Posts

Showing posts from July, 2020

சா. கந்தசாமி

Image
    சா . கந்தசாமி  சாகித்திய அகாதமி விருது பெற்ற ஒரு  தமிழக  எழுத்தாளர், நாவலாசிரியர் ஆவார். நாகப்பட்டினம் மாவட்டம்   மயிலாடுதுறையில்  1940 ல் பிறந்த இவர்  1968ல்  எழுதிய  சாயாவனம்   புதினம்  பிரசுரமானதிலிருந்து எழுத்துலகில் பிரபலமானார். இப் புதினத்தைத்  தேசிய புத்தக அறக்கட்டளை  நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது.  சவகர்லால் நேரு ,  பெரியார் ,  உ. வே. சாமிநாதையர்  மற்றும்  வெ. சாமிநாத சர்மா  போன்றோரின் படைப்புகளை கந்தசாமி இலக்கிய வாழ்க்கைக்கான தளமாக அமைத்தார்."இதன் மூலம் எனக்கு கிடைத்த கல்வி உதவித் தொகை எனக்கு வலிமை, நம்பிக்கை மற்றும் தன்மை ஆகியவற்றைக் கொடுத்துள்ளது, இது எனது படைப்புகளை நுட்பமாக பாதித்திருக்கிறது," என்று அவர் கூறுகிறார். []  அவர் மேலும் , "எழுத்துக்கலை கலை அலங்காரமாக இருக்காது என்று நான் நம்புகிறேன். சிறந்த இலக்கியம், நேரம், கலாச்சாரம், மொழி மற்றும் அரசியல் சித்தாந்தத்தின் தடைகள் ஆகியவற்றை கடந்து செல்லும் ஒன்றாகும். இது ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது பாலினத்துடன் தொடர்புடையது அல்ல. மிக முக்கியமாக, உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் ஒரு வாச

இல்லம் தேடி வரும் மகாலட்சுமி..

Image
வரலட்சுமி விரதம் 2020:   இல்லம் தேடி வரும் மகாலட்சுமி..   . பூஜை செய்து நோன்பு கயிறு கட்ட நல்ல நேரம் கோவில்களில் போய் பண்டிகைகளைக் கொண்டாடுவோம்.   சில பண்டிகைகளையும், விரதங்களையும் மட்டும் வீட்டிலேயே கொண்டாடுவோம். அப்படி பெண்களால் வீட்டிலேயே கொண்டாடப்படும் பண்டிகைதான் வரலட்சுமி விரதம். நாளை வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. பெண்கள் வீட்டினை அலங்கரித்து மகாலட்சுமியை நினைத்து விரதம் இருந்து கணவனின் ஆயுள் பலம் அதிகரிக்க நோன்புக்கயிறு கட்டி வணங்குவார்கள். இந்த விரதம் இருக்கும் திருமணம் ஆகாத கன்னிப்பெண்களுக்கு கல்யாண வரம் கிடைக்கும்   . மனதிற்கு பிடித்த கணவன் அமைவார். அதே போல திருமணம் ஆன பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும். மாங்கல்ய தோஷங்களும் நீங்கும். ஆண்டு தோறும் ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையில் இந்த வரலக்ஷ்மி பூஜையானது வரும். சில வருடங்களில் ஆடி மாதத்தில் அமையும். இந்த மாதம் ஆடி 16ஆம் தேதி ஜூலை 31ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. நாளைய தினம் லட்சுமி பூஜை, துளசி பூஜை செய்யவும் ஏற்ற நாள். வரலட்சுமி நோன்பு நாளில் வீடுகளில் சும

ஆத்தி சூடி          (வூ) (ஊ)               * ஊருடன் கூடி வாழ்               *          ஒருவிகற்ப            இன்னிசை           வெண்பா               *

Image
ஆத்தி சூடி          (வூ) (ஊ)               * ஊருடன் கூடி வாழ்               *          ஒருவிகற்ப            இன்னிசை           வெண்பா               * ஒலி ஒளி உணர ஊருடன்     கூடி       உவந்துமே         வாழ்வதால்  சீருடன்  (பெருமை)     சேரச்       சிறப்புமே         கூடிடும்  ஊருணி     நீராய்       உலகமே         போற்றிட  பாருடன்    சேராய்      பணிந்து.              * வணக்கத்துடன்🙏 ச.பொன்மணி

Pre-Bridal Skin care

Image
Beaulah Ronaldson;s page today       Pre-Bridal Skin care / Pre -Bridal Skin Care at Home il /Bridal Skin care     /Beaulah Ronaldson . in this video  talking about Pre-Bridal Skin Care Routine . 1. Cleansing 2. Toning 3. Moisturizing 4.Lip care   by  

படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருக்கும் புத்தம்புது பூமி

Image
படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருக்கும் புத்தம்புது பூமி   படிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருக்கும், புத்தம்புது பூமியை உருவாக்கும் வகையில், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள, 10 + 2 என்ற பள்ளிக் கல்வி, 5 + 3 + 3 + 4 என மாற்றப்படுகிறது. மாணவர்கள், ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியிலேயே பாடங்களை படிக்கலாம்; 'குரூப்'கள் தொல்லை ஒழிக்கப்பட்டு, அனைவரும் அனைத்தையும் கற்க வாய்ப்பு அளிக்கப்படும். பட்டம் வேண்டுமா என்பதை, மாணவர்களே முடியும் செய்யும் வகையில், எந்த ஆண்டிலும் வெளியேறும் வசதி அளிக்கப்படுகிறது. எம்.பில்., ஆராய்ச்சிப் படிப்பு நிறுத்தப்படுகிறது. தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள கல்விக் கொள்கை, 1986ல் அமல்படுத்தப்பட்டது. கடந்த, 1992ல் அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. கடந்த, 34 ஆண்டுகளாக உள்ள இந்தக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப, புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின்போதே, 'புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்வோம்' என, பா.ஜ., தன் தேர்தல் அறிக்கையில் கூறியிர

நாடு முழுவதும் அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு ரத்து

Image
நாடு முழுவதும் அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு ரத்து பொது ஊரடங்கில் இருந்து 3-ம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது        மத்திய அரசு     புதுடெல்லி: கொரோனா பொது ஊரடங்கில் இருந்து நாடு முழுவதும் 3-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 3-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் கொரோனா பொதுமுடக்கத்தின் 3ஆம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வரும் என்றும் கொரோனா பாதிப்பு சூழலை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் முடிவு எடுத்துக்கொள்ளலாம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. பொது ஊரடங்கில் இருந்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தளர்வுகள்: * நாடு முழுவதும் இரவில் தனிமனித நாடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முற்றிலுமாக திரும்பப் பெறப்பட்டது * பள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் 

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Image
  தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட 6வது கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் இருந்தபடி  வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து முதல்வர் எடப்பாடி, இன்று காலை 10 மணிக்கு 19 பேர் அடங்கிய மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தலைமை செயலகத்தில் வைத்து ஆலோசனை நடத்துகிறார். இதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ்,  தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 12  ஒருங்கிணைப்புக் குழுக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், பல்வேறு தினங்களில் மாவட்டஆட்சியர்களின் காணொலிக் கூட்

எலிக்காது இலையின் மருத்துவ பயன்கள்

Image
    டாக்டர் ரேவதி அவர்களின் இயற்கை வைத்தியம்     Health Benefits of Elikaadhu ilai or Merremia emarginata or Kidney bean morning glory எலிக்காது இலையின் மருத்துவ பயன்கள் To read about this herb in English, click this link: https://drsrevathi.blogspot.com/2020/... #HealthBenefits #Elikaadhu #KidneyLeaf #எலிக்காது           Dr.S.Revathi's Vlog     ... #HealthBenefits #Elikaadhu #KidneyLeaf #எலிக்காது     by Dr.S.Revathi's Vlog  

ஆத்தி சூடி          (வு)  (உ)               ***   உத்தமனாய் இரு               ***          ஒருவிகற்ப           இன்னிசை             வெண்பா

Image
ஆத்தி சூடி          (வு)  (உ)               ***   உத்தமனாய் இரு               ***          ஒருவிகற்ப           இன்னிசை             வெண்பா                ***ஒலி ஒளி உணர  உத்தமன்     என்னும்       ஒழுக்கம்          உலகினில்    நித்தமும்     உந்தன்       நிலையை         உயர்த்திடும்    தத்துவம்    சொல்லும்      தகைமை        இதுபெரும்    சத்திய     வாக்காம்       சகத்து.             *** வணக்கத்துடன்

lnduction and Installation of  newly formed  Office bearers of Aram Seiyya Virumbu Lions Club of Chennai

