தேங்காய்ப்பால் உருளைக்கிழங்கு பிரியாணி

தேங்காய்ப்பால் உருளைக்கிழங்கு பிரியாணி



ஜூன் 30, 2020


 


 


தேங்காய்ப்பால் உருளைக்கிழங்கு பிரியாணி


தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி, தேங்காய்ப் பால், சின்ன உருளைக்கிழங்கு - தலா ஒரு கப்,


வெங்காயம் - 2,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3,
பட்டை - ஒரு துண்டு,
ஏலக்காய், கிராம்பு - தலா 1,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,


நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


 




செய்முறை
ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்.
சின்ன உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வை.
அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, நெய்யில் வறுத்து வை.
குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கு.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதங்கியதும் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கு. பிறகு, நெய்யில் வறுத்த அரிசியைப் போட்டு நன்கு கலக்கி, தேங்காய்ப் பால் சேர்.   மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேக விட்டு, சில நிமிடங்கள் கழித்து இறக்கு.   ஆவி போனதும், மூடியைத் திறந்து, நறுக்கிய கொத்த மல்லி தூவி தேங்காய்ப்பால் உருளைக்கிழங்கு பிரியாணி பரிமாறவும்.



 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,