Posts

Showing posts from May, 2022

ஒபாமாவுக்கு மிகவும் பிடித்த புகைப்படங்களில் இதுவும் ஒன்று.

Image
  அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஒபாமாவின் தலைமுடியை 2009-ம் ஆண்டு ஒரு சிறுவன் தொட்டுப் பார்த்தபோது, அந்தக் காட்சி புகைப்படமாகப் பிடிக்கப்பட்டது. உயர் கல்வியை முடித்த நிலையில் தற்போது அந்தச் சிறுவனுடன் ஒபாமா, இணையவழியில் பேசிக்கொண்ட விஷயம் வைரலாகி வருகிறது . ஐந்து வயதுச் சிறுவன் ஜேக்கப் பிலடெல்பியா, தன் பெற்றோர் மற்றும் சகோதரனுடன், 2009-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான ஒபாமாவை சந்திக்க ஓவல் அலுவலகத்துக்குச் சென்றுள்ளான். அப்போது ஜேக்கப், ஒபாமாவிடம், `நம் இருவரின் முடியும் ஒன்றுபோல இருக்கிறதா' என்று கேட்டிருக்கிறான். ஜேக்கப்புடன் உரையாடும் ஒபாமா...ஜேக்கப்புடன் உரையாடும் ஒபாமா... அவனது ஆர்வத்தைக் கண்ட ஒபாமா, குனிந்து, சிறுவனிடம் தன் தலைமுடியைத் தொட்டுப்பார்க்கும்படி கூறினார். அந்தச் சிறுவன், ஒபாமாவின் தலைமுடியைத் தொட்டுத் தடவிப்பார்க்கும் அந்தக் காட்சி புகைப்படமாக்கப்பட்டது. ஒபாமாவுக்கு மிகவும் பிடித்த புகைப்படங்களில் இதுவும் ஒன்று. தற்போது உயர்கல்வியை முடித்துள்ள ஜேக்கப்பை, இணைய வழியில் தொடர்புகொண்ட அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, பழைய நினைவுகளைப் பற்றி பேசியதோடு, ஜேக்கப்புக்கு வா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் நாசர் தனது நன்றி

Image
  கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது' வழங்கும் தேர்வு குழுவில் தன்னை உறுப்பினராக இடம்பெறச் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் நாசர் தனது நன்றியை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு 'கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது' வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதற்கான விருதுகளை தேர்வு செய்யும் குழுவின், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தலைவராகவும், நடிகர் நாசர் மற்றும் இயக்குனர் கரு.பழனியப்பன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் செயல்படவிருக்கின்றனர். இந்த தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படும் சாதனையாளருக்கு ரூ.10 லட்சம் பணமும், நினைவுப் பரிசும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதினை அரசியல் மட்டுமல்லாமல் கலைத்துறையிலும் மாபெரும் பங்காற்றிய கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். அதோடு ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் பிறந்தநாளன்றும் இவ்விருது வழங்கப்படவுள்ளது. நன்றி: நியூஸ் 18 தமிழ்

80 வயதை எட்டும் இசைஞானி இளையராஜா;திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோயிலில் இளையராஜாவுக்கு சதாபிஷேகம்!

Image
  80 வயதை எட்டும் இசைஞானி இளையராஜா... மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நடைபெறும் ஆயுள் விருத்தி ஹோமபூஜை! ஜூன் 2ம்தேதி அன்று 80 வயதை எட்டும் இசைஞானி இளையராஜா;திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோயிலில் இளையராஜாவுக்கு சதாபிஷேகம்!

