இராஜஸ்தானை ஒட்டிய எல்லையை குறி வைக்கிறது, சீனா

ராஜஸ்தானை ஒட்டிய எல்லையை குறி வைக்கிறதுசீனா: இந்தியாவை சுற்றி வளைக்க திட்டம்



லடாக்கை தொடர்ந்து இராஜஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை சீனா குறி வைத்துள்ளது. இதன்மூலம் இந்தியாவை சுற்றி வளைக்க திட்டமிட்டுள்ளது.


ஜூன் 27,  2020


ஜெய்சால்மீர், 


 


இந்தியாவின் வடக்கு எல்லையான லடாக்கில் சீனா வாலாட்டியது. இதைத் தொடர்ந்து, மேற்கு எல்லையான பாகிஸ்தான் எல்லை பகுதியில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மீரை ஒட்டிய இந்த எல்லை பகுதிகளில், பாகிஸ்தான் சாலைகள் அமைக்க சீனா உதவி வருகிறது. அந்தப் பகுதியில் 30 எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை சீனா மேற்கொண்டு வருகிறது.


அதை சாக்காக வைத்து, அங்கு விமான நிலையம், ரெயில் பாதை, சாலை ஆகியவற்றை அமைக்க பாகிஸ்தானுக்கு உதவி வருகிறது. பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கொடுக்கும்போது, சீனாவும் தன்னை இராணுவரீதியாக அப்பகுதியில் பலப்படுத்தி வருகிறது. ஏற்கனவே, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அவ்வழியாக செல்கிறது. இதன்மூலம் இந்தியாவை சுற்றி வளைக்க சீனா திட்டமிட்டுள்ளது.


பாகிஸ்தான் எல்லையில் சீனா ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. தனது நிறுவனங்களின் பாதுகாப்புக்காக, சொந்த பிராந்தியத்தையே சீனா உருவாக்கி உள்ளது. அங்கு பாகிஸ்தானியர் கூட அனுமதியின்றி நுழைய முடியாது.


 


எல்லைப் பகுதியில் கட்டுமான பணியில் 30 சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அத்துடன்,  இ ராஜஸ்தான் எல்லையில் சீன நிறுவனங்கள் எண்ணெய் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளன.


2 ஆயிரத்து 500 சீன நிபுணர்கள்,   இப்பணியை செய்து வருகின்றனர். சீன அரசின் தேசிய என்ஜினீயரிங் நிறுவனம் உள்பட பெரிய நிறுவனங்கள், எல்லையை ஆக்கிரமித்துள்ளன.


இராஜஸ்தான் எல்லைக்கு 8 கி.மீ. தூரத்திலேயே எண்ணெய், எரிவாயு எடுக்கும் பணியில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அங்கு 50 எண்ணெய் கிணறுகள், சீன நிபுணர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்குள்ள பள்ளிகளில் சீனாவின் மண்டாரின் மொழி கற்பிக்கப் படுவதாக இந்திய ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்ற சைலேஷ் ராய் கூறியுள்ளார்.


அங்கு பாதுகாப்பு பொறுப்பை சீன இராணுவமே கவனிக்கிறது. இதனால், எல்லை பாதுகாப்பு படை உஷாராக இருப்பதாக அதன் ஐ.ஜி. அமித் லோதா தெரிவித்தார். மத்திய அரசு, தனது முழு கவனத்தையும் இராஜஸ்தான் எல்லைப்பக்கம் திருப்ப வேண்டும் என்று ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,