Image
  Aram Seiyya Virumbu Lions Club of Chennai-Region -4 Zone3 ,Dist 324-A1 had  convened its second year inaugural meeting on 22.07.2020 At  League Club, MMDA,Chennai The meeting had the function of lnduction and Installation of  newly formed  Office bearers For the  lionistic year 2020-2021 Induction and installation had been conducted by PMJF Lion S.V.Manickam ,First Vice Dist.Governor. Felicitation given to  Ln.Santha Lakshmi ,Region Chair Person . Ln.A.Saravana Kumaran ,Zone Chair Person The details of newly formed Office bearers are : Ln.Rajesh Sanker.V.G   :  President Ln.Dinesh                        .L.Secretary Ln. Ganesh Kumar. S    :  Ln.Treasurer Other Office Bearers for the Lionistic Year.2020-2021 First Vice –President            : Ln.Siva.G Second Vice President        : Ln Dhanabala Krishnan.A Imm.Past President            : Ln Saravana Kumaran.A LCIF Coordinator                : Ln Saravana Kumaran.A Club Service Chair Person : Ln Balachander.S Membership Chair Person :

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி

Image
மறைந்த முன்னாள் ஜெயலலிதா வீட்டில் 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி   29 -  07  - 2020      சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் வாழ்ந்த  ‛ வேதா நிலையம் '  வீடு அரசுடைமை ஆக்கப்பட்டது குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டது. அதில் ஜெ. ,  வீட்டில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் பட்டியலிடப்பட்டுள்ளன. சென்னை ,  போயஸ் தோட்டத்தில் ,  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த , ' வேதா நிலையம் '  வீடு ,  அரசுடைமை ஆக்கப்பட்டது. அதற்கான தொகை , 68  கோடி ரூபாயை ,  நீதிமன்றத்தில் செலுத்தி ,  ஜெ. ,  வீட்டை தமிழக அரசு மீட்டெடுத்தது. இந்நிலையில் ,  வேதா நிலையம் வீட்டை அரசுடைமை ஆக்கப்பட்டதை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது. இந்த அரசிதழில் வீட்டில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் மொத்தம்  32,721  பொருட்கள் வீட்டில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.   * 4  கிலோ  372  கிராம் தங்கம் பொருட்கள் -  14 * 601  கிலோ  424  கிராம் வெள்ளிப் பொருட்கள் -  867 *  டிவிகள் -  11 *  பிரிட்ஜ்கள் -  10 *  ஏசி. , கள் -  38 *  பர்னிச்சர் பொருட்கள் -  556 *  துணிகள் ,  துண்டுகள் ,  போர்வைகள் , 

உங்களை இளமையாக காட்டும் புருவங்கள்

Image
உங்களை இளமையாக காட்டும் புருவங்கள் வேண்டுமா? 29.07. 2020   இளமையாக காட்டும் புருவங்கள் புருவங்களை இப்போது அகலமாக வைத்துக் கொள்வதே ஃபேஷன். அதுதான் இளமையாக காண்பிக்கும். புருவம் எளிதில் அடர்த்தியாக வளர சில எளிய வழிமுறைகள். அழகான புருவங்கள் ஒருவரது முகத்தை உயர்த்திக் காட்டும். புருவங்களை இப்போது அகலமாக வைத்துக் கொள்வதே ஃபேஷன். அதுதான் இளமையாக காண்பிக்கும். புருவத்தை எளிதில் அடர்த்தியாக வளர சில எளிய வழிமுறைகள். கற்றாழை : சருமத்திற்கும், கூந்தலுக்கும் என்ன பயன்படுத்துவது என்றால் முதலில் வரும் பொருள் கற்றாழைதான். எல்லோருக்கும் தெரிந்த பொருள்தான். ஆனால், எளிதில் கிடைப்பதால் பயன்படுத்துவதில்லை.. இதில், அலோனின் என்ற சத்து புருவம் வளர உதவும். முடி உடையாமல் இருக்க, கெரட்டின் போன்ற சத்து இதில் இருக்கிறது. சிறிது கற்றாழையை எடுத்து, மேல் தோலை சீவி விட்டு, உள்ளே இருக்கும் ஜெல் மட்டும் புருவத்தில் தடவினால் போதும். வேறு எந்தப் பொருளையும்விட இது எளிமையானது, நல்ல வளர்ச்சியை கொடுக்கக்கூடியது. வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அதை ஒரு பேஸ்ட் போல அரைத்து புருவங்களில் தடவி. அரை மணி நேரம் கழித்து கழு