சிறுகதை ஆசான்

Image
  கு. ப. ரா என்று பரவலாக அறியப்பட்ட கு.ப.ராஜகோபாலன் ஒரு தமிழ் எழுத்தாளர். சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலவகைப் படைப்புகளை அளித்தவர் எனினும் அவரது சிறுகதைகளின் சிறப்பினால் ‘‘சிறுகதை ஆசான்’’ என்று அழைக்கப்படுகிறார். இவர் மதுரை மாவட்டம் மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கணக்கராகப் பணியாற்றினார். கண்புரை நோயின் காரணமாக கண் பார்வை குன்றியதால் அப்பணியில் இருந்து விலகினார். கண் பார்வை குன்றிய நிலையிலும் ‘மணிக்கொடி’ போன்ற இதழ்களில் அவரது இலக்கியப் படைப்புகளை எழுதி வெளியிட்டார்.மருத்துவ சிகிச்சைக்குப்பின் கண் பார்வை மீண்டும் கிட்டியது. சென்னைக்கு இடம்பெயர்ந்து முழுநேர எழுத்தாளராக மாறினார். மணிக்கொடி, கலைமகள், சுதந்திர சங்கு, சூறாவளி, ஹனுமான், ஹிந்துஸ்தான் போன்ற இதழ்களில் அவரது படைப்புகள் வெளியாகின. வ. ராமசாமி ஆசிரியராக இருந்த ‘‘பாரத தேவி’’ என்ற இதழிலும், கா.சீ.வெங்கடரமணி நடத்திய ‘‘பாரத மணி’’ இதழிலும் சிலகாலம் பணியாற்றினார். கு.ப.ரா தனது இயற்பெயரிலும் ‘‘பாரத்வாஜன்’’, ‘‘கரிச்சான்’’, ‘‘சதயம்’’ போன்ற புனைப் பெயர்களிலும் படைப்புகளை வெள

க.நா.சு. ஓர் இலக்கிய இயக்கம்.

Image
  எழுத்தாளராகவே தன் வாழ்வைத் தொடர இளம் வயதிலேயே தீர்மானித்துவிட்ட கா.நா.சுப்பிரமணியம் கடைசி வரை முழு நேர எழுத்தாளராகப் படிப்பதிலும் எழுதுவதிலுமே நிறைவடைந்தவர். 1928_34 வரை (16 வயதிலிருந்து _ 22 வயது வரை) எதற்காக எழுதுகிறேன் என்ற சிந்தனை இல்லாமல் ஆங்கிலத்தில் பல கட்டுரைகள் எழுதியதாகக் க.நா.சு. குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், பின்னாளில் மனைவி, ஒரே மகள் என்ற தன் சிறு குடும்பத்தின் வாழ்க்கைப் பாட்டிற்கான வருமானத்தை ஆங்கிலப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவதன் மூலமே அடைந்திருக்கிறார். `தமிழில் நான் எழுத்தாளன்; ஆங்கிலத்தில் பத்திரிகையாளன்’ என்று ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு இவர் எழுதிய கட்டுரைகள் 15,000 என்று ஒரு தகவல். ஒரு நாளைக்கு 7 பக்கங்கள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன் என்று க.நா.சு. ஓரிடத்தில் கூறியிருப்பதை நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாகத்தானிருக்கிறது. அவருள்ளிருந்து அவரை இயக்கிய சக்தி மகத்தானது. ஆரம்ப காலத்தில் சூறாவளி, சந்திரோதயம் என்ற இதழ்களை நடத்திய போதிலும் `எழுத்து’ இதழின் எழுத்து முறையில் அதிருப்தியடைந்து அவர் தொடங்கிய `இலக்கிய வட்டம்’ சிற்றிதழ் மரபில் ஒரு பு

அறம் செய்ய விரும்பு சென்னை லயன்ஸ் கிளப்பின் தொடர் சேவை

Image
30.5.2022 அன்று மாலை அறம் செய்ய விரும்பு சென்னை லயன்ஸ் கிளப் சார்பாக சங்க செயலாளர் லயன் பாலசந்தர் அவர்களின்  நண்பர் திரு அரவிந்தன் அவர்கள் அவருடைய தந்தை நினைவாக  காக்கும் கரங்கள் west mambalam என்ற இடத்தில்  அன்னதானம் செய்தார்   சங்கத்தின் சார்பில் காக்கும் கரங்கள் மேற்கு மாம்பலத்தில் 20 நபர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. இதற்கான செலவு ரூபாய் 2240/- நன்றி பகிர்வு Ln. பாலசந்தர் செயலாளர்

Clinton Eastwood

Image
  today is birthday of Clint Eastwood Clinton Eastwood .   (born May 31, 1930) is an American actor, film director and producer. After achieving success in the   Western   TV series   Rawhide , he rose to international fame with his role as the " Man with No Name " in   Sergio Leone 's " Dollars Trilogy " of   Spaghetti Westerns   during the mid-1960s and as   antihero   cop   Harry Callahan   in the five   Dirty Harry   films throughout the 1970s and 1980s. These roles, among others, have made Eastwood an enduring   cultural icon   of   masculinity .   Elected in 1986, Eastwood served for two years as the mayor of   Carmel-by-the-Sea, California . An Academy Award nominee for  Best Actor , Eastwood won  Best Director  and  Best Picture  for his Western film  Unforgiven  (1992) and his sports drama  Million Dollar Baby  (2004). His greatest commercial successes are the adventure comedy  Every Which Way but Loose  (1978) and its action comedy sequel  Any Which Wa

