகமானஇந்த 24 மணித்துளிகள்ஒவ்வொருநான்குஆண்டுகளுக்குஒருமுறைசேர்க்கப்பட்டு, மேலதிகஒருமுழுமையானநாள்சூரியனின்தோற்றநிலைக்குஏதுவாகநாட்காட்டிகளில்சேர்க்கப்படுகிறது.   16-    ஆம்நூற்றாண்டு  வரைபயன்பாட்டில்இருந்த  யூலியன்நாட்காட்டி  நான்குஆண்டுகளுக்குஒருமுறைஇந்தலீப்நாளைச்சேர்த்துவந்தது;  சூரியஆண்டுஉண்மையில் 3

கமலஹாசனும், ரஜினிகாந்த்ம் மத்திய அரசுக்கு முதுகுபிடித்துவிடும் வேலையை செய்கிறாரர்கள்

Image
கமலஹாசனும், ரஜினிகாந்த்ம் மத்திய அரசுக்கு முதுகுபிடித்துவிடும் வேலையை செய்து வருவதாக சி ஏ ஏ -க்கு எதிராக திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற 14வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் இயக்குனர் கெளதமன் பேட்டி. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துபேட்டையில் மத்திய கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய மக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும். டெல்லியில் போராடிய இஸ்லாமியர்கள் சுட்டு கொல்லபட்டதை கண்டித்தும் 14வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்த இயக்குனர் கெளதமன் தனது ஆதரவை தெரிவித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது, குடியுரிமை சட்ட திருத்தம் நிறைவேற்ற படுவதற்கு முன்பே இவ்வளவு உயிர்கள் பறிக்கபடுகிறது. அமல்படுத்தப்பட்டால் இன்னும் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோகும். எனவே தமிழக அரசு சட்டமன்றத்தில் இச்சட்டதிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் ஜல்லிக்கட்டி

இன்று தமிழ்நாட்டையே கலக்கிய திரௌபதி

Image
    இன்று தமிழ்நாட்டையே கலக்கிய திரௌபதி தான் சொல்ல வந்த கருத்துகளை கச்சிதமாக சொன்ன மோகன் .ஜி  சுதந்திரம் தனக்கு மட்டும்தான் என ஒரு தரப்பு ஆடிக்கொண்டிருந்தது. மெட்ராஸ் பட புட்பால் மேட்ச். ஹீரோ அணிக்கு நில நிற பனியன். எதிர் அணிக்கு மஞ்சள் நிற பனியனை போட்டு பல்வேறு குறியீடுகளை பயன்படுத்தி தன் சாதிய நிற அரசியல் படமெடுத்தார் பா.ரஞ்சித். இப்போது திரெளபதி தனது தரப்பு நியாயத்தை சொல்வதற்காக வெளியாகி இன்று மக்களிடையே பெரிய வரவேற்பு பெற்றுள்ளது   நாடகக் காதலுக்கு எதிரான கருத்துக்களுடன் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் திரெளபதி. நாடக காதலை நம்பி ஏமாறும் பெண்களின் குடும்பம் அழிந்து போவதையும், அதற்கு காரணமான வில்லன் கும்பலை நாயகன் பழிவாங்குவதும் ... தான் கதைக்களம்...  இந்தப்படம் குறித்து பா.ரஞ்சித்’’ திரெளபதி படத்தை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது ‘’ எனக் கூறி  ஓதுங்க   அவரது இந்தக் கருத்தால் கடுப்பான எதிர்தரப்பு  கதறி கதறி படம் எடுப்பவர்கள்  வெற்றிமாறனும் ரஞ்சித்தும்  இவர்களை கதறவிடவே  படம் எடுக்க  வந்த இயக்குனர்கள் மோகன் - முத்தையா எனக் கருத்துக்களை.. கருத்துக்களை  பலர் பதிவிட்டு வருகின்றனர். .. .  

