Posts

Showing posts from November, 2021

பழசி ராஜா

Image
  பழசி ராஜா மரணித்த நாளின்று! கேரளமண்ணிலே பதினெட்டாம் நூற்றாண்டிலே முதல்முதலில்யே பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதுத்து போராடின ஒரு மன்னரிவர்… வீர கேரள வர்மா பழசி ராஜாங்கிறது அவரோட முழுப்பேரு. ‘வயநாட்டுச்சிங்கம்’ நு அவருக்கு பட்டப்பேருண்டு. இப்ப உள்ள கோட்டயம் பகுதியிலே மன்னரா இருந்தார். ஆரம்பத்திலே அவர் பிரிட்டிஷ்காரங்களுக்கு ஆதரவாத்தான் இருந்தார். திப்புசுல்தானை எதுத்து பிரிட்டிஷ் படைகள் போர்செய்தப்போ அவர் அதுக்கு ஆதரவு தெரிவிச்சார். ஆனா போர் முடிஞ்சதுமே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மத்த ராஜாக்கள் மேலே கடுமையான வரிகளைச் சுமத்த ஆரம்பிச்சாங்க. அதுக்கு எதிரா போராடின பழசி ராஜாவுக்கு மத்த ராஜாக்களோட உதவிகள் கிடைக்கல்லை. ஆனாலும் அவர் தன்னந்தனியா நின்னு போராடினார். கட்டாய வரிவசூலை அவர் எதிர்த்தார். அதனால அவரை பிரிட்டிஷ்காரங்க எதிரியா நினைக்க ஆரம்பிச்சாங்க. லெப்டினெண்ட் கோர்டான் தலைமையிலே அவரது அரண்மனையை தாக்கி அதை சூறையாடினாங்க. அதுக்கு முன்னாடியே அவர் ஊரைவிட்டு போயிருந்தார். தன் படையோட மலைப்பகுதியான வயநாட்டுக்குப்போய் இன்னைக்குள்ள மானந்தவாடி பக்கம் மலைகளுக்குள்ள முகாமிட்டு அங்க உள்ள ஆதிவாசிகளான கு

கணினி பாதுகாப்பு தினம்...!.

Image
  கணினி பாதுகாப்பு தினம்... !. கணினி பாதுகாப்பு தினம் 1988ஆம் ஆண்டில் தொடங்கியது. கணினிகள் அந்நாட்களில் வீடுகளில் காணப்படாவிட்டாலும் கூட, அவை பொதுவானதாகிவிட்டன. 1980களில் கணினிகளின் பயன்பாடு குறிப்பாக வணிகத்திலும், அரசாங்கத்திலும் தான் அதிகரித்து இருந்தது. அதோடு இணையம் பயன்படுத்த ஆரம்பித்த காலமாக இருந்தது. இந்த நாட்களில், ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகள் போன்ற மின்னணு சாதனங்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக அமைந்தது. முன்பை விட தகவல்தொடர்பு எளிதாகவும், திறமையாகவும் மாறிவிட்டாலும், இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த புதிய பிரச்சனைகளையும் கொண்டு வந்துள்ளன. உங்கள் ஆன்லைன் தரவைப் பாதுகாக்கவும், பாதுகாப்பாக வைத்திருக்கவும் ஒரு விடுமுறை கூட அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எனவே கணினி பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

திருச்செந்தூர் முருகன் பாடல்| எல்லாம் | கவிஞர் ச.பொன்மணி

Image
  முருகுதமிழ் | 52.திருச்செந்தூர் முருகன் பாடல்| எல்லாம் | கவிஞர் ச.பொன்மணி | கவிஞர் ச.பொன்மணி

மனைவியின் கேள்வி|உறவு கவிதை/இன்றைய நயினாரின் உணர்வுகளில்

Image
 இன்றைய நயினாரின் உணர்வுகளில் மனைவியின் கேள்வி|உறவு கவிதை|kanavan manaivi kavithai|husband wife|tamil kavithai|Nynarin Unarvugal Nynarin Unarvuga

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோர்களின் வருமான வரம்பு ₹2 லட்சத்திலிருந்து ₹2.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை!