யாழ் நூல் நிலையம்

Image
  வரலாற்றில் இன்று மே 31, 1981: ஆசியாவின் மிகப் பெரிய நூல் நிலையங்களில் ஒன்றாக விளங்கிய யாழ் நூல் நிலையம் சுமார் 70,000 நூல்களுடன் சிங்கள வெறியர்களால் தீக்கிரையாக்கப்பட்டது யாழ்ப்பாணப் பொது நூலகம் யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின்ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நிறுவனம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோது மே 31 1981 நள்ளிரவுக்குப் பின்னர் எரிக்கப்பட்டுச்சாம்பலானது. இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டு ப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை.இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசநாயக்கா உட்பட அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் பலரும் கூட அடங்கியிருந்தனர். தமிழ் மக்களின் பொக்கிஷமான நூலகம் எரிக்கப்

தொடரும் அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் சேவை

Image
28/5/2022 அன்று  காலை சென்னை அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்  சார்பில் Hope foundation சூளைமேட்டில் உள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது நன்றி Ln. சரவணகுமரன் அண்ணன்,Ln. சேகர் அண்ணன் அவர்களுக்கு பகிர்வு Ln. பாலசந்தர் செயலாளர்

தமிழ்த்தேனீ இலக்கியக் கழகம் செங்கரும்பு விழா

Image
 தமிழ்த்தேனீ இலக்கியக் கழகம் செங்கரும்பு விழாவில் கவிஞா் , முனைவர்   அமுதா பாலகிருஷ்ணன் அவா்களுக்கு "நன்மனச்செம்மல்" விருது வழங்கப்பட்டது. விழாவில் சிந்தைவாசன்,எஸ்.வாசு, தொழிலதிபா்  கருணாகரன்,ஆண்டாள் பிரியதா்சனி, தாமரைப்பூவண்ணன்.மற்றும் பல முக்கிய இலக்கிய பெருந்தகைகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வு 21.5.2022 மாலை  மேற்கு முகப்பேர், அமுதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

புல்லாங்குழல் இசைக்கலைஞர்,“மாலி”

Image
 மே 31, புகழ்பெற்ற பிரபல புல்லாங்குழல் இசைக்கலைஞர்,“மாலி”என்றழைக்கபட்ட T.R.மகாலிங்கம் நினைவு தினம் இன்று ( 1986 ). தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூரில் நவம்பர் 6 அன்று டி. ஆர். மகாலிங்கம் பிறந்தார். ஐந்து வயதிலேயே தனது மாமா ஜால்ரா கோபால அய்யர் நடத்திய இசைப் பள்ளியில் புல்லாங்குழல் கற்கும் மாணவர்கள் வாசிப்பதை கேட்டு, எவரும் கற்றுக்கொடுக்காமலேயே விர்போனி வர்ணத்தை சிறப்பாக வாசித்தான் சிறுவன் மகாலிங்கம் தன்னுடைய இருபதாம் வயதிலேயே மேடை கச்சேரிகளில் புல்லாங்குழல் வாசிக்க துவங்கி விட்டார் புல்லாங்குழல் வாசிப்பில் புதிய தொழில்நுட்ப திறன்களை அறிமுகப்படுத்தினார் டி. ஆர். மகாலிங்கம். ஒன்றிணைந்த; விட்டு விட்டு வாசிக்கக்கூடிய இசைக்கருவியாக இருந்து வந்த புல்லாங்குழல், வாய்ப்பாட்டு போன்று மாறியது. வாய்ப்பாட்டு நுணுக்கங்கள் அனைத்தையும் புல்லாங்குழலில் வெளிப்படுத்தினார் அவர். மகாலிங்கம். கச்சேரிகளில் பத்தோடு பதினொன்றாக ஒரு துணைவாத்யமாக மட்டுமே வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்த அந்த எளிய காற்று வாத்யத்தை அரியணையில் அமர்த்தி அழகுப் பார்த்த அரசனாக திகழ்ந்தார் மாலி. 31 மே 1986 (அகவை 59) அன்று மா