தொப்புள் கொடி மூலம் கர்ப்பப்பையில் இருந்த குழந்தைக்கு பரவிய கொரோனா

Image
தொப்புள் கொடி மூலம் கர்ப்பப்பையில் இருந்த குழந்தைக்கு பரவிய கொரோனா  ஜூலை 28, 2020  புனே: நாட்டில் முதல்முறையாக, புனே மருத்துவமனையில், தாயின் கருவில் இருந்த குழந்தைக்கு, தொப்புள் கொடி மூலம் கொரோனா தொற்று பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புனே சாசூன் பொது மருத்துவமனையில், கொரோனா அறிகுறிகள் தென்படாத தாயிடமிருந்து, தொப்புள் கொடி வழியாக, கர்ப்பப்பையில் உள்ள குழந்தைக்கு பிரசவத்திற்கு முன்பே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். கர்ப்பிணிக்கு நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா முடிவுகள் 'நெகடிவ்' என வந்த நிலையில், குழந்தை பிறந்த பின், பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.     பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி, சளி ஆகியவற்றை சோதனை செய்ததில், குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு வாரங்களில் குழந்தை குணமானதையடுத்து, தாயும், சேயும் டிஸ்சார்ஜ் செய்ப்பட்டனர். இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

குற்றவாளி மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை

Image
ரூ.4,500 கோடி கையாடல் செய்த விவகாரம் : குற்றவாளி மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு!!   கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊழல், மோசடி உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளின் கீழ் நஜீப் ரசாக்கிற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய முன்னணி கூட்டணி கட்சியை சேர்ந்தவரான நஜீப் ரசாக், தாம் பிரதமராக இருந்த போது 2015ம் ஆண்டு அந்நாட்டின் அரசு முதலீட்டு நிதியுமான 1 எம்.டி.பி. நிறுவனத்தில் 4,500 கோடி ரூபாய் கையாடல் செய்தார் என்பது குற்றச்சாட்டாகும். இந்த புகார் மலேசியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பெரும் போராட்டங்களுக்கும் வித்திட்டது. இதையடுத்து அவருக்கு சொந்தமான சொத்துக்கள் மீது மலேசிய ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனைகளின் போது 273 மில்லியன் டாலர் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப் பட்டிருந்தன. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் அவருடைய 408 வங்கி கணக்குகளையும் முடக்கி வைத்திருந்தனர். அரசாங்க நிதியிலிருந்து தொகையை நஜீப்பும் அவருக்கு நெருக்கமானவர்களும் சொந்த

4 மாதங்களில் பி.எப்., பணம் ரூ.30 ஆயிரம் கோடி காலி

Image
4 மாதங்களில் பி.எப்., பணம் ரூ.30 ஆயிரம் கோடி காலி   புதுடில்லி: ஊரடங்கினால் வேலையிழப்பு, சம்பள குறைப்பு போன்றவற்றால் ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் ரூ.30 ஆயிரம் கோடியை பி.எப்., கணக்கிலிருந்து மக்கள் வெளியே எடுத்துள்ளனர். வருங்கால வைப்பு நிதி நிறுவனம் 6 கோடி சம்பளதாரர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்களிடமிருந்து கட்டாய பங்களிப்பின் மூலம் பெறப்பட்ட ரூ.10 லட்சம் கோடி நிதியை நிர்வகிக்கிறது. தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கொரோனா சூழலால் பி.எப்., கணக்கிலிருந்து எளிதில் பணம் எடுக்கும் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.   இந்த நிலையில் ஏப்ரல் தொடங்கி ஜூலை மூன்றாம் வாரம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் 80 லட்சம் சந்தாதாரர்கள் ரூ.30 ஆயிரம் கோடி பணத்தை வெளியே எடுத்துள்ளனர். மிகப்பெரிய அளவில் நிதி வெளியே சென்றிருப்பது 2021 நிதியாண்டின் வருவாயை பாதிக்கும். கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால், திரும்பப் பெறுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய போக்கு தொடர்ந்தால் வரவிருக்கும் நாட்களில் கிட

