Posts

Showing posts from November, 2020

மருதாணி சிவப்பு..

Image
  #வாழ்தல்_இனிது  தொடர்    -சங்கீதா ராமசாமி. மருதாணி சிவப்பு. . எனக்கெல்லாம் திருவிழா, நாளு, கெழமைல கிடைக்கிற உற்சாகத்துக்கு கொஞ்சமும் குறைஞ்சதில்லை மருதாணி அரைக்கிற வைபவம்.  விரல்களில் ஆங்கங்கே மூடி போட்ட வாக்கில் அடர்த்தியாக வெச்சும், நடுவில் அழகான ஒரு பெரிய வட்டமாக வைக்கிறது மட்டுமே எனக்கான நிரந்தர வடிவமாக நான் நினைச்சிருந்தேன். ஆனா இதுதான் மருதாணி விரும்பிகளின் வடிவம்னு பிறகுதான் தெரிஞ்சது. நடுவே சில பல குட்டி வட்டங்களும் விரும்பியபடி இட்டுக்கலாம். குறிப்பிட்ட நாளுக்கு முன்கூட்டியே பச்சை மருதாணி பறிக்கிற வைபவம் தொடங்கிடும் வீட்டுல.  நல்ல முத்தின இலைகளை முள் குத்தாமல், காம்பு கையோட வராமல் பறிக்கணும். ஒரே அடுக்கில் துளிர்த்து வரும் இலைகளை அழகாக, நாசூக்காக உருவி எடுக்கணும். இல்லன்னா பூக்களோ, காய்களோ இடைப்பட்டு காரியத்தை தாமதப்படுத்தும்.  அதோட மருதாணி பூக்கள் வேறு கொத்து கொத்தாக பூத்து அவ்விடத்தில் வாசனையை பரப்பும். அது இன்னும் கிறக்கத்தை உண்டு பண்ணி இலைகளையும் பறிக்கவிடாமல் அலைகழிப்பதாக எனக்கு தோணும். எதிர்படும் மருதாணி பூக்களை பறிச்சி தலையில் வெச்சிக்கிட்டா தூக்கம் நிறைவாக வரும்.  இப

இன்று குருநானக் ஜெயந்தி

Image
  இன்று குருநானக் ஜெயந்தி ..! 8 சீக்கியர்களின் முக்கியப் பண்டிகையான குருநானக் ஜெயந்தி இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . ·           இந்தியாவின் முக்கிய மதங்களில் ஒன்றான சீக்கியத்தை தோற்றுவித்தவரான குருநானக்கின் பிறந்தநாள் ” குருநானக் குருபுரப் ” அல்லது ” குருநானக் ஜெயந்தி ” என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது . ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் பெளர்ணமி நாளன்று குருநானக் அவர்களின் பிறந்த நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது . அதன்படி இந்த ஆண்டிற்கான குரு நானக் ஜெயந்தி இன்று 30.11.2020 கடைபிடிக்கப்படுகிறது . சீக்கிய மதத்தை தோற்றுவித்ததாக கருதப்படும் சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் , தற்போதைய பாகிஸ்தானில் உள்ள ஷேக்புரா மாவட்டத்தில் 1469- ஆம் ஆண்டு ஏப்ரல் 15- ஆம் நாள் பிறந்தார் . ஏப்ரல் மாதத்தில் பிறந்திருந்தாலும் , ஒவ்வொரு ஆண்டின் கார்த்திகை மாத பெளர்ணமி தினம் குருநானக் ஜெயந்தியாக கடைபிடிக்கப்படுகிறது . குருநானக் ஜெயந்திக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே சீக்கிய

போராட்ட களத்தில் இறை வழிபாட்டில் ஈடுபட்ட விவசாயிகள்

Image
  டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குரு நானக் ஜெயந்தியையொட்டி அமைதியுடன் இறை வழிபாட்டில் ஈடுபட்டனர். , மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற கோரியும் அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி சலோ பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். இதற்காக, லாரிகளிலும், டிராக்டர்களிலும் படையெடுத்த விவசாயிகள், உணவு பொருட்களை உடன் எடுத்து சென்று, அவர்களே சமைத்து உண்டு, இரவில் கடும் குளிரில் படுத்து உறங்கி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி டெல்லி வடக்கு பகுதிக்கான போலீஸ் இணை ஆணையாளர் சுரேந்திரா கூறும்பொழுது, அவர்கள் அமைதியுடனும், கட்டுப்பாட்டுடனும் உள்ளனர்.  விவசாயிகளுடன் நாங்கள் தொடர்பில் இருந்து வருகிறோம்.  எங்களுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு பேணப்பட வேண்டும்.  அதற்காக போதிய படைகளை குவித்து உள்ளோம் என கூறினார். இந்த நிலையில் சீக்கியர்களின் மத குருவான குருநானக்கின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சிங்கு எல்லை பகுதியில், நின்றபடி தங்களது இறை வணக்கத்தினை செலுத்தி கொண்டனர்.  இதே