Image
 🦉 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோர்களின் வருமான வரம்பு ₹2 லட்சத்திலிருந்து ₹2.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை!இந்த அரசாணையின் மூலம் பள்ளி மேற்படிப்பு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வதோடு, பள்ளி கல்லூரி இடைநிற்றலை தவிர்க்கவும் உதவும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது

மரமல்லியின் மருத்துவப் பயன்கள்/ டாக்டர் ரேவதி அவர்களின் இயற்கை வைத்தியம்

Image
 டாக்டர்  ரேவதி அவர்களின் இயற்கை வைத்தியம் மரமல்லியின் மருத்துவப் பயன்கள் மரமல்லியின் மருத்துவப் பயன்கள் | Health Benefits of Tree Jasmine or Indian cork tree Dr.S.Revathi's Vlog

'83’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு

Image
 '83’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு 1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதையும், கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றையும் அடிப்படையாக கொண்ட படம்  கபில்தேவ்வாக ரன்வீர் சிங், தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக ஜீவா நடித்துள்ளனர் வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ்  தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகிறது

பராக் அகர்வால்

Image
: யார் இந்த பராக் அகர்வால்? இளம் வயதிலேயே இந்தியர் ஒருவர் டுவிட்டரின் சிஇஓவானது எப்படி? சர்வதேச நிறுவனங்கள், முக்கியமாக அமெரிக்காவின் டாப் நிறுவனங்களில் இந்தியர்கள்தான் சிஇஓ உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். மைக்ரோசாப்ட் சிஇஓவாக சத்யா நாடெல்லா, கூகுள் சிஇஓவாக தமிழரான சுந்தர் பிச்சை, ஐபிஎம் உள்ளிட்ட மற்ற பெரிய நிறுவனங்களின் சிஇஓவாகவும் இந்தியர்களே உள்ளனர்.  பிரபல சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரின் சிஇஓ பதவியிலிருந்து ஜான் டோர்சி விலகியதையடுத்து புதிய தலைமை செயல் அதிகாரியாக  இந்தியாவை சேர்ந்த பராக் அகர்வால் பொறுப்பேற்றுள்ளார்.  சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை பிரபலங்கள் பலரும் உலகளவில் பயன்படுத்தி வருகின்றனர். முக்கிய தகவல் பரிமாற்ற தளமாகவும் ட்விட்டர் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் சிஇஓ பதவியை ஜேக் டார்ஸி நேற்று ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தில் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (சிடிஓ) இருந்த பராக் அகர்வால் டுவிட்டரின் புதிய சிஇஓவாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் பிறந்த பராக் அக்ரவால், மும்பை ஐஐடியில் பிடெக் பிரிவில் கம்

மினி பேருந்து சேவை இன்று தொடக்கம்

Image
 🦉மினி பேருந்து சேவை இன்று தொடக்கம் *சென்னை, மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 12 மினி பேருந்துகள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் *மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக மினி பேருந்து சேவை இன்று தொடக்கம் இந்த சேவையை  முதலமைச்சர்  தொடங்கி வைத்தார். ஆலந்தூர்-மடிப்பாக்கம், போரூர், விமான நிலையம்-குன்றத்தூர், கோயம்பேடு-மதுரவாயில் ஏரிக்கரைக்கு மினி பேருந்து சேவை தொடங்கப்பட்டது. திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மணலிக்கும் மினி பேருந்து சேவை தொடங்கப்பட்டது. மேலும், லடாக் –காரகோரம் கணவாயிலிருந்து மலரி வரை பனிச்சருக்கு மூலம் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற குழுவில் பங்கேற்ற திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் கேப்டன் எஸ்.குபேர காந்திராஜ்-ன் சாதனையை கெளரவித்து பாராட்டு சான்றிதழை முதலமைச்சர் வழங்கினார்.