30 ஆண்டுகளில் முதல் முறையாக தடைபட்ட மொய் விருந்துகள்

Image
30 ஆண்டுகளில் முதல் முறையாக தடைபட்ட மொய் விருந்துகள்   கொரோனா ஊரடங்கால், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தப்பட்ட மொய் விருந்துகள் முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.     மொய் விருந்து   கீரமங்கலம்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் 1985-ம் ஆண்டு கால கட்டத்தில் மொய் விருந்து விழா தொடங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக விரிவடைந்து அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் 1990-ம் ஆண்டு கால கட்டத்தில் நெடுவாசல், கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், குளமங்கலம், பனங்குளம், நெய்வத்தளி, பாண்டிக்குடி, மேற்பனைக்காடு, செரியலூர், வேம்பங்குடி பைங்கால் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் தொடங்கி நடந்தது. தற்போது ஆலங்குடி வரை மொய் விருந்து கலாசாரம் பரவியுள்ளது.   கடந்த ஆண்டு வரை 2 மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை மொய் விருந்து வசூல் கிடைத்துள்ளது. அதேபோல் சமையல் கலைஞர்கள், ஆட்டுக்கறி, அரிசி, விறகு தொடர்பான தொழில் செய்பவர்கள், மொய் எழுத்தர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் பயனடைந்துள்ளனர். ஒரு தனி நபரின் அதிக பட்ச மொய் வசூல் ரூ.5 கோடி வரை கடந்த ஆண்டு வச

ஆத்தி சூடி ( வீ) * வீடு பெற நில் * ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

Image
ஆத்தி சூடி              ( வீ)                *      வீடு பெற நில்                *         ஒருவிகற்ப          இன்னிசை          வெண்பா                 * ஒலி ஒளி உணர  வீடு    பெறவே      விரைந்தே        அனுதினம்  நாடு     அறத்தை      நலங்கள்        பெருகிட  தேடு    பலவாய்      திறங்கள்        வகுத்திட  கூடு    அறவோர்      குணம்            * வணக்கத்துடன்🙏 ச.பொன்மணி

அப்துல்கலாம் நினைவு தினம்

Image
அப்துல்கலாம் நினைவு தினம்   தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.                                                                   அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துலெட்சுமி,முத்தமீனாள் ஆகியோரால்  மரக்கன்றுகள் நடப்பட்டது.ஆசிரியர்கள்  அப்துல்கலாம் படத்திற்கு முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி  அஞ்சலி செலுத்தினார்கள்.    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரியர்கள் ஸ்ரீதர்,,முத்துலெட்சுமி,முத்தமீனாள் ஆகியோரால்  மரக்கன்றுகள் நடப்பட்டது.ஆசிரியர்கள்  அப்துல்கலாம் படத்திற்கு முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

ஆத்தி சூடி              ( வி)              *  வித்தை விரும்பு              *         ஒருவிகற்ப          இன்னிசை         வெண்பா

Image
ஆத்தி சூடி              ( வி)              *  வித்தை விரும்பு              *         ஒருவிகற்ப          இன்னிசை         வெண்பா               *ஒலி ஒளி உணர  வித்தை    விரும்பி      வினைகள்        புரிந்திட  மொத்தக்     கலைகள்       முழுதாய்         தெரிந்திடும்  நித்தம்    உழைப்பால்      நிமிர்ந்தே        வாழ்ந்திட  சித்தம்    அமைப்பாய்      சிறந்து.           * வணக்கத்துடன்🙏 ச.பொன்மணி

இளைஞர் எழுச்சி நாளை வீட்டிலேயே ஓவியம் ,கவிதை,பேச்சு என நினைவு கூர்ந்து பள்ளி மாணவர்கள் 

Image
அப்துல் கலாம் நினைவு நாள் ஊரடங்கு நேரத்தில் இளைஞர் எழுச்சி நாளை வீட்டிலேயே ஓவியம் ,கவிதை,பேச்சு என நினைவு கூர்ந்து பள்ளி மாணவர்கள்    தேவகோட்டை -  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்  மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஊரடங்கு நேரத்தில் அப்துல் கலாம் நினைவு நாளை வீட்டிலேயே ஓவியம் வரைந்தும் ,கவிதை சொல்லியும் , அப்துல் கலாமின் சிறப்புகளை  பேசியும்   நினைவு கூர்ந்தனர் .                             சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாளாக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ஓவியம்,கவிதை சொல்லுதல்,பேச்சு போட்டி என பல்வேறு போட்டிகள்   நடைபெறுவது வழக்கம். கொரோனாவால் பள்ளி  மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதை கருத்தில் கொண்டு  மாணவர்கள் வீட்டிலேயே ஓவியம் வரைய சொல்லியும்,கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்ற   மாணவர்களை ஆன்லைன் வழியாக வீடியோவாக அனுப்ப சொல்லி பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர்,கருப்பையா ,முத்துமீனாள் ,செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் அலைபேசி மூலம் மாணவர்களை

