Posts

Showing posts from December, 2019

புத்தாண்டு கொண்டாட்டத்தில் சாஸ்திரி

Image
                 இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நடிகர்  ஷாரூக்கான் மற்றும் ரவீனா டண்டன் மற்றும் பிரபல தொழிலதிபர் கவுதம் சிங்கானியாவும் இடம்பெற்றிருந்த  தான் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்த  புகைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் தங்களது கமெண்ட்டுகளை அளித்து வருகின்றனர்.

வெள்ளிப்பனி மலை மீது உலாவும் விராட் அனுஷ்கா

Image
தற்போது   சுவிட்சர்லாந்தின் கஸ்தாத் மலையில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தனது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் சுற்றுலாவில் உள்ளார்         அவர்களுடன் பாலிவுட் நடிகர் வருண் தவான் தன்னுடைய காதலி நடாஷா தலாலுடன் இணைந்து கொண்டாட்டத்தில் இணைய நால்வரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை அனுஷ்கா ஷர்மா வெளியிட்டதை அனைத்து  ரசிகர்களையும்  ஈரத்தது

தாய்லாந்தில் டெண்டுல்கர்

Image
                    தாய்லாந்தில் தன்னுடைய விடுமுறையை  கொண்டாட சென்ற  முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அந்தக் கடற்கரையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிய  இந்தப் புகைப்படம் பதியப்பட்ட  சில மணிநேரங்களிலேயே 8 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை ரசிகர்களிடம் பெற்றதுது.

திருமாவளவன் கோலம் போட்டார்

Image
 தலைவர் திருமாவளவன் கோலம் போட்டு போராட்டம் நடத்தினார். சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் கோலம் போட்டு போராட்டம் நடத்தினார்.                        அவரின் 20 நிமிட முயற்சியில், 4 வண்ணத்துப்பூச்சிகளின் நடுவே No CAA என்ற எழுத்துகள் வரும் வகையில் அந்த கோலம் அமைந்ததை தொடர்ந்து கண்டன முழக்கமும் எழுப்பப்பட்டது.   நிருபர்களுக்கு பேட்டி அளித்த திருமாவளவன், கோலமிடுவது, அறவழி போராட்டம் என்றார். பெண்கள்தான் கோலம் போட வேண்டுமென்ற பழைய எண்ணத்தை உடைப்பதற்காகவே தான் கோலம் போட்டேன். மார்கழி மாதத்தில் மிச்சமிருக்கிற நாட்களில், No CAA, NO MODI என கோல வழி எதிர்ப்பு போராட்டத்தை தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து, ஆங்கில புத்தாண்டு, தமிழர் திருவிழாவை விசிக புறக்கணிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரெயில் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்வு

Image
ரெயில் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்வு     ரெயில் கட்டணம்  நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சாதாரண  ரெயில்களில் ஒரு கிலோ மீட்டருக்கு  1 பைசாவும்    ஏ.சி வகுப்புகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 4 பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரெயில்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. புற நகர் ரெயில் கட்டணத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

ஜியோ மார்ட் சேவை

Image
                            சோதனை அடிப்படையில்  ஜியோ மார்ட் மராட்டிய மாநிலம் நவி மும்பை, தானே, கல்யாண் பகுதிகளில் தனது ஆன்லைன் சேவையை துவங்கியுள்ளது.   நாடு முழுவதும்  ஜியோ மார்ட் விரைவில்  விரிவாக்கப்படும்  என்று ரிலையன்ஸ் ரீட்டெய்ல்ஸ் அறிவித்துள்ளது.  .            தொலைத்தொடர்பு துறையில் ஜியோ நிறுவனத்தில் சக்கை போடு போடும்  தற்போது,  ரிலையன்ஸ் ஜியோ மார்ட் மூலம்  என்ன என்ன சலுகைகள் கிடைக்கப்போகிறதோ என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.   ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜியோ மார்ட்டில், சலுகைகளை பெற முன்பதிவு செய்யுமாறு ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனம்  அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2020 புத்தாண்டு பிறந்தது

Image
 முதன்முதலில்2020  புத்தாண்டை வரவேற்ற  நாடு பசிபிக் தீவுகளிலுள்ள சிறு நாடுகளான டோங்கா, சமோவா மற்றும் கிரிபட்டி ஆகிய நாடுகள் ஆகும்  .  புத்தாண்டை வரவேற்பதற்காக வாணவேடிக்கைகள் வைத்தும், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.   அதைத் தொடர்ந்து நியூசிலாந்திலும் 2020 புத்தாண்டு பிறந்தது. ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர்.   இந்திய நேரப்படி புத்தாண்டை வரவேற்ற, நாடுகள்    பிற்பகல் 3:45 மணிக்கு, கேதம் தீவுகளில் புத்தாண்டை வரவேற்றனர்.   மாலை 4:30 மணிக்கு, நியூசிலாந்தில் புத்தாண்டு உற்சாகமாக வரவேற்றனர்.

நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதி

Image
  உடல்நலக் குறைவு காரணமாக நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதி.                    குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில்  நடந்த மாநாட்டில்  பங்கேற்று பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பியதாக, பாஜகவினர் போலீசில் புகார் அளித்தனர்.               இதனால்  அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களிலும் பாரதிய ஜனதா கட்சியினர் நெல்லைக் கண்ணன் மீது புகார் தெரிவித்துள்ளனர்.          தற்போது  அவர் , உடல்நலக் குறைவு காரணமாக வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்டார்.  இதை தொடர்ந்து மருத்துவமனை முன்  நெல்லை கண்ணனை கண்டித்து  பாஜக மற்றும் இந்து முன்னணியினர் தர்ணா போராட்டம் நடத்தவே  தனியார் மருத்துவமனையில் இருந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நெல்லை கண்ணன் மாற்றப்பட்டார்.

லாஸ் ஏஞ்சலில் ஒரு ஏஞ்சல்

Image
நடிகை நீது சந்திரா  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் . யாவரும் நலம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.  தொடர்ந்து தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவன், சேட்டை, திலகர், சிங்கம் 3 மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.   அமெரிக்காவில் தற்போது இருக்கும் அவர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மலிபூ பீச் சென்று அங்கு விதவிதமாகபுகைப்படங்களை எடுத்து புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தை வலம் வருகிறது

மாஸ்டர் விஜய்

Image
விஜயின் மாஸ்டர்

ரெஜினாவின் புதிய படம்

Image
சமீபகாலமாக நடிகைகள்  பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்      கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஹீரோயின்களை மையப்படுத்தி உருவாகும் படங்களில் நடித்து வரும் நிலையில்  நடிகை ரெஜினாவும் இந்த லிஸ்டில் ... லிஸ்டில் இணைந்துள்ளார். அந்த வகையில் திருடன் போலீஸ், உள்குத்து, ஆகிய படங்களை இயக்கிய கார்த்தி ராஜூ, ஆகிய படங்களை இயக்கிய கார்த்தி ராஜூ இயக்கவுள்ள ஒரு படத்தில் ரெஜினா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது....

மராட்டிய காங்கிரஸ் மந்திரிகள் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்தனர்.

Image
மராட்டியத்தில் புதிதாக பதவியேற்ற காங்கிரஸ் மந்திரிகள் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மெட்ரோ ரயிலில் ஆர்யா

Image
பிரபல நடிகர்  ஆர்யா.தனது மனைவியுடன் சென்னை மெட்ரோ ரயிலில் சுற்றிய போட்டோக்கள் தற்போது இணையங்களில் வைரல் . தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. ஆக்ஷன், நகைச்சுவை என அசத்தி வருகிறார் நடிகர் ஆர்யா .காதல் மனைவியுடன் ஜாலி ட்ரிப் .

ஜேடி

Image
தளபதி 64 படம் பெரும்பாலும் விஜயை மட்டும் சுற்றி சுழலும் கதை  அதனால் இந்த படத்திற்கு விஜயின் கதாபாத்திரத்தின் பெயரையே தலைப்பாக வைக்க இருப்பதாகவும்  இந்த படத்தில் விஜயின் பெயர் ஜேம்ஸ் துரைராஜ் என்றும்  அதனால் படத்தின் தலைப்பு ஜேம்ஸ் துரைராஜ் என்பதை சுருக்கு ஜேடி என்று இருக்கும் என்று கூறுகிறார்கள். படத்தின் புரொமோஷனுக்கும் இந்த தலைப்பு வசதியாக இருக்கும்.என நம்பப்படுகிறது   இன்று  31.12.2019 மாலை தளபதி 64 பர்ஸ்ட் லுக் வெளியாகிறது. இதனுடன் இந்த படத்தின் தலைப்பு வெளியாகும்  என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