ஜெகதீஷ் சந்திர போஸ்

Image
 🦉இந்தியாவின் முதல் விண்ணலை அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்த நாள் இன்று! ஒரு சராசரி இந்தியக் குடும்பத்தில் பிறந்த 'போஸ்' விஞ்ஞானி .போஸ் ஆக உதவியது பெரும்பாலும் பிரிட்டிஷார்கள். படிப்பில் இவருக்குள்ள அக்கறையைப் பார்த்து வியந்து அவரை இங்கிலாந்து அனுப்பி அங்கு நாலைந்து பட்ட படிப்புகளை படிக்க உதவி செய்தார்கள் அப்படி அங்குப் படித்துக் கொண்டிருக்கும் போதே கண்டுப் பிடித்த அரிய டெக்னாலஜிதான் இன்றைய இந்திய ஊழலுக்கு அச்சாரமாகும்! என்ன புரிய வில்லையா? உலகம் முழுவதுமுள்ள விஞ்ஞானிகள் பலர் மனித இனத்திற்கு நன்மை பயக்கக் கூடிய வகையில் கண்டு பிடித்த வானொலி,தொலைக்காட்சி, தொலைக் காட்சிக்குத் தேவையான அலைவாங்கி(Antenna), தொலைபேசி, கம்பியில்லாமல் தந்தி அனுப்பும் முறை, விமான நிலையக் கட்டுப்பாடு அறையில் செயற் படுத்தப்படும் 'ராடார்' தொழில் நுட்பங்கள் போன்ற அனைத்திற்கும் தேவையான அடிப்படை மின்னோட்ட, 'மின்னியல்'கண்டுபிடிப்புகளை நம்ம .போஸ் தான் கண்டு பிடித்தார். ஆனால் அந்தோ பரிதாபம், இவர் தனது கண்டு பிடிப்புகளை 'ஏனைய விஞ்ஞானிகள்' போல் இரகசியமாக வைத்துக் கொள்ளாமல், இங்கிலாந்தி

முக்கியமான வீட்டுக் குறிப்புகள்..

Image
  வீட்டில் உள்ள நம் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய சில முக்கியமான வீட்டுக் குறிப்புகள்... . வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம். வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும். 6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம். 7. அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல்

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்வது எப்படி

Image
*குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்வது எப்படி?*  குழந்தைகளுக்கு உணவு தருவதில் மட்டுமே கவனமாக இருந்தால் போதாது. சாப்பிட்ட உணவு சரியாக செரிமானமாகி, மலமாக வெளியேறுகிறதா எனக் கவனிப்பதும் முக்கியம். ஏனெனில் செரிக்கப்பட்ட உணவிலிருந்து சத்துகள் உறிஞ்சப்பட்ட பின் மீதமுள்ள கழிவானது உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இது சரியாக நடக்காவிட்டால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படும். மலம் வெளியேறாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு மலச்சிக்கலைத் தவிர்க்கும் வழிகளை முறையாக பின்பற்றினாலே போதும். மலச்சிக்கல் பிரச்னை நீங்கிவிடும்; குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும். மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?   பொதுவாகவே ஒரு வயதுக்கு கீழ் தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தைகளுக்கு மலம் கழிப்பதில் பெரிதாக சிக்கல் ஏற்படுவதில்லை. தாய்ப்பால் குடிக்கும் குழந்தை மலம் கழிக்காவிட்டால் அது குழந்தைக்கு சரியாகப் பால் கிடைக்காததன் அறிகுறியாக இருக்கலாம். பசும்பால், பாக்கெட் பால் மற்றும் இதர உணவுகளைக் குழந்தைச் சாப்பிட தொடங்கியவுடன்தான்  மலச்சிக்கல் ஆரம்பமாகிறது. எப்படிக் கண்டுபிடிப்பது? தொடர்ச்சியாக 2 அல