ம. இலெ. தங்கப்பா

Image
  தமிழ்க் கவிதையை உலகறியச் செய்த - ம. இலெ. தங்கப்பா  நினைவு நாள் இன்று மே 31, 2018  திருநெல்வேலி மாவட்டத்தில் குரும்பலாப்பேரி என்னும் சிறிய கிராமத்தில் 1934-ல் பிறந்த தங்கப்பாவின் தந்தையாரும் மாமாவும் தமிழாசிரியர்கள். ஆறு வயதிலேயே கம்ப ராமாயணத்தை அட்சர சுத்தமாகப் பாடும் திறன் தங்கப்பாவுக்கு இருந்துள்ளது. சிறுவயதிலேயே பாடல்களையும் எழுதத் தொடங்கி விட்டார். பாரதிதாசனின் வழிவந்த மரபுக் கவிஞரான ம. இலெ. தங்கப்பா, புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுவதற்காக இடம்பெயர்ந்தார். புதுச்சேரி அரசின் கீழ் வெவ்வேறு கல்லூரிகளில் தமிழ் கற்றுக்கொடுத்த அனுபவம் உண்டு. பல தலைமுறை மாணவர்களுக்கு சங்க இலக்கியத்தையும் கவிதைகளையும் கற்பித்த, அந்த அனுபவமும் கவித்துவ உள்ளுணர்வும் சேர்ந்துதான் ‘லவ் ஸ்டாண்ட்ஸ் அலோன்’ (பெங்குயின் வெளியீடு) சங்க கவிதை மொழிபெயர்ப்பை அழகாக மாற்றுகிறது என்று வரலாற்றாய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதி குறிப்பிடுகிறார். இந்த நூலின்மொழிபெயர்ப்புக்காக 2012-ல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார். 2010-ம் ஆண்டு குழந்தை இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருதையும் பெற்றவர்.  இ

கமலா தாஸ்

Image
. கமலா தாஸ் . அவர்களின் நினைவு நாள் இன்று  கமலா தாஸ் (மலையாளம்: കമല ദാസ്) என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுராயா அல்லது மாதவிக்குட்டி, (மார்ச் 31, 1934 - மே 31, 2009) இந்திய எழுத்தாளர். இவர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை. கமலாதாஸ் 1934 இல், கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' என்ற ஊரில் பிறந்தார். ஆங்கிலத்தில் மட்டும் கவிதைகள் எழுதியவர். 'கல்கத்தாவில் கோடைகாலம்' (1965), 'வம்சத்தவர்' (1967), 'பழைய நாடகக் கொட்டகை மற்றும் கவிதைகள்' (1972) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, `என் கதா' (My Story) என்ற புத்தகம் பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. ஆங்கிலக் கவிதைக்காக சாகித்ய அகாதமி விருதினை 1981இல் பெற்றார். 'மாதவிக்குட்டி' என்ற பெயரில் மலையாளச் சிறுகதைகளையும் எழுதி வந்தவர். 

உலக புகையிலை இல்லா நாள்

Image
  உலக சுகாதார நிறுவனம், ஆண்டுதோறும், மே மாதம் 31 ந் தேதியை, உலக  புகையிலை இல்லா நாளாக' அறிவித்து உள்ளது. பீடி, சிகரெட் புகைப்பவர்கள், புகையிலை போடும் பழக்கத்துக்கு அடிமையானவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. புகை பிடிப்பதாலும், புகையிலையை வாயில் போட்டு மெல்வதாலும் வாய் புற்று நோய், ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு, மூச்சுக்குழாய் வீக்கம், மூச்சுக் குழாயின் உள் சுவர்களில் புண் உண்டாகி அதன் மூலம் பல்வேறு நோய் தாக்குதல் என பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். புகை பிடிப்பவர் மட்டுமின்றி அப்புகையை சுவாசிக்கும் அருகிலிருப்போருக்கும் பாதிப்புகள் உண்டாகின்றன. எனவே, புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவர்களும், புகையிலைப்பொருட்களை பயன்படுத்துவோரும், அவற்றின் தீய குணங்களை உணர்ந்து இனியாவது புகைபிடிப்பதில் இருந்தும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதில் இருந்தும் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை உண்டாக்கவே இன்று (மே 31) உலக புகையிலை இல்லா நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த மாதிரியான படங்களுக்கு உலக அளவில் பெரிய மார்க்கெட் உள்ளது” - பா.ரஞ்சித் பேச்சு

