Posts

Showing posts from September, 2019

15 தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ரூ.7,176 கோடி முதலீடு; 45,846 பேருக்கு வேலைவாய்ப்பு:: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடந்தது

Image
முதல்-அமைச்சர் எடப்பாடி முன்னிலையில் 15 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் .   ,   இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-   முதன்மை மாநிலம்   தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழச் செய்யவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழில் முனைவோர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு எப்போதும் முன்னிலை வகித்து வருகிறது.   அந்த வகையில், புதிய தொழில் திட்டங்களை தொடங்கிட 15 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டன.   இதன் விவரம் வருமாறு:-   * கோயம்புத்தூரில் உள்ள ஆர்.கே.ஜி. தொழில் பூங்காவில், 50 கோடி ரூபாய் முதலீட்டில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், எம்.ஏ.எச்.எல்.இ. எல்க்ட்ரிக் டிரைவ்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஸ்டாட்டர் மோட்டார்ஸ் மற்றும் கண்ட்ரோலர் உற்பத்தி திட்டம்   தகவல் தொடர்பு சேவை   * சென்னை, சோழிங்கநல்லூரில், 336 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 16 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி விரதம்

Image
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடம் ஒவ்வொரு மணியும் இறைவனுக்கு உகந்ததுதான் என்றாலும் புரட்டாசிக்கு எப்போதுமே தனி மகத்துவம் உண்டு. காக்கும் கடவுளான பெருமாளுக்குப் பிரியமான மாதம் இது. புரட்டாசி விரதம், நவராத்திரி விரதம் என்று விரதங்கள் அணிவகுக்கும் மாதமும் இதுதான். வருடம் முழுக்க சனிக்கிழமைகளில் விரதம் இருக்கத் தவறியவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிட்டும் என்பது நம்பிக்கை. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்தால் அல்லவை நீங்கி நல்லவை சேரும், வளமான வாழ்வு வசப்படும் என்பது ஐதீகம். தடைகள் அகன்று சர்வமங்களம் அமையப்பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனாலேயே புரட்டாசி மாதம் 'பெருமாள் மாதம்' என்று சிறப்பிக்கப்படுகிறது . ஏன் புரட்டாசி சனி ? புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப்பற்களுள் ஒன்றாகக் கூறுகிறது அக்னி புராணம். எம பயம் நீங்கவும், துன்பங்கள் விலகி நன்மைகள் கூடவும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் இருப்பார்கள். புரட்டாசி விரதத்துக்கும் வழிபாட்டுக்கும் இன்னுமொரு காரணமும் உண்டு . சனி பகவான் புரட்டாசி மாதத்தில்தான் அ

<no title>

Image

அறம் செய்ய விரும்பு  

Image
13வது மாதந்திரக்கூட்ட நிகழ்வு அரிமா சங்கத்தின் Lions Club of Chennai DISTRICT 324 AI Club No 139250 Region II .Zone III ஒரு குழுவான அறம் செய்ய விரும்பு  உறுப்பினர்களின் 3வது மாதாந்திர கூட்டம் 15.9.2019 அன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள ராயல் பிளாசா  ஒட்டலில்  நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவரான லயன்   திரு A .சரவணகுமரன் தலைமை  தாங்கி தலைமை உரையாற்றினார் . சங்க செயலரின் உரைக்கு பின் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்ட MJF Lion    திரு   KB.விஸ்வநாதன் அவர்கள்  அரிமாவில் இணைவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து சிறப்புரையாற்றினார் . ,மற்றும் புதிய உறுப்பினர்கள்  சேர்க்கையும் நடைபெற்றது லயன் திரு கோகுல அவர்களின் உரைக்குபின் சங்க செயலர் லயன் திரு GP.பிரகாஷ்அவர்கள் உரையாற்றினார் லயன் திரு  ஜெயராமன் அவர்கள் நன்றியுரையாற்றினார் சிறப்பு விருந்தினர்MJF Lion    திரு   KB.விஸ்வநாதன் அவர்களுக்கு தலைவர் திரு  திரு A .சரவணகுமரன் நினைவுப்பரிசு வழங்கினார்  பகல்  விருந்துக்கு பின் நிகழ்ச்சி இனிதாக நிறைவுபெற்றது. முன்னதாக 200 செடிகளும் மற்றும் 200 விதைப்பந்துகளும் பொதுமக்களுக்கு சிறப்பு விருந்த