தர்பார் ப்ளைட் ரெடி

Image
பொங்கலுக்கு வெளியாகவுள்ள ரஜினியின் தர்பார் படத்துக்கு விமானங்களில் போஸ்டர் ஓட்டி விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. தர்பார் போஸ்டர்கள் ஒட்டிய விமானங்களின் புகைப்படங்கள் ட்விட்டரில் தற்போது டிரெண்டாகி வருகிறது. l

செல்போன்களில் மூழ்காமல் குடும்பத்துடன் உரையாடுங்கள்

Image
                   செல்போன்களுக்கு அடிமையானவர்களுக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவுரை                    உங்கள் செல்போன்களை தூர வைத்துவிட்டு குடும்பத்துடன் அமர்ந்து உரையாடுங்கள் என அவர் கூறினார். ஏசு கிறிஸ்து, மேரி, ஜோசப் ஆகியோரை மேற்கோள்காட்டி “அவர்கள் உரையாடினார்கள், உழைத்தார்கள், வழிபட்டார்கள்” அதையே நீங்களும் செய்யுங்கள் என போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.        இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “நாம் குறைந்தபட்சம் உணவு மேஜையில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் போதாவது செல்போன்களில் மூழ்காமல் குடும்பத்துடன் உரையாட வேண்டும். பெற்றோரே, குழந்தைகளே, சகோதர, சகோதரிகளே இந்த புனிதமான பணியை இன்றே நாம் தொடங்குவோம்” என்றார்.

சந்திரமுகி 2 விரைவில்

Image
 “சந்திரமுகி-2' படம் விரைவில் உருவாகும்” - பி.வாசு பேட்டி சந்திரமுகி-2 படம் விரைவில் உருவாக உள்ளதாகவும், பெரிய பட நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாகவும் பி.வாசு தெரிவித்துள்ளார்.

குடியுரிமை கோலமாக மாறிய மார்கழி

Image
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சென்னை ஓட்டேரியில் கோலம் போட்டு பெண்கள் நடத்திய போராட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார்.

புத்தாண்டு கொண்டாட்டம் சென்னையில் 75 மேம்பாலங்கள் மூடப்படும்

Image
2020 புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 38 பெரிய மேம்பாலங்கள் உள்பட 75 மேம்பாலங்கள் மூடப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி 2020-ஐ வரவேற்போம்

Image
பாட்டாளி_மக்கள்_கட்சி 2019-க்கு விடை கொடுப்போம்! 2020-ஐ வரவேற்போம் !! புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம்.

இது எப்படி இருக்கு

Image
 சூப்பர் ஸ்டாரின்  அசத்தல் தர்பார்  போஸ்டர்

முக்கிய செய்திகள்

Image
 ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து:* *வழிமறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வெற்றிகளைப் பெற்று, புதிய சாதனைகளைப் படைத்து, வளமான தமிழகத்தை படைத்திடுவோம் - முதலமைச்சர்.* .*********************************-  *குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார்.* *குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற பினராயி விஜயன் வலியுறுத்தல்.* ****------------------------*****-***-------  *ஆளுநர் தமிழக மக்களுக்கு வாழ்த்து.* *ஆங்கில புத்தாண்டையொட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக மக்களுக்கு வாழ்த்து.* +++//////////////+++++++++++++++++ *பனிமூட்டம் -  ரயில்கள் தாமதம்:* *டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடரும் பனிமூட்டம் காரணமாக 34-க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதம்.* **********************************--  *சென்னை : குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வேளச்சேரியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் கோலமிட்டு திருமாவளவன் எதிர்ப்பு.*

நாளை அதிகாலை 1 மணி வரை மெட்ரோரெயில்கள் இயக்கப்படும்

Image
           சென்னையில் புத்தாண்டு தினத்தை கொண்டாடடுவதற்காக மெரினா கடற்கரை, பெசண்ட் நகர் கடற்கரை, தனியார் நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.                 தற்போது மெட்ரோ நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இன்று 31,12,2019 இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பான் கார்டு மற்றும் ஆதார் எண் இணைப்பு

Image
                நாட்டில் தனி நபருக்கான நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டைக்கு ஆதார் கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்ட உத்தரவில் தெரிவித்திருந்தது.  இதன்படி, பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது.             இந்த இணைப்புக்கு கடைசி காலக்கெடுவாக முதலில் கடந்த மார்ச் 31ந்தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன் பின்பு, பல்வேறு காரணங்களால் .   2019 செப்டம்பர் 30ந்தேதிக்குள் பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது.மறுபடியும் 2019 டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.    மத்திய நிதி அமைச்சகம் இதனை  நீடித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  வருகிற 2020ம் ஆண்டு மார்ச் 31ந்தேதி வரை இந்த நீட்டிப்பு நடைமுறையில் இருக்கும்.  வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும் என்றால் பான் கார்டு மற்றும் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக உள்ளது.

