பெண்ணின் பிரசவத்திற்கு காவல் துறை வாகனத்திலேயே அழைத்துச் சென்ற பெண் காவல்ஆய்வாளர்*

பெண்ணின் பிரசவத்திற்கு காவல் துறை வாகனத்திலேயே அழைத்துச் சென்ற பெண் காவல்ஆய்வாளர்*


 



 சென்னை திருவொற்றியூர் டோல்கேட் உதயசூரியன் நகரைச்சேர்ந்த கலைவாணி வயது (21) க /பெ பிரேம்குமார்.


கலைவாணி நிறைமாத கர்ப்பிணியான நிலையில் அவருக்கு இடுப்புவலி ஏற்படவே 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளார்கள்.


ஆம்புலன்ஸ் வர தாமதிக்கவே அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த திருவொற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.புவனேஸ்வரி காவல் வாகனத்திலேயே ஏற்றிக்கொண்டு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரசவத்திற்காக கொண்டு சேர்த்துள்ளார்.


இதனால் நெகிழ்ச்சியடைந்த அப்பெண்ணின் பெற்றோர் கடவுள் போல உதவியதாக பெண்காவலருக்கு நன்றிகள் தெரிவித்தார்கள்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,