இதயம்

இதயம் போல 
படபடக்கும் சிறகொலி தவிர 
சூழ்ந்து நிற்கும் 
பேரமைதியே பேரழகு


நிர்ச்சலனமாய் என்றாலும் 
நிறைந்து நிற்கும் காற்று 
என் 
பேரன்பு போல. 


உணரத்தான் வேண்டும், 
தோல் தடித்த மனங்கள் உணர்தலுக்கு அப்பால்.


சப்தமில்லாமல் நின்று 
கொஞ்சம்  
அமைதியின் இசைப்பையும் 
அன்பின் வழிதலையும் 
அரவணைத்துக்கொள்ளுங்கள்,
அன்பின் விசாலம் புரியும்!


 


 


 #மஞ்சுளா யுகேஷ்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,