ஜனவரி 4ம் தேதி பள்ளிகள் திறப்பு

Image
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை  டிசம்பர் 24 - ஆம் தேதி விடப்பட்டது. ஜனவரி 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் கூறப்பட்டிருந்த நிலையில்,  பள்ளி திறக்கும் தேதியில் பள்ளி கல்வித்துறை மாற்றம் செய்தது.   உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக 3 ஆம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகள் ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை 2-ஆம் தேதி நள்ளிரவையும் தாண்டலாம் என்பதால் கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

முத்தங்களின் கடவுள்  

Image
பேசும் புத்தகம்    முத்தங்களின் கடவுள்    (புத்தகவிமர்சனம்)   இன்றைய  பேசும் புத்தகமாக   முத்தங்களின் கடவுள்  இதை  எழுதினவங்க  ஜெயபாரதி என்கிற மனுஷி இது ஒரு கவிதை தொகுப்பு இந்த  தொகுப்பில் 75 கவிதைகள்    இதில் 90 சதவிகித கவிதைகள் காதலை பற்றிதான் புத்தகத்தின் விலை ரூபாய் 100 பக்கங்கள் 96  வெளியீடு ஸ்வாஸ் பப்ளிகேஷன்ஸ்,சைதாப்பேட்டை, சென்னை-,600015  கவிதைகள் செய்தி சொல்லனும் என்ற தேவை இல்லை  கவிஞனின் மன உணர்ச்சிப் பிரவாககங்களே கவிதை அதனை வெளிப்படுத்தும் கவிஞர் நம்மை ஈர்க்கிறார். கவிதை  நம்மை தொடணும்.  .அதுல  மனுஷி ஜெயிச்சிட்டாங்க. அவருடன் நம்மை பயணிக்கவைத்து நாம் அந்தக் கவிதையை கவிதையாகவே பயணிக்காமல் நாம் அந்த கவிஞரின் உணர்வுகளுடன் ஒன்றிப்போய்விடுகிறோம்.  இங்கே எல்லா கவிதைகளிலும்  ஒரு கேள்வி  இருக்கிறது.   மேற்கோண்டு புத்தகத்துடன் பேசுவதற்கு முன் பாரதி பற்றி அதான் ஜெயபாரதி என்கிற மனுஷி பற்றி இவர் 2008 லிருந்து கவிதைகள் எழுதி வருகிறார்..  முதல் கவிதைத் தொகுப்பு குட்டி இளவரசி 2013ம் ஆண்டு வெளியானது..  இந்த  முத்தங்களின் கடவுள் கவிதை தொகுப்பு 2014ம் ஆண்டு வெளியானது. பல விருதுகளைப் பெற்றிருக்

சீப் ஆப் டிபென்ஸ் ஜெனரல் பிபின் ராவத்

Image
சீப் ஆப் டிபென்ஸ் - ஜெனரல் பிபின் ராவத் - 4 ஸ்டார்.......       இந்தியாவின் முக்கிய படைகளான - ராணுவம் - கடற்படை மற்றும் ஏர் போர்ஸ் - இவை அனைத்துக்குமான தளபதிகள் இது வரை தனி தனி யாக இருந்த ஒன்றை ஒற்றை தலைமைக்குள் கொண்டு வந்தது இந்திய பாதுகாப்பு துறை.        இது என்ன கலாட்டானு கேக்குறவன்ங்களுக்கு - சுதந்திரத்திற்கு பின் இதே மாதிரி ஒற்றை தளபதிக்கு கீழ் தான் மூன்று தளபதி இருந்தனர் - அனால் அப்போதைய பிரதமர் நேரு - இதை மாற்றி தனி தனி படை தளபதிகள் பதவியை அறிமுகப்படுத்தியது இந்திய அரசு. .           இப்போது சுப்ரமணியன் கமிட்டி ஒற்றை தலைமை தான் சிறந்தது - ஒரே கமெண்டில் மூன்று டிவிஷனும் வேலை செய்ய ஏதுவாக இருக்கும் என்பதை கார்கில் போர் நடந்ததில் இருந்து இதை பரிசீலிக்கப்பட்டது. இந்த புது முறைக்கு தேர்வான ஆர்மி தளபதி - பிபின் ராவத் - நாலு நட்சித்திர அந்தஸ்து பெறுகிறார். இதன் மூலம் இந்தியப்படை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பல நாடுகளை போல் சர்வதேச அரங்கில் பல நாடுகளில் ஜொலிக்கும் இந்திய பாதுகாப்பு துறை.  news courtesy thanks to -      Ravi Nag