நூலும் திரையும் - 2

Image
நூலும் திரையும் - 2 சிதம்பரம் என்ற 15 வயது பையன், வடக்கூரானை ஒரு அரையிருள் நேரத்தில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிடுகிறான்.  உண்மையில், அவனுக்கு வலக்கையை எடுக்கவேண்டும் என்பதுதான் எண்ணம்.  வசம் தவறி விலாவில் பாயவே உயிருக்கு உலை வைத்துவிடுகிறது. ஆள் சாய்ந்ததுமே இவன் ஓட்டம் எடுக்கிறான் ..... பின்னாலேயே நாலைந்து பேர் துரத்தி வருகிறார்கள். இவன் ஒரு கைக்குண்டை எடுத்து அவர்களை நோக்கி வீசுகிறான். அது வெடித்ததில் யாருக்கு எவ்வளவு சேதமோ காயமோ.. அதற்கு மேல் யாரும் தொடரவில்லை. ஒரு சத்தத்தையும் காணோம்.. அவ்வளவுதான். ஊரைத் தாண்டி ஒரு இடத்தில் அய்யாவும்(அப்பா) மாமாவும் அவனைச் சந்திக்கிறார்கள்.   அய்யாவுக்கு, நம்மை முந்திக்கொண்டானே என்று ஆதங்கம். தன் இயலாமை குறித்து சுய பச்சாதாபம். அவருக்கும் மாமாவுக்கும் அவனை நினைத்துப் பெருமை கூட. நிதானித்து யோசித்து செய்ய எத்தனிப்பதற்குள் என்னாகுமோ. அப்படிச் செய்வதற்கு அவன் ஒன்றும் வயசாளி இல்லையே.  இளங்கன்று இல்லையா.. நினைத்தான் கருவினான் நோட்டம் பார்த்தான் போட்டுவிட்டான்.  எல்லாரும் சேர்ந்து, ஆத்தாவையும் தங்கச்சியையும் சித்தி ஊருக்கு அனுப்பிவைப்பது என்று முடிவ

நல வாழ்வுக்கான உறுதி மொழி

Image

தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்

Image
தேசிய அறிவியல் தின கொண்டாட்டம் தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.                               விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.பறக்கும் யானை,தராசு,காற்றின் அழுத்தம்,மடிக்கணினி,நீரின் அடர்த்தி,வெப்ப சலனம்,ஊசி துளை கேமிரா,ஒளியின் பாதை,நீர் பாயும் தன்மை போன்ற அறிவியல்  சோதனைகளை நேரடியாக மாணவர்களே  செய்து காண்பித்து விளக்கம் அளித்தனர்.   மாணவர்கள் அய்யப்பன்,கிருத்திகா ,நதியா,ஜோயல் ரொனால்ட் ,கீர்த்தியா ஆகியோர் அறிவியல் தினம் தொடர்பாக பேசினார்கள்.நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர்,கருப்பையா செய்து இருந்தனர்.நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார். பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தினை முன்னிட்டு மாணவர்களே அறிவியல் சோதனைகளை செய்து காண்பித்து அசத்தினார்கள்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினா

இ- சிகரெட் நல்லதா கெட்டதா

Image
இ- சிகரெட் நல்லதா கெட்டதா ?     சென்ற வருடம் செப்டம்பர் மாதம் அதிக அளவில் பேசப்பட்டது.முடிந்தொன்றை மீண்டும் எழுதுவதற்கு காரணம் இ-சிகரெட் பற்றி மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதை தாண்டி அனைவருக்கும் தொழில்நுட்பம் எதையெல்லாம் கற்றுத் தருகிறது என்பதை தெரிவிக்கும் நோக்கமாக.... இ- சிகரெட் அல்லாத சிகரெட்டில் 7000 கெமிக்கல்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.ஒவ்வொரு முறையும் பற்ற வைத்து உறிஞ்சும் போது அத்தனை கெமிக்கல்களும் உடலில் தங்கிக் கொள்வதன் விளைவாக புற்றுநோய் வருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். மிகமுக்கிய கெமிக்கலாக நிகோடின் 7000 கெமிக்கல்களுள் ஒன்றாக இருப்பதால் தான் ஒருமுறை புகைத்து பழகிய பழக்கம் மறுமுறை புகைக்க தூண்டுகிறது. இந்த நிகோடின் இரத்தத்தின் வழியாக புத்துணர்ச்சியை தருகிறது என்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் பத்து லட்சம் பேர் புகைபிடிப்பதால் உயிர் இழப்பதாக ஆய்வுகள் சொல்லுகிறது.சிகரெட் பிடிப்பதில் முதல் இடம் சைனா இரண்டாம் இடம் இந்தியாவாக இருப்பது தான் காரணம் மக்கள் தொகை பெருக்கம். சிகரெட் பிடிப்பவர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை அருகில் இருப்பவர்களுக்கும் அதீத பாதிப்பை உண்டாக்கிற