ரசிகர்களிடம் ஆலோசனை கேட்பதும், கூறுவதும் ரஜினியின் வழக்கம் தான்

Image
  ரசிகர்களிடம் ஆலோசனை கேட்பதும், கூறுவதும் ரஜினியின் வழக்கம் தான் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது:- கொரோனா அச்சத்தால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்னும் முழுமையாக தளர்த்தப்படவில்லை,அரசியல் கூட்டங்களுக்கு இன்னும் இந்தியா முழுவதும் தடை உள்ளது, அப்படித் தடை உள்ள நிலையில் திமுக பிரச்சாரத்தை தொடங்கி இருப்பது அரசியல் ஆதாயத்திற்காக தான், கொரோனா காலத்திலும் வீட்டிற்குள் முடங்கிவிடாமல் மாவட்டம் மாவட்டமாக சென்று ஆய்வு கூட்டங்கள் நடத்தியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அப்போது வீட்டிலேயே முடங்கி இருந்துவிட்டு தற்போது திமுகவினர் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருவது அரசியல் ஆதாயத்திற்காவே. அது மக்கள் மத்தியில் எடுபடாது,தேர்தலை எப்போது எப்படி சந்திப்பது என்பதுஎங்களுக்கு தெரியும். திரையரங்குகள் திறக்கப்படாத நேரத்தில் சூரரை போற்று போன்ற படங்கள் ஒடிடியில் திரையிடப்பட்டது. தற்போது திரையரங்குகள் எல்லாம் திறக்கப்பட்டுவிட்டன. புதிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகிறது. நடிகர் விஜய்யின் நடித்துள்ள மாஸ்டர் படத்தை தயாரித்த தயாரிப்பு நிற

வாணிஜெயராம்

Image
  வாணிஜெயராம் பிறந்த நாள் நவம்பர் 30. தமிழகத்தின் வேலூர் நகரில் பிறந்த தமிழ்ப் பெண்ணான இவரது இயற்பெயர் 'கலைவாணி'. தன் கணவர் பெயருடன் சேர்த்து வாணிஜெயராமாக உருவெடுத்த வாணிஜெயராம் முதலில் கலக்கியது மராத்தி மொழியில். மராத்தியில் இவர் பாடிய பாடல் பல விருதுகளை இவர் குரலுக்கு பரிசாக கொடுத்தது.பின்னர் வட நாட்டில் மராத்தி உட்பட குஜராத்தி,மர்வாரி,போஜ்புரி என அணைத்து மொழிகளிலும் தென் நாட்டில் தமிழ் ,மலையாளம் ,கன்னடம் தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பாடிய தமிழ் பாடகி என்ற் அந்தஸ்தை பெற்றார். மற்றும் நாட்டின் பிரபலமான இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி இந்தியாவின் அணைத்து தரப்பு ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடத்தை பெற்றிருக்கிறார். வாணிஜெயராம் அவர்கள் இசை கற்றது, பாடத் தொடங்கியது எல்லாமே வட நாட்டில்தான். எடுத்த எடுப்பிலேயே அவரது இந்திப் பாடல் பிரமாத வெற்றி பெற்றுவிட்டதாகவும் . அதன் வெற்றியைக் கண்டு சில இந்திக்காரர்களுக்குப் பொறாமைகூட வந்ததாகவும். வாணிஜெயராமை வைத்து எந்த இசையமைப்பாளர் பாட்டு எடுக்கிறாரோ, அவருடைய இசையமைப்பில் தான் பாடுவதில்லை என்று பிரபல இந்திப் பாடகி ஒருவர் ஸ்டிரைக் செய்ததா

சர் ஜகதீஷ் சந்திர போஸ்

Image
  ச ர்   ஜகதீஷ் சந்திர போஸ்   தாவரங்களுக்கும்   உயிர்   உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய   இந்திய   அறிவியலாளர் .   வானொலி   அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என   ஐஇஇஇ   அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது போஸ் என்ற பெயரால் நன்கு அறிமுகமான அவர் 1858 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் நாள் இன்றைய பங்களாதேஷில் ,  டாக்கா   நகருக்கு அருகில் ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார் . போஸ் தமது துவக்கக் கல்வியைத் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியில் பெற்றார் . பின்னர் தமது கல்வியைக்   கொல்கத்தா ,  கேம்பிரிட்ஜ ,  லண்டன்   ஆகிய இடங்களில் தொடர்ந்தார் . 1885 இல்   கொல்கத்தா மாநிலக்கல்லூரியில்   இயற்பியல் துறையில் துணைப் பேராசிரியராகச் சேர்ந்தார் ; தமது பெரும்பாலான கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வுகளை , போஸ் இக்கல்லூரியில் தான் மேற்கொண்டார் . இவரது மனைவி பிரபல சமூக சேவகி   அபலா போஸ் போஸ் தமது 19 ஆவது வயதிலேயே பட்டப் படிப்பை முடித்துவிட்டார் ; பின்னர்   கேம்பிரிட்ஜ்   சென்று அங்கு தமது கல்வியை 1884