மீண்டும் சித்தி

Image
சித்தி 2 ராதிகா   சின்னத்திரையில் ராதிகாவு க்கு நிலையில் மீண்டும் சித்தியாக  ரீ என்ட்ரி ஆகிறார். சன் டிவியும் ஏற்றுக்கொண்டு அவரை வரவேற்று இருக்கிறது. சித்தியை ரசித்தது அந்த காலமக்கள். இப்போது சின்னத்திரை பாதை வேறு மார்க்கம். ராதிகா ஜெயிப்பாரா என்பது போக போக தான் தெரியும்.  இப்போ எல்லோரும் வெப் சீரிஸ்க்கு போகிற போது சித்தி 2 ரசிக்க முடியுமா தெரியல.

புத்தாண்டு பாதுகாப்பு

Image
*சென்னையில் புத்தாண்டு தினத்தன்று 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் - சென்னை பெருநகர் காவல்துறை.* *31ஆம் தேதி இரவு 9 மணி முதல் மயிலாப்பூர், அண்ணாநகர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் சுமார் 368 வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்படும் - காவல்துறை.* *மெரினா,காமராஜர் சாலையில் உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்பட்டு ட்ரோன்மூலம் கண்காணிப்பு.*

சென்னை 10ரூபா

Image
▪️ஜனவரி 1ஆம் தேதி அன்று ரூ.10 கட்டணத்தில் சென்னையை சுற்றிப் பார்க்கலாம்* *▪️தீவுத்திடல், மெரினா, பெசன்ட் நகர் தேவாலயம், அஷ்டலட்சுமி கோயில், கிண்டி பூங்கா, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளை பார்க்கலாம்* - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்.*

கடற்கரையில் டோனால்

Image
மும்பை சீரியல் நடிகையான டொனால்  உத்ரகாண்ட் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். டோனல் பிஷ்த் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட்டார் அதன் பின்னர்   செய்தி சேனல் ஒன்றில் பத்திரிக்கையாளராக பணிபுரிந்து வந்தார். இதனை தொடர்ந்து தூர்தர்ஷனில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.  சீரியல்கள் மூலம் பிரபலம் 2015ஆம் ஆண்டு முதல் நடிப்புத்துறைக்கு அறிமுகமா கி . லைப் ஓகே, சோனி டிவி, கலர்ஸ் டிவி, ஸ்டார் பிளஸ் ஆகிய தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பான முக்கிய சீரியல்களில் நடித்து பிரபலமானார். இதன்மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார் டோனல்.  ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள, டோனல் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களை போட்டு மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார்.

ரெட் அலெர்ட்டி ல் டெல்லி

Image
*வரலாறு காணாத குளிரால் டெல்லிக்கு 'ரெட் அலர்ட்'!* டெல்லியில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் மிக குறைவான குளிர் பதிவாகியுள்ளது. இந்நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலையில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் அடர் மூடுபனி தொடரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காற்றுமாசுக்கு அடுத்த பிரச்னையாக டெல்லி மக்கள் தற்போது குளிரால் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு குளிர் நிலவும் சூழலில் உஷாராக இருக்க பொது மக்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு பனியின் தாக்கம் கடுமையாக உள்ளது. இல்லத்தரசிகளுக்கு கடும் குளிர் சவாலாகவே உள்ளது. உணவு பழக்க வழக்கங்களை முற்றிலுமாக மாற்றிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும் உணவு பழக்கத்துக்கு அவர்கள் மாறியுள்ளனர். குளிர் காரணமாக சாலையோரம் வசிப்போருக்கு டெல்லி அரசு சார்பில், தற்காலிக முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்ட

