கண்ணதாசன் அவர்களின் பெண் வாழ்க

தமிழ் இலக்கியத்திலிருந்து

இன்றையச்சுவை

கண்ணதாசன் அவர்களின் பெண் வாழ்க

என்ற கவிதை

 

 


சக்தியொரு பாதியாய்ச் சிவனுமொரு பாதியாய்த்

தர்மத்தில் இணைந்து வாழ்வோம்

கத்திவழி நேர்மையாய்ப் பண்புவழி மேன்மையாய்ப்

பாரெல்லாம் வணங்க வாழ்வோம்!

பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில்

பக்கத்தில் பங்கு கொள்வோம்!

பாதாதி கேசமும் சீரான நாயகன்

பளிச்சென்று துணைவி வாழ்க!

படுவதொரு துயரேனும் வருவதொரு சுகமேனும்

பாதியாய்த் துணைவன் வாழ்க!

தாய்வீடு விட்டபின் தன்வீடு தாய்வீடு

என்றெண்ணியே தலைவி வாழ்க!

சமகால யோகமிது வெகுகால யாகமென

சம்சாரம் இனிது வாழ்க!

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,