*பூண்டு தரும் ஆச்சரியமான அழகு ரகசியங்கள்*

Image
*பூண்டு தரும் ஆச்சரியமான அழகு ரகசியங்கள்*  சமையலில் பிரதானமாக இடம் பிடிக்கும் பூண்டுவை கொண்டு அழகையும் மேம்படுத்தலாம். பூண்டு பல மருத்துவ குணங்களையும், ஆச்சரியமான அழகு ரகசியங்களையும் கொண்டிருக்கிறது. பூண்டின் ஐந்து அழகு நன்மைகள் குறித்து பார்ப்போம். 1. முகப்பருவுக்கு பூண்டு சிறந்த நிவாரணம் அளிக்கும். பூண்டுவை தோல் நீக்கி நன்றாக நசுக்கி சாறாக்கவும். முகப்பரு இருக்கும் இடங்களில் பூண்டு சாறுவை தேய்த்துவிட்டு ஐந்து நிமிடம் கழித்து கழுவிவிடலாம். முகத்தில் சிவப்பு நிறத்தில் திட்டுகள், வீக்கம் இருந்தாலும் பூண்டுச் சாறை பயன்படுத்தலாம். 2. சிலருக்கு முகத்தில் புள்ளிகளும், திட்டுகளும் காணப்படும். ஒரு பூண்டுவை தோல் நீக்கி அதனுடன் பாதி தக்காளி பழத்தை சேர்த்து விழுதாக அரைத்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிவிடலாம். தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் முகம் பிரகாசத்துடன் காட்சியளிக்கும். 3. பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் படர்ந்திருக்கும் தழும்புகளை நீக்குவதற்கும் பூண்டை பயன்படுத்தலாம். பூண்டு சாறுடன் 100 மி.லி. ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடாக்கி தழும்பு இருக்கும் இடங்களில் தடவி மசாஜ்

*உடல் பருமன் முடி உதிர்வை அதிகரிக்குமா?

Image
  *உடல் பருமன் முடி உதிர்வை அதிகரிக்குமா?*  முடி எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்பது உங்களுடைய ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்தும். அதிகமான முடி உதிர்வு, பொடுகு, முடி வறண்டு போதல் ஆகியவை நீர் சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு உடல் நலக் குறைபாடுகளுடன் நேரடியாக தொடர்புடையதாகும். உடல் பருமனால் உங்கள் முடியின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்பதைப் பலரும் அறிந்திருக்கவில்லை. உடல் பருமனால் முடி உதிர்வு எப்படி அதிகரிக்கிறது என்று பார்க்கலாம். உடல் பருமனால் உண்டாகும் பல்வேறு உடல்நலக் கோளாறுகளைப் பற்றி பலரும் அறிந்திருப்போம். முட்டி வலி, ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை, கல்லீரல் பாதிப்பு, இதய நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் உடல் பருமனால் ஏற்படும். அதே போல, உடல் பருமன் நேரடியாகவும் மறைமுகமாகவும் உங்கள் முடியின் அடர்த்தியையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவது, தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது மற்றும் மரபணு காரணங்களால் ஏற்படும் உடல் பருமன் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கும். உடல் பருமன் உடலின் பல்வேறு கூறுகளை பாதிப்பதால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். இத

கோவிலில் கொடுக்கக் கூடிய அதே சுவையில் புளியோதரை

Image
  கோவிலில் கொடுக்கக் கூடிய அதே சுவையில் புளியோதரை . இப்படி மசாலா அரைத்து ஒரு முறை செய்து பாருங்கள். அற்புதமான சுவையில் இருக்கும் கோவில் பிரசாதத்தை சாப்பிடுவதில் அனைவருக்கும் அலாதியான விருப்பம் இருக்கும். இதற்காக ஒரு தனிப்பட்ட சுவையான மசாலா ஒன்றை மட்டும் அரைத்து வைத்துக்கொண்டால் போதும். நினைக்கும் நேரத்தில்  எல்லாம்  சுவையான கோவில் புளியோதரையை வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம். புளியோதரை செய்ய தேவையான பொருட்கள்:  புளி – எலுமிச்சைப்பழ அளவு, வேர்க்கடலை ஒரு ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், உளுத்தம்பருப்பு  –  ஒரு ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கார மிளகாய் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், நாட்டுச் சர்க்கரை – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, கடுகு – அரை ஸ்பூன், எண்ணெய் – 50 கிராம். மசாலா அரைக்க தேவையான பொருட்கள்:  தனியா– 11/2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன், கடலைப் பருப்பு – 2 ஸ்பூன், வெந்தயம் – அரை  ஸ்பூன்,  மிளகு – அரை ஸ்பூன், எள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், பெருங்காயத்தூள் –

வெங்காயம் தக்காளி இல்லாமல் சூப்பர் வெஜ் குருமா 10 நிமிடத்தில் தயார்.

