பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் தொடக்கம்


பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.


 


ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடக்கி வைக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று காலை நடைபெற்ற விழாவில், பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்


மற்றும் 1கோடி 67 இலட்சம் மதிப்புள்ள.விலையில்லா வேட்டி சேலை வழங்கும திட்டத்தையும் தொடங்கி வைத்தார்


 நிகழ்வீன் அடையாளமாக முதற்கண் இன்று 16 குடுமபங்களுக்கு பொங்கல் பரிசும் மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளும் வழங்கப்பட்டன.


 


 இந்த விழாவுக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


 


 தலைமைச் செயலாளர் க.சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


 


இந்தப் பொங்கல் பரிசு 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பில், ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.



 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,