Image
  இந்த மாதிரியான படங்களுக்கு உலக அளவில் பெரிய மார்க்கெட் உள்ளது” - பா.ரஞ்சித் பேச்சு அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவான சேத்துமான் திரைப்படம், சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’ சிறுகதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், பல்வேறு திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளது. இந்த நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், “எனக்கு மாற்று சினிமாக்கள் மீது எப்போதும் பெரிய ஆர்வமுண்டு. சுயாதீன படங்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். சுயாதீன படங்களில் ஒருவித சுதந்திரத்தன்மை இருக்கும். அது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். என்னால் அது மாதிரியான படங்களை இயக்க முடியவில்லை. சரி, இந்த மாதிரியான படங்களைத் தயாரிக்கலாம் என்று நினைத்தபோதுதான் இயக்குநர் தமிழை சந்தித்தேன். சேத்துமான் கதையை என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார். இயக்குநர் தமிழை பற்றி எனக்கு பெரிய அளவில் தெரியவில்லை என்றாலும்கூட அந்தக் கதை மீது எனக்கு பெரிய நம்பிக்கை இருந்தது. போட்ட காசை எடுத்துவிட

கோடையில் அதிகரிக்கும் உடல் சூட்டை தணிக்க உதவும் உணவுகள் : தினமும் ஒன்று சாப்பிடுங்க..!

Image
 கோடையில் அதிகரிக்கும் உடல் சூட்டை தணிக்க உதவும் உணவுகள் : தினமும் ஒன்று சாப்பிடுங்க..!  கோடை காலத்தில் அதிகரிக்கும் வெப்பத்தில் இருந்து உடலை ஆரோக்கியமான வழிகளில் பாதுகாப்பது முக்கியம்.  சரியான உணவு வகைகளை சாப்பிடுவது, கூடுமான வரை வெப்பம் அதிகமாக இருக்கும் சமயங்களில் வெளியே செல்வதை தவிர்ப்பது,தேவையில்லாத உணவு மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்ப்பது, அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்வது அவசியமாகும். இதுபோன்ற கோடை காலத்தில் இந்த சீசனில் கிடைக்க கூடிய பழங்கள், எலுமிச்சை சாறு கலந்த பானங்கள் ஆகியவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்வது நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் அவை உங்களை குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைத்திருக்க உதவுகின்றன.  கோடை காலத்தில் என்ன மாதியான உணவுகளை உட்கொண்டால் உடல் சூட்டை குறைக்கலாம் என்பதைப் பற்றி தற்போது பார்க்கலாம்...  உடல் வெப்பநிலை அதிகரிப்பது ஏன்?  அதிகப்படியான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளும் போது செரிமானம் அதிகரிப்பதால் வயிற்று பகுதி சூடாகிறது. உடலின் அதிக வெப்பநிலையை சமாளிக்க வியர்வை உதவுகிறது.  இது உடலின் அதிகப்படியான வெப்பத்த

இந்தியாவில் கோவா தனி மாநிலமாகிய நாள்

Image
 வரலாற்றில் இன்று - மே 30, 1987. இந்தியாவில் கோவா தனி மாநிலமாகியது.  கோவா பரப்பளவில் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம். . மக்கள் தொகை பட்டியலில் நான்காவது மிகக்குறைந்த மக்கள்தொகை உடைய மாநிலம் ஆகும்.இந்தியாவில் உள்ள மேற்கு கடற்கரை பகுதியான கொங்கனில்அமைந்துள்ளது. இது வடக்கு திசையில் மகாராஷ்டிரா மாநிலத்தையும், கிழக்கில் கர்நாடகா மாநிலத்தையும் மற்றும் தெற்கு திசையில் அரபிக்கடலையும் எல்லைகளாகக் கொண்டு மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்திய இராணுவம் 1961 டிசம்பர் 12 இல் மேற்கொண்ட ஆப்ரேஷன் விஜய் என்னும் போர் நடவடிக்கை மூலம் கோவா, டாமன் மற்றும் டையூ ஆகிய இடங்களை கைப்பற்றி இந்தியாவுடன் ஒருங்கிணைத்தது. கோவா உள்ளிட்ட டாமன் மற்றும் டையூ ஆகியவை மத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட இந்திய யூனியன் பிரதேசங்களாகும். 1987 ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு கோவா இந்தியாவின் 25 வது மாநிலமாக மாற்றப்பட்டது. டாமன் மற்றும் டையூ ஆகியவை யூனியன் பிரதேசங்களாகவே தொடர்கின்றன.