Image
  குக்கரில் ஒரே 1 விசில் விட்டால் போதும். வெங்காயம் தக்காளி இல்லாமல் சூப்பர் வெஜ் குருமா 10 நிமிடத்தில் தயார். வெங்காயம் தக்காளி வாங்க முடியவில்லை என்று நினைப்பவர்கள் இந்த குருமா ரெசிபியை ஒருவாட்டி உங்க வீட்டில ட்ரை பண்ணி பாருங்க. வெங்காயம் தக்காளி சேர்க்காமல் குருமா  சுவையாக  இருக்குமா? என்ற எந்த சந்தேகமும் வேண்டாம். முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய் – 2, தோல் உரித்த பூண்டு பல் –  10,  சிறிய இஞ்சித் துண்டு – 1, முந்திரி பருப்பு – 10, தேங்காய் துருவல் – 1/4 கப், கசகசா – 1 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், இந்த எல்லா பொருட்களையும் சேர்த்து 2 லிருந்து 3 நிமிடங்கள் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். வதக்கிய இந்த எல்லா பொருட்களையும் நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி விழுதுபோல் அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது  அப்படியே  இருக்கட்டும். அடுத்தபடியாக ஒரு குக்கரை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். அதில் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை – 2, சோம்பு –  ஒரு  ஸ்பூன், நட்சத்திர சோம்பு – 1, இலவங

விமான நிலையத்தில் சோதனையை கடுமையாக்க உத்தரவிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Image
  சென்னை விமான நிலையத்தில் சோதனையை கடுமையாக்க உத்தரவிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரசை மருத்துவத்துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தாலும் அவ்வப்போது உருமாறி வீரியத்துடன் மக்களை தாக்கி வருகிறது. அந்த வகையில் இப்போது புதிய வகை உருமாறிய மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்  கொரோனா வைரஸ்  வெளிநாடுகளில் பரவி வருகிறது  தென்ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், வங்காளதேசம், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே இந்த வைரசை கட்டுப்படுத்த மருத்துவ துறையினர் போராடி வருகின்றனர். இந்த வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்காக பிரதமர் மோடி இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும்படி அனைத்து மாநில அரசுகளும் உஷார்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும்படி சுகாதாரத்துறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் , சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன

ரூ. 30,000 செலவில் நான்கு பேர் செல்லும் ஸ்கூட்டர் தயார்

Image
ரூ. 30,000 செலவில் நான்கு பேர் செல்லும் ஸ்கூட்டர் தயார் இரண்டு பேர் மட்டுமே செல்லக் கூடிய இருசக்கர வாகனத்தை நான்கு பேர் செல்லக் கூடிய மூன்று சக்கர வாகனமாக இளைஞர் ஒருவர் மாற்றியமைத்திருக்கின்றார் இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் ஒருவர் (மூன்றாவது நபர்) செல்வது போக்குவரத்து விதிகளின்படி குற்ற செயலாகும். ஆனால், இங்கு ஓர் மனிதர் மூன்று அல்ல நான்கு பேர் வரையில் செல்லும் வகையில் தனது இருசக்கர வாகனத்தை மூன்று சக்கர வாகனமாக மாற்றி அமைத்திருக்கின்றார் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞரே, இரண்டு பேர் பயணிக்கக் கூடிய இரு சக்கர வாகனத்தை நான்கு பேர் பயணிக்கக் கூடிய மூன்று சக்கர வாகனமாக மாற்றியிருக்கின்றார். பழைய பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரை அவர் இவ்வாறு மாடிஃபை செய்திருக்கின்றார். கூடுதலாக இரு பயணிகள் அமர்வதற்கான இருக்கை அமைப்பையும் ஸ்கிராப் செய்யப்பட்ட பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் இருந்தே அவர் பெற்றிருக்கின்றார் இரண்டையும் இணைத்ததன் வாயிலாக தற்போது நான்கு பேர் அமர்ந்து செல்லும் பயணிக்கக் கூடிய வாகனமாக பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர் மாறியிருக்கின்றது. இரண்டாவதாக பின் பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும் பஜாஜ் சேத