வாழ்த்துக்கள் குவாடன்

Image
இணையத்தில் தனது வருத்தத்தை பதிவு செய்ததன் மூலம் உலக நாடுகளின் பேராதரவை பெற்ற சிறுவன் குவாடன் தனக்கு கிடைத்த  3.40 கோடி ரூபாய் பணத்தை ஆதரவற்றோர் அறக்கட்டளைக்கு கொடுத்து அனைவரையும் மனம் நெகிழ செய்துள்ளான்!     வாழ்வில் அன்றாடம் சில பேர் சில அவமானங்களை சந்திப்பார்கள் அவர்களெல்லாம் கன்டிப்பாக ஒரு நாள் உச்சத்தை அடைவார்கள் அன்று பல பேர் சொல்வார்கள் இவர் இப்படி வருவார் என்று எனக்கு அப்போதே தெரியும் என்று. கஷ்ட்டங்களை கடந்தவனுக்கு தான் தெரியும்  தான்  பட்ட வலியை ஒரு போதும் பிறர் படக்கூடாதென்று...  அந்த மனசு தான் சார் கடவுள் . இந்த குவாடனை போல் நாமும்  மற்றவர்களுக்கு உதவினால் பல மடங்கு நாமும் வளரலாம் வாழலாம். வாழ்வோமாக வாழ்த்துக்கள் குவாடன்

திரௌபதி மிரட்டுகிறாள்

Image
திரெளபதி திரைப்படம் மக்கள் என்ன  சொல்றாங்க   padam eppadi irukku or officeal partner   Draupathi Public Review | Draupathi Review Public|Draupathi Tamil Rishi Richard, Sheela, Karunas

அப்பா அன்புள்ள அப்பா” திரு சுஜாதா அவர்களின் கட்டுரை

Image
தமிழ் இலக்கியத்திலிருந்து இன்றையச்சுவை   திரு சுஜாதா அவர்களின் கட்டுரை அப்பா அன்புள்ள அப்பா” அப்பா அன்புள்ள அப்பா”   அப்பா அன்புள்ள அப்பா” ஒரு உன்னதமான கட்டுரை. இறந்துகொண்டிருக்கும் தன் அப்பாவைப் பற்றி அவர் எழுதி இருப்பது ஒரு அற்புதம்!! செய்தி வந்த உடனே பஸ் பிடித்து சேலம் போய்ப் பார்த்தால் அப்பா படுக்கையில் உட்கார்ந்திருந்தார். “எங்கே வந்தே?” என்றார். “உனக்கு உடம்பு சரியில்லைன்னு” என்று மழுப்பினேன். “நேற்று வரை சரியில்லாமல்தான் இருந்தது. டாக்டர்கள் என்னமோ பண்ணி உட்கார வைத்து விட்டார்கள். சாப்ட்டியா?” என்றார். “எனக்கு என்ன வாங்கிண்டு வந்தே?” “என்னப்பா வேணும் உனக்கு?” “உப்பு பிஸ்கட். கொஞ்சம் பாதாம் அல்வா. அப்பறம் ஒரு சட்டை வாங்கிக் கொடுத்து விட்டுப் போ.” சட்டையைப் போட்டுவிட்டதும் “எப்படி இருக்கேன்?” என்றார். பல்லில்லாத சிரிப்பில் சின்னக் குழந்தை போலத்தான் இருந்தார். நர்ஸ் வந்து “தாத்தா உங்க மகன் கதைகள் எல்லாம் படிச்சேன். ரொம்ப இன்டெலிஜெண்ட்” என்றதற்கு “நான் அவனை விட இன்டெலிஜெண்ட்” என்றார். பேப்பர் பேனா எடுத்து வரச் சொல்லி “உன் முன்னோர் யார் என்று அபபுறம் தெரியாமல் போய் விடும்” என்று வம்ச

