தமிழ் மொழி கடிகாரங்கள்

வாட்ச்சில் தமிழ் டைட்டன் நிறுவனம் .


நம்ம தமிழ்நாடு என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்ட வாட்ச் மாடல்களில் தமிழ் மொழியை டைட்டன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.         டைட்டன் வாட்ச் நிறுவனம் புதுமை புகுத்துவதில் தனித்துவமானது ஆகும். இந்த நிறுவனத்தின் சார்பில் சாதாரண மக்கள் கோட்டீஸ்வரர்கள் அணியும் வகையிலான வாட்ச்களை நிறுவனம் விற்பனை செய்கிறது. தற்போது வாட்சில் தமிழ் மொழியை புகுத்தும் முயற்சியில் டைட்டன் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.


        அதன்படி டைட்டன் தமிழ்நாடு என்ற பெயரில் தமிழ்மொழி மற்றும் தமிழர்களின் கலையை போற்றும் விதமாக அதன் நிறுவன வாட்சுகளில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் வாட்ச்சின் உள்ளே தமிழக கோவில் தூண்கள், யாழி, கோபுரங்களை பொறித்துள்ளது. அதற்கு நம்ம தமிழ்நாடு வாட்ச் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் அணியும் வாட்ச்களில் காஞ்சிபுரம் புடவைகளில் பதிக்கப்படும் மயில் டிசைனை உள்ளே பதித்துள்ளனர். அதற்கு காஞ்சிபுரம் வாட்ச் பெயரிடப்பட்டுள்ளது.


                 இதுகுறித்து டைட்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ்தான். காஞ்சிபுரம் பட்டு மல்பரி பட்டு நூலால் நெய்யப்பட்டு அதன் பாரம்பரியம் வெளிப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,