தருமபுரியில் முழு ஊரடங்கு

Image
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஜூலை வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு என்று அரசு அறிவித்துள்ளது   இந்த மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான 26/7/2020 தருமபுரியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கிறது பால் மற்றும் மருந்தகம் கடைகள் மட்டுமே இயங்கி வருகிறது இன்று 80 சதவீத பொதுமக்கள் மட்டுமே ஒத்துழைப்பு தந்து வருகிறார்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது அரசு அறிவிப்பை மதிக்காமல் சிலர் சாலையில் சுற்றி வருகின்றனர் இதில் சிலர் மாஸ்க் அணியாமல் வருகின்றனர். அரசு அறிவித்துள்ள ஊரடங்கு இந்த மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமையாக இன்று முடிவடைகிறது மேலும் ஊரடங்கு நீடிக்கிறதா ?இல்லையா ? என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடை பெற்ற பின்னரே தெரியவரும்.   செய்தியாளர். கணபதி தருமபுரி

ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு தடை இல்லை

Image
  ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு தடை இல்லை... மத்திய அரசு சட்டம் இயற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவு     ஜூலை 27, 2020 13:39 மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு  50  சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கை புதுடெல்லி:   தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.   இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு, திமுக, அதிமுக, திராவிடர் கழகம், பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.    இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீ

5 வயது மகனை காண 1,800 கி.மீ பயணம் செய்த தாய்

Image
5 வயது மகனை காண 1,800 கி.மீ பயணம் செய்த தாய்  ஜூலை 27, 2020     ஜாம்ஷெட்பூர்: இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் போக்குவரத்து தடைப்பட்டன. ஆனால், அடுத்தடுத்த ஊரடங்கு தளர்வினால், தற்போது சில பகுதிகளில் ஆட்டோ, டாக்ஸி, பைக்குகள் அனுமதிக்கப்படுகின்றன. இதனால், மாநிலம் கடந்து வேலை பார்த்து வரும் சிலர் சிறப்பு ரயில்கள் மூலமாகவோ, சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக பல்லாயிரம் கி.மீ பயணம் செய்து சொந்த ஊர் செல்கின்றனர். அந்த வகையில் பெண் ஒருவர் தனது 5 வயது மகனை பார்க்க 1,800 கி.மீ பைக்கில் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் நகரை சேர்ந்தவர் சோனியா தாஸ். இவர் தனது குடும்பம், 5 வயது குழந்தையை விட்டுவிட்டு மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், பெண்களுக்கான விடுதியில் தங்கி வேலை செய்து வந்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக வேலை இழந்ததால், வாடகை கொடுக்க முடியாமல் தவித்த அவர், விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அந்த நேரத்தில், புனேவில் வசிக்கும் அவரது தோழி சாபியா பனோ, தனது இல்லத்தில் சோனியா தாசுக்கு அவர் அடைக்கலம் கொடுத்தார். புனேவி

ஆண் சிங்கத்துடன் மோதும் பெண் சிங்கம்

Image
ஆண் சிங்கத்துடன் மோதும் பெண் சிங்கம்: வைரல் வீடியோ     காந்திநகர்: குஜராத்தில் உள்ள கிர் வனப்பகுதியில், ஆண் சிங்கத்துடன் பெண் சிங்கம் நேருக்கு நேர் மோதும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீங்கள் எத்தனையோ சிங்கங்கள் குறித்த வீடியோவை பார்த்திருப்பீர். ஆனால் பெண் சிங்கம், ஆண் சிங்கத்துடன் மோதும் வீடியோ பார்த்திருக்கிறீர்களா. குஜராத்தை சேர்ந்த பா.ஜ., தலைவரும், வனவிலங்கு புகைப்படக் கலைஞருமான ஜூபின் ஆஷாரா தான் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். மூன்று ஜீப்களில் தொலைவில் நிற்கும் சுற்றுலா பயணிகள், மண் சாலையின் நடுவே சிங்கங்கள் சண்டையிட்டு கொள்வதை நேரில் பார்க்கின்றனர். எப்போது படம்பிடிக்கப்பட்டது என தெரியாத நிலையில், வைல்டு லைப் என்னும் டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டிருந்தது. 22 நொடிகள் கொண்ட வீடியோவில், சிங்கங்கள் ஒன்றை ஒன்று நேருக்கு நேர் உறுமியப்படி பார்த்து கொண்டே முன்னங்கால்களை தூக்கி சண்டையிடுகின்றன. சிங்கங்கள் சண்டையிட்டு கொள்ளும் வீடியோவை ஒரே நாளில் டுவிட்டரில் 2.6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். காய்கறிகள் வாங்க சென்று, கொத்தமல்லி வாங்காமல் வீ