ஆகம குறிப்புகள்  15

Image
ஆகம குறிப்புகள்  15   ;             1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது. 2. மாலை6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது.(கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.) 3. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும். முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும். 4. காயத்ரி மந்திரத்தை பிரயாணத்தின்போது, சொல்லுதல்கூடாது சுத்தமானஇடத்தில்தான் ஜபிக்கவேண்டும். 5. கற்பூர ஹாரத்தி : (சூடம்காண்பித்தல் பற்றி) சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும். தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்கவேண்டும் முகத்துக்கு ஒரு தடவை கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்க வேண்டும் . 6. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது . 7. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது . 8. சிவனுக்கு உகந்தது = வில்வம் ஆகும் • விஷ்ணுவிற்கு உகந்தது = துளசி ஆகும் • விநாயகருக்கு = அருகம்புல் ஆகும் • பிரும்மாவிற்கு உகந்தது

காதல் எப்போதுமே பழசுதான்

Image
கவிதை பக்கங்கள்   காதல் எப்போதுமே பழசுதான் என்னை விட்டுப் போனதாக நான் நினைக்கவில்லை  என்னை விட்டு நீ எப்படிச் செல்ல முடியும்  நீ நானாகியதும் நான் நீயாகியதும் எப்படி பழைய நிலைக்கு வரும்  எனக்குள் வாழுகின்ற உன்னை என்னால் வெளியேற்ற முடியவில்லை வெளியேறுதலும் சாத்தியமில்லை  எனது மண் பானை உடைவதற்கு முன்னே  நான் பித்தளைப் பானை பாவித்திருக்கலாம்  என்னை உடைத்திருக்காது  நானும் உடைந்திருக்க மாட்டேன் பிரிவு உடல்களுக்கானதென்று எனது காதல் எனக்கு வகுப்பு எடுத்திருக்கிறது  பிரிவு மனங்களுக்கு உரியதல்ல என்ற தத்துவமும் நான் அறிந்ததுதான்  முடியுமானால் மீண்டும் ஒரு முறை பிறந்து இருவரும் சந்திப்போம்  எனது காதல் அப்போதும் பழைய சட்டைதான் போட்டிருக்கும்  -ராஜகவி ராகில்

பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் பணிநிரந்தரம் செய்யக்கோரி கல்லூரி வளாகம் முன்பு வாயில் முழக்க ஆர்பாட்டம்

Image
திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைச் சேரி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் பணிநிரந்தரம் செய்யக்கோரி கல்லூரி வளாகம் முன்பு வாயில் முழக்க ஆர்பாட்டம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழகமாதிரி கல்லூரியில் 36 கெளரவ விரிவுரையாளர்கள் ,5 அலுவலக பணியாளர்கள் குறைந்த தொகுப்பூதியத்தில் கடந்த 2011-ல் கல்லூரி துவங்கியதில் இருந்து பணியாற்றி வருகின்றனர். இந்த கடந்த ஆண்டு தமிழக முதல்வர் சட்டசபையில் 110 - விதியின் கீழ் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மூலம் இயங்கிவரும் உறுப்புகல்லூரிகள் அனைத்தும் அரசு கல்லூரியாக மாற்றம் செய்து அறிவித்ததை தொடர்ந்து புதிய அரசு கல்லூரிகளுக்கு  அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் கூடுதல் பேராசிரியர்களை பணியிட நிரவல் மூலம் பணியமர்த்தப்பட்டனர். கெளரவ விரிவுரையாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் இதனை கண்டித்தும் தற்போது பணியில் உள்ள கெளரவ விரிவுரையாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கி பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட கௌரவவிரிவரையாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை வல