இந்த தேதியில் பிறந்தவரா நீங்கள்? புத்திசாலி

Image
  இந்த தேதியில் பிறந்தவரா நீங்கள்? புத்திசாலி! நன்றாக பணம் சம்பாதிப்பவர்! ஜோதிடம் போலவே, எண் கணிதத்திலும் ஒருவரின் பிறந்த தேதியின் மூலம் அவரது குணாதிசயங்களை அறிய முடியும். ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் ராசியின் அடிப்படையில் பலன்களை சொல்வதுபோல,  எண் கணிதத்தில் நபரின் ரேடிக்ஸ் (radix) இதைப் பற்றி கூறுகிறது. எண் கணிதத்தில் 1 முதல் 9 வரை ரேடிக்ஸ் உள்ளன. இந்த ரேடிக்ஸ் என்பது பிறந்த தேதியின் கூட்டுத்தொகையாகும். உதாரணமாக,  15 ஆம் தேதி பிறந்தவருக்கு ரேடிக்ஸ் எண் 6 (1+5). எந்த ரேடிக்ஸ் எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலிகள், அதிக பணம் சம்பாதிப்பவர்கள் என்பது தெரியுமா?   பிறந்த மாதம் எதுவாக இருந்தாலும் சரி,  5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் ரேடிக்ஸ் எண் 5 ஆகும். எண் கணிதத்தின் படி, ரேடிக்ஸ் எண் 5 ( Radix Number ) உள்ளவர்கள் பிறக்கும்போதே அறிவாளிகள்.  அவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தைபயன்படுத்தி நன்றாக பணம் சம்பாதிப்பார்கள்.   புத்திசாலித்தனத்தால் நிறைய பணம் சம்பாதிக்கும் இவர்கள், ஆடம்பரமான வாழ்க்கையை நடத்துகிறார்கள். அதுமட்டுமின்றி, அவர்களின் புத்திசாலித்தனம் மற்றும் திறமையால், ம

முட்டை சட்னி

Image
  இந்த முட்டை சட்னியை செய்து வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் கொடுங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் முட்டை சட்னியை சாப்பிட்டிருக்க மாட்டோம். முட்டை சட்னி மிகவும் சுவையாக அற்புதமாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள் தக்காளி - 1 வெங்காயம் - 1 கறிவேப்பிலை - சிறிது பூண்டு - 2 பற்கள் கடுகு - 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு முட்டை - சட்னி செய்யும் தேவைக்கேற்ப செய்முறை முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு தக்காளியை  நன்கு வதங்கும் வரை வதக்க வேண்டும். அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி விட வேண்டும். கலவையானது சட்னி போன்று நன்கு வதங்கியதும், அதில் முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு முறை கிளறி, உடனே இறக்கி விட வேண்டும். ஒருவேளை அப்ப

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’பற்றி எனது கருத்துகள்/உமா தமிழ்

Image
  சிவரஞ்சனியும்   இன்னும்   சில   பெண்களும் ’ பற்றி எனது கருத்துகள் சமீபத்திலே சோனி லைவ் ஓடிடி தளத்தில்பார்த்த படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில்   ‘ சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் ’ பற்றி எனது கருத்துகள் இது வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த சரஸ்வதி , தேவகி , சிவரஞ்சனி ஆகியோரது வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஒரு அன்தாலாஜி யாக வெளிவந்துள்ளது   , இந்தப்படம் கேரள சர்வதேச திரைப்பட விழா , பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா , புனே சர்வதேச திரைப்பட விழா மட்டுமல்லாமல் ஜப்பான் , ஸ்வீடன் , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் திரைபப்ட விழாக்களிலும் போட்டியிட்டு பல்வேறு விருதுகளையும் சிறந்தப் படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது என தெரிந்து கொண்டேன்   முதல் கதை காலகட்டம் 1980 சரஸ்வதி தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சந்திரனின் ( கருணாகரன் ) மனைவி சரஸ்வதி ( காளீஸ்வரி ஸ்ரீனிவாசன் ). கைக்குழந்தையுடன் இருக்கும் அவர் செய்யும் சிறு சிறு விஷயங்கெளுக்கெல்லாம் எரிந்து விழுந்து ஒரு நாள்   இரவில் குழந்தை அழுவதால் எரிச்சலடையும் கருணாகரன் மனைவியை அடிக்