வைகுண்டஏகாதசிக்கு சிறப்பு பேருந்துகள்

Image
*திருப்பதியில் இருந்து திருமலைக்கு 416 பஸ்கள் இயக்கப்படுகிறது* திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 6-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா, 7-ந் தேதி துவாதசி விழா நடக்கிறது. அதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருமலைக்கும், திருப்பதிக்கும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருமலைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது குறித்து ஆந்திர மாநில போக்குவரத்துக்கழக திருப்பதி மண்டல அதிகாரி செங்கல்ரெட்டி கூறியதாவது:- வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருப்பதியில் இருந்து திருமலைக்கு 2 நிமிடத்துக்கு 1 பஸ் வீதம் மொத்தம் 416 பஸ்கள் 4,402 டிரிப் இயக்கப்பட உள்ளது. அதன் மூலம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு மொத்தம் 3 லட்சம் பக்தர்களை கொண்டு சென்று சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி மலைப்பாதைகளில் பஸ்களை ஓட்ட திறமையான, பயிற்சி பெற்ற 1,200 சிறப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 6, 7-ந் தேதி ஆகிய 2 நாட்கள் பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு விடுமுறை அளிக்கப்படமாட்டாது என அவர்களுக்கு முன் கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதிய

ஜனவரி 5ம் தேதி முதல் பொங்கல் பரிசு

Image
*பொங்கல் பரிசு தொகுப்பு 5-ந் தேதி முதல் வழங்கப்படும் - தமிழக அரசு ஏற்பாடு* சென்னை, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி முதல் வாரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் போன்றவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு இந்த பரிசு தொகுப்புடன் சேர்த்து ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் 29-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இருந்தபோதிலும், உள்ளாட்சி தேர்தல் காரணமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை. இந்தநிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந் தேதி நடக்கிறது. தேர்தல் நடவடிக்கைகள் 4-ந் தேதி முடிவு பெறுகிறது. இதனால், ஜனவரி 5-ந் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் ஆகியவற்றை வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதாவது, தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அதற்கு

இது அனன்யா பக்கம்

Image
இது அனன்யா பக்கம்   சிரிக்க சிரிக்க மட்டும்,,,,  பகுதி  (1 )       தட் யூஷுவல் பிருஹஸ்பதி நம்பாத்துக்குள்ளே நுழைஞ்சதும் மீ: ”என்ன சாப்பிடறே?” ஹீ: ”எனக்கு எதுவும் வேண்டாம். சுத்தமா வயித்துல இடமே இல்லை! ஒண்ணும் குடுக்காதே” மீ:”சரி” கொஞ்ச நேரத்தில்....   ஹீ: ”ப்ளாக் டீ இருக்கா?” மீ:”ப்ளாக் காஃபி தர்றேனே, டிகாக்ஷன் இருக்கு. ஈஸி” ஹீ: ”சரி எதாவது ஒண்ணு” ஹீ: ”ஆமா, அந்த டப்பாவுக்குள்ளே ஸ்னாக்ஸ் இருக்கா?” மீ:”இருக்கே, நவதான்ய மிக்சர் . சாப்பிடறியா?” ஹீ: ”தா தா.. ” மீ:”இந்தா நீ வாங்கிண்டு வந்த போளி” ஹீ: ”அது வேண்டாம். அந்த முந்திரி பக்கோடா எடு” (அதுவும் ஆச்சு) ஹீ: ”குடிக்க தண்ணி தா.இல்லே, எலுமிச்சம் பழ ஜூஸே போட்ரு. எலுமிச்சம் பழம் இருக்கா?” மீ:”ம்ம்” (ஜூஸ் கலந்தாச்சு - குடிச்சும் ஆச்சு) ஹீ: ”அந்த டப்பால என்ன அப்பளமா? எடு” மீ: ”இந்தா” ஹீ: ”எனக்கு ப்ளாக் டீ தான் வேணும்” ஹீ: ”நீ என்ன பண்ணு, தினோம் நாலு ஐஞ்சு உலர் திராட்சையை தண்ணியில கொதிக்க வைச்சு ஆற விட்டு அந்த தண்ணியை குடி. அரை மணி எதும் சாப்பிடாதே” மீ:”ஏன்?” ஹீ: ”லிவருக்கு ரொம்ப நல்லது, மீ: (திஸ் பேப்பர் ரோஸ்ட்?) ஹீ: ”நச்சுப்பொருள் எல்லாம் போய்ட