திருத்துறைப்பூண்டி காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Image
திருத்துறைப்பூண்டி காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.   திருத்துறைப்பூண்டி போலீஸ் டிஎஸ்பி பழனிச்சாமி தலைமை வகித்தார், இன்ஸ்பெக்டர் அன்பழகன் முன்னிலை வகித்தார், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை புதிய பேருந்துநிலையம் அருகில் முத்துப்பேட்டை போலீஸ் டிஎஸ்பி இனிக்கோ திவ்யன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.   பேரணியில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் வின்சென்ட் ஆரோக்கியராஜ், டெல்டா ரோட்டரி தலைவர் சிவகுமார், செயலாளர் மாணிக்கவாசகம், பாரதமாதா தொண்டுநிறுவன இயக்குனர் எடையூர் மணிமாறன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் சிவகுமார் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி  பழைய பேருந்துநிலையம், காமராஜர் சிலை, அண்ணா சிலைவழியாக தேரடியில் நிறைவுபெற்றது   . பேரணியில் சாலை விதிகளை மதிக்க வேண்டும், ஹெல்மெட் அணிய வேண்டும், மதுபோதையில் வாகனம் ஒட்டக்கூடாது, அதிக வேகம் ஆபத்தை தரும்  என்பதை பள்ளி மாணவ, மாணவிகள் வலியுறுத்தி பதாகைகளுடன் சென்றனர்     . செய்தியாளர். பாலா திருத்துறைப்பூண்டி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சைதை ரயில் நிலையத்தை 100 க்கும் மேற்பட்டோர்  முற்றுகை

Image
டெல்லியில் நடைபெற்ற கலவரத்தை தடுக்க தவறிய மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சைதை ரயில் நிலையத்தை 100 க்கும் மேற்பட்டோர்  முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே நடைப்பெற்ற போராட்டத்தில்,CAA எதிரான பதாகைகளை கையில் ஏந்தியபடி மத்திய,மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

வலிமையான வில்லன்

Image
வலிமை படத்தின் வில்லன் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.   தெலுங்குவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற RX 100 என்ற படத்தின் நாயகனான கார்த்திகேயா தான் என்பது தெரிய வந்துள்ளது.   மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மார்ச் மாதத்திலும் செகண்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதியும் வெளியாகும் என கூறப்படுகிறது

அஸ்வினுக்கு கல்தா

Image
 நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் நீக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் அஸ்வின் கை கொடுக்கவில்லை. அந்த காரணத்தால் அவர் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ஆல் - ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டு வரும் ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படுவார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

ரஜினிக்கு பா ஜ க எதிர்ப்பு

Image
ரஜினிகாந்த் மலிவான அரசியல் செய்கிறார், இது அவரின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் எச்சரிக்கை டெல்லி கலவரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த்  தனது பேட்டியில்  மத்திய அரசுக்கு எதிராக சில கருத்துக்களை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது சொல்லியிருக்கிறார்.  மத்திய அரசினுடைய உளவுத்துறையின் தோல்விதான் டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு காரணம்.   மத்தியில் இருப்பவர்களை இதற்கு நான் வன்மையாக கண்டிக்கிறேன். உளவுத்துறை அவர்களது வேலையை சரியாகச் செய்யவில்லை. சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை. உளவுத்துறை தோல்வியென்றால் உள்துறை அமைச்சகத்தின் தோல்வி. அதை புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.   ரஜினியின் கருத்து பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்தது. தற்போது பாஜக தரப்பில் இருந்து முதல் முறையாக ஒருவர் இதற்கு எதிர் கருத்து தெரிவித்துள்ளார். பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். எஸ்.ஆர்.சேகர் தனது பேட்டியில், ரஜினி டெல்லி வன்முறையை பார்த்து கவலையில்  அவர் பேசி இருக்கிறார். இதில் அவர் மத்திய அரசையும், உளவுத்துறையையும் விமர்சிப்பது சரியில்லை.