பாவேந்தர்       பாரதிதாசன்        

பாவேந்தர்
      பாரதிதாசன்
        **
     


பலவிகற்ப
       இன்னிசை
         பஃறொடை
          வெண்பா
          **
 புரட்சிக்
   கவியாய்
      புவியைப்
         புரட்டி


 அரட்டி(அச்சம்)
  தவிர்த்த
   அணிக்குத்
     தலைவன்


  அரக்க
    குணத்தை
      அறவே
        ஒழிக்க


   உறக்கம்
     துறந்த
       உணர்வுக்
         கவிஞன்


  பரக்க
    விரிந்த
      பதர்கள்
        நடுவே


   இரக்கம்
      புரிந்த
        இனிதாம்
         குணத்தன்


  உரக்க
    நிதமும்
      உரைத்தே
        மகிழ


   கரத்தை
     உயர்த்தும்
       கவிதைத்
         திறத்தன்


 சரக்கை
   நிகர்க்கச்
    சரிக்குச்
      சமமாய்


 அரக்காம்
    நிறத்தை
      அமைத்த
        அமரன்


 திரக்கும்
   (சுருங்கும்)
   நிலையில்
     திணறும்
       உணர்வும்


 சுரக்க
   உதித்த
     சுகிப்பு.
   (இன்ப உணர்வு)
        **
பாவேந்தர்
    பாட்டினால்
      பாரெல்லாம்
         போற்றிட


 நாமெல்லாம்
    வாழுவோம்
      நாளெல்லாம்
        பாடுவோம்.


வணக்கத்துடன்🙏
ச.பொன்மணி


ஓலி